ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
-
- 10 replies
- 4.1k views
-
-
மடுத் தேவாலயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரசன்னமாகி இருக்கின்றனர் என இலங்கை இராணுவத் தரப்பு தெரிவித்த குற்றச்சாட்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் வண. இராஜப்பு ஜோசப் ஆண்டகை நிராகரித்துள்ளார். விடுதலைப் புலிகளின் மன்னார் மடு மாத தேவாலயச் சூழலில் நடமாடுவதும் இல்லை. அத்துடன் விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்கள் எவையும் மடுத் தேவாலயச் சூழலில் காணப்படவில்லை என்றும் ஆயர் தெரிவித்துள்ளார். மேலும் மடு தேவாலய வளாகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் தமது முன்னேற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்ககுமாறும், மன்னார் களமுனையின் கட்டளை அதிகாரி ஆயரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தா…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான கலை பண்பாட்டுக் கழகத்தின் மகளிர் இசைக்குழுவின் இசையமைப்பில் உருவான "பூகம்பப்பொறிகள்" குறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 916 views
-
-
இந்தியா - தமிழீழம் - சிறிலங்கா 'அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாகத் தொய்ந்து போயுள்;ள சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுக்கும் இந்திய அரசின் செயலானது, ஈழத் தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்;ளது" - என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் 10-02-2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசுக்குத் துணையாக, இந்தியா மேற்கொள்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்;ள இந்த அறிக்கையில் 'இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சி;ங்களப் படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழி;ப்பிற்கு, இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளை, 'வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இத்தாலியில் இயங்கும் விடுதலைப் புலிகளின் ஒலி,ஒளி பரப்புச் சேவைக்குத் தடை விதிக்க இத்தாலி அரசு தீர்மானித்திருக்கின்றது என்று மஹிந்தவின் செயலகம் அறிவித்திருக்கிறது. இத்தாலி மற்றும் இலங்கை அரசின் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் ரோமில் இடம் பெற்ற சந்திபினை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும், இத்தீர்மானம் பற்றி ஐரோப்பிய யூனியனில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தாம் அறிவித்து இந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஒத்துழைபினை பெறப்போவதாகவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளகனர். இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய இத்தாலியின் உள் விவகார அமைச்சர் உட்பட உயர்மட்ட அதிகாரிகைச் சந்தித்து புலிகளின் ஒலி, ஒளிபரப்புச் சேவைக்குத் தடை விதிக்குமாறு…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப்புலிகளின் நிலைகளைத் தாக்கவந்த படையினர் மீது தாக்குதல் 18.03.2008 / நிருபர் எல்லாளன் யாழ் முகமாலைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலைகளில் மீது நேற்று காலை தாக்குதல் நடத்தவந்த படையினரை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதேவேளை மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பாலைக்குழிப் பகுதியில் கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற பெரும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டு 14…
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு $2.2 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவத்கு சிறீலங்கா காவல்துறையினரின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவே இவ் உபகரணங்களை வழங்குவதாக அமெரிக்கா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவிற்கும் இடையில் இன்று சிறப்பு சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 2.1k views
-
-
மே மாத்தில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நவ்சாட் மஜீட்டை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் தெரிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று மாலை கூடும் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். கிழக்கு மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளராகவும், மாகாணத் தலைவராகவும், அரசியல் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்குப் பிரதிநிதியாகவும் நவ்சாட் தற்போது கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_டன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
மன்னார் முருங்கன் அருவியாற்றுப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f4d180b08d62b00
-
- 1 reply
- 3k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 964 views
-
-
மீண்டும் பழைய பல்லவி 18.03.2008 கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் என்ற பெயரில் மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம் நடத்தப்போகும் அரசியல் குயுக்தி நாடகத்தில் நடிப்பதா, இல்லையா என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் கூடி ஆராய இருக்கின்றது என்ற செய்தி மெல்லக் கசிந்திருக்கின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் ஒன்றரை லட்சம் துருப்புகள் மூலம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகளை வன்னிக் காட்டுக்குள் முடக்கி வைத்துக்கொண்டு, அப்போதைய இலங்கை அரசின் இராணுவத்தையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு, இந்தியத் தரப்புத் தனது ஆசீர்வாதத்தோடு முன்னெடுத்த அதே திட்டம் சற்று மாறுதலோடு மீண்டும் இப்போது மேடையேற வருகிறது. அப்போது, வடக்கில் ஒரு தேர்தலை நடத்தாமலேயே தனது கைப்பொம்ம…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பினை நோக்கி இன்று முற்பகல் கிளாலி சிறிலங்காப் படைத்தளத்தில் இருந்து படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 711 views
-
-
மன்னார் பாலைக்குழிக்கு அண்மையில் உள்ள களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த கப்டன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 851 views
-
-
மணலாற்றில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 4 சிறிலங்காப் படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 818 views
-
-
வீரகேசரி இணையம் - மன்னார் தள்ளாடி மற்றும் உயிலங்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதலின் போது படுகாயமைடைந்த 14 இராணுவத்தினர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த 14 இராணுவத்தினரையும் மேலதிக சிகிச்சைகளிற்க்காக அனுராதப்புரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை மன்னார் தள்ளாடி மற்றும் சௌத் பார் படைத்தளத்திலிருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும், இதனை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எ…
-
- 6 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 831 views
-
-
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 699 views
-
-
திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி 13. மார்ச் 2008 06:36 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுடன் தமது சந்தேகம் குறித்து இராணுவ உயர்மட்டத்திற்கு கடந்த வாரம் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருக்கின்றனர். திருகோணமலை காட்டுப் பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பது குறித்த ஆதாரங்களுடனான எச்சரிக்கை ஒன்றே அதுவாகும். கிழக்கில் விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மீளவும் உறுதியானதொரு பின்புலத்துடன் ஒருங்கிணைத்து விட்டார்களா என்ற சந்தேகம் இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு வலுத்திருக்கிறது. கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பை …
-
- 33 replies
- 6.4k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு மாணவர்கள் காணாமல் போயிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 11 மற்றும் 15 வயதான இவ்விருவரும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்துள்ள புகாரில் பெற்றோர் தெரிவித்திருக்கின்றார்கள். கொக்குவில் வீட்டிலிருந்து புறப்பட்ட இவர்கள் கந்தர்மடம் பகுதியிலுள்ள தமது உறவினர் இல்லத்துக்கு முதலில் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து தென்மராட்சி, சாவகச்சேரியிலுள்ள மற்றொரு உறவினரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டதாகவும் தெ…
-
- 1 reply
- 1k views
-
-
ஆறு இராஜதந்திரிகளின் நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது 3/18/2008 11:55:03 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் சேவை புரிவதற்காக நியமனம் பெற்றுள்ள ஆறு புதிய தூதுவர்களும் உயரிஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பிரேஸில் தூதுவர் பெட்ரோ ஹென்ரிக்ஸ் லோப்ஸ் போரியோ, உக்ரைன் தூதுவர் லுகார் போலிக்கா, பூட்டான் தூதுவர் சேரிங் டோர்ஜி;, பிரித்தானிய உயரிஸ்தானிகர் கலாநிதி பீற்றர் ரிச்சட் ஹேய்ஸ், அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் கெத்தே கே குலுக்மான், நைஜீரிய உயரிஸ்தானிகர் லாவல் எம் டஸ்டின் மா ஆகியோரே புதிதாக நியமனம் பெற்றுள்ள இராஜதந்திரிகளாவர்.
-
- 0 replies
- 1k views
-
-
புல்மோடை இராணுவ முகாமில் 17 பொதுமக்கள் தஞ்சம் 3/17/2008 12:01:48 PM வீரகேசரி இணையம் - முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த நான்கு குழந்தைகள் உட்பட 17 பொதுமக்கள் நேற்றுக் காலை 6 மணியளவில் புல்மோடை இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புலிகளின் கொடுமைகளை சகிக்க முடியாத நிலையிலேயே அவர்களது பிடியில் இருந்து இரகசியமான முறையில் தாம் தப்பி வந்ததாக அவர்கள் இராணுவத்தினரிடம் தெரிவித்துள்ளனர். எட்டு ஆண்களும் ஐந்து பெண்களும் நான்கு சிறுவர்களுமே இவ்வாறு தப்பிவந்தவர்களாவர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தரிப்பிட வசதிகளை படையினர் வழங்கியுள்ளனர் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசு இராணுவ நடவடிக்கையை முற்றாக கைவிட்டால் புலிகள் சமாதான பேச்சுக்கு முன்வருவார்கள் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசன் தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் பிரிஐ செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார். மாமனிதர் கே சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பின் அரசியல் துறை பொறுப்பாளர் பி நடேசனை 13 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து நீண்ட அரசியல் உரையாடல் ஒன்றை செய்துள்ளனர். அந்த சந்திப்பில் மேற்படி கருத்தை தெரிவித்தாக பிரிஐயின் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. http://www.navhindtimes.com/articles.php?Story_ID=031764
-
- 8 replies
- 3.2k views
-
-
கடந்தவாரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் தமிழ்பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் கொல்பட்டிருந்தார். கொழும்பில் இருந்து வெளி வரும் வாரந்த இதழான த நேசன் அதனது பாதுகாப்பு பத்தியில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் சிவநேசன் சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்தியால் உற்சாகமடைந்த இராணுவத்தினர் புளியங்குளம் பகுதியில் புதிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. Buoyed also, by the Army’s deep penetration unit claymore mine killing of Jaffna District MP Srinivesan north of Puliyankulam last week, soldiers on Monday took on hordes of Tiger cadres in the Pulliyankulam ar…
-
- 11 replies
- 1.7k views
-