ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதை விட வயலில் வேலை செய்வது சிறந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தேர்தல் முடிந்த கையோடு ஐக்கிய தேசிய கட்சிக்குள் மற்றுமொரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தொடர்பாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலுக்கு பின்னர் சில ஊடகங்கள் எஸ்.பி. அரசாங்கத்தில் இணைய போவதாக புதுமையான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும் எஸ்.பி திசாநாயக்க இந்த ஊகங்களை மறுத்துள்ளார், எஸ்.பி. இருந்தாற்போல் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசுவது இந்த ஊகங்களுக்கு காரணமாகியது. இந்த தகவல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து சென்றிருக்குமா எனவும் சில ஊடகங்கள் சந்தேகம் கொண்டன.…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிழக்கில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலின் போது பல்வேறு ஊழல் மோசடிகளை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தேர்தல் வன்முறைகளுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமை வகித்ததாக கூறப்படுகிறது அரசாங்கத்திடம் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர்கள் எவரும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பொலிஸ் திணைக்களத்திற்கே இதன் மூலம் களங்கம் ஏற்பட்டுள்ளதகாவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.…
-
- 1 reply
- 994 views
-
-
கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை நியமிக்க சிறிலங்கா அரச தலைவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரச தலைவரை கோரிக்கை விடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 889 views
-
-
அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ் தாக்குதலுக்கிலக்காகியுள்ளத
-
- 0 replies
- 1k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் மன்றத்தின் தமிழ் விழா நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 613 views
-
-
மேற்குலகம் இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடக் கூடாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்கொண்டு செல்லும் நாடுகளே, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என இலங்கையை அச்சுறுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பாகிஸ்தான் தூதரகத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். "அவர்கள் ஒசாமா பின் லேடனுக்கு எதிராக போர் புரிந்து கொண்டே, உலகின் முக்கிய பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டாம் என இலங்கையிடம் கேட்கின்றனர்" எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். ம…
-
- 5 replies
- 1.6k views
-
-
எனக்கும் பிள்ளையானுக்கும் சுமூகமான உறவு உள்ளது: முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன் ஞாயிறு, 18 மே 2008 [நிருபர் அ.மயூரன்] முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முடிவையே நான் எடுப்பேன். எனது முடி இன்னும் ஒரிரு நாட்களில் தெரியும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணசபை தொடர்பான எனது முடிவு பிள்ளையானுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதிரானது அல்ல என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். எனக்கும் பிள்ளையானுக்கும் உள்ள உறவு சுமூகமாக உள்ளது. நேற்றுக் காலையும் பிள்ளையானுடன் தொல…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர். யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங…
-
- 0 replies
- 793 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது வெறுமனே தமிழர் தேசத்துடன் மட்டுப்பட்டது அல்லது இலங்கை அரசியலுடன் மட்டுப்பட்டது இன்னும் சற்று மேலே போனால் பிராந்திய அரசியலுடன் தொடர்புபட்டது என்றெல்லாம் நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாருமில்லை. இன்றைய உலக அரசியல் போக்கென்பதே புவிசார் அரசியல் காய்நகர்த்தல்களில்தான் தங்கியிருக்கிறது. இந்த பின்புலத்தில் பார்ப்போமானால் சமீப காலங்களில் உருவாகிய முக்கிய புவிசார் அரசியல் கூட்டு அமெரிக்க-இந்திய கூட்;டாகும். அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கான கூட்டு நலன் சார்ந்து ஏற்படுத்தி வரும் நெருக்கத்தின் விழைவுகளைத்தான் நாம் தற்போது சந்தித்து வருகின்றோம். அமெரிக்க-இந்திய நெருக்கத்தின் விழைவுதான் இதுவரை காலமும் இல்லாதளவிற்கு சீனா…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தற்போது பரவலாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்று, ஜீ.எஸ்.பிளஸ் எனும் ஆடை ஏற்றுமதிச் சலுகையாகும். ஐரோப்பிய யூனியனால் முன்னிலைப்படுத்தப்படும், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டிற்கும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கும் இடையில் உரசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜீ..எஸ்.பி. (Generalised System of Preferenced) பிளஸ் இனை அனுபவிக்க முடியாதவாறு, தொழிலாளர் நல உரிமை மற்றும் பொதுப்படையான மனித உரிமைகள் யாவும், இலங்கையின் அந்நிய செலவாணி வருமானத்திற்கு வேட்டு வைக்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும், மனித உரிமை மீறல்களை முன்வைத்து, இச்சலுகையினை ஐரோப்பிய யூனியன் இரத்து செய்யுமென்று கூற முடியாது. அரசின் மீது ஏதாவதொரு வகையில் அழுத்தத்தை திணிப்பதற்கே, ஜீ.எஸ்.பி. பிளஸ் ஒரு ஆய…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிபிஸி நிருபர் கொழும்பில் இருந்து செய்தி தெரிவிக்கிறாரா அல்லது கருத்து வெளியிடுகிறாரா? கொழும்பை வாஸஸ்தலமாக கொண்டுள்ள பிபிஸி நிருபர் ரோலண்ட் போர்க் (Roland Buerk) திறமான எழுத்தும் ஆராய்ச்சி திறனும் கொண்டவர், அவர் விரும்பியபடி கொழும்பு, குருனாகல அல்லது மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து செய்திகள் வழங்க முடியும். அவருடைய நாட்டில் ஸ்ரீலங்கா ஒரு சிப்பியாகும். அவர் சமாதானம், ஸ்ரீலங்கா அரசாங்கம், வரையறுக்கப்பட்ட அதிகாரப்பகிர்வு, மற்றும் தசாப்தகாலமாக சிங்கள அரசு ஆட்சியாளர்களால் சிறுபான்மை தமிழர்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக தமிழர்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகள் பற்றி எல்லாம் எழுதுகிறார். ஆனால் தூரதிர்ஸ்டவஸமாக அவருக்கு சிங்கள முதற்பெயரை (first name) குடும்பபெயர்…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான குழுவின் முக்கிய நபருக்கு தொடர்புகள் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக துணை இராணுவக் குழுவின் தலைவரான பிள்ளையான் நியமிக்கப்பட்டதனை முறியடிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைச்சர்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 945 views
-
-
பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜக்கி ஸ்மித்தை "வெண்புறா" அமைப்பின் ஐரோப்பியப் பொறுப்பாளர் மருத்துவ கலாநிதி என்.எஸ்.மூர்த்தி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 927 views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் ஆரம் பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாக, திருகோணமலைத் துறைமுகத்தினுள் வெடித்த குண்டு இலங்கைக் கடற்படைக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. கடந்த 10ஆம் திகதி அதிகாலை 2.23 மணி யளவில் திருகோணமலைத் துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையில் தரித்துநின்ற, அ520 என்ற கடற்படையின் விநியோகக் கப் பலுக்கு அடியில் பாரிய வெடிப்பு நிகழ்ந்தது. உடனடியாகக் கப்பலில் பற்றிக் கொண்ட நெருப்பும், கடலுக்கு அடியில் நிகழ்ந்த வெடிப் பினால் ஏற்பட்ட துவாரத்தின் வழியாக குபுகுபு வெனப் புகுந்த நீரும் 13 நிமிடங்களிலேயே கப்பலை துறைமுகக் கடல் விழுங்கிக் கொண் டது. ஒரு வாரமாகியும் கடலுக்கு அடியில் நிகழ் ந்த இந்தக் குண்டுத் தாக்குதல் எவ்வாறு நிகழ்த் தப்பட்டது…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் இருந்து புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினர் இன்று மதியம் மன்னார் மடுவிற்கு வடக்காக 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலம்பிட்டி சந்தியை படையினர் கைப்பற்றினர். Sri Lankan troops capture rebel position, 16 killed Sat May 17, 2008 COLOMBO, May 17 (Reuters) - Sri Lankan troops have killed 16 Tamil Tiger rebels and captured a rebel-held position in the island's north, officials said on Saturday. A military spokesman said 17 people were injured on Saturday when Tamil Tiger rebels threw a hand grenade into a crowded street in northern Sri Lanka. "Seventeen civilians, including six females and two children, were inju…
-
- 6 replies
- 4k views
-
-
காத்தான்குடி பகுதியில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதல் அமைச்சர் பதவி வழங்கப்படாததை கண்டித்து ஹர்த்தால் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. காலையில் டயர் எரிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. எனினும் காவற்துறையினரின் தலையீட்டையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக காத்தான்குடி பகுதியில் நேற்று மாலையளவில் துண்டுப் பிரசூரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூடுதலான ஆசனங்கள் எடுக்கும் கட்சிக்கு முதல் அமைச்சர் பதவி வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் பொதுஜன ஐக்கிய முன்னனியில் சேர்ந்து போட்டியிட்ட முஸ்ஸிம் தரப்பினர் கூடுதலான ஆசனத்தைப் பெற…
-
- 1 reply
- 1.6k views
-
-
கடற்புலி லெப். கேணல் தமிழ்மாறன் அல்லது கஜேந்திரன் என்று அழைக்கப்படும் மாவீரரின் "நினைவுத் தடங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 878 views
-
-
வீரகேசரி இணையம் 5/17/2008 1:04:57 PM - வவுனியா பசார் வீதியில் படையினர் பயணம் செய்த இராணுவ கவச வாகனம் ஒன்றின் மீது இன்று காலை 11 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 17 பொதுமக்கள் காயமடைந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். கவச வாகனத்தின் மீது பட்ட கைக்குண்டு கீழே வீழ்ந்து வெடித்ததில் அவிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த யுவதி ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் வந்து நின்ற பஸ் ஒன்றில் இருந்த பிரயாணிகளில் பலரும், அந்த வேளையில் வீதியில் சென்றவர்களும், அருகில் இருந்த கடைகளில் இருந்த சிலருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். இராணுவ வாகனத்திற்கோ அதில் இருந்த படையினருக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலிசார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்களின் உரிமையாளர் பிள்ளையான் குழுவின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது. ஜனா என்ற இந்த தமிழர் நேற்று மாலை திருகோணமலையில்............... தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6823.html
-
- 8 replies
- 3.5k views
-
-
கடற்படையினரால் இன்வென்சிபல் கப்பலை மூழ்கடித்த விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கு கடைசியாக லண்டன் மற்றும் கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வருகிறது. இதுதொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் விசாரணைக்குழு கடற்படையின் சுழியோடி.................. தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5200.html
-
- 4 replies
- 3k views
-
-
16.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.6k views
-
-
மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கையின் பெருமையும், கௌரவமும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர் என மதிக்கப்படும் தென்னாபிரிக்கப் பேராயர் வண.டொஸ்மண்ட் டூட்டு விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் அம்பலமாகியிருக்கின்றது. மனித உரிமைகளுக்காகவும் நிற வெறிக்கு எதிராகவும் கடுமையாகப் போராடி வருபவர் வண. டூட்டு. இதற்காக 1984 இல் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிகக் கேவலமான பதிவுகளைக் கொண்டிருக்கும் இலங்கை, மனித உரிமைகளுக்கான ஐ.நா. கவுன்ஸிலில் இடம்பிடிப்பதற்கான தேர்வில் போட்டியிடுவது பெரும் அபத்தம் என்று வெளிப்படையாகவே விமர்சித்து, இலங்கைக்கு அதன் மோசமான நிலையை எடுத்துரைக்க முயன்றிருக்கிறார் பேராயர் டூட்டு. …
-
- 1 reply
- 1.4k views
-
-
சிங்கள இணையம் ஒன்றில் இந்த தலைப்பினை பார்த்தேன் ஜடியன் செய்தியில் சொல்ல்ப்பட்டதாம் ஆனால் பாதுகாப்பு இனையத்தளத்தில் இரனைமடு ஓடுபாதையை விமானப்படைதாக்கியதாக மட்டுமே சொல்லப்பட்டிருகின்ரது.
-
- 21 replies
- 6.4k views
-