ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது - மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 20 Mar, 2023 | 09:53 AM உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி சபைகளின் காலம் முடிவடைவதால் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நிலை எவ்வாறானதாகயிருந்தாலும் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை பிற்போடுவது உகந்த விடயமல்ல எனவும் மகிந…
-
- 0 replies
- 497 views
-
-
40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் தீர்மானம்! சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். …
-
- 0 replies
- 497 views
-
-
நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் – டக்ளஸ்! நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328052
-
- 1 reply
- 387 views
-
-
அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று! Published By: NANTHINI 19 MAR, 2023 | 02:10 PM அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (19) அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார். இவரது உண்ணாவிரத போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/150895
-
- 15 replies
- 930 views
- 2 followers
-
-
ரணிலை விரட்டும் ஆட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் அந்துவன் "ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் - ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங…
-
- 1 reply
- 455 views
-
-
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் விரைவில்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. க…
-
- 3 replies
- 782 views
- 1 follower
-
-
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் எல்லை நிர்ணய நடவடிக்கை பாரிய அநீதியை இழைத்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328021
-
- 0 replies
- 374 views
-
-
கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !! இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத …
-
- 4 replies
- 894 views
-
-
நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரிக்கை Published By: T. SARANYA 18 MAR, 2023 | 10:39 PM (நா.தனுஜா) உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு மிகமோசமானதொரு முன்மாதிரியாகவே அமையும் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அதுமாத்திரமன்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்…
-
- 2 replies
- 492 views
- 1 follower
-
-
உர விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 36,000 மெற்றிக் தொன் உர விநியோகம் நாளை (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய உர இருப்பு இன்று (19) பிற்பகல் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, யாழ் பருவத்தில் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உரம் இருப்பு விநியோகிக்கப்பட உள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/245391
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
வவுனியா குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு! Published By: NANTHINI 19 MAR, 2023 | 10:33 AM வவுனியாவில் உள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் வான்கதவுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்நிலையில் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
12,500 ஆசிரிய இடமாற்றங்கள் இரத்து செய்யப்படும்? கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. போக்குவரத்துப் பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது …
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
இலங்கைக்கான 2.9 பில்லியன் நிதியுதவியை செவ்வாய் அறிவிக்கிறது சர்வதேச நாணய நிதியம் Published By: T. SARANYA 18 MAR, 2023 | 04:47 PM (லியோ நிரோஷ தர்ஷன்) கடன் மறுசீரமைப்புக்கான எழுத்து மூல உத்தரவாதத்தை அனைத்து தரப்புகளும் வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் வழங்க உள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு …
-
- 7 replies
- 812 views
- 1 follower
-
-
இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிய கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது. குறித்த முட்டை இருப்புகள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/245329
-
- 24 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதி கரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறி…
-
- 5 replies
- 822 views
- 1 follower
-
-
சாக்குப்போக்கு கூறாமல் தேர்தலை உடன் நடத்துங்கள் – சம்பந்தன் வலியுறுத்து எவ்வித சாக்குப்போக்கையும் சொல்லாமல் உடனானடியாக தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலையே நடத்த இந்த அரசாங்கம் பின்னடிக்குமானால், மாகாணசபை, பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் நிலைமை என்னாகும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். மக்களின் வாக்குரிமையை தட்டி பறிக்க முடியாது என்பதனால் விரைந்து உள்ளூராட்சித் தேர்தலை அரசங்கம் நடத்திட வேண்டும…
-
- 6 replies
- 414 views
-
-
சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து யாழில் முன்ணணியினர் ஆர்ப்பாட்டம் ! சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சவேந்திர சில்வா இன்று யாழுக்கு விஜயம் செய்கின்றார். இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். https://athava…
-
- 1 reply
- 778 views
-
-
ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் அரசு மக்களைப் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்கவில்லை -புத்தூர் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ் ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாத்துக் கொண்டு மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றி அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பப் போகின்றது என்று கூறுவது கனவிலும் நடைபெறாதது ஒன்று என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு (18) வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற அரசுக்கு எதிரான உழைக்கும் மக்களின் தீப்பந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டுமானால் முதலில் இனவாத…
-
- 0 replies
- 207 views
-
-
இம்முறை பாடசாலைகளுக்கு ஏப்ரல் – மே என இரு விடுமுறைக் காலம் -கல்வி அமைச்சு 2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை பருவத்தின் முதல் கட்ட பாடசாலை விடுமுறை ஏப்ரல் 5 முதல் 16 வரை இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 2022 சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்காக மீண்டும் மே 13 முதல் 24 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/245354
-
- 0 replies
- 346 views
-
-
ஐஎம்எஃப் கூட்டம் நாளை மறுதினம்;முதல் கடன் தவணையாக 330 மில்லியன் அ.டொலர் பெறப்படும்-ஷெஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளதுடன், இலங்கைக்கான கடன் வசதிக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி இம்மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் கடன் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நிதியத்தின் செயற்குழு இது குறித்து முடிவெடுத்து செய்தியாளர் சந்திப்பின் மூலம் அறிவிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடன் வ…
-
- 0 replies
- 154 views
-
-
அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் : ஆயத்தங்களை மேற்கொள்ள பணிப்பு !! ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. எவ்வாறாயினும் உள்ளூராட்சி ச…
-
- 0 replies
- 248 views
-
-
மேலதிக வாக்குசீட்டை அச்சடிக்க பணம் இல்லை !! வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான பணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதனால் தற்போதுவரை அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது என அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 17 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் பாதுகாப்புக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவை இதுவரை பொலிஸாரின் பாதுகாப்பில் பொதியிடப்பட்டு சோதனையிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா கூறியுள்ளார். இதேவேளை, 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த நிறுவனங்கள…
-
- 0 replies
- 153 views
-
-
அரசாங்கத்துக்கு எதிராக புத்தூரில் தீப்பந்தப் போராட்டம் 2023-03-18 09:57:32 ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டம் யாழ். புத்தூரில் இடம்பெற்றது. அரசாங்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு வலி.கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (17) இரவு முன்னெடுக்கப்பட்டது. 200% மின்சார கட்டண உயர்வை கைவிடு. உணவு எரிபொருள் விலையை குறை, உழைக்கும் மக்களை பட்டினிக்குத் தள்ளாதே, அடக்குமுறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே!உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத…
-
- 0 replies
- 243 views
-
-
யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் பண்பாக நடந்தால் எந்தவொரு பிரச்சனையும் வராது - ஆறு திருமுருகன் Published By: T. Saranya 18 Mar, 2023 | 10:41 AM யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினை வைபவரீதியாக திறந்து வைத்த பின் சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் எங்களிடத்தில் ஆசன போட்டி இடம்பெறுகின்றதே தவிர எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண…
-
- 0 replies
- 308 views
-
-
”இந்திய மீனவர்களுக்கு ஒரு நிமிடம்கூட அனுமதியில்லை”: அமைச்சர் டக்ளஸ் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழல் அமைச்சர் நேற்று (17) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். நேற்று மாலை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 3:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்றொழலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்தார். முதற்கட்டமாக இந்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 208 views
-