Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை வக்மிட்டியாவ பகுதியில் இன்று கலை 6.30 மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து விடுதலை புலிகல் மேற்கொண்ட கிளைமோர் தாகுதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரழந்துள்ளதாக தேசிய பாதுகாப்புகான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது வீரகேசரி இணையம்

    • 0 replies
    • 757 views
  2. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முதல்வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது. மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும். பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப்புலிகள். பெருந்தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக் கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ரா…

    • 0 replies
    • 883 views
  3. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் இன்று மாரடைப்பினால் சாவடைந்துள்ளார். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்துள்ளார் என்பதனை தமிழ்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களும் தேசிய துயர நாட்களாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com

    • 84 replies
    • 20.3k views
  4. கடத்தப்பட்ட "த நேசன்" பிரதி ஆசிரியர் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை Friday, 23 May 2008 கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்ட "த நேசன்" பத்திரிகையின் பிரதி ஆசிரியரும், பாதுகாப்புத் துறை ஆய்வாளருமான கீத் நொயார் இன்று அதிகாலை கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கொழும்பில் ஊடகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உடனடியாக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றா

    • 2 replies
    • 1.5k views
  5. இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோசமான மனித உரிமை மீறல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கான உறுப்பினர்கள் தேர்வில் இலங்கையை உலக நாடுகள் நிராகரித்து ஒதுக்கியமை ஓர் ஆறுதல் தரும் விடயமாக இருக்கும். ஆனாலும் இந்த வாக்கெடுப்பில் உலக நாடுகள் நடந்துகொண்ட விதம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு முழுத் திருப்தி தரக்கூடியதல்ல என்பதுதான் உண்மை. உலகில் மனித உரிமைகளைப் பேணும் உயர் சபையாக மதிக்கப்படும் கௌரவத்தை பெறுமானத்தை கீர்த்தியை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கட்டிக்காக்கத் தவறிவிட்டது என்பதையே இத்தேர்தல் தெரிவு முடிவுகள் தெளிவாக எடுத்தியம்புகின்றன. இந்தக் கவுன்ஸிலில் உறுப்புரிமை பெறும் தகுதி வாய்ப்பு ஐ.நாவில்…

    • 1 reply
    • 1.3k views
  6. The president of Sri Lanka : + 94 112447400 ; president@presidentsoffice.lk Secretary to the president ; +94 112 2326309; prsec@presidentsoffice.lk Minister information - + 94 112596557

    • 5 replies
    • 2k views
  7. இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவின் அரச தலைவர் முதற்கொண்டு அடிமட்ட சிப்பாய் வரை அதிர்ச்சியில் உறைந்து போன மாதம். மார்ச் 26 ஆம் நாள் அதிகாலை இரண்டு பற்றலியன் சிறப்புப்படை அணிகளைக் கொண்ட 1,200 விடுதலைப் புலிகள் வடமராட்சி கிழக்கின் குடாரப்பு, மாமுனைப் பகுதியில் தரையிறங்கியிருந்தனர். சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது படையணி மற்றும் 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள் உட்பட 15,000 இராணுவத்தினர் ஆனையிறவில் இருக்க, 53 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட்டுக்கள், 51, 52 ஆவது படையணிகள் மற்றும் 55 ஆவது படையணியின் சில பற்றலியன்கள் என ஏறத்தாழ 25,000 துருப்புக்கள், இதற்றுக்குப் பின்னால் இருக்க 1,200 விடுதலைப் புலிகள் நடுவில் தரையிறங்கிய துணிச்சல் தென் ஆசியாவை ஒருகணம் உறை…

  8. எமது எதிரிக்கு பல வழி உதவிகள் இருக்கின்றன. அவன் எமது தளபதிகளின் ஒவ்வொரு அசைவுயும் அவதானிக்கிறான். எனவே இவ்வேளையிலும் எவ்வேளையிலும் தளபதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். பால்ராஜ் அண்ணாவின் மரணத்தை அடிப்படையாக வைத்து எமது எதிரிக்கு ஆலோசனை வழங்கும் அயல்நாடு ஒன்று அதன் செய்திக் குறிப்பில் பால்ராஜ் அண்ணாவின் தீரம் பற்றியும் விபரித்திருக்கிறது. போராளிகளுக்கு முதல் களத்தில் முதலில் இறங்கி தான் முன் செல்ல தன் வழி போராளிகள் பிந்தொடர்வதைச் செய்த தளபதி தான் பால்ராஜ் என்று புகழ்ந்துரைத்து இருக்கின்றனர். பல களங்களில் அவர் செயற்பட்ட முறைகள் குறித்தும் வியந்து பேசியுள்ளனர். அண்மைக்காலங்களில் முதன்மைத் தளபதிகள் சிலர் இழக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும்.. வட …

  9. போர்க்களமே வாழ்வாய் ஆன பால்ராஜ் அண்ணா..... பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை நினைவு கூர்ந்து தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பதிவு. MP3 வடிவில் - http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3

  10. வவுனியாவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நெலுக்குளம் கணேசபுரம் பகுதியில் இனம் தெரியாதோரால் சுடப்பட்ட இவர் 60 வயதுடைய பழனியாண்டி பெரியப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 அளவில் அவரது வீட்டுக்குச் சென்ற ஆயுததாரினள் அவரை வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வயோதிபர் சுடப்பட்டதற்கான காரணங்கள் வெளிவரவில்லை. வவுணியாவில் அதிகரித்து வரும் கொலை,ஆட்கடத்தல், கொள்ளை முதலான குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அண்மையில் மாவட்ட நீதிமன்ற நீதவான் இழஞ்செழியன் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://isoorya.…

    • 0 replies
    • 917 views
  11. நகரில் இன்று காலை கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் வீதிகளில் காணமுடியவில்லை. காலையில் நெரிசல் மிகுந்து காணப்படும் நகர வீதிகள் வாகன ஓட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பினால் காலமாகிய விடுதலைப் புலிகளின் முக்கிய மூத்த இராணுவ தளபதிகளில் ஒருவராகிய பிரிகேடியர் பால்ராஜின் மறைவைக்குத் துக்கம் அனுஸ்டிக்கும் வகையிலேயே இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது, பால்ராஜின் மறைவையடுத்து, வன்னிப்பிரதேச்த்தில் இன்று வெள்ளிக்கிழமை வரையிலான 3 தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படுகின்றது என்பது குறி;ப்பிடத்தக்கது. இராணுவத்திற்கு எதிரான பல்வேறு பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் முதன்மை நிலையில் இரு…

    • 0 replies
    • 949 views
  12. இலங்கை சிக்கல் : தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்து வதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் சென் னையில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பேசிய ஜி.கே.மணி, இலங் கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப்படை உதவியோ மத்திய அரசு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு குறைந்த வட்டியில் இந்தியா கடன் வழங்குகிறது என்றும், இந்த கடன் தொகை இலங்கையில் உள்ள தமிழர் களைக் கொன்று குவிப் பதற்கு அந…

  13. கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழான நேசன்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கேயித் நொயார் இன்று காணாமல் போயுள்ளார். அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இன்று இரவு 10.30 அளவில் வீடுநோக்கிப் புறப்பட்டவர் வீடு போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வாகணம் அவரது வீட்டிற்கு அருகில் முன்புற விளக்குகளும் இயந்திரம் நிறுத்தப்படாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேசன் பத்திரிகையின் ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் சுதந்திர ஊடக இயக்கம் அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இரவு வேளையில் காணால் போன கேயித் நொயாரின் உயிரைப் பாதுகாக்க ஊடகசுதந்திரத்திற்காக பாடுபடும் அனைத்து ஊடக நிறுவனங்களும் உடன் ந…

    • 2 replies
    • 857 views
  14. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இழக்கபட்ட நிலையில் கடுமையாக ஆத்திரமடைந்திருக்கும் இலங்கை அரசு மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்கு சர்வதேச அவதானிகளை அனுமதிப்பதற்கு இடமளிக்கப் போவதிலையென நேற்று வியாழன் உறுதியாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு சாhபான சர்வதேச உரிமைகள் குழுக்களினால் மேற்கொள்ளபட்ட அரசிற்கெதிரான சதியே இதுவென வெளிவிவகார அமைச்சு ரோகித்த நேற்று குற்றம் சுமத்தினார். எமது நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். எம்மை கண்காணிக்க வெளிநாட்டு அமைப்பின் தேவை இருப்பதாக எமக்கு தெரியவில்லை. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கண்காணிக்க தேவையான சட்டங்களும் நடைமுறைகளும் எம்மிடம் உள்ளன. என்று ரோகித கூறியுள்ளார். ஐ.நா. மனித உர…

    • 0 replies
    • 906 views
  15. ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது: குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றி…

    • 0 replies
    • 638 views
  16. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமைக்கான வாக்கெடுப்பில் சிறிலங்கா தோல்வியடைந்தனைத் தொடர்ந்து மனித உரிமைகள் சபையின் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்தும் சிறிலங்கா நீக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்று முன்நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா இழந்துள்ளதனால் மனித உரிமைகள் சபையின் பிரதித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் சிறிலங்கா எதிர்வரும் மாதம் நீக்கப்படவுள்ளது. ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிக்கவே சிறிலங்கா சார்பாக பிரதித் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் நாள் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படவுள்ளார். சிறிலங்க…

    • 0 replies
    • 701 views
  17. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கான உறுப்புரிமைத் தேர்வில் வாக்களித்த உலக நாடுகள், இத் தேர்வில் இலங்கையை நிராகரித்து விட்டன. இந்த முடிவை மோசமான மனித உரிமை மீறால்களில் ஈடுபட்டிருக்கும் இலங்கைக்குக் கிடைத்த நல்ல படிப்பினை என விமர்சித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இலங்கை விழித்துக் கொள்வதற்கான எச்சரிக்கை இது எனவும் வர்ணித்துள்ளன. மனித உரிமை கவுன்ஸிலின் வாக்களிப்பு இலங்கை விழித்துக் கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டுமென நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட சாவதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரந்தியத்திற்கான இயகச்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளர்ர். இலங்கை ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ள செய்தியை சரியான விதத்தில் புரிந்து கொள்வார் என நம்பிக்கை வெள…

  18. இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்கள் சில வீடுகளிலும், முகவர்களினாலும் பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சித்திரவதைக்குள்ளன 800 பெண்கள் முகாம்களில் துன்பபடுவதாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வெறும் கையுடன் நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான் ஆகிய நாடுகளில் இருந்து 79 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரக்கூடிய பென்கள் ஒரு நேரத்தில் தந்தையிடமும் மகனிடமும் **** பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாலோ, காயப்படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ வழக்கு எதுவும் பதிவு செய்ய இ…

    • 0 replies
    • 933 views
  19. மல்லாவியில் நடைபெற்ற பிரிகேடியரின் வீரவணக்க நிகழ்வுப் படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=29

  20. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் ஒளித் தொகுப்பு

  21. மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார். இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளத…

    • 7 replies
    • 1.8k views
  22. இலங்கை யின் குடியரசுத்தினம் இன்று (மே 22) அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற அனைத்து அரசாங்க கட்டடங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகள் திணைக்களங்கள் ஆகியவற்றிற்கு நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் புகுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்தது. புதிய அரசியலமைப்பின் தேவையை உணர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 1972ஆம் ஆண்டு இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்கினர். 1972ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள், இலங்கையின் குடியரசு தி…

  23. மருதமுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இலங்கையுடனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக்கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கி வரும் இந்திய அரசு, தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் இலங்கைப் படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நடந்தேறி 2 மாதங்கள் கழிவதற்குள்ளாகவே) இந்திய …

    • 0 replies
    • 1.3k views
  24. வெள்ளை வாகன குழுவின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 997 views
  25. அனைத்துலகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 967 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.