ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
உடன்பாட்டை மதியாத சிங்கள அரசு இரா. உமா சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலமாகத் தமிழினத்தை அழித்தொழிப்பதில் வெறிகொண்டு செயல்பட்டுவருகிறது இலங்கை அரசு. சர்வதேசப்போர் விதிகளுக்குக் கட்டுப்படாமல் அப்பாவித் தமிழர்களின் வாழ்விடங்கள் மீதும பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திக்கொண்டுள்ளது. இப்படி ஒருபுறம் தமிழர்கள் வாழும் பகுதிகளில இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுக்கொண்ட
-
- 0 replies
- 655 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கி அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பதற்கான யோசனையை அக்கட்சியின் செயற்குழுவிடம் முன்வைப்பதற்கு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்களுக்கு இலக்காகும் தனியார் பேருந்துகளின் இலக்க வழிப்பாதை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் பாதுகாப்புச் சபையிடம் பரிந்துரைக்கவுள்ளனர் என்று தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 616 views
-
-
முருங்கனில் சிறிலங்காப் படையினரால் குடும்பஸ்தர் சுட்டுப் படுகொலை [சனிக்கிழமை, 07 யூன் 2008, 05:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் மாவட்டம் முருங்கனில் உள்ள அளவக்கைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முருங்கன் அளவக்கைப் பகுதி குளம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் குளிக்கச் சென்றிருந்த வேளை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 506 views
-
-
வீரகேசரி இணையம் - வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதியாக (ஆணையாளராக) நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசினையடுத்துஇ ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 16.05.2008 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 7 மற்றம் 13 ஆவது திருத்;தச் சட்டங்களின் அடிப்படையில்இ 111 (அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் முன்னிலையில் வியாழக்கிழமையன்று, இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் நீதிபதி இளஞ்செழியன் வவுனியா மாவட்டத்தில் எட்டரை வருடங்களும், மன்னார் மாவட்டத்தில் மூன்று வருடங்களும் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார். யாழ் மாவட்ட செம்மணி பு…
-
- 0 replies
- 696 views
-
-
வீரகேசரி இணையம்- மொரட்டுவைஇ கண்டி பொல்கொல்ல ஆகிய இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களையடுத்து, வடபகுதியில் இருந்து தமிழ் மக்கள் மதவாச்சி ஊடாகத் தென்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியிலிருந்து இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் குறைந்தது 22 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளதனால், வவுனியா மன்னார் பிரதேசங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்பவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. வவுனியா, மன்னார் பகுதிகளில் இருந்து தெற்கு நோக்கி பஸ்களிலோ அல்லது ரயிலிலோ தமிழ் மக்கள் செல்லமுடியாது எனவும், இது தற்காலிக நடவடி…
-
- 0 replies
- 567 views
-
-
கட்டுபெத்தவில் இடம் பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக தோன்றிய பதற்றமான சூழ்நிலையையடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு வடபகுதியைச் சோந்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்ததாக த.தே.கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பா.உ. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். இது தொடர்பாக கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில் : நேற்று காலை கட்டுபெத்த பகுதியில் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து மொரட்டுவை பல்கலைக்கழகப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வடபகுதியைச் சோந்த பல்கலைக்கழக மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. இந் நிலையில், நிலைமை மேலும் மோசமாவதை த:டுக்கவும் வடபகுதி மாணவர்கள் மீது இரவில் தாக்குதல் நடத்தப்படலாம் என…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
சற்று முன் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக செய்திகள்.. மொரட்டுவ கட்டுபெத்த வீதியில் பஸ்வண்டி (21-18599) ஒன்றினுள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 15 பேர் காயமடைந்துள்ளனர்.
-
- 49 replies
- 8.5k views
-
-
சிறை மீழும் செம்மலுக்கு கவர்னர் பதவி? June 06,2008 திருட்டுக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்ட கருணா இன்று அல்லது நாளை விடுபடவுள்ளார். கருணாவுக்கு இங்கிலாந்து தஞ்சம் கொடுக்க மறுத்துவிட்டது. இந்தியாவுக்கு அனுப்பிவைப்பீர்களா என்று கருணா கேட்டுப்பார்த்தார். அதுவும் முடியாத காரியம் என்று மறுக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னர் ஒரே வழி இலங்கைக்குத் திரும்பிச் செல்வதுதான். பழைய ஏஜெண்டுகளுடன் தொடர்பு கொண்டு என்னை எப்படியும் காப்பாற்றுங்கள் என்று கேட்டுள்ளார் கருணா. புங்குடுதீவு கிருஸ்ணன், உண்டியல் ஜெயதேவன் போன்றோர் இலங்கை உளவுத்துறை அதிகாரி கெந்த விதாரணையுடன் நீண்ட ஆலோசனை நடத்தினர். கருணாவை அரசியல் ரீதியிலும், பிள்ளையானை கொலை மற்றும் சிங்களக் குடியேற்றங்…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஊடகவியலாளர்களுக்கு உயிராபத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என்று பிறசல்லை தளமாகக்கொண்டு இயங்கும் அனைத்துலக செய்திகள் பாதுகாப்பு நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 973 views
-
-
தொடர் தாக்குதல்களின் எதிரொலி: சிறிலங்காவின் பங்குச் சந்தையில் சரிவு [சனிக்கிழமை, 07 யூன் 2008, 07:17 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது. கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை முகவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தாக்கம் எதிர்வரும் வாரமும் எதிரொலிக்கலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த சில ந…
-
- 1 reply
- 1.3k views
-
-
திருகோணமலை புடவைக்கட்டு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.6k views
-
-
மொறட்டுவவில் தமிழ் மாணவர்களுக்கு அடி-உதை: 10 மாணவர்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கைது [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 07:07 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவ கட்டுப்பெத்தவில் இன்று காலை பேருந்து மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலையடுத்து மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குள் தமிழ் மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பல்கலைக்கழகத்திற்குள் இருந்த தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளனர். 10-க்கும் அதிகமான தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் நையப்புடைத்தனர் என்று பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கள …
-
- 3 replies
- 1.8k views
-
-
மொரட்டுவக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இன்று மாலை வரை 46 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 18 மாணவர்களும், 8 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர். கட்டுபெத்தையில் தங்கியிருந்தவர்களும், மொரட்டுவவில் தங்கியவர்களும், வணிக நிலையங்களில் பணிபுரிந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவப் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு மாலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. அப்குதிக்கு பயணம் செய்த பிரதி அமைச்சர் ராதாகிஷ்ணன் கைது செய்யப்பட்டோரை சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் மாணவிகளை முதலில் விடுதலை செய்வதாக, கைது செய்யப்பட்டர்கள் தொடர்பான விபரங்கள் பெற்றோருக்கு அறிவிக்கப்படும் ஏனையவ…
-
- 0 replies
- 1k views
-
-
புத்தளப் பகுதியில் இரு முஸ்லிம் குழுக்களிடையே மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. புத்தளம் கறிக்கட்டி ஏதிலிகள் முகாமில் இம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமின் ஆதரவாளர்களும், மீள் குடியேற்ற துணை அமைச்சர் ரிச்சாட் பத்தியூனின் ஆதரவாளர்களுக்கும் இடையே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இன்றைய நாள் ரவூப் ஹக்கீம் ஏதிலிகள் முகாமைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இக்குழுக்கள் இடையே மோதல்கள் இடம்பெற்றன. இதனால் இருதரப்பு ஆதரவர்களின் வாகனங்கள் தேசமாக்கப்பட்டன. அத்துடன் இருதரப்பிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்களுக்கு உள்ளானோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=967
-
- 0 replies
- 688 views
-
-
புத்தளத்தில் ஜெலிக்நைற் குச்சிகளை வைத்திருந்து 5பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று புத்தளத்திலிருந்து கற்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டிகள் இரண்டில் ஒலிபெருகிகள் உள்ளே இக் குச்சிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இரு முச்சக்கர வண்டிகளில் சென்ற 4 முஸ்லிங்கள் மற்றும் சிங்களவர் ஒருவர் என ஐந்து பேரை சிறீலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 364 ஜெலிக்நைற் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. http://www.pathivu.com/?p=970
-
- 0 replies
- 611 views
-
-
அம்பாறையில் தாயும் மகளும் காடையர்களால் பாலியல் வல்லுறவு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:31 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] அம்பாறை ஒலுவில் பகுதியில் தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நேற்று முன்நாள் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது. தமிழ்ப் பெண்களான இந்த இருவரும் ஒலுவில் தென்னந்தோட்டப் பகுதி வீடு ஒன்றில் தங்கியிருந்த போதே அதிகாலை 1:00 மணியளவில் இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கிரான் பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் அவரது 13 வயது மகளும் மேற்படி வீட்டில் தங்கியிருந்த போது, அதிகாலை 1:00 மணியளவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த ஆறு பேரில் நான்கு பேர் இந்த இருவரையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்று…
-
- 15 replies
- 2.8k views
-
-
பொத்துவில் காட்டுப் பகுதியில் 9 பேர் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 03:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் பொத்துவில் மியன்கொட காட்டுப்பகுதிக்குள் விறகு வெட்டச்சென்ற 9 பேர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். பொத்துவில் பெரிய உல்லை ஊடாக மியன்கொட என்ற இடத்திற்கு நேற்று முன்நாள் புதன்கிழமை 12 பேர் அடங்கிய குழுவினர் விறகு விட்டச் சென்றனர். இவர்களை மியன்கொட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டோரில் மூவரை ஆயுதாரிகளை நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தனர். கடத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா அடிப்படையில் 12 பேருக்குமான பணத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அப்போதுதான் 9 பேரும் விடு…
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளவத்தையில் கணினி விற்பனை நிலையத்தில் வெடி பொருட்கள் மீட்பு [06 - June - 2008] [Font Size - A - A - A] * பொலிஸார் தெரிவிப்பு கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில், கணினிகள் விற்பனை நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெகிவளை ரயில் பாதை குண்டுவெடிப்பையடுத்து புதன்கிழமை வெள்ளவத்தைப் பகுதியில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர். இதன்போதே கணினிகள் விற்பனை நிலையமொன்றில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சி4 ரக வெடிமருந்து 3 கிலோ, வெடிக்கவைக்கும் கருவிகள் 5, மைக்ரோ பிஸ்ரல் 1, மைக்ரோ பிஸ்ரலுக்குரிய ரவைக்கூடு 1 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
மொரட்டுவை பிரதேசத்தில் ஊரடங்கு அமுல் - குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்னர். இன்று காலை கட்டுபெத்த பிலியந்தலை வீதியின் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மொரட்டுவ கட்டுப்பெத்த பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் க்ளைமோக் குண்டொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், குறித்த பிரதேசத்திலிருந்து மேலும் இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.00 மணி முதல் 12.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் எனத…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கைகளைப் பலப்படுத்தி நாம் எழுச்சி கொண்டு வருகின்றோம் என்று தமிழ் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 769 views
-
-
நிருபர் எல்லாளன் தமிழீழ மாணவர் எழுச்சிநாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 6ஆம் நாள் தமிழீழம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மாணவர்கள் மீதி திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழ் மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தியாகி பொன் சிவகுமார், மேஜர் முரளி ஆகியோர் நினைவிலான தமிழீழ மாணவர் எழுச்சி நாள் நினைவுகள் இன்று வன்னியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் இந்நிகழ்வுகள் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் எழுச்சியுடன் வீரமுரசு வார நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 04:51 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் வட்டத்தின் கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் வீரமுரசு வார நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இரவு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வு பாரதிபுரம் வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரினை கப்டன் சரவணா, கப்டன் அறிவு ஆகிய இரு மாவீரர்களின் தந்தை பசுபதிப்பிள்ளை ஏற்ற, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்திற்கு தூயவன் அரசறிவியல் கல்லூரி முதல்வர் அரசண்ணா ஈகைச்சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். பிரிகேடியர் பால்ராஜின் திருவுருவப்படத்திற்கு க…
-
- 0 replies
- 948 views
-
-