Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 மருந்தகங்களில் தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவற்றில் 10 மருந்தகங்களின் இழப்பு, 15 இலிருந்து 175 வீதம்வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மருந்தகங்கள், கடந்த 2020ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியிருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்த…

  2. கர்ப்பிணித் தாய்மார்களின் சுவாசப்பாதையின் ஊடாக பிளாஸ்டிக் கருவுக்குள் நுழைவதாகவும் அது ஆபத்தான நிலைமை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூறியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சஜித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் ஒரு வாரத்தில் ஐந்து மில்லி கிராம் அளவு மைக்ரோ பிளாஸ்டிக் நுகர்வதாக டாக்டர் சஜித் எதிரிசிங்க கூறுகிறார். நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொண்ட பிறகு ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இலங்கை வித்யாபிவர்தன சங்கமும் சுற்றாடல் நீதி மையமும் இணைந்து தயாரித்த “விஷ நச்சு ஆய்வு” இதழின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா நேற்று (10) வித்யாபிவர்தன சங்க ம…

  3. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 01:04 PM இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரித்துள்ளது. இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது, எனவே கர்ப்பிணித் தாய்மார்கள், இளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் பாதிப்பதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று பணியகம் தெரிவித்துள்ளது. அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்று…

  4. Published By: VISHNU 11 APR, 2023 | 12:09 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி மேற்கொள்ளப்படுவதாக பிலியந்தல, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் கிடைக்கபெற்ற சுமார் 50 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் …

  5. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 09:02 AM வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் திங்கட்கிழமை (10) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்…

  6. மஹிந்தவுக்கும் எமக்கும் கடந்த ஒரு வருட காலமாக எவ்வித தொடர்புகளும் இல்லை - கம்மன்பில Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 10:18 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், எமக்கும் கடந்த ஒருவருடகாலமாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் கிடையாது. தன்னிச்சையாக செயற்பட்டதன் விளைவை பொதுஜன பெரமுன இன்று அனுபவிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

  7. தொல்பொருள் சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து நிதர்ஷன் வினோத் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190-ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கி முற்றாக அழிவடைந்துள்ளது. இவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன…

  8. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 09:11 AM கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/a…

  9. இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் இல்லை என்கிறது அமெரிக்கா! இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புக் குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தது. உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய குறித்த குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்தது. பிராந்திய பாதுகாப்பு, இலங…

  10. Published By: DIGITAL DESK 5 11 APR, 2023 | 11:21 AM (எம்.வை.எம்.சியாம்) சமூக ஊடக தளங்களில் பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில், சமூக ஊடக தளங்களில் புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள், வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட …

  11. எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு! எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் ஆணைக்குழு நவம்பர் 2022 இல் நியமிக்கப்பட்டது. ஆர்.வி. திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் உள்ளடங்கலாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்ற…

  12. Published By: T. SARANYA 10 APR, 2023 | 04:22 PM மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அம…

  13. Published By: T. SARANYA 10 APR, 2023 | 09:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) சிறைப்படுத்தப்படடும் நபர் எந்தவகையான குற்றத்துக்காக சிறைப்படுத்தப்பட்டாலும் அவரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அத்துடன் சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு முடியுமான வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறைச்சாலை கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய அமைச்சின் விடயபொறுப்பான அமைச்சருக்கு சாட்டப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கு அமைய 3வருட காலத்துக்காக நாட்டில் இருக்கும் அனைத்து சிறைச்சாலை நிறுவனங்கள…

  14. Published By: T. SARANYA 10 APR, 2023 | 04:13 PM தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம், பழம் றோட்டுப் பகுதியில் உள்ள தனியார் மாணவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சமயம், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டமை மற்றும், போதை மாத்திரை வெற்று உறைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரி…

  15. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க, மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை IMF யூடியூப் சேனலில் இலங்கையின் மீட்சியை ஆதரிப்பது மற்றும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய பீட்டர் ப்ரூயர், பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “உதவி செய்ய IMF உள்ளது. இந்த தேவைப…

  16. பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தை (PCA) உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் போலியான மற்றும் தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்யும் மோசடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சட்டங்களின்படி, தரமற்ற பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை விற்பனை செய்தல், நாட்டிற்கு கடத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல் தொடர்பான அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் அந்த கடத்தல்காரர்களுக்கு போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாது. இலங்கைக்கு சட்டவிரோதமாக இ…

  17. இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க, மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை IMF யூடியூப் சேனலில் இலங்கையின் மீட்சியை ஆதரிப்பது மற்றும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய பீட்டர் ப்ரூயர், பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “உதவி செய்ய IMF உள்ளது. இந்த தேவைப…

  18. இலங்கை 6.5 முதல் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது, இலங்கையின் கையிருப்பு சில நாட்களில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக இருந்தது மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதியை விடுவிக்க மத்திய வங்கி போராடியது. எவ்வாறாயினும், கடந்த சில மாதங்களில், நிலைமை கணிசமான அளவில் மேம்பட்டுள்ளதுடன், மார்ச் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் 2.7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மா…

  19. Published By: NANTHINI 10 APR, 2023 | 04:33 PM கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்), டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என்றும், மற்றைய நபர் வெ…

  20. இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் தோராயமாக 28 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அந்நிய கையிருப்பு சொத்துகளும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளது. பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன. உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில…

  21. Published By: DIGITAL DESK 5 10 APR, 2023 | 12:09 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மே 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/152554

  22. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இன்று விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 72,200 சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உரத்தின் புதிய இறக்குமதி அனுப்பப்படும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது. இலங்கையின் நெற் செய்கை துறைக்கு…

  23. Published By: T. SARANYA 10 APR, 2023 | 02:07 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை (ஸ்பா) ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், பாட நெறிகளை ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச மருத்துவ கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். நாட்டில் பல ஆயுர்வேத ஸ்பாக்கள் விபச்சார விடுதிகளாக இயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆயுர்வேத ஸ்பாக்கள், உள்ளூராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், அவை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல. ஸ்பாக்களில் காணப்பட…

  24. சஹ்ரானின் மைத்துனர் கைது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக்கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்ட 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர், குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள அவரது மனைவின் பெற்றோரின் வீட்டுக்கு வருகைதந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகார…

  25. கோட்டாவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது தவறு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2019 இல் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/…

    • 1 reply
    • 488 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.