ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
வவுனியா பாலமோட்டையில் நடைபெறும் உக்கிர மோதலில் 3 படயினர் பலியாகி எண்மர் காயங்களுக்கு ஆளாகி உள்ளனர் என் விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர். இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. http://tamilnet.com/art.html?catid=13&artid=26209
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ்நாட்டை தமது இரண்டாம் தாயகமாக்கொண்ட ஈழத் தமிழ் மக்கள் மீதான முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வெறுப்புணர்வு தற்பொழுது வெளிப்படுத்தப்படுவதாக, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்து, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். சிங்கள இன வெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு கருணாநிதி விதித்துள்ள தடை, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும் செயல் என இந்த அறிக்கை கண்டிக்கின்றது. தமிழ்நாட்டை மலையாளிகளும், மார்வாடிகளும், குஜராத்தி…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையின் பாதுகாப்பு படையினருக்கு இந்தியா பயிற்சிகளை வழங்க இணங்கியுள்ளதாக த ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் முதற் தடவையாக 500 க்கு மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலான படையினர் இந்தப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கலகத் தடுப்பு போரியல், காடுகளில் போரிடும் முறைமை, விசேட கடல்சார் பயிற்சி, தகவல், தகவல் வழிகாட்டி, நீர்மூழ்கி எpதிரத் தாக்குதல் முறைமை என பலதரப்பட்ட போரியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அந்த இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 762 views
-
-
வீரகேசரி இணையம் - கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்புக்கென சுமார் மூவாயிரம் இந்தியத் துருப்பினர் இலங்கை செல்லவுள்ளனர். இவர்களைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்க இலங்கை அரசு திட்டம் தீட்டியுள்ளது என பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படைவீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும் முதல் கட்டமாக 1,500 வீரர்கள் கொழும்பு சென்றுவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்…
-
- 3 replies
- 911 views
-
-
சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதி அமுதாப் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்கவுரை ஆற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் வாணன், மேஜர் ஜெயசீலன் ஆகிய மாவீரர்கள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பல வெற்றிகரமான தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தவர்கள். எதிரியுடன் நேருக்கு நேர் மோதி சிறப்புப் படையணியின் மரபுக்கேற்ப வீரச்சாவடைந்தவர்கள். இம் மாவீரர்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுவோம். இன்றைய அரசியல் சூழலை எடுத்து…
-
- 0 replies
- 855 views
-
-
மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் இன்று நிகழ்ந்த புலிகளின் குரல் முத்தமிழ் கலை அரங்க நிகழ்வில் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி லக்ஸ்மன் அவர்கள் பேசிய போதே தேசிய தலைவரின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறீலங்காப் படையினர் கற்றுக் கொள்வர் என்று குறிப்பிட்டுள்ளார். மகிந்த போரின் மூலம் தீர்வைத் தேடுவாராக இருந்தால் இந்தப் போரில் நாம் வெற்றி பெறுவோம். இடம்பெயர்ந்த நிலையிலும் படையினரின் வன்பறிப்புக்கள் மத்தியிலும் உறுதி குலையாது மன்னார் மாவட்ட மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதானது உற்சாகமளிப்பதாக மேலும் தளபதி குறிப்பிட்டுள்ளார். புலிகளின் குரல் - இரவுச் செய்தி. (29-06-2008) : http://www.pulikalinkural.com/
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாதோரால் ஊடகவியலாளர் நமால் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரி ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலை பிரித்தானிய தூதரகம் கண்டித்துள்ளதுடன் நீதி விசாரணைக்கும் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
நிலவரம்:வன்னித்தம்பி தங்கரத்தினம் 30. ஜூன் 2008 18:50 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை, அல்லது அந்த அளவுக்கு அவரிடம் ஜே.ஆர். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆசியாவில் பணவீக்கம் கூடியநாடாக சிறீலங்கா திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] ஆசிய பிராந்தியத்தின் அதிகூடிய பணவீக்க வீதம் இலங்கையில் நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதத்தில் பணவீக்க வீதம் சுமார் 25 விழுக்காட்டை எட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வரலாறு காணாத வகையில் இலங்கையில் பணவீக்க உயர்வடைந்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் கொள்கைத் திட்டமிடலில் காணப்படும் குறைபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்.எஸ்.பி.சீ. வங்கியின் ஆய்வறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1532
-
- 1 reply
- 912 views
-
-
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் போன்றவை காரணமாக இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு இராணுவ நடவடிக்கையைத் தொடர்வது கடினமானது என இலங்கைக்கு வலியுறுத்திக் கூறியுள்ள இந்தியா, யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சு மூலமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்குமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ள இந்தியக் குழுவினர், இல்லாவிடில் இந்தியப் பிரதமரின் "சார்க்' உ…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் ராஜதந்திரி Mahendra Ratnaweera வும் உள்ளூர் பத்திரிகையாளரான Namal Perera வும் கொழும்பில் கடுமையாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UK diplomat attacked in Sri Lanka A British High Commission employee in Sri Lanka's capital, Colombo, has been attacked along with a local journalist. Political officer Mahendra Ratnaweera and reporter Namal Perera were travelling by car together when they were stopped and attacked. The Sri Lanka Press Institute said a group of people carried out the assault. It is not clear who they were. Mr Perera is the latest of a number of journalists in th…
-
- 1 reply
- 1.9k views
-
-
துணுக்காய் உதவி அரச அதிபர் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டனம் [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் படுகொலை செய்யப்பட்டதனை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் முனைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் உதவி அரச அதிபர் மீது நடத்தப்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் இக்கொடூரமான தாக்குதலை மனிதாபிமானப் பணிபுரியும் முன்னணி அமைப்பு என்ற ரீதியில் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரச படைகளின் நகர்வுகளினாலும் எறிகணை வீச்சுக்களினாலும் ஆயிரக்கணக்க…
-
- 0 replies
- 590 views
-
-
துணுக்காய் உதவி அரச அதிபரின் இறுதி வணக்க நிகழ்வு [திங்கட்கிழமை, 30 யூன் 2008, 08:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் பலியான துணுக்காய் உதவி அரசாங்க அதிபரான நாகலிங்கம் நந்தகுமாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. நாகலிங்கம் நந்தகுமாரின் புகழுடல் துணுக்காய் உதவி அரச அதிபர் செயலக மண்டபத்தில் மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு, கந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வணக்க நிகழ்வு, கந்தபுரம் உதவி அரச அதிபர் துணைப் பணிமனை அலுவலகர் மகேந்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன்…
-
- 0 replies
- 804 views
-
-
அறுகம்பே பாலம் நாளை திறக்கப்படவுள்ளது திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] பொத்துவில் மற்றும் அறுகப்பே பகுதிகளை இணைக்கும் அறுகம்பே பாலத்தை நாளை(ஜூலை 01) பொதுமக்களின் பிரயாணத்திற்கு திறந்துவிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு உதயம் திட்டத்திற்கமைய 2004ஆம் அண்டு ஆழிப்பேரலையினால் தேமடைந்த இந்ப்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப்பாலம் திறக்கப்படவுள்ளமை, இப்பகுதிமக்களின் மீன்பிடி, மற்றும், விவசாய என்பதுடன், உல்லாசப்பயணத்திற்கும் மக்களின் இலகுவழிப் பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். http://w…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஹிக்கடுவ பகுதியில் தொடரூந்து தடம்புரண்டதில் மூவர் பலி: 5 வரை காணவில்லை திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] றுகுணு குமாரி என அழைக்கப்படும் புகையிரம்; கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்றதாகவும் வழியில் ஹிக்கடுவ பகுதியில் பாதையை விட்டு விலகியுள்ளதாகம் தெரியவருகிறது. இதன்போது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் ஜந்து பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்புகையிரதம் பாதையை விட்டு விலகியமைக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என அறியமுடிகிறது http://www.pathivu.com/?p=1529
-
- 1 reply
- 711 views
-
-
தமிழீழத் தனியரசை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் இல்லையேல் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் வெகுவிரைவில் உருவாகும். என மட்டு. த.தே.கூட்டமைப்பின் பா.உ எஸ்.ஜெயனந்தமூர்த்தி ஜேர்மனியில் பொங்குதமிழ் நிகழ்வில் தெரிவித்தார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் அரச படைகளுக்கும் அதனை வழி நடாத்திச் செல்லும் உயர்அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டுவதற்கு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளது. இன்னும் 27 கிலோமீற்றர், 18 கீ.மிற்றர் என நீளங்களை அளவிடும் இராணுத் தளபதி மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோ மீற்றரின் தூரத்தை கணக்குப் போட தவறிவிட்டார். பொறுமையோடு, நீண்ட கால அமைதியைக் காத்துவிட்டோம். …
-
- 3 replies
- 2k views
-
-
தமிழ்மொழி பயிற்சிகளை முடித்துக்கொண்ட சிறீலங்கா படையினர் சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொத்மலை இணைப்புசேவை பயிற்சி நிறுவனத்தில் இருந்து தமிழ்மொழிப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட 82 பேர் அடங்கிய காவல்துறை மற்றும் முப்படை அதிகாரிகள் கொண்ட 75 அவது பிரிவினர் வெளியேறியுள்ளனர். கடந்த புதன்கிழமை இந்த பயறிச்சி நெறிகளை வெற்றிகரமாக முடித்தக்கொண்ட முப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. பாதுகாப்பு அமைச்சின் உப செயலாளர் டபிள்யூ.எம்.ஏ.எஸ். விக்கிரமசிங்க இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்தகொண்டார். 100 நாட்கள் பயிற்சித் திட்டமாக உள்ள இந்த தமிழ்மொழிப்பயிற்சியின் பரீட்சையை இலங்கை பரீட்சைத்திணைக்கள மொழிப் பிரிவு நடத்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் இலங்கை ராணுவ இணையம் Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43 The Associated PressPublished: June 28, 2008 COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday. Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by th…
-
- 29 replies
- 6.2k views
-
-
வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார். சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார். இது குறித்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைவரம்: அரசிடம் கேள்வி எழுப்புகிறது பிரான்ஸ்! ஒப்புக்கொள்கிறார் அமைச்சர் பீரிஸ் ஐ@ராப்பிய ஒன்றியத்தின் புதிய தலைமைப் பொறுப்பை நாளை முதல் ஏற்கவிருக்கும் பிரான்ஸ், இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கின்றது. பிரான்ஸுடன் பேச்சு நடத்துவதற்குச் சென்றிருந்த இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் @பராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இத்தகைய கேள்வியை பிரான்ஸ் எழுப்பியது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையிலிருந்து ஆடைகள் உட்பட முக்கிய பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செல்வதற்கான ஜி.எஸ்.பி. வரிச்சலுகைகளை மேற்கு நாடுகளிடமிருந்து தொடர்ந்து பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் எத்தனமாக அமைச்சர…
-
- 0 replies
- 900 views
-
-
Posted on : 2008-07-01 இந்தியப் படைகளின் வருகையின் பின்னணியில் சில காரணங்கள் சரித்திரம் தலைகீழாகத் திரும்புகின்றது என்ப தையே நிகழ்வுகள் காட்டுகின்றன. 1980 களின் கடைசியில் ஆட்சிப்பீடம் ஏறிய ஜனாதி பதி பிரேமதாஸா, அவ்வேளையில் "சார்க்' உச்சி மாநாட்டை இலங்கையில் நடந்த வேண்டியவரானார். இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்தியத் துருப்புகள் "அமைதி காக்கும் படை' என்ற பெயரில் ஆக்கிரமித்து நின்றமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பெரும் யுத்தம் ஒன்றையும் மேற்கொண் டிருந்தன. ""ஓர் ஆக்கிரமிப்புப்படை(இந்தியப்ப
-
- 0 replies
- 2k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…
-
- 10 replies
- 2.1k views
-
-
இலங்கைக்கு இந்திய வீரர்களை அனுப்ப நெடுமாறன் கண்டனம் திங்கள்கிழமை, ஜூன் 30, 2008 சென்னை: சார்க் மாநாட்டு பாதுகாப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 3000 இந்திய ராணுவ வீரர்கள் அனுப்பபட்டுள்ளனர். இவர்களை வைத்து ஈழத் தமிழர் போராட்டத்தை ஒடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படை வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும், முதல் கட்டமாக 1500 வீரர்கள் கொழும்பு சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகி…
-
- 0 replies
- 792 views
-
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப் பின் பிரதிநிதியான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு தீண்டத்தகாத தரப்பினர் போல நமது அயல் பாரத தேசம் கருதுகின்றது. ஈழத்தமிழர்களின் மனதைப் பெரிதும் புண் படுத்தும் விடயம் இது. ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தைக் காட்டி புலிகளையும் தமிழர்களையும் விரோதிகள் போலத் தள்ளி வைத்து நடக்கும் இந்திய தேசத்திற்கு உறைப்பாகக் கொடுத்திருக்கின்றார் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன். கொழும்புக்கு வந்திருந்த இந்திய உயர்மட்ட இராஜந் திரிகள் குழுவினரைத் தாம் ஒருவராக தனியாக சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதாடிய சமயமே இது விடயத்தில் இந்நியத் தரப்புக்கு சில விடயங்களையும் காட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், சமாதானப் பேச்சுக்கு வருமாறு, தாமே அவரே நேரடியாக அழைப்பு விடுத்தால் மட்டுமே அரசாங்கம் அதனைப் பரிசீலனை செய்து பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து முடிவு செய்யும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் அரசாங்கத்தின் சமாதானப் பேச்சுக் குழுவின் தலைவரும், அமைச் சருமான நிமால் சிறிபால டி.சில்வா. அரசாங்கம் விடுதலைப் புலிகளு டன் சமாதானப் பேச்சுக்களை நடத்து வதற்குத் தயாராகவே உள்ளது. பேச்சுகள் எந்த நிபந்தனையும் இன்றி ஆரம் பிக்கப்படலாம். எனினும் பேச்சுத் தொடர்பான அழைப்பு விடு தலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகர னிடம் இருந்து நேரடியாக அரசாங்கத்து க்குக் கிடைக்க வேண்டும். அவரிடமிருந்து அழைப்புக் கிடைத் தால் பேச்சுக்கான சூழல் உருவா…
-
- 0 replies
- 1.1k views
-