Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது. கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..! செய்தி: ரெயிலிமிரர்

  2. பொட்டு அம்மான் நோய்வாய்ப்பட்டுள்ளார்! பிரபாகரன் குறித்த வதந்தி பொய்யானது!! கடந்த 13ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் , கிளிநொச்சி மருத்துவ மனையில் வைத்து சத்திர சிகிச்சைக்கு உட்படத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளாதாகவும், அவர் தற்போது வழமையான நிலைக்கு திரும்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தவிரவும் விமானக் குண்டு தாக்குதலினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கால் ஒன்றை இழந்துள்ளார் என சிறீலங்காவின் சில ஊடகங்கள் மற்றும் சிறீலங்கா அரசு பரப்பிய வதந்தி முற்றிலும் பொய்யானது என்றும் தெரிய வந்துள்ளது. …

  3. யாழ். கடல்நீரேரியில் மோதல் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது. யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். படையினரின் எறிகணை வீச்சு…

    • 2 replies
    • 1.8k views
  4. கொழும்பிலிருந்து புறப்பட்ட மகன் வீடு திரும்பவில்லை. 26.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு டாம் வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவருடைய தாயார் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நான்காம் வட்டாரம் வேலணை கிழக்கு வேலணையைச் சேர்ந்த சதாசிவம் யோகேந்திரன் என்பவர் வவுனியா செல்வதற்காக கடந்த 16ஆம் திகதி விடுதியிலிருந்து புறப்பட்டுள்ளார். எனினும், அவர் வவுனியாவுக்கோ அல்லது விடுதிக்கோ திரும்பவில்லையென அவருடைய தாயார் நேற்று திங்கட்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கைதடி தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த இ…

  5. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கிராஞ்சிப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய படுகொலையைக் கண்டித்து முழங்காவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றினைந்து சங்கிலிப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 904 views
  6. மன்னார், வவுனியா, மலாணற்றுக் களமுனைகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 987 views
  7. மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர் - ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே [Tuesday February 26 2008 06:02:08 AM GMT] [யாழினி] நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே யுத்தம் நடைபெறுவதாக சிலர் நினைக்கின்றனர். இன்று நடைபெறுவது அப்படியான யுத்தமல்ல. இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்றால் ஐந்து நிமிடங்கள் கூட நான் அரசாங்கத்தில் இருக்கமாட்டேன். ஆனால், இன்று நடை பெறும் யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகும் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். பொலிஸாருக்கு மக்கள் யாராவது தகவல் கொடுத்தால் அதனை அவர்கள் கணக்கெடுப்பதில்லை. அலட்சியப்படுத்துகின்றனர். தகவல் கொடுத்த…

  8. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது அமைச்சர்களும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கின்ற போதும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 752 views
  9. சமஷ்டி முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதையே கொசோவோ பிரகடனம் உணர்த்தியுள்ளது - அமைச்சர் சம்பிக ரணவக்க [Tuesday February 26 2008 06:05:01 AM GMT] [யாழினி] யுத்தத்தினால் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதன் மூலமே எமது நாட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அதிகாரப் பரவலாக்கல் மூலமோ, சமஷ்டி முறை மூலமோ தீர்வுகாண முடியாதென்பதை கொசோவோ தனிநாட்டு பிரகடனம் வெளிக்காட்டியுள்ளது என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொசோவோவின் தனிநாட்டு பிரகடனம் உணர்த்துவது என்ன என்பது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக ரணவக்க மேலும் கூறியதாவது: அத…

  10. மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

  11. தனது காதலனுடன் சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியாலும் வாளினாலும் வெட்டிக் கொலை செய்துவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முற்பட்ட மனைவியையும் அவளது காதலனையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்த அதிர்ச்சிச் சம்பவம் கதிர்காமத்தில் இடம் பெற்றுள்ளது. கதிர்காமம் பெரகிரிகம என்ற இடத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான டி.கே. சிறிபால என்பவராவர். கடந்த ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் மேற்படி பெண்ணும் அவளது காதலன் ஏ.கே.பியலால் என்பவனும சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியால் குத்தியும் வாளினால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் இறந்தவரின் மனைவி அருகே உள்ள வீட்டிற்குப் சென்று புலிகள் வந்து தனது கணவனை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறிவிட்டு பொலிஸார…

    • 3 replies
    • 3.1k views
  12. ஜனாதிபதியின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ சற்று நேரத்திற்கு முன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபத்யின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ 12.20 மணியளவில் வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன

    • 2 replies
    • 1.6k views
  13. ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…

    • 8 replies
    • 3.2k views
  14. யாலகாட்டில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக்கொண்ட புலிகளின் அணி [25 - February - 2008] யாலகாட்டுப்பகுதியில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியொன்று சுற்றித்திரிவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த 40 பேரைக்கொண்ட விஷேட படையணியில் நன்கு பயிற்சி பெற்ற 4 பெண்புலிகளும் உள்ளடங்குவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இராணுவ புலனாய்வுத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; `யால, புத்தல காட்டுப் பகுதிகளில் விஷேட பயிற்சி பெற்ற 40 பேரைக் கொண்ட அணியொன்று செயற்பட்டுவருகின்றது. இந்த அணி ராம் மற்றும் ராகுலன் ஆகியோரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இந்த 40 பேரைக் கொண்ட குழ…

    • 6 replies
    • 3.1k views
  15. இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2/26/2008 11:18:22 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. …

    • 6 replies
    • 1.5k views
  16. எண்ணெய் கசிவால் தீப்பற்றி எரிந்த ரோலர் படகு கொழும்பு துறைமுகப் பகுதியில் சம்பவம் 2/26/2008 9:10:59 AM வீரகேசரி நாளேடு - கொழும்பு துறைமுகத்திலுள்ள டோலர் ரக படகொன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக அப்படகின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தை அண்டிய பிரதேசம் முழுவதும் கரும் புகையினால் சூழ்ந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்று முன்தினம் இப்படகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கசிவடையத் தொடங்கியது. இதனால், அது எரியத் தொடங்கியது. எனினும், அது துறைமுக அதிகாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றும் இப்படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதுடன் பகல் 12 மணியளவில் அவ்வெண்ணெய் கசிவு அதிகரித்து ப…

  17. சிறிலங்கா வான்படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட தூரப் பீரங்கிகளை அழிக்க முடியவில்லை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…

  19. ஜ.நா தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார் 2/25/2008 3:04:53 PM வீரகேசரி இணையம் - இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் அன்ஜெலா இன்று காலை இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் அன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து விட்டு மறுநாட்காலை கொழும்பு திரும்பினார். கிழக்கே அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய வேலைத் திட்டங்களை அவர் பாராட்டினார் . அதே வேளை இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார். என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தா…

  20. திங்கள் 25-02-2008 17:39 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் இறக்கும் படையினரைப் புதைக்க புதிய அணி வன்னி களமுனைகளில் கொல்லப்படும் சிறீலங்காப் படையினரின் இழப்பை தென்னிலங்கை மக்களிற்கும், ஊடகங்களிற்கும் தெரியாது மூடி மறைப்பதற்கு புதிய உத்தியொன்றை அரசு மேற்கொண்டு வருகின்றது. மன்னார், மணலாறு களமுனைகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நாளாந்தம் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை ஊடகங்களிற்கும், கொல்லப்படும் படையினரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தாது விடுவதற்காக, கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் புதைப்பதற்கென புதிய அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இந்த அணியினர், ஏனைய படையினருக்கு உ…

  21. தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை! நிலவர அறிக்கை 23.02.2008 http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே. இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகு…

    • 1 reply
    • 1.2k views
  22. கிளிநொச்சி, பூநகரியில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் சர்வதேச நாடுகள் இன்னமும் கண்டனம் தெரிவிக்காமை குறித்து த.தே.கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கவலை தெரிவித்துள்ளர். தென்பகுதியில் குண்டு வெடித்தால் மாத்திரமே சர்வதேச சமூகம் கண்டனமும் கவலையும் தெரிவிக்கின்றது என்று கூறிய சிவநேசன், அவ்வாறு தெரிவிக்கும் கண்டனத்தில் கிளிநொச்சியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கும் சேர்த்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக் காட்டினார். அப்படியானால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்காக கண்டனம் தெரிவிப்பதற்…

  23. வீரகேசரி இணையம் - இலங்கையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு கச்சதீவு அந்தோனியார் கோவில் திருவிழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல்மைல் தொலைவில் கச்சதீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் கோவிலை மீனவர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இத்தீவு அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் பெப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் 15 ஆம் திகதி 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும். இதில் முதல் நாள் கொடியேற்றம், 2 ஆம் நாள் சிறப்பு பிரார்த்தனை, 3 ஆம் நாள் தேர்பவனி நடைபெறும். இக்கோவில் திருவிழாவில் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்ற…

  24. புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை அடங்கிய இறுவெட்டு வைத்திருந்தவர் கைது 2/25/2008 7:39:14 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரை அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை வைத்திருந்த மஸ்கெலியா பிரவுன்ஸ் விக்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு செட்டியார் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் ஒருவர் தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளõர். ராமஜெயம் ரவிச்சந்திரன் (வயது 34) என்ற வாலிபரே ஜாஎலயிலுள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டவர். கடந்த 19ஆம் திகதி இவரது வீட்டுக்கு சென்ற இரகசிய பொலிஸார் சுமார் 105 சினிமா பாடல் திரைப்பட இறுவட்டுக்களை தகவல் ஒன்றை அடுத்து எடுத்துச் சென்றதாகவும், அதில் இரண்டு இறுவட்டுக்கள் பிரபாகரனின் மாவீரர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.