ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
வெள்ளி 29-02-2008 17:47 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளைத் தோற்கடித்து சமவுரிமையுள்ள சூழலை உருவாக்க வேண்டும் - சோமவன்ச அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுவதற்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என ஜேவிவியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை கொழும்பில் உள்ள கோல்பேஸ்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சோவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் 13வது சரத்தை உயிரூட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. மகிந்தவின் சிந்தனை பிரச்சாரங்களின் போது 13வது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 13வது சரத்து திருத்தத்தை ஜக்கிய தேசியக் கட்சி வலுக் கட்டாயமாக நிறைவேற்றியது. இ…
-
- 3 replies
- 932 views
-
-
இன்று அதிகாலை 7:15மணியளவில் படையினரின் தேடுதலின் போது குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா
-
- 12 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் பிரதேசத்தில் 25 தமிழ் இளைஞர்கள் கைது [Friday February 29 2008 06:10:01 PM GMT] [யாழினி] மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் கரையோர பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது 25 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் தளவாய் மற்றும் ஐயங்கேணி போன்ற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் தளவாய் கரையோர கிராமத்தில் அமைந்துள்ள காடு ஒன்றில் பன்றிகள் பிடிப்பதற்காக சென்றிருந்தவேளையில் அங்கு சென்ற இராணுவத்தினர் அப்பிரதேசங்களை சுற்றிவளைத்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து தமிழ் இளைஞர்களும் ஏற…
-
- 0 replies
- 698 views
-
-
வட போர்முனையான முகமாலை, கிளாலிப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத் தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 859 views
-
-
மன்னாரில் கடந்த ஒரு வாரத்தில் மூவர் காணாமல் போய் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது பேர் அங்கு காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 590 views
-
-
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தைப் புனரமைப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் வழங்கிய நிதியை "கிழக்கின் உதயம்" என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டிய பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 2.7 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக அரசாங்க தரப்பு சட்டத்தரணி மெரீன் பெர்னாண்டோ இன்று (பெப்ரவரி29) உயர் நீதிமன்றில் தெரிவித்தார். அவருக்கு எதிராக இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளின் பொருட்டே அவர் கொழும்பிற்கு மாற்றஞ்செய்ய்பட்டுள்ளதாவும
-
- 1 reply
- 1.3k views
-
-
--------- ----------------------------- ------------------------------ ---------------------------------- ------------------------
-
- 0 replies
- 801 views
-
-
தெற்கின் இனவாத சக்திகளை திருப்திப்படுத்துகிற வகையில் சிறிலங்காவின் போர்க்கள புள்ளி விபரங்கள் வெளியிடப்படுகின்றன என்று அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்தி ஆய்வு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரான்ஸ் 24 என்ற தொலைக்காட்சியின் ஊடாக 'தம் பிள்ளைகள் வரும் வரை இலங்கைத் தமிழ் தாய்மார்கள் காத்திருக்கின்றனர்' என்ற அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமையை மூடி மறைத்து பக்கச் சார்பான தவறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது என பிரான்ஸின் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர் கூறியுள்ளார். ஏசியன் டிரியூன் இணையதளத்தில் நேற்று பெப் 27ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் இத் தொலைக்காட்சி பக்கச் சார்பாக தவறான கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது என இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. வரும் பெப் 29ம் திகதி இச் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ள தொலைக்காட்சி நிலையம் அதற்கு முன் தமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் படி தூதுவரிடம் வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
மன்னார் களமுனையில் சிறிலங்காப் படையினருடன் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 830 views
-
-
தஸாநாயக்கஇ மகேஸ்வரனிற்கு 50 இலட்சம் கொல்லப்பட்ட அமைச்சர் டி.எம்.தஸாநாயக்கஇ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது. நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகஇ சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார். நன்றி:- பதிவு கொன்று போட்டு காசும்கொடுக்கின்றார்கள் என்ன கொடுமையடா இது???
-
- 1 reply
- 1.6k views
-
-
சேர்பியாவின் கொசோவா பிராந்தியம் இன்று ஞாயிற்றுக் கிழமை தனது சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டு தனிநாடாக மலரவுள்ளது. கொசோவா இன்று தனது சுதந்திரதினப் பிரகடனத்தை வெளியிடும் என்று அந்த நாட்டு பிரதமர் ஹாசிம் தாசி நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சர்வமதத் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம் பெற்ற சந்திப்பையடுத்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தை இன்றைய தினம் மேற்கொள்வதற்கான கொண்டாட்ட நிகழ்வுகள் அங்கே நேற்றைய தினம் மிகவும் ஆரவாரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொசோவாவின் பிரிஸ்டினா பகுதியில் சுதந்திரப் பிரகடனத்தை கொண்டாட மிகப் பிரமான்டமான விழாக்கள் நடைபெறவுள்ளன என தெரிவிக்கபடுகிறது. …
-
- 21 replies
- 4k views
-
-
வியாழன் 28-02-2008 14:16 மணி தமிழீழம் [மயூரன்] அரச அதிபர், மத்திய வங்கியின் தலைவர் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் புதிய நாணயத்தாள் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிசாட் காப்ரல் ஆகியயோரின் கையெழுத்துக்களுடன் சிறீலங்காவின் நாயணத்தாள்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் இவர்களின் கையெழுத்துக்களுடன் 2000 ரூபா, 50 ரூபா, 20 ரூபா, 10 ரூபா நாணயத்தாள் நாட்டில் புழக்கத்தில் விடப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்தியா, மாலைதீவு போர்க்கப்பல்கள் கொழும்புத்துறைமுகத்தில். 28.02.2008 / நிருபர் எல்லாளன் இந்தியாவினுடை கரையோரப் பாதுகாப்புப் படையின் கப்பலான சுகன்யாவும் மற்றும் மாலை தீவு தேசிய பாதுகாப்பு கப்பல் படையின் குறுவி ஆகிய இரண்டு கப்பல்களும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 4 replies
- 1.6k views
-
-
கல்முனையில் சிங்களவர்கள் இருவர் சுட்டுக்கொலை, மற்றொருவர் காயம் அம்பாறை கல்முனை பாண்டிருப்பு பகுதியில் மொறட்டுவையைச் சேர்ந்த இரண்டு சிங்கள வர்த்தகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தளபாட விற்பனையாளர்களான இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மற்றுமொரு சிங்களவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் மொறட்டுவையைச் சேர்ந்தவர்களான 51 அகவையுடைய நிமால் சிறீலால் பெலங்கர், 40 அகவையுடைய பிறேம்லால் பெர்னான்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் மொறட்டுவையைச் சேர்ந்த 31 அகவையுடைய பஸ்கிலால் அல்சிஸ்லல் சந்திரதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மொறட்டுவை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியில் இன்று சிறிலங்கா படைகளின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட இருவேறு கிளைமோர் தாக்குதல்களில் எட்டு அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். முதலாவது தாக்குதல் பகல் 1.50 மணியளவில் மூன்றுமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள பனங்காமம் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. உழவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் இச்சம்பவத்தின்போது உயிரிழந்தனர். உயிழந்தவர்கள் பார்த்தீபன்(18), சண்முகலிங்கம் தவராசா, செல்வரத்தினம் செந்தூரன், மற்றும் குணபாலசிங்கம் ஜெககீர்த்தன் ஆகியோரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருதோடைப்பகுதியில் இருந்து ஒலுமடு நோக்கி உழவூர்தியில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது இரவு 8.30 மணியளவில் இரண்டாவது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதும் நான்கு பொதுமக்கள் உயிரிழந்த…
-
- 8 replies
- 3.6k views
-
-
"விடுதலைமூச்சு" திரைப்படம் திரையிடத் தடை விதிக்குமாறு சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுதலைமூச்சு திரைப்படத்தைத் திரையிடுவதற்கு அனைத்துலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் அனைத்துலக ரீதியில் தங்களது பரப்புரைகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை செய்யுமாறு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், ஆகிய நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. நோர்வேயில் விடுதலைப் புலிகளை தடை செய்யாதபோது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் திரைப்படத்தை தடை செய்…
-
- 3 replies
- 2.2k views
-
-
கரந்தாய்குளம் மீது விமானக்குண்டுவீச்சு 2/28/2008 6:16:18 PM வீரகேசரி இணையம் - வன்னியில் பளை, கரந்தாய்குளம் பகுதி மீது இன்று விமானப்படையினரின் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று முற்பகல் 11.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் ஆட்லறி தாக்குதல்களை நடத்துவதற்கான கட்டளைகளைப் பிறப்பிக்கும் நிலையத்தின் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினராலும் தரைப்படையினராலும் இலக்கு வைக்கப்பட்ட பிரதேசத்தின் மீதே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது அந்நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படையினர…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் தகவல் கிடைத்துள்ளது என்கிறார் பிரிகேடியர் 2/27/2008 9:55:09 PM வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றார் என்று வன்னியிலிருந்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ; இலங்கை வான் படையினரால் புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளப்படுகின…
-
- 15 replies
- 3.9k views
-
-
சர்வதேச கருத்தியலை உள்வாங்கி தன்னை நெறிப்படுத்துமா கொழும்பு? 28.02.2008 ஆபத்துக்குள்ளான மக்களின் நிலைமை குறித்து சர்வதேச ரீதியில் ஆய்வு நடத்திவரும் லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் சிறுபான்மையினருக்கான உரிமைக்குழு, ஆசியப் பிராந்தியத்தில் மனித உரிமைகள் மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது என்பதை அடையாளம் கண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தானிலும், பர்மாவிலும் நிலைமை மிகமிக மோசம் எனத் தெரிவித்திருக்கும் அந்த அமைப்பு, புதுவருடத்துடன் இலங்கையில் நிலைமை கிடுகிடுவென சீரழிந்து மிகமிக மோசமான கட்டத்தை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 905 views
-
-
சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை [28 - February - 2008] உலகில் இன, மத சிறுபான்மை சமூகங்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இலங்கை இருக்கின்றது. அச்சுறுத்தலுக்குட்பட்டிருக
-
- 0 replies
- 969 views
-
-
13வது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் மஹிந்தவும் எதிர்கட்சி தலைவர் ரணிலும் இணக்கம் கண்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இருதரப்பும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமையவின் தலைவனும எம்.பியுமான எல்லாவெல மேத்தானந்த தேரோ தெரிவித்தார். இந்தியாவின் தீர்வு திட்டத்துக்கு அமைய இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துவது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. எமது பிரச்சினையை நாமே தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 13வது திருத்த்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க ரணில் இணங்கியுள்ளார். மஹிந்வுடனான சந்திப்பில் இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 775 views
-
-
வியாழன் 28-02-2008 02:40 மணி தமிழீழம் [மயூரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்து , ஒன்பது மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளனர். லெப. கேணல் தணிகைநிலவன் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி சுரேஸ்குமார், 2ஆம் லெப்ரினன்ட் வேழினி என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சந்தியாம்பிள்ளை தேவஜெனிற்றா ஆகிய இரு போராளிகளும், இராகவன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவசுந்தரம் இராகவன் என்ற போருதவிப் படை வீரரும், கடந்த 25ஆம் நாள் திங்கட்கிழமையன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர். லெப்ரினன்ட் குயிலன் என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பேரம்பலம் யோசப், லெப்ரினன்ட் வெற்றிமகன் …
-
- 11 replies
- 2.6k views
-