Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் யுத்தம் மூலம் தீர்வு காணலாம் என்ற ஒரே சிந்தனையில் போர் வெறிகொண்டு, சந்நதம் பூண்டு நிற்கிறது கொழும்பு அரசு. இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் புத்திஜீவிகள் மட்டத்தை உள்ளடக்கிய முழு தென்னிலங்கையையுமே இந்தப் போர் வெறிச் சிந்தனை ஆகர்ஷித்து விட்டது என்பதே உண்மை. கொழும்பு பேராயர் அதி வண. ஒஸ்வோல்ட்கோமிஸ், கொழும்பில் இருந்து வத்திக்கான் வானொலிக்காகத் தெரிவித்த கருத்துகள் என்ற அடிப்படையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இதனை விளக்கும் நல்ல சான்றுகள் ஆகும். பேராயர் அதி வண.ஒஸ்வோல்ட் கோமிஸ், வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல. தென்னிலங்கையில் மதிக்கப்படும் ஒரு புத்திஜீவியும் கூட. சமாதானத்தை நிலைநிறுத்துவதன் அவசியத்…

  2. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும் பூநகரி பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 8 replies
    • 1.5k views
  3. விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த தயோனீல் குளோரைட் என்ற ஆபத்தை விளைவிக்க கூடிய இரசாயனம் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. பாலசுப்ரமணியம் புஸ்பகுமார், எஸ்.நந்தகுமார், பேர்டும் டார்டின், ஏம்.எம்.எஸ்.சுபைர், லவ்ஜே, மற்றும் எம்.எஸ்.எம். இப்ராஹிம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய கப்பல் நிறுவனம் ஒன்று, ஜேட்சு என்ற கப்பல் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்…

    • 0 replies
    • 1.5k views
  4. தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும் என்று எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மன்னாருக்குத் தான் குடும்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னதாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்ததாகவும் பின்னர் கடந்த ஒருவருடத்தில் மட்டும் ஏழு தடவைகள் மாறி மாறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தம்மைப்போன்று பல குடும்பங்கள் இந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மன்னார் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கைப் படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள்மீது எறிகணை வீச்சுக்களை நடத்தி அவர்களை வேரோடு பிடுங்கி எறிகின்ற நடவடிக்கைகளை மேற்கொண…

  5. அம்பாறை அக்கரைப்பற்றில் இன்று இரவு 8.30 அளவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மரக்கறி வியாபாரியான 48 வயதான கணபதிபிள்ளை நடராஜா என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். ஆலையடிவேம்பு பொதுச்சந்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்டவர், நெசவாலை வீதி அக்கரைப்பற்று 7 ஐ சேர்ந்தவர் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/

    • 0 replies
    • 538 views
  6. இலங்கை அமைச்சர்கள் இந்தியாவிற்கு முன்னறிவித்தலின்றி தாம் நினைத்த நினைத்தவாறு விஜயம் மேற்கொள்வது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இந்தியா, எதிர்காலத்தில் இவ்வாறான விஜயங்க ளின்போது உரிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சினால் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே இந்தக் கண்டிப்பான அறிவுறுத்தல்விடுக்கப்பட் டுள்ளது. இலங்கை அமைச்சர்கள் பலர் முன்னறி வித்தலின்றி இந்தியாவிற்கு விஜயம் மேற் கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக முடி விற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கடுந்தொனியில் கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு முன்னறிவித்த…

  7. வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய காம்யோற்சவ வருடாந்தம் திருவிழாவில் 27-07-2008 ஞாயிற்றுக்கிழமை 20ம் திருநாள் திருகார்த்திகை விழாவும் ஷண்முகார்ச்சனையும் இடம்பெறவுள்ளன. ஆலயத்தில் உற்சவம் ஆரம்பமாகிய நாள் முதல் காலை 8.00 மணியளவில் இருந்து பிற்பகல் 2.00 மணிவரை ஆலயத்திற்கு அடியவர்கள் தமது இஅடையாள் அட்டைகளை தெல்லிபளை சோதனை நிலையத்தில் கையளித்துவிட்டு உயர் பதுகாப்பு வலயத்தில் சேவையில் ஈடுப்பட்டுள்ள பஸ் வண்டியில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். 31ம் திகதி வியாழக்கிழமை 24ம் நாள் ரதோற்சவமும் அடுத்த நாள் 1ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் கீரிமலை கண்டகி தீர்த்தமும் இடம் பெறவுள்ளன.தற்போது நாளாந்தம் நூற்றுக் கணக்கான அடியார்களும் திருவிழா உற்சவங்களில் கல்லூரி…

  8. 15 ஆவது சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பைப் பொலிவூட்டின் பிரபல ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்துள்ளார். இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக தாம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதென ஷாருக்கான் அறிவித்துள்ளார். ஷாருக்கானைக் குறித்த கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வைப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியையும் சார்க் கலாச்சார நிகழ்வு ஏற்பாட்டுக்குழு நாடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் இணைப்பதிகாரி சஜித் வாஸ் குணவர்தன சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார் http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d436QV3b…

  9. விடத்தல்தீவு படைகளிடம் வீழ்ந்தது எப்படி? - வன்னியன்.:- லண்டன், சனி, 26 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்தவாரம் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெ.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையி;ல் விடத்தல்தீவி;ன் வீழ்ச்சி யாருடைய யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்? என்பதைத்ததான் பென்சேகாவிடம் இரகசியமாகத் தான் கேட்கவேண்டும…

  10. Posted on : 2008-07-26 தெற்கின் சிந்தனைப் போக்கு இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் யுத்தம் மூலம் தீர்வு காணலாம் என்ற ஒரே சிந்தனையில் போர் வெறிகொண்டு, சந்நதம் பூண்டு நிற்கிறது கொழும்பு அரசு. இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல் புத்திஜீவிகள் மட்டத்தை உள்ளடக்கிய முழு தென்னிலங்கையையுமே இந்தப் போர் வெறிச் சிந்தனை ஆகர்ஷித்து விட்டது என்பதே உண்மை. கொழும்பு பேராயர் அதி வண. ஒஸ்வோல்ட்கோமிஸ், கொழும்பில் இருந்து வத்திக்கான் வானொலிக்காகத் தெரிவித்த கருத்துகள் என்ற அடிப்படையில் இப்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இதனை விளக்கும் நல்ல சான்றுகள் ஆகும். பேராயர் அதி வண.ஒஸ்வோல்ட் கோமிஸ், வெறும் மதத் தலைவர் மட்டுமல்ல. தென்னிலங்கையில் மதிக்கப்படும் ஒரு…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாத அனைத்து கட்சி செயற்பாடுகள் பயனற்றது - ரொபர்ட் எவன்ஸ் வெள்ளி, 25 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ்த் தேசியக் கூட்டப்பு இல்லா அனைத்து கட்சியின் செயற்பாடுகள் பயனற்றது என சிறீலங்காவுக்கு பயணம் செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரில் ஒருவரான ரொபர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். இன்று ஊடகவியலாளரிடம் கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்… சிறீலங்காவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் 17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதன் மூலம் சிறீலங்காவில் ஐனநாயத்தை நிலைநாட்ட முடியும். இதற்கா ஐன…

  12. சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 01:19 பி.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவில் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், வடபோர் முனையில் நடைபெறும் சண்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு பெருந்தொகையான படையினர் தேவைப்படுகிறார்கள். அதனை வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கொழும்பு வரவுள்ள இந்திய பாதுகாப்பு பிரிவினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொ…

    • 16 replies
    • 1.5k views
  13. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளராக தென்னாபிரிக்க தமிழ்பெண் நவநீதம் பிள்ளை நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு எதிரான கருத்தூட்டல் பரப்புரையை சிறீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையாளராக நவநீதம் பிள்ளை பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/

  14. பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதாக கூறிக்கொண்டு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அப்பாவி பொதுமக்களை பயங்கரமாக பாதித்துள்ளன. மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்கா அரசு மேலும் அக்கறை எடுக்கவேண்டும் என்று கொழும்புக்கு சென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு தலைவர் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்தப்படும் யுத்தத்தின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  16. வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காத 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நரஹேன்பிட்டி காவற்துறையினரால் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/

    • 0 replies
    • 791 views
  17. கறுப்பு ஜூலை நினைவு எழுச்சி நிகழ்வு அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை உணர்ச்சிபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 512 views
  18. * சம்பிக்க ரணவக்க கேள்வி; வந்தேறுகுடிகளே என்கிறார் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளென்றால் அவர்களுக்கு எவ்வாறு தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவிருக்க முடியுமென ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வட, கிழக்கின் தற்போதைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சியின்போது அவர்கள் விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனாலும், அவர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எத்தனையோ நாடுகள் தமது நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகள், புரட்சிகளை…

    • 3 replies
    • 1.2k views
  19. வவுனிக்குளம் பகுதியை சிறீலங்காப் படையினர் ஆக்கிரமித்துள்ளனர். கடந்த புதன்கிழமை இப்பகுதியில் சிறீலங்காப் படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மோதல்கள் எதுவும் இன்றி விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை அடுத்தே படையில் இப்பகுதியில் வந்தடைந்து்ளளனர். தற்போது சிறீலங்காப் படையினர் மல்லாவியின் தென்பகுதியில் நிற்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுப் பிரதேசம், விடத்தல் தீவு, நட்டாங்கண்டல், வவுனிக்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சிறு சிறு தாக்குதல்களை நடத்திக்கொண்டு பின்வாங்கியுள்ளனர். இதேநேரம் சிறீலங்காப் படையினர் அங்கும் இங்குமாக சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து அகலக்கால் பதித்துள்ளனர். இவர்களுக்கான பின்தள உத…

  20. பிரான்ஸின் புறநகர் பகுதியான சார்ஷல் எனுமிடத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த தாஸ் எனப்படும் தமிழ் இளைஞர் ஒருத்தர் வயித்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.. மேற்படி பிரதேசத்தில் உள்ள பூங்காவொன்றில் மதுபானம் அருந்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்களிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து பலராலும் குகன் என அறியப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிய வருகின்றது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya...a.blogspot.com/

    • 0 replies
    • 1.3k views
  21. வன்னி மற்றும் யாழ். களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் மூன்று சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  22. நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவரா? சட்ட விரோத நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபடாதவரா? உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று வாழ்பவரா? நீங்கள் எப்படியானவராக இருந்தாலும் வெள்ளை வான் அனர்த்தம் உங்களுக்கும் ஏற்படலாம்! நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது உங்கள் கதவுகள் தட்டப்படலாம். வீதியில் உங்கள் பாதையை வெள்ளைவான் ஒன்று மறிக்கலாம். அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? 1) திகிலடையாதீர்கள் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் இது இடம்பெறும் போது திகைப்படைந்து செயலிளந்து நிற்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமான இறுதி கணங்களை பயத்தை நீக்கி புத்திசாதுரியத்துடன் பயன்படுத்துங்கள். உங்களை கடத்த வந்தவர்கள் நன்கு திட்டம…

    • 9 replies
    • 1.7k views
  23. விடுதலைப்புலிகளின் நவீன ரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடர்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது, தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.4k views
  24. மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆளுனராக நவநீதம்பிள்ளை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படலாம் - பான் கீ மூன் ஜ வெள்ளிக்கிழமைஇ 25 யூலை 2008இ 07:00.47 யுஆ புஆவு +05:30 ஸ மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராகத் தென்ஆபிரிக்காவின் நவநீதம்பிள்ளை பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராகக் கடமையாற்றிய லூயிஸ் ஆர்பரின் அர்ப்பணிப்புப் பாராட்டுக்குரியதென அவர் பொதுச்சபையில் குறிப்பிட்டுள்ளார். உறுப்பு நாடுகள் மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மனித…

  25. வீரகேசரி நாளேடு - கச்சதீவு சட்டப்படி இந்தியாவுக்கே சொந்தமானது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்தியா கச்சதீவை சுவீகரிக்கும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா எச்சரிக்கை விடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கத்தால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என்பதை இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. சுதந்திர தமிழீழம் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் தொடர்ந்தும் போரை முன்னெடுக்கலாம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு கட்டளைச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொட…

    • 0 replies
    • 736 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.