Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நடக்காதென்பார் நடந்துவிடும் [ திங்கட்கிழமை, 02 யூன் 2008, 12:46.12 PM GMT +05:30 ] மற்றுமொரு எண்பத்துமூன்றுக்கு (83) இடமளிக்கப் போவதில்லை எனத் திரு.மகிந்த ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாசஸ்தலத்திற்கு ஊடகங்களின் ஆசிரியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் அழைத்துக் காலை விருந்தளித்துப் பேசுகையிலேயே சிறீலங்கா ஜனாதிபதி இதனைக் கூறியிருக்கிறார். அத்தோடு எந்தவிதமான அழுத்தங்கள் வந்தாலும் யார் கூறினாலும் எத்தனை அழிவுகள் ஏற்பட்டாலும் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் சூளுரைக்கின்றார். பொதுமக்களை இலக்கு வைத்து அடிக்கடி நடத்தப்படுகின்ற குண்டுத் தாக்குதல்கள் மூலம் தெற்கிலே ஒரு கலவரத்தைத் தூண்டுவதற்குப் புலிகள் முயற்சித்து வருவதாக திரு.மகிந்த…

  2. இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஊடக சுந்திரத்திற்கு மறைமுக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஆயுத படையினருக்கு எதிரான ஊடக துரோகத்தனத்தை நிறுத்துங்கள் என தலைப்பிட்டு, நீண்ட கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. த நேசன் பத்திரிகையின் இணையாசிரியர் கீத் நோயார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் படையினருக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர ஊடக அமைப்பு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இந்த இணையத்தில் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக பாரிய யுத்தம் ஒன்றை முன்னெடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், இராணுவ நடவவடிக்கை, இராணுவ தளப்பாடங்கள் கொள்வனவு, இராணுவ பதவி உயர்வுகள் குறித்து ஊடகங்கள் மேற்கொள்ளும் விமர்சனங்கள், எத…

    • 0 replies
    • 684 views
  3. நோர்வே அனுசரணையாளர்களின் பங்களிப்பின்றி இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லையென தமிழீPழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நோர்வேயின் முக்கியஸ்தர்களான எரிக் சொல்ஹேய்ம், நோர்வேத் தூதுவர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதுடன், எதிர்கால சமாதானப் பேச்சுவார்;த்தைகள் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அவர்களின் கிளிநொச்சி வருகையை எதிர்பார்த்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் எஸ்.புலித்தேவன் கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் நோர்வே அனுசரணையாளர்களுடன் பல்வேறு விட…

    • 0 replies
    • 753 views
  4. சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…

  5. ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 561 views
  6. இன்றைய ஆட்சியாளர்களால் சமாதனத்திற்குப் பதிலாக யுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளித்து உதவி வழங்குவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இன்று நாட்டில் வாழும் மக்கள் இரண்டு எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று பணவீக்கம், இரண்டாவது யுத்தம். பணவீக்கம் தொடர்வாக அரசு கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். எரிபொருள் விலையேற்றம் போன்ற சர்வதேச காரணிகளை அரசு பணவீக்க நிலைக்கு காரணமாகக் கூறுகின்றது. எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றால் 10வீத பணவிக்கம் ஏற்படலாம். உலகில் ஏனைய நாடுகளில் அவ்வாறே ஏற்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் 30 வீ…

    • 0 replies
    • 666 views
  7. உடன்படி க்கைகள் மூலமாகவன்றி புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு புதியதொரு அரசியல் யாப்பை வரையும் பணிகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மேற்கொள்ளுமென்று அமைச்சர் விதாரண தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் தீர்வு முறையை ஒத்தவாறு தீர்வொன்றைத் தயாரிப்பதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து புதிய அரசியல் யாப்பொன்றைத் தயாரிக்கும் பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். சர்வகட்சிப் பிரதிநிதிக…

    • 0 replies
    • 617 views
  8. வீரகேசரி நாளேடு - ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்துவத்தை இலங்கை இழந்தமை அரசாங்கத்திற்கு விழுந்த முதல் அடியாகும். இந்த அடி இத்தோடு முடிவதில்லை. அது ஆரம்பமாகும். இனிமேல் பல அடிகள் விழுவதற்கு காத்திருக்கின்றன. இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார். எமது நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை நன்கு அவதானித்துக்கொண்டிருக்கிறா

    • 0 replies
    • 523 views
  9. வீரகேசரி நாளேடு - இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நாமும் சுயாதீனமாக இயங்கும் மனித உரிமைகள் அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறான நிலையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் எங்கள் மீதான தடையை நீக்கி எங்களை அங்கீகரிக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். லண்டன் பி.பி.சி செய்தி சேவைக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்; இலங்கை அரசாங்கத்தினால் மீறப்படுகின்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் …

    • 0 replies
    • 728 views
  10. நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் [புதன்கிழமை, 04 யூன் 2008, 06:05 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவில் உள்ள நோர்வேத் தூதரகத்திற்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வேயில் இருந்து வெளிவரும் ஆஃப்ரன்போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாவது: தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் உள்ள நாடுகளில் சிறிலங்கா உட்பட 6 நாடுகளில் உள்ள தமது தூதரகங்களின் பட்டியலை நோர்வே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், சூடான், அல்ஜீரியா, பலஸ்தீனத்தின் அல்-ராம் பகுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறும் நோர்வே வெளிவிவகார அமைச்ச…

    • 0 replies
    • 457 views
  11. ஜெனீவாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.06.08) நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 8 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. மனித உரிமை சபையில் தனது உறுப்புரிமையை இழந்த பின்னர் சிறிலங்கா அரசு பங்குபற்றுவது இதுவே முதற் தடவையாகும். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 737 views
  12. ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் நடத்திய வாகன கவன ஒலி போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர். அரசாங்கம் இந்தப்போராட்டத்தை நிறுத்த பல வழிகளிலும் முயற்சித்தது எனினும் அவையாவும் தோல்வி கண்டன. முதலில் அச்சுறுத்தலை விடுத்த அரசாங்கம் பின்னர் காவல்துறையினரை கொண்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு முனைந்தது எனினும் நீதிமன்றம் இந்தப்போராட்டம் கருத்துச்சுதந்திரத்தின் அடிப்படையில் இடம்பெறுவதாக கூறி அதனை தடுக்கமுடியாது என தீர்ப்பளித்தது. இந்தநிலையில் சில இடங்களில் காவல்துறையினர் போராட்டத்தில் பங்கேற்ற வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பம்பலபிட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கிழக்கு அமைப்பாளர் ரோசி சேனாநாயக்க மீது காவல்துறையினர் த…

    • 0 replies
    • 723 views
  13. புலித்தேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் என்பவரை பிரபாகரனின் நேரடி பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு உட்பூசல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Tamil Tigers place senior leader under house arrest: military Mon Jun 2, 4:32 PM ET COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday. Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Pra…

  14. 'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…

  15. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைநாள் தலைவரும், இலங்கையின் முதலாவது பிரதமருமாயிருந்த காலம் சென்ற டி.எஸ்.சேனநாயக்காவின் பெறாமகன் ருக்மன் சேனநாயக்கவின் தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டாக உடைந்துள்ளது. புதிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக காமினி அபயரட்ண நியமிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய சார்பான நிலைப்பாடே இந்த கட்சி உடைவுக்கு மூல காரணம் என அறியப்படுகிறது. மேலதிக விபரங்கள் விரைவில். http://www.orunews.com/

    • 5 replies
    • 1.9k views
  16. கொழும்பு நிர்வாகம் குறிப்பிடுவது என்ன?. 01.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு

  17. எரிபொருள் வீண் விரயத்தைத் தடுக்கும் நோக்கில் அலுவலக நேரங்களை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் காரியாலயங்கள் என்பவற்றுக்கான வாகனங்களின் காரணமாகவே அதிக வாகன நெரிசல் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்படி பாடசாலைகளை காலை 7.30க்கு ஆரம்பிக்கவும், காரியாலயங்களின் நேரத்தை காலை 10.00 முதல் 6.00 மணி வரை மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் காரியாலய நேரத்தை மாற்றியமைப்பது தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாகத் தெரியவருகிறது. http://isoorya.blogspot.com/

  18. கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 665 views
  19. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 725 views
  20. சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது புலிகள் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 07:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மேற்கில் குஞ்சுக்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடையில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களின் நடவடிக்கையை முறியடித்து விரட்டியடித்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது சிறிலங்காப் படையினரிடம் இருந்து ரி-56 - 2 ரக …

    • 0 replies
    • 1k views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 825 views
  22. சிறிலங்கா வெள்ள அனர்த்தத்தில் 18 பேர் பலி- 2 லட்சம் பேர் இடம்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 02:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானனோர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரியிலும் மலையகத்தில் நுவரெலியா, கேகாலை, ஹற்றன் போன்ற இடங்களிலே கடும் மழையும் மண்சரிவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலேயே மழையினாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ள நீர் மூழ்கியுள்…

    • 3 replies
    • 876 views
  23. ஜனாதிபதியின் கிரகநிலை சரியில்லை Tuesday, 03 June 2008 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கிரக நிலை பாதகமாக காணப்படுவதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார் எனத் தெரியவருகிறது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் 7ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி ஜனாதிபதி சற்று கால தாமதமாகியே நாடு திரும்ப உள்ளார். ஜோதிடர்கள…

    • 2 replies
    • 1.3k views
  24. காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:34 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டதனைத் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கடையடைப்பை முன்னிட்டு அங்கு இயல்பு நிலை செயலிழந்துள்ளது. கடைகள் மற்றும் அரச அலுவலகங்கள் என எவையும் இன்றைய நாள் இயங்கவில்லை. அங்கு தொடர்ந்…

    • 0 replies
    • 529 views
  25. தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:13 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்ம…

    • 0 replies
    • 721 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.