ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
கொழும்பு பேராயர் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்காக வத்திகான் வானொலிக்கு தெரிவித்ததாக சொல்லப்பட்டு வந்த செய்திகள் அரசால் திரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்று கொழும்பு பேராயர் 26-07-2008 திகதியிட்டு விட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை அழித்தால் தான் சமாதானம் வரும் என்று நம்புகிறார்கள் என்ற தகவலையே பேராயர் பகிர்ந்து கொண்டதாகவும்.. அதுவே தனது நிலைப்பாடு என்பதாக கருத முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (அண்மைய கணக்கெடுப்புகளில் சிங்களவர்களில் பெரும்பாலானோர் அப்படியான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பது வெளிப்பட்டிருந்தது ஊடகங்கள் மூலம் செய்தியாக்கப்பட்டிருந்தன.) Archbishop of Colombo blames government for…
-
- 1 reply
- 811 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - பதினைந்தாவது சார்க் உச்சிமாநாடு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்களுடன் இன்று காலை ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நடைபெற உள்ள உச்சி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கிறது. இன்றும் நாளையும் சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெறும். ஜூலை 29ஆம் 30ஆம் திகதிகளில் வெளியுறவு செயலாளர்களின் மாநாடும், ஜூலை 31ஆம் திகதியும் ஆகஸ்ட் முதலாம் திகதியும் வெளி நாட்டமைச்சர்களின் மாநாடும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் இரண்டாம் மூன்றாம் திகதிகளில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளத…
-
- 0 replies
- 785 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …
-
- 8 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகள் தொடர்பில் பராம் ஒபாமா மௌனம் ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] அமெரிக்க அதிபருக்குப் போட்டியிடும் பராக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளகப் புனலாய்வு பிரிவான எவ்.பி.ஐ தமிழீழ விடுதலை புலிகள் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு எனக் கூறியிருந்த போதும் பராக் ஒபாமா விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகிறார். கடந்த வாரம் பேர்லினிக்கு வருகை தந்த ஒபாமா தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளின் பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் என கூறியிருந்தார். கடந்த சனவரி மாதம் இலங்கையில் இன முரண்பாடு தொடர்பில் கருத்துத் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவில் மக்கள் …
-
- 1 reply
- 950 views
-
-
கிழக்கு மாகாண சபையும் முஸ்லிம் காங்கிரஸும் வீரகேசரி வாரவெளியீடு 7/27/2008 9:11:20 AM - கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பொத்துவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். நிந்தவூர் கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. மு.கா. வின் செயலாளர் எம்.ரீ. ஹஸன் அலியே நிந்தவூரின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். நிந்தவூரிலும் வேறு கிராமங்களிலும் ஹஸன் அலிக்கு இருக்கின்ற செல்வாக்கின் காரணமாக நிந்தவூரில் வேறு ஒருவரும் போட்டியிட முன்வரவில்லை என்பதே இப்பிரதே…
-
- 0 replies
- 415 views
-
-
சிறீலங்காவினால் 65 மில்லியன் ரூபா செலவில் லொபி குழு அமர்த்தப்பட்டுள்ளது ஞாயிறு, 27 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் பலகன மில்லின் டொலர்கள் செலவில் சிறீலங்காவுக்கு அனைத்துல நாடுகள் வழங்கும் உதவிகளைத் காப்பாற்றுவதற்காக அனைத்துலக பரப்புரை வல்லுநர் குழுவினரை (லொபி குழு) பணம் செலுத்தி ஒரு வருட காலத்திற்கு அமர்த்தியுள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அனைத்துல உதவிகள் மட்டுப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்கவின் சட்டநிறுவங்களின் ஒன்றான பிரவுண் ஸ்ரீன் ஹெயேட் பாவர் சிறேக் (Brownstein Hyatt Farber Schreck) 65 மில்லியன் ரூபா கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என லக்பிம நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க…
-
- 0 replies
- 551 views
-
-
Posted on : 2008-07-27 சர்வதேசத்திடம் அம்பலமாகும் தெற்கின் திருகுதாளங்கள் தெற்காசியாவுடனான உறவுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட சமயம் தான் வெளியிட்ட அறிக்கையிலும்; செய்தியாளர் மாநாட்டிலும் இலங்கை அரசுக்கு சூடாகவே கொடுத்திருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் அர சின் போக்குக்குக்கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கின்றது. * மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கவலைகள் குறித்து இலங்கை அதிகம் சிரத்தை எடுத்து, அவற்றுக்குப் பரிகாரம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேசப் பட்டயங்கள் தொடர்பான தனது கடப்பபாடு களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்த ஆவன செய்யாவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்ற…
-
- 0 replies
- 528 views
-
-
புலிகளின் குரல் கலைஞர் லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவு [சனிக்கிழமை, 26 யூலை 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிக் கவிஞரும் படைப்பாளரும் புலிகளின் குரல் வானொலியின் கலைஞருமான லெப். கேணல் ராணிமைந்தன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் வானொலியில் நிகழ்ச்சிகள், கவிதை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிப் படைப்பாளராக விளங்கியவர் ராணிமைந்தன். விடுதலைப் பாடல்களையும் எழுதியிருக்கும் அவர், சிறந்த ஒரு பேச்சாளராகவும் விளங்கினார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியிலும் அறிக்கை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கியுள்ளார். புதினம்
-
- 13 replies
- 2.2k views
-
-
கனேடிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட, 1983 கறுப்பு யூலை துயர நினைவுகளை நினைவு கூறும் கண்காட்சி மற்றும் நாடக நிகழ்வுகள், கனேடிய பெரும்பாண்மை மற்றும் சிறு பாண்மை இனததவர் களின் வரவேற்பை பெற்றதுடன், அவர்களுக்கு எம் துயர வரலாற்றையும் விளக்கிக்கூறும் வாய்ப்பாய் அமைந்தது.
-
- 0 replies
- 585 views
-
-
சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள காலப்பகுதியில், படையினரும் தாக்குதல்களை நிறுத்தும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக மேலும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/india-2008-07-26.html
-
- 6 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரசு மீது அனைத்துலக மட்டத்தில் கொண்டுவரப்படும் தடைகளை தடுப்பதற்காக பெரும் நிதி செலவில் சட்ட நிறுவனங்களை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 558 views
-
-
மன்னாரில் இடம்பெற்றுவரும் படைநடவடிக்கைகள் ஒரு திருப்புமுனையை நோக்கி செல்லத்தொடங்கியுள்ளதாக இராணுவ உயர்மட்டத்தில் கூறப்பட்டுவருகிறது. அடம்பனில் இருந்து முன்னேறிய 57 ஆவது படையணியும் பெரியமடுவில் இருந்து முன்னகர்ந்த 58 ஆவது படையணியும் நெடுவரம்பில் கடந்தவாரம் ஒன்றையொன்று சந்தித்திருக்கின்றன. இந்த இரு படையணிகளும் சந்தித்துக்கொண்டதே தமக்கு சார்பான திருப்புமுனையை ஏற்படுத்தும் சாத்தியத்தை தோற்றுவித்துள்ளதாக இரு படையணிகளின் தளபதிகளும் கணக்கு போட்டுள்ளனர். இந்த இரு படையணிகளின் இணைவானது புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டித்துள்ளதுடன் இராணுவத்தினரின் ஒன்றிணைந்த எதிர்கால நடவடிக்கைக்கும் உதவும் என்று 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா கொழும்பிலிருந்து…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது. அது முற்றாக முடிவடைவதற்கு இன்னும் சிறிது காலமே உள்ளது என்று விமல் வீரவன்ஸ எம்.பி. கூறியிருக்கின்றார். கிளிநொச்சியில் இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடியை ஏற்றும் நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த இலக்குடன் படையினர் மிகத் துணிச் சலுடன் போராடி வருகின்றனர் என்றும் விமல் வீரவன்ஸ நேற்று முன்தினம் நாடாளு மன்றில் மேலும் கூறினார். நாடாளுமன்றில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு நிலைமை தொடர் பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: புலிகளின் ஆயுட்காலம் குறைந்து விட்டது. படையினரின் துணிச்சல்மிக்க நடவடிக்கை மூலம் புலிகள் பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர். 30 வருட காலத்தில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியின் ஏ 9 வீதியில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இராணுவ பவல் கவச வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலியானார். இவர் கச்சாயைச் சேர்ந்த 65 வயதான கனகலிங்கம் தர்மராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். வாகனத்தை பின்னால் செலுத்தும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பவல் கவச வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilwin.com/view.php?2a26QVj4b...4g2h92ccbvj0Q3e
-
- 1 reply
- 956 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார். 67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை. மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினா…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...30870060538746e ஈழப் போராட்டத்த பற்றி ஒரு மானங்கெட்ட ஈழத்தமிழன் என்ன சொல்லுறான் எண்டு பாருங்கோ.... பார்த்து சந்தோசத்த படுங்கோ
-
- 4 replies
- 1.5k views
-
-
வன்னிக் களமுனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் எட்டு சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 842 views
-
-
இலங்கை படையினருக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவற்றை மீறி ஐரோப்பிய நாடொன்று இலங்கைக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றியென மூத்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வன்னி படைநடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் புலிகளுடன் தொடர்புடைய தன்னார்வ அமைப்புகள், இலங்கைக்கு வழங்கவிருந்த 10 ஆயிரம் ஆயுதங்களை நிறுத்துமாறு குறித்த ஐரோப்பிய நாட்டிடம் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அதனையும் மீறி குறித்த நாடு அந்த ஆயுதங்களை இந்த வாரம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்க உள்ள இந்த ஆயுதங்கள் மூலம் படையினரின் பலம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என…
-
- 5 replies
- 2.3k views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பேரில் நடத்தப்படும் போரின் பல்வேறு அணுகுமுறைகளினால் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் அனைத்துலக அமைப்புகளுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு படிப்படியாக குறைந்துவரும் நிலை இன்றைய உலகில் காணப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 626 views
-
-
வவுனிக்குளம் மற்றும் துணுக்காய் ஒட்டங்குளம் பகுதிகளில் மொத்தம் 33 போராளிகள் வீரச்சாவடைந்த தாக்குதல்களில் 14 படையினர் பலியாகி 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு இன்று அறிவித்துள்ளது. இதில் துணுக்காயில் நேற்று 8 படையினரும் வவுனிக்குளத்தில் நேற்று முந்தினம் 6 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு இடத்திலும் தலா 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு 120 மிமி எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்தி, 2 ஆர் பி ஜி மற்றும் 50 வரையான ரி 56 துப்பாக்கிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் பிற ஆயுத தளபாடங்களையும் படைத்தரப்பு மீட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 3 போராளிகள் வெவ்வேறு கள முனைகளில் படையினரிடம் சரணடைந…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சிறீலங்கா அரச படைகளின் வன்னி ஆக்கிரமிப்பு தொடரும் நிலையிலும் சார்க் மாநாட்டை ஒட்டி விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்தம் இன்று 26-07-2008 இல் இருந்து 04-08-2008 வரை அமுலில் இருக்கும் என்று விடுதலைப்புலிகளின் அதிகார பூர்வ வானொலியான புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.
-
- 7 replies
- 1.3k views
-
-
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார். வத்திக்கான் வானொலிச் சேவைக்குப் பேராயர் அளித்த செவ்வியை மேற்கோள்காட்டி கத்தலிக்நெட் என்ற இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. யுத்தத்தின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ஓர் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மி…
-
- 48 replies
- 4.4k views
-
-
அரசிடம் எதிர்க்கட்சிகள் ஏதாவது கேள்வி எழுப்ப வேண்டுமென்றால் அதற்கு உரிய நேரத்தில் உரிய முறைப்படி கேட்கவேண்டும் சும்மா கண்ட கண்ட நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அரசு பதில் தராது இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சுகாதார அமைச்சர் நிமால் சிறீபாலடி சில்வா. இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்காக படையினர் இலங்கை வந்துள்ளனரா? இல்லையா? என்று ஐக்கிய தேசிய கட்சி எம்பி ரவி கருணாநாயக்க நேற்ற நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது நிமால் மேற்கண்டவாறு கூறினார். இந்தியப்படையினரில் ஒரு தொகுதியினர் கொழும்புக்கு வந்துள்ளனர் என்று அமைச்சர் நிமால் சிறீபாலடிசில்வா இதை மறுக்கிறார் என்றும் ரவி கருணாநாயக்க கூறினார். இதில் யார் சொல…
-
- 0 replies
- 596 views
-
-
School fear in Sri Lanka அந்த பகுதியில் தாக்குதல் நடக்கவில்லை ஆனாலும் இலங்கை படையின் விமானங்கள் கிளிநொச்சி நகரின் மேல் பறக்கும் போது பாதுக்காப்பு அரண்களை தேடி ஓடும் சிறுவர்களும் பெரியவர்களும்... பாதுக்காப்பாக பீதியுடன் காணப்படும் சிறுவர் கூட்டம் ... போரின் வடு 70000 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது... ஆசிரியர்கள் மதகுகளின் அடியில் பதுங்கி கொள்கிறார்கள்.. சண்டை உக்கிரமாக இதனிலும் வடபகுதியில் இடம்பெறுகிறது... இராணுவ தகவல்களின்படி தமிழீழ தனியரசு கோரும் புலிகள் பெரிய அளவான இளப்புக்களுக்கு உள்ளாக்க படுகிறார்கள்... ( ஈழம் கேட்க்கும் இந்த மக்களை தான் புலிகளாக கருதுகிறார்கள் போலும்) இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் அமைதியை நோக்கி காத்த…
-
- 1 reply
- 1.9k views
-