ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
களமுனையில் இராணுவத்தினர் தமது முழுமையான வலிமையையும் திரட்டித் தாக்கினாலும் நின்றுபிடித்து எதிர்ச்சமராடும் புலிகளின் போரிடும் திறனைக் கண்டு போரியல் ஆய்வாளர்கள் பலரும் வாய்பிளந்து நிற்கின்றனர். அதேநேரம யாழ் குடாநாட்டை இராணுவத்தினர் தக்க வைக்க முடியுமா என்ற அச்சம் இராணுவத் தலைமைக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது. விபரம்... http://www.swissmurasam.info/content/view/7095/31/
-
- 6 replies
- 2.8k views
-
-
நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர்- இலங்கை பிரதம நீதியரசர் இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையையும் அவர் பாராட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார். நாட்டின் நீதித்துறையை கட்டியெழுப்புவதற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
வெள்ளவத்தை, இலக்கம் 10 விவேகானந்த வீதி என்ற விலாசத்தில் வசிக்கும் கதிரேசன் நிஷாந்தன் (வயது 26) என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் அவதிப்படுகிறார். இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு 2,50,000 ரூபா தேவைப்படுவதாக டாக்டர்கள் தெவித்துள்ளனர். கஷ்ட நிலையில் உள்ள இவரால் இப்பணத்தைச் செலுத்த டியாத நிலையில் உள்ளது. ஆகையால், பரோபகாகளிடம் இருந்து இவர் உதவியை எதிர்பார்க்கிறார். உதவிகளை செய்ய விரும்புவோர் கொமர்ஷல் வங்கி வெள்ளவத்தைக் கிளைக்கு 8470007933 என்ற கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைக்குமாறு கேட்கின்றார். மேலதிக தகவல்கள் அறிவதற்கு 072 4105763 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெவித்தார். கேசரி
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகளின் 1-4 தளம் மணலாறில் தற்போது இல்லை: ஜனக பெரேரா [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 01:07 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற "இடிமுழக்கம்" படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: மணலாறு காட…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்திய உயர்மட்டக் குழு - மகிந்த சந்திப்பில் நடந்தது என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 12:34 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] இந்திய உயர்மட்டக் குழுவினரின் அண்மைய சிறிலங்காப் பயணத்தின் போது பல சூடான விடயங்கள் இடம்பெற்றிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. இது குறித்து தெரியவருவதாவது: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரின் சிறிலங்காவுக்கான பயணம் குறித்து முதல் நாளான ஜூன் 18 ஆம் நாள் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக அரச தலைவர் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அரச தலைவர் செயலகத்துக்கு இது குறித்து அறிவித்த இந்திய தூதுவர் அலோக் பிரசாத், உயர்மட்டக் குழுவினரின் வருகை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் முக…
-
- 0 replies
- 821 views
-
-
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாட்டிற்கு வந்த இந்திய அமைதி காக்கும் படையினரில் உயிரிழந்தோருக்காக கட்டப்படும் நினைவுத் தூபி திறப்பு விழாவில் பங்கேற்க இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினருக்கான நினைவு தூபி பாராளுமன்றத்திற்கு முன்னால் நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும்இ சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கைக் கொண்டு இந்தத் திறப்பு விழாவை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினர் வான்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் குறித்த நினைவுத் தூபி நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் இந்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழரை ஒட்டுமொத்தமாக அடக்கும் நோக்கில் வன்னி மீதான அரச, இராணுவ முனைப்பு 29.06.2008 / நிருபர் எல்லாளன் சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது பற்றிக் குறிப்பிடுகையில் வன்னிப் பிரதேசம் 400000 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் சிங்கள அரசானது தனது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அங்கு வாழும் மக்களை பலியாக்கி வருகின்றது. வன்னி மீது முழு அளவிலான பொருளாதாரத்தடை , மருந்துத் தடை, எரிபொருள் …
-
- 0 replies
- 887 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சந்திரிக்கா அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலயிருந்தார். எனினும், கடந்த 12ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு முதலாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட போது ஆற்றிய உரை அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கம் தொடர்பாக சந்திரிக்கா வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்சி உறுப்புரிமையை நீக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகரில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது [ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 05:10 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் முற்பகல் வரை பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தையில் தரைப்பகுதியில் பசல்ஸ் லேன் முதல் விகாரை லேன் வரை காலி வீதியில் சுமார் 10 ஒழுங்கைகளைச் சுற்றிவளைத்த படையினரும் காவல்துறையினருமே இந்த நீண்ட நேரத் தேடுதல்களை மேற்கொண்டனர். அதிகாலை 5:00 மணியளவில் ஒவ்வொரு ஒழுங்கையிலும் உள்ள வீடுகள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புக்குச் சென்ற படையினர் தேடுதல்கள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த வேளையில் ம…
-
- 0 replies
- 849 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் கையில் ஒரு லட்சம் சிங்கள இளைஞர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 622 views
-
-
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டின் செலவுகளுக்காக அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியில் பெருமளவிலான நிதி பாதுகாப்புக்கு செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 768 views
-
-
தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது. மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு.…
-
- 11 replies
- 1.7k views
-
-
மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்றால், அமெரிக்காவுக்கு உள்ளே மாத்திரமன்றி ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விபரம்.. http://www.swissmurasam.info/content/view/7092/1/
-
- 1 reply
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் களுவன்கேணியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 738 views
-
-
தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா? -தாயகத்திலிருந்து மு.திரு- சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே. இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள். ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம். இதனை சற்று விரிவாக நோக்குவோம். ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா …
-
- 0 replies
- 1.1k views
-
-
மியன்மாரைப் போல இலங்கையையும் சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி! அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம் இலங்கை தனது பூகோள, அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி மியன்மாரில் செய்ததை சீனா இலங்கையிலும் செய்கின்றதா என்ற கேள்வி புதுடில்லியில் காணப்படுவதாக இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். மலேசியா, ஈரான், சவூதி அரேபியாவை இலங்கைக்குள் கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கையால் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு மென்மேலும் குறையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை விரும்புவதாக இலங்கை …
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியா மாவட்டம் இறம்பைக்குளத்தில் நேற்றிரவு குடும்பப்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்துள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிள்ளையானும் இணைந்து புதிய அரசியல் முன்னணி ஒன்றை அமைக்கவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 793 views
-
-
இந்தியாவின் சிறப்பு படையினர் 1500 பேர் கொழும்பை வந்தடைந்தனர். சனி, 28 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்பிற்கு இந்தியாவின் சிறப்பு படையினர் 3000 பேர் வரவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அதன்படி முதல்கட்டமாக கொழும்பிற்கு இந்தியாவின் 1500 பேர் அடங்கிய சிறப்பு பாதுகாப்பு படையினர் கொழும்பு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறீலங்காவிற்கு ஒகஸ்ட் மாதமளவில் செல்லவிருக்கும் நிலையில் அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான ஒரு நடவடிக்கையினை இந்தியா மேற்கொண்டுள்ளது. இவர்கள் சிறீலங்கா படையினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப…
-
- 2 replies
- 2.2k views
-
-
மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பெரிய மடுப் பிரதேசத்தை இராணுவம் இன்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7 சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. பெரியமடுப் பகுதி முன்னரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் ஓயாத அலைகள் 3 இன் போது விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்நிறுத்த கால எல்லைக் கோட்டில் இருந்து மன்னார், வவுனியா கள முனையில் இராணுவம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு பல முனைகளில் விடத்தல் தீவை நோக்கி நெருங்கி வருகின்ற போதும் மணலாறு மற்றும் யாழ்ப்பாண கள முனைகளில் அதற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Heavy fighting in Vavuniyaa fr…
-
- 25 replies
- 6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கில் உள்ள துணுக்காய் ஒட்டன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் பொதுமக்களின் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
ஜனநாயகச் சங்க தலைவராக ரணில் மீண்டும் நியமனம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் உப தலைவராகவும், ஆசிய பசுபிக் ஜனநாயகச் சங்கத்தின் தலைவராகவும் இரண்டாவது தடவையும் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம்25,26ஆகிய திகதிகளில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் 25ஆவது பொதுக்கூட்டத்திலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு இச்சங்கங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சர்வதேச ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோன்.டபிள்யூ.ஹவார்ட் இக்கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார். இதேவேளை, சிம்பாப்வ…
-
- 0 replies
- 670 views
-