ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
மன்னாரில் இராணுவகாவலரண் மீது கை குண்டெறி: படையினர் சுற்றிவளைப்பு தேடுதல்:கைது செய்யபட்ட 36 பேர் பொலிஸ் விசாரணையில் மன்னார் ரெலிகொம் சந்தியில் அமைந்திருந்த படையினரின் காவல் நிலைமீது இன்று அதிகாலை 1.30 மணியளவில் கை குண்டு தாக்குதல் ஒன்று நடத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இந்த கைகுண்டு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் 1/2 மணி நேரம் சரமாரியான துப்பாகி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,பின்பு அதிகாலை 4.00 மணியளவில்,மன்னார் சவுத்பார்,நளவன்வாடி, பள்ளிமுனை மேற்கு ஆகிய பகுதிகள் படையினரால் சுற்றிவளைக்கபட்டு தேடுதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் மன்னார் செய்திகள் தெரிவிக்கின்றன. சுற்றிவளைப்பின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ள,36 பேர் மன்னார் பொ…
-
- 0 replies
- 947 views
-
-
சாட்டை வீசும் நெடுமாறன் ''ராஜபக்ஷேவை விட மோசமானவர் கருணாநிதி!'' அப்பாவி தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன், வல்லநாடு சாது சிவா சுவாமிகள் உள்ளிட்ட முக்கியஸ் தர்களின் தலைமையில் காலை 11:30 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கடைசி நிமிடம்வரை ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி தராததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தார் நெடுமாறன். ஆர்ப்பாட்டக் களத்தில் வந்து இறங்கிய உடனே கைது செய்யப்படுவோம் என்பதைத் தெரிந்துகொண்…
-
- 2 replies
- 2.9k views
-
-
முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை! வீரகேசரி இணையம் 5/20/2008 10:03:03 AM - முதலமைச்சர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லா
-
- 9 replies
- 2.1k views
-
-
மண் மீட்புப் போர் போல மொழி மீட்புப் போரும்! 20.05.2008 "மண் மீட்புப் போர் போன்று, மொழி மீட்கும் போரும் அவசியமானது. இதில் தமிழ் மக்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவது கட்டாயமானது.'' இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழீழக் கல்விப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன். மண் மீட்புப் போர் எவ்வாறு ஓர் இனத்தின் அரசியல், வாழ்நிலை விவகாரங்கள் சார்ந்ததோ, அந்தளவு முக்கியமானது மொழி மீட்புப் போரும் கூட. இதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையாகும். பேரினவாதத்தின் ஆதிக்கத்தில் ஈழத் தமிழரின் தாயக மண் பறிபோய்க்கொண்டிருப்பது போல், தொன்மை மிக்க தமிழினத்தின் சிறப்பும் அந்நிய மொழிக்கலப்பு ஆதிக்கத்துக்குட்பட்டு தனித்துவத்தைப் பறிகொடுக்கும் போக்கால் கெட்டழிந்து கொண்டிருக்கின்றது. தாயக மண் மீட்புக…
-
- 1 reply
- 815 views
-
-
கொழும்பு வெலிக்கடை நியு மகசின் சிறையிலிருந்து கடந்த 10ம் திகதி மாலையில் திடீரென பூஸாவுக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளும் ப10ஸாவில் தங்களுக்கு அடிப்படை அடிப்படைவசதி செய்துதரப்படவில்லை என தெரிவித்து அதனை ஆட்சேபிதது உண்ணாவிரதம் போன்ற ஒரு போராட்டம் ஒன்றில் ஈடுபடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என நம்பகரமாக அறியவருகிறது. பூஸாவில் போதிய அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என கைதிகள் சார்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இக்கைதிகள் பூஸாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் அங்குள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாக்கப்பட்டனர். என்றும் முறைப்பாடுகள் எழுந்தமை தெரிந்ததே இவ்வாறு …
-
- 0 replies
- 532 views
-
-
பிள்ளையான் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றது சிங்களவரது பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கொலைகாரக் கோமாளியை கிழக்கின் தலைவராக்கி தமிழினத்தை இழிவு படுத்தி மகிழ்ந்திருக்கும் ராஜபக்சே, அடுத்தப்படியாக அந்தக் கோமாளியை லண்டனுக்கு அழைத்துச் சென்று, ஈழத்தமிழரின் தலைவர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி தமிழர்களைக் கேவலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் ராஜபக்சே லண்டன் செல்வதற்கான பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சே தன்னுடன் பிள்ளையானையும் அழைத்துச் சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்கச் செய்யலாம் என்று உளவுத்துறை அறிவுரைக் கூற, பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்ப…
-
- 13 replies
- 3k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் மூலம் ஜனநாயக நல்லாட்சியை அந்தப் பிராந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு உறுதி மொழியை வழங்கியிருக்கின்ற போதிலும் மாகாணத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் பேசும் சமூகங்களுக்கு காணி, கல்வி அமைச்சுப் பொறுப்புகள் கிடைக்காத விதத்தில் அரசு மிக உறுதியுடன் காய்களை நகர்த்தியிருப்பதாக ஆய்வாளர்களும் அவதானிகளும் சுட்டிக்காடடியுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பதவிகள் வழங்கும் விடயத்தில் மஹிந்த கடுமையான நிலைப்பாட்டை எடுத்தே காரியமாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனா. முதலைச்சர் நியமானத்தின் போது பிள்ளையான் கல்வி அமைச்சுப் பொறுப்பைக் கேட்ட போதிலும் மஹிந்த அதனை முற்றாக நிராகரித்துள்ளர்ர். அதே சமயம் மஹிந்த…
-
- 0 replies
- 697 views
-
-
கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க ஹிஸ்புல்லா தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர். கிழக்கு மாகாண கல்வி, காணியமைச்சு சுழற்சி அடிப்படையில் முதலமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென நிபந்தனை விதிப்பதெனவும் அவற்றை மஹிந்த ஏற்குமிடத்து சு.மு. கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிப்பதெனவும் இல்லையேல் ஆதரவளிப்பதிலிருந்து விலகுவதெனவும் தீர்மானித்துள்ளனர். ஞாயிறு மாலை மஹிந்தவிற்கும் ஹிஸ்புல்லாவிற்கும இடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் பொது மஹிந்தவிடமிருந்து சில வாக்குறுதிகள் கிடைக்கப் பெற்தாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங். இலங்கை முஸ்லிம் காங். வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்குத் தேர்தல் காலத்தில் சுதந்திர முன்னணி சர்பில்…
-
- 0 replies
- 807 views
-
-
சிறிலங்காவின் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான இழுபறி முடிவுக்கு வந்துள்ள நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்பான இன்னொரு பிரச்சினை வெடித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 762 views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் அமெரிக்க கொள்கை முன்னெடுப்பில் செல்வாக்குச் செய்யக் கூடியவருமான முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டர் சிறீலங்காவை மீண்டும் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் (கவுன்சிலில்) உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அண்மையில் நேபாளத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜிம்மி காட்டர்.. அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை நேபாள மாவோஜிட்டுக்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்த மாவோஜிட்டுக்களோடு அமெரிக்கா ராஜிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது..! இச்செய்திக்கான மூலச் செய்தி கீழுள்ள செய்தியில் இருந்து பெறப்பட்டது. ------- Carter Center urges U.N. Assembly not to re-elect Sri Lanka t…
-
- 3 replies
- 1.6k views
-
-
வடமராட்சி, தென்மராட்சி படையினரால் சுற்றிவளைப்பு: முழுநாளும் தொடர்ந்த தேடுதல் வேட்டை Monday, 19 May 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளை இன்று திங்கட்கிழமை சுற்றி வளைத்த பெருந் தொகையான படையினர் முழு நாளும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் இப்பகுதிகளின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களும் பெருமளவுக்கு வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று அதிகாலை ஆரம்பமான படையினரின் இந்த நடவடிக்கை மாலை 5.00 மணிவரையில் தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் ஈடுபடுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வீடுகளைச் சோதனையிட்ட படையினர் அங்கிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
போனஸ் ஆசனத்தைப் பெற மறுக்கிறார் மௌனகுருசாமி Monday, 19 May 2008 கிழக்கு மாகாண சபைக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேர்தலின் மூலம் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனகுருசாமி அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.3k views
-
-
மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் தள்ளாடிப் படைத்தளம் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தனது நாட்டில் பல பிரச்சினைகளை கொண்டுள்ள இந்தியா, இலங்கையில் தனித் தழிழ்நாடு ஒன்று உருவாகுவதற்கு ஆதரவளிக்கப்போய், தனது பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்ளாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 784 views
-
-
இலங்கைக்கு இரு அரசுகள் எனும் தேவை உள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக ஜூரிமார் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், அவுஸ்திரேலியாவின் மாநில சட்டமா அதிபருமான நீதியரசர் ஜோன் டவுட், அந்த இரு அரசுகளும் கூட்டுறவுடன் வாழ்வதற்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதனை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ். வட போர்முனையான முகமாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 943 views
-
-
நீதவான்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. அரசியல் சாசனத்தின் 68ம் சரத்தின் அடிப்படையில் நீதவான்களதும், அமைச்சர்களதும் சம்பளங்கள் ஒரே தரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் சம்பளம் பிரதம நீதியரசரின் சம்பளத்திற்கும், சபாநாயகரின் சம்பளம் சட்ட மா அதிபரின் சம்பளத்திற்கும் சமப்படுத்தப்பட்டது. அமைச்சரவை சாரா மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளம் உயர் நீதிமன்ற நீதவான்களின் சம்பளத்திற்கு சமப்படுத்தப்பட்டது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 697 views
-
-
பல்வேறு தாக்குதல் நடத்த மேற்கொள்ளும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 300 உறுப்பினர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தங்கியிருப்பதாக தொம்கொட இராணுவ பயற்சி முகாமின் உயர் அதிகாரி லெப் கேர்ணல் ஹிமால் லசந்த குருகே தெரவித்துள்ளார். ஹொரணை பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காலை வேளையில் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க நகரங்களில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் தகவல்களை சேகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெசாக…
-
- 2 replies
- 2.5k views
-
-
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் 18. மே 2008 19:32 இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இரண்டு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று நவீன இலங்கையின் மிகப்பெரிய தந்திரசாலியாகச் சொல்லப்படுகிற ஜே. ஆர் ஜெயவர்த்தன காலத்தில் ஏற்பட்டது. அடுத்தது இப்போது திரு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உருவாகியிருப்பது. இந்த இரண்டு நெருக்கடிகளும் முழுச் சிங்களச் சமூகத்தின் அங்கீகாரத்துடன் அவர்களால் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், இதனால் பாதிக்கப்படுவதோ எந்தவிதமான சம்பந்தமுமில்லாத தமிழ் முஸ்லிம் மக்கள். ஜே.ஆரின் காலகட்டம் பனிப்போர்; நிலவிய சூழல். அன்றைய சர்வதேச பிராந்திய சக்திகளின் இயல்புக்குள்ளும் போக்குகளுக்கிடையேயும் அவற்றின் அணுகுமுறைகளுக்குள்ளும் புகுந்து விளையாடினார் ஜே.ஆர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மெளனகுருசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார். இவர் பதவியில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருந்து உயிர் மீண்டவர். இந்த நிலையில் முதலமைச்சர் பதவி, அமைச்சர் பதவி என எல்லாம் பேசப்பட்டு இறுதியில் மாகாணசபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துள்ளார். இதனால் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு திருகோணமலையைச் சேர்ந்த வேட்பாளனர் ரகு அல்லது மட்டக்களப்பு வேட்பாளர் பிரசாந்தன் அந்த இடத்திற்கு நியமிக்கப்படாலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்குடா பிரதேசத்தில் (கிழக்கில்) ஐ.தே.க.வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டு வீச்சு கடந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 17. மே 2008 வட போர்முனையிலும் வன்னிக் களமுனையிலும் இராணுவத்தினர் படுதோல்வியைச் சந்தித்து வருகின்ற போதும் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் நிகழ்ச்சி நிரலில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஇ இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தமது போர் நிகழ்ச்சி நிரலில் அளவுகடந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். 'கிழக்கை விடுவித்ததைப் போன்று வடக்கையும் இராணுவத்தினர் மிக விரைவில் விடுவிப்பர்" என்று மே தின உரையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சூளுரைத்துள்ளார். அதேநேரம் 'புலிகளை தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒடுக்கியே தீருவேன்" என்று கடந்த 04 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகிய சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு குண்டு வெடிப்புக்கு வந்தவர் வியாபாரி வேடத்தில் ! Monday, 19 May 2008 கொழும்பில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்கு தற்கொலைதாரியாக வந்தவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் போல் வந்துள்ளதான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட உந்துருளி கடந்த ஏப்பரல் மாதம் 23ம் திகதி திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு கொண்டு வரப்பட்டாதாகவும் தெரியவந்துள்ளது. பிள்ளையான் குழுவினரின் அடையாள அட்டை ஒன்று சுனாமி காலத்தில் தொலைந்து போனதாகவும் அதை பாவித்து உந்துருளியை தாக்குதல் நடத்தியவர் பதிவு செய்திருக்கிறார் எனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து அது குறித்த மேலதிக விசாரணைகளில் போலீசார் இறங்கியுள்ளனர். …
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 18.05.08 அன்று ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு ஆய்வுப் பொருள்: கிழக்குத் தேர்தலில் குடியேற்றங்களின் ஆதிக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு சிவகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பொறுப்பாளர் திரு எழிலன் மற்றும் திரு வீரா
-
- 0 replies
- 901 views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியேற்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவின் தலைவர் பிள்ளையான், கண்டியில் அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதன் பின்னர், பௌத்தர்களின் புனித தலமான தலதா மாளிகைக்கும் சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொர்ந்து படிக்க...
-
- 5 replies
- 1.1k views
-