Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறி…

    • 0 replies
    • 1.1k views
  2. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ். பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்…

    • 0 replies
    • 1.1k views
  3. மனித உரிமை ஸ்தாபனம் ஒன்றை உள்நாட்டில் நிறுவுவதற்கே பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்து அதனை நிராகரித்த இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவையில் போட்டியிட்டமையானது அவமரியாதைக்குரிய செயலாகும். இவ்வாறு அடிமட்ட சிந்தனையுள்ள அரசை கொண்டியங்கும் ஒரு நாட்டை இதில் போட்டியிட வைத்தமையானது உலக நாடுகள் விட்ட பாரதூரமான தவறாகும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட எம்.பி. அறியநேத்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறுகின்ற இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில்; செயற்பட்டிபடுகிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : இலங்கையை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மலிந்து கிடக்கும் நாடாகவே உருவெடுத்து வருகின்ற…

    • 4 replies
    • 1.5k views
  4. மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார். இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளத…

    • 7 replies
    • 1.8k views
  5. இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் தமிழர்களிடம் நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்ட குழு ஒன்றை வெள்ளவத்தை காவற்துறை கைது செய்துள்ளது. இரகசிய பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனை மற்றும் விசாரணைகள் என்ற போர்வையில் தமிழர்களின் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மொரட்டுவை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிப்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்ளைக் குழு; உல்லாச வாழ்க்கை வாழ்வதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.…

  6. மன்னார்ப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்காப் படையினரின் மேலும் 3 பேரினது உடலங்கள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல், வண்ணாங்குளம் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை மீது தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை படையினருக்கு விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியதில் படையினரின் மேலும் 3 உடலங்கள் காணப்பட்டுள்ளன. முன்னர் படையினரின் 6 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தேடுதலின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் - 02 நடுத்தர ரவைகள் - 1,500 50 கலிபர் ரவைகள் - 500 குண்டுகள் - 12 பைகள் - 05 ரவைக்கூடுதாங்கி அணிகள் - 02 கிளைமோர்கள் - 02 தலைக்கவசங்…

    • 0 replies
    • 1.2k views
  7. முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது. அந்த ஏட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதுடன் நின்று விடாது, முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஓர் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார் எனக்கூறின் அது மிகைப்படாது. கட்சித் தாவலில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே…

    • 1 reply
    • 832 views
  8. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றுக்கு மகஜர்- உலக காணாமல் போதலுக்கு எதிரான அமைப்பு வீரகேசரி இணையம் 5ஃ22ஃ2008 12:26:46 Pஆ - இலங்கையின் வடக்கிலும்இ கிழக்கிலும்இ தெற்கிலும் வாழும் தமிழ் மக்கள் மீது இலங்கையில் நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் போர் சூழலை சாட்டாக கொண்டு தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் அரசாங்கம்இ எல்லை கடந்த விதத்தில் மீறி வருவதாக சாதாரண சாமானிய அடிமட்ட மக்கள் முதல்இ உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் வரை தொடர்ச்சியாக தெரிவித்துவரும் ஆதாரபூர்வமான மனித உரிமை மீறல் சம்பவங்களை பட்டியல்படுத்தியுள்ள நெதர்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் உலக காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச அமைப்புஇமுன்நாள் சேர்பிய அதிபர் மிலோசவிச்சை …

  9. பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்

    • 3 replies
    • 1.5k views
  10. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 800 views
  11. கிழக்கு மாகாண சபை அமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் இணைந்து தனித்து இயங்கப்போவதாக அறிவித்த இருவரும் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கிழக்கின் முதலமைச்சர் பதவி தனக்கே தரப்பட வேண்டும் எறும் இல்லையேல் ஆளும் கட்சிக்கு எதிராகச் செயற்படும் வகையில் தனித்து இயங்கப் போவதாகவும் கூறி வந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இந்த விவகாரம் குறித்து மகிந்தவுடன் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்தி வந்தார். எனினும் அந்தப் பேச்சுக்கள் பலனளிக்காத நிலையில்- அதாவது முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி முக்கியத்துவமான கிழக்கு மாகாண கல்வ…

    • 0 replies
    • 537 views
  12. "மட்டக்களப்பில் தொடர்ச்சியாகப் பிள்ளையான் குழுவினரால் இளம் பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர்.''இவ்வாறு "த மோர்ணிங்க் லீடர்' ஏடு தகவல் வெளியிட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு: மட்டக்களப்பில் இரவு நேரங்களில் இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்காத நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். வெள்ளை வானில் வரும் இந்த ஆயுதக் கும்பல்களுக்கு இளம் பெண்களின் பெயர் முதல் சகல விவரங்களும் தெரிந்திருக்கின்றன. ஆயுதங்களைக் காட்டிப் பெற்றோரையும் சகோதரர்களையும் மிரட்டி வீட்டுக்க…

  13. ரவிராஜின் கொலை விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் Thursday, 22 May 2008 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பந்தமான விசாரணைகள், கடும் மனித உரிமைகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி ரவிராஜ் நாரஹன்பிட்டியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பினும் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப…

    • 0 replies
    • 785 views
  14. சிறிலங்காபடைகளினால் இயக்கப்படும் பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் துணைத் தலைவன் சாந்தன் சற்று முன்னர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இவனுடன் பிள்ளையான் கும்பலின் மற்றொரு உறுப்பினரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிங்களப் படைகளுடன் 15 ஆண்டுகளிற்கு மேலாக இணைந்து இயங்கி வந்த சாந்தன் அண்மையிலேயே பிள்ளையான் கும்பலுடன் இணைந்து அதன் ஆயுதப்பிரிவிற்கு தலைமை தாக்குவதாக ஒரு ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தான்

    • 7 replies
    • 2.6k views
  15. தமிழர்களுக்கென ஒரு மாநிலம் என்றவாறு ஒரு தீர்வு ஏற்படுமானால் சர்வதேச சட்டங்களால் அது கௌர வித்து வரவேற்கப்படும். சர்வதேச நடைமுறைகள் மற்றும் மனித உரிமை களுக்கு அமைவாகவும் அது அமையும். இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெ ரிக்க அரசின் முன்னாள் பிரதி இணை சட்டமா அதிபரான புரூஸ் பெயின். "தமிழர்களுக்கான நீதித் தீர்வு' என்ற தலைப்பில் புரூஸ் பெயின் ஊடகங் களுக்கு விடுத்துள்ள அறிக்கையொன் றில், தமிழர்களுக்கு ஒரு மாநிலம் என்ற தீர்வினை சர்வதேசம் அங்கீகரிக் குமானால் கொசோவோவில் போன்று சண்டையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் முதலியவை இலங்கை யில் சண்டையிடுபவர்களைத் தவறா கப் புரிந்துகொண்டிருப்பதைக் கைவிட் டுச் சுதந்திரமான தமிழர் …

  16. போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் உள்நுழைந்த குற் றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தில் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையாகி யுள்ள கருணா, இலங்கைக்குத் திரும்பாது வேறு நாடொன்றுக்குச் செல்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக இலங்கை குடி வரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

    • 0 replies
    • 1.1k views
  17. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டறியும் கருவியை தயாரித்த இளைஞன் [22 - May - 2008] [Font Size - A - A - A] வாகன எரிபொருள் தாங்கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி பொருட்களைத் தேடிக் கண்டறியும் கருவியொன்றை ஜனாதிபதி மகிந்த ராஹபக்ஷ நேற்று புதன்கிழமை அலரிமாளிகையில் வைத்து பார்வையிட்டுள்ளார். மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் இந்தக் கருவியை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு (வீடியோ) கருவி, உயர் மின்சக்தி மற்றும் வர்ணத்திரை ஆகியவற்றுடன் கூடிய இந்தச் சோதனை உபகரணத்தை, கடலில் படகுகளை சோதனையிடவும் வாகனங்களில் எரிபொருள் தாங்கியை சோதனையிடவும் சிறிய பாலங்கள் போன்ற இடங்களை கண்காணிக்கவும் உபயோகிக்கக் கூடிய வகையில் இந்தக் கருவி தயாரிக்கப்பட…

    • 0 replies
    • 1.2k views
  18. எமது எதிரிக்கு பல வழி உதவிகள் இருக்கின்றன. அவன் எமது தளபதிகளின் ஒவ்வொரு அசைவுயும் அவதானிக்கிறான். எனவே இவ்வேளையிலும் எவ்வேளையிலும் தளபதிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். பால்ராஜ் அண்ணாவின் மரணத்தை அடிப்படையாக வைத்து எமது எதிரிக்கு ஆலோசனை வழங்கும் அயல்நாடு ஒன்று அதன் செய்திக் குறிப்பில் பால்ராஜ் அண்ணாவின் தீரம் பற்றியும் விபரித்திருக்கிறது. போராளிகளுக்கு முதல் களத்தில் முதலில் இறங்கி தான் முன் செல்ல தன் வழி போராளிகள் பிந்தொடர்வதைச் செய்த தளபதி தான் பால்ராஜ் என்று புகழ்ந்துரைத்து இருக்கின்றனர். பல களங்களில் அவர் செயற்பட்ட முறைகள் குறித்தும் வியந்து பேசியுள்ளனர். அண்மைக்காலங்களில் முதன்மைத் தளபதிகள் சிலர் இழக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும்.. வட …

  19. லங்கா இந்தியன் எண்ணை நிறுவணம் (LIOC) 20 ரூபாயினால் டீசல் விலையை அதிகரித்துள்ளது இதன் பிரகாரம் டீசலின் விலை 100 ரூபாயாகும்.ஆனாலிலங்கௌ பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்னும் எந்த அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை May 21, Colombo: The Lanka Indian Oil Company (LIOC) has announced that it will increase the price of diesel by Rs. 20 per litre at midnight today. With the increment, the new price will be Rs. 100 per litre. Although the Ceylon Petroleum Corporation has not announced an immediate price hike, media sources said that it too would increase diesel prices soon. http://www.colombopage.com/archive_08/May21151303JV.html

    • 11 replies
    • 2k views
  20. இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காண்பதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற இலங்கை அரசின் வாதத்தை சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு அடியோடு நிராகரித்திருக்கின்றது. தனது இராணுவ நடவடிக்கைத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்கு இலங்கை அரசு முன்வைத்துள்ள இக்கருத்து ஏற்கப்படமுடியாதது என்று கூறியுள்ள ஆணைக்குழு, அரசியல்தீர்வை நாடும் நடவடிக்கைகள்தான் முதலில் ஆரம்பிக்கப்படவேண்டும், அதுதான் அவசியமானதும் அவசரமானதும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றத

    • 0 replies
    • 665 views
  21. வீரகேசரி இணையம் - கிழக்கு மாகாணசபைகான தேர்தல் இடம்பெற்ற கடந்த 10 ஆம் திகதி முதல்,கிழக்கில் விடுதலை புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கொழும்பில் இயங்கும் சிங்கள நாளேடுகளும், இணையதளங்களும் செய்திகளை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. தேர்தலுக்கு முன்னிரவு அம்பாறையில் ஹொட்டேல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, இக் குண்டு தாகுதலை யார் மேற்கொண்டது என்பது தொடர்பில் இதுவரை தெளிவு இல்லை.தேர்தல் தினத்தன்று, திருகோணமலை அஸ்ரப் துறைமுக பகுதிக்குள் நிறுத்தபட்டிருந்த MV-Invincibile-520 என்ற கப்பல் மூழ்கடிப்பு, அதே தினத்தில் அம்பாறை பகுதியில் விடுதலை புலிகளால் நடத்தபட்டதாக தெரிவிக்கபடும் எறிகணை வீச்சு, அதனை தொடர்ந்து தற்போது கிழக்கில் இடம்பெ…

    • 1 reply
    • 1.3k views
  22. விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கைகளை வகுக்க புத்தி ஜீவிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு இந்த கொள்கை தொடர்பான ஆவணத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை வகுப்பு தொடர்பில் இந்த குழு பரிந்துரைகளை சமர்பிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை சில சந்தர்ப்பவாதிகளின் தேவையின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாரியளவில் கட்சிக்கு இல்லாமல் போயுள்ளதாக ஜே.வீ.பீயின் ஜப்பானிய குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய குழுவின் அமைப்பாளர் சமன் பிரியங்கர ஜே.வீ.ப…

    • 0 replies
    • 585 views
  23. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு மலர்வளையம் சாத்தி, ஈகைச்சுடர் ஏற்றி, மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினார். மாரடைப்பினால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை காலமான மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடல் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் மூத்த தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பிரிகேடியர் பால்ராஜின் வித்துடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மூத்த தளபதிகளான புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை, கட்டளைத் தளபதிகளான கேணல் பாணு, கேணல் தீபன், கேணல் ஜெயம், கேணல் சொர்ணம், கேணல் றமேஸ், கேணல் யாழினி, கேணல் துர்க்கா, அ…

    • 0 replies
    • 1.4k views
  24. 'இலங்கை கிழக்குப் பகுதியை புலிகளிளிடமிருந்து மீட்டெடுத்து எங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இங்கு அமைதி நிலவுகிறது. புலிகைளை நாங்கள் அழித்து விட்டோம் என்று இலங்கை அரச அதிபர் மஹிந்த கூறுகிறார். இவையனைத்தும் முழுப் பொய். புலிகள் விண்ணிலும் மண்ணிலும் வெற்றி பெறுவார்கள்.' என்று தமிழக மூத்த அரசியல்வாதியும் , ஈழத்தமிழர் ஆதரவாளரும், ம.தி.மு.க பொதுச் செயலாளருமான வைகோ கூறியுள்ளார். சென்னையில் வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த கிழக்கை கைப்பற்றி விட்டோம் என்று மார் தட்டுகிறார். அங்கிருந்து புலிகளை முற்றக தூரத்திவிட்டோம், கிழக்கு மக்களை பயங்கரவாத்தின் பிடியிலிருந்து மீட்டு, அங்கு அமைதியை நிலைநாட்டியுள்ளோம் என்று கூறுக…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.