ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
மலையகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிறிலங்கா படையினர் நடத்திய தேடுதலில் 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 524 views
-
-
வீரகேசரி நாளேடு - வடக்கில் உக்கிரமடைந்துள்ள மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை விடவும் எமக்கு அக்கறை அதிகம் என்று அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமாகிய கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அதனாலேயே இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்காக 800 மெட்ரிக் தொன் உலர் உணவுப் பொருட்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி நகரில் எறிகனைகள் விழுந்து வெடிக்க தொடங்கி இருப்பதாக சற்று முன்னம் தமிழ் நெட் கூறி இருக்கின்றது... இன்னும் 1 வாரத்தில் கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று இராணுவதளபதி கூறிஇருந்தார்...
-
- 1 reply
- 2k views
-
-
ஜனநாயகத் தன்மையற்ற, யுத்தத்தின் மீது பிரியங்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசு, ஈழத்தமிழ் மக்கள் மீது திட்டமிட்டவகையில் போர் தொடுத்து அவர்களை அழித்தவருகிறது. இது ஒரு உள்நாட்டுப்பிரச்சனை எனத் தட்டிக்கழித்துவிட முடியாது. என சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த கம்யூனிஸ்ட்ட கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.ராஜா கூறினார் . அவரது உணர்ச்சி பூர்வமான உரையின் ஒரு பகுதியை இங்கே கேட்கலாம். http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 1 reply
- 1.5k views
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இரண்டு கடற்றொழிலாளர்களை காணவில்லை [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 08:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்னள் காணாமல் போய் உள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு வளிச்சல் தொழிலில் ஈடுபட்டு வந்த வத்திராயனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பாசம், வத்திராயனைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சயந்தன் (வயது 25) ஆகிய இரண்டு கடற்றொழிலாளர்களே காணாமல் போனவர்கள் ஆவர். இது தொடர்பில் ஏனைய கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், "தாம் தொழிலில் ஈடுபட்ட வேளை திடீரென வந்த டோறா பீர…
-
- 0 replies
- 564 views
-
-
தமிழர் சுயநிர்ணயம் பற்றி கரன் பார்க்கர்( Karan Parker) அவர்கள்.... Ms. Parker is a San Francisco based attorney who practices human rights and humanitarian law full time. She is responsible, in part, for the evolution of international law in such areas as economic sanctions, weaponry, environment as a human right, and the rights of the disabled. he also consults and serves as an expert witness in legal disputes involving the application of armed conflict law. In 1982, she founded the Association of Humanitarian Lawyers (originally incorporated as International Disability Law), and has served as its president for over ten years. She has also represented or served …
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை இனச்சிக்கலில் தமிழக முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வரும் மௌனத்தை பத்து நாட்களுக்குள் கலைக்காவிட்டால் தான் மேற்கொள்ளப் போகும் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா, இந்திய அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாநிலை போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:45 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும், சிறிலங்கா அரசைக் கண்டித்தும், சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் வழங்கும் இந்திய அரசினைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். இந்த உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்த அதிமுக கட்சி பங்கேற்கவில்லை. அதிமுக கட்சியின் சார்பில் அதன் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந…
-
- 1 reply
- 854 views
-
-
இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: ராஜா சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகஇ இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா மறைமுகமாக உதவிகள் செய்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ராஜா இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்இ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அறவழியில் எதிர்த்து போராடிய மாபெரும் மனிதரான மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இந்துஇ முஸ்லிம் இடையே மதநல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் கடைசிவரை போராடினார். ஆனால் இப்போது ஒரிசாஇ கர்நாடகா மாநிலங்களில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மதத்தின் பெயர…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது சிறிலங்கா வான்படை நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம் கணினி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல் கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது. அத்துடன் மாணவர்களின் கணினி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 11 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் கோயில்களும் தேடுதல்களுக்கு உள்ளாகின்றன. [ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 05:17.49 PM GMT +05:30 ] யாழ்ப்பாணத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களில் படையினர் நேற்றும் இன்றும் பாரிய தேடுதல்களை நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கந்தரோடைப் பிரதேசத்தில் உள்ள மாசியப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலின் அருகில் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இந்த தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. சம்பவத்தினத்தன்று மூன்று பேர் குறித்த இடத்தில் நின்றிருந்ததாகவும் படையினரின் வாகனம் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய், மானிப்பாய். தெல்லிப்பளை போன…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக கட்சிகள் பிரமரை சந்திக்க வேண்டும் - தொல் திருமாவளன் இலங்கையில் தமிழகர் பிரச்சினைக்கு தீர்வு காண அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக கட்சிகள் இந்திய பிரதமரை நேரில் சந்திக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தமிழர் பிரச்சினை குறித்து இந்திய குடியரசு தலைவி பிரதீபா பட்டிலிடமும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போ…
-
- 0 replies
- 747 views
-
-
வவுனியா மாவட்டத்தின் முதல் தடவையாக அரசாங்க அதிபராக ஜி.எம்.எஸ்.சார்ள்ஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வவுனி
-
- 0 replies
- 737 views
-
-
இலங்கை இராணுவமே உலகிலேயே அதிபலமான படையென என லுசியான நாட்டின் பெட்டின் ரூஜ் என்ற பகுதியின் மேயர் ஜெப் குணவர்தன தெரிவித்துள்ளார்.சிறுவர் தினத்தையொட்டி நுகேகொட- நாவல விமல விகாரையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேற்படி இந்த வைபவத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்கள் உட்பட 100 க்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர்.யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை நேர்மையாக செய்துவருகின்றதை தான் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். யுத்த பிறதேசங்களில் மட்டுமின்றி நாட்டில் சமூக சேவைனளிலும் அவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழர்களை கொல்…
-
- 0 replies
- 1.6k views
-
-
லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மாபெரும் அமைதிவழிப் போராட்டம் சிறீலங்கா அரச வான் படையினர் வன்னியில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் லண்டன் நகரிலுள்ள பிரித்தானியாவின் நாடாளுமன்றத்திற்கு முன்பாக மாபெரும் அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 4:00 மணிமுதல் இரவு 7:00 மணிவரை நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் நாடாளுமன்றம் கூடுவதால் அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகைத…
-
- 0 replies
- 770 views
-
-
யாழ்ப்பாணத்தில் திடீர் தாக்குதலை நடத்த நகரும் புலிகளின் விசேட படையணிகள் ஜ02 - ழுஉவழடிநச - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ புலிகள் இயக்கம் யாழ்ப்பாணத்தில் அரச படையினரின் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக புலிகள் இயக்கத்தின் சில விசேட குழுவினர் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் இவற்றில் சில குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தை அண்டியுள்ள பற்றைகள் அடர்ந்த பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறையின் வடபகுதி புலனாய்வு பிரிவினருக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி யாழ்ப்பாணம் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படும் தகவல்களுக்கே…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிங்களவர்களே இலங்கையின் பூர்வீகக் குடியினர் - ஒமல்பே சோபித தேரர் சிங்களவர்களே இலங்கை தேசத்தின் பூர்வீகக் குடியினர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தி நெசனல் போஸ்ட் பத்திரிகைக்கு இராணுவத் தளபதி அளித்த செவ்வியில் குறிப்பிட்ட கருத்துக்கள் நியாயமானவை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது என்பது தொன்மை ரீதியாக நிறுவப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனவேஇ இலங்கையின் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சி அதிகாரம் நடத்தப்பட வேண்டும் என்ற இராணுவத் தளபதியின் கூற்று மெத்தச் சரியானதென ஒமல்பே சோபித தேரர் ஊடக அறிக்கையொன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். ஏனைய சக…
-
- 3 replies
- 861 views
-
-
பெரும்பான்மை சிறுபான்மைப் பிரச்சினை இலங்கையில் மேலோங்கியுள்ளது - கனடிய தமிழ் எழுத்தாளர் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான சர்ச்சைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக கனடிய தமிழ் எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக இனவாத உணர்வுகள் மக்கள் மனதில் மோசமாக விதைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடும்போக்குடைய இனவாதம் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான தமிழர்கள் இன்று உலக நாடுகளில் அகதிகளாக சரணாகதியடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் பாதுகாப்புப் படையின் முக்கிய பதவியான இராணுவப் படைத் தளபதியின் அண்மைய கூற்றின் மூலம் சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை தெளிவாக வெளிப…
-
- 1 reply
- 564 views
-
-
51 சரக்கு ஊர்திகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு 51 சரக்கு ஊர்திகள் மூலம் வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான நிவாரணப் பொருட்களைத் தாங்கிய சரக்கு ஊர்திகள் இன்றைய தினம் வன்னி நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவிலிருந்து இன்று காலை 9.20 அளவில் குறித்த சரக்கு ஊர்திகள் புறப்பட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. உலக உணவுத் திட்டத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அரிசிஇ சீனிஇ பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உணவுப் பொருட்களுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளும் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்விற்…
-
- 0 replies
- 587 views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை மீள அழைக்கத் தீர்மானம் யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கிழக்கிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் கிழக்கில் குடியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் யுத்தம் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின்
-
- 0 replies
- 823 views
-
-
இந்தியக் கம்மியூனிஸ் கட்சியின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு விஜயகாந்தும் ஆதரவு ! இலங்கை தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் நடத்தப்பட உள்ள உண்ணாநிலைப் போராட்டத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜயகாந்த்தும் தனது ஆதரவை அறிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் செயலாளர் தா.பாண்டியனுக்கு நேற்று திங்கட்கிழமை விஜ…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு [வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 10:16 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரின் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இடம்பெறுகின்ற தாக்குதல்களை அடுத்தே படையினர் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் கைவிடப்பட்ட வீடுகள், வீதியோரங்களில் உள்ள பற்றைகள் அனைத்தும் படையினரால் சோதனையிடப்படுகின்றன. அத்துடன் கிறிஸ்தவ, இந்து ஆலயங்களிலும் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புதினம்
-
- 0 replies
- 711 views
-
-
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் அனைத்து கட்சிகளும் திரண்டு நாளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அக்கட்சிகளால் அழைக்கப்படாத திமுக 6ம் தேதி மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் அராஜகத் தாக்குதல்களைக் கண்டித்தும், இலங்கை அரசின் போக்கைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தோடு பங்கேற்கவும் உள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் இதி…
-
- 3 replies
- 1.3k views
-