ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …
-
- 1 reply
- 1.2k views
-
-
பாலைமோட்டை மோதல்களில் 7 படையினர் பலி: 14 பேர் காயம் சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பாலைமோட்டை பகுதிநோக்கி கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின்போது 7 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சூனியப்பிரதேசத்தில் ஆரம்பித்த இம்மோதல்கள் மதியம் 2.30 மணிவரை நீடித்ததாகவும் தெரியவருகிறது. மோதல்கள் தீவிரமானதையடுத்து மேலதிக படையினர் சிறீலங்கா படையினர் அனுப்பி வைத்ததாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தகவலின்படி அப்பிரதேசத்தில் நான்கு படையினரது உடலங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை மீட்பதற்கு படையினர் கடும்பிரயத்தனங்களில் ஈட…
-
- 1 reply
- 1.3k views
-
-
மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
சிறிலங்காவில் 3,500 புதிய ஊர்காவற் படையினரை சேர்க்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
தாயகத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தவித்து, இன்று உயிர் வாழும் இளம் பிஞ்சுக் குழந்தைகளினதும் , யுத்தத்தின் கோரத்தால் உறவுகளை இழந்து , அந்த வேதனையில் வாழும் மழலை செல்வங்களினதும், உயர்வுக்காக கரம் கொடுத்து நிற்கும் சுவிஸ் சிறுவர் சுனாமி நிறுவனம், எதிர்வரும் 2008 டிசம்பர் 6ம் திகதி நடத்தவிருக்கும், மாறாத வடுக்களின் மறையாத சந்திப்பு தொடர்பான ஆரம்ப பணிகள் மற்றும் ஒழுங்குகளை முடித்து விட்ட நிலையில் , தற்போது ஐரோப்பா வாழ் பாடக - பாடகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி, சுவிஸ் , தூண் மாநகரில் நடைபெற இருக்கும் இந் நிகழ்வு மிக வித்தியாசமாக அமையும் என ஒருங்கமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். சுனாமி சிற…
-
- 0 replies
- 895 views
-
-
தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகிறோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. சிறிலங்காவின் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும் மின்விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டினுள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார…
-
- 9 replies
- 1.9k views
-
-
தண்ணீருக்கான யுத்தம் -மு.தமிழ்ச்செல்வன்- முன்னைய காலங்களில் யுத்தங்கள் எல்லாம் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலே இடம்பெற்றுள்ளன. வலுமிக்க நாடுகள் வளம் உள்ள வலுவற்ற நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டின. இதனால் ஏற்பட்ட காலனியாதிக்க போட்டிகள் நாடுகளிடையே போர்களாகவும் மாறியது. கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இயந்திர சாதனங்களின் பாவனை அதிகரிக்க உலகின் இயங்கு சக்திக்கு கனியவளம் இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. இதனால் கனியவளம் உள்ள நாடுகளை வல்லரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி களத்தில் இறங்க கனிய வளமிக்க நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏனைய நாடுகளுடன் அணிசேர்ந் தன. இதன் போதும் நாடுகளிடையே முறுகல் நிலை தோன்றியது…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 921 views
-
-
மன்னாரில் 2 படையினர் பலி – ஏழு பேர் காயம் மன்னார் பாலைக்குழியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று நண்பகல் 12.10 அளவில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலில் படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். தமது தரப்பில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை எனவும், விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 994 views
-
-
சிங்கள அரசின் நாடாளுமன்ற அமைச்சர் கலாநிதி மேவின் சில்வா தனது அமைச்சர் பதவியுடன் நாடளுமன்ற அங்கத்தவர் பதவியையும் இராஜீனாமச் செய்ய உத்தேசித்துள்ளதாக தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இவர் தனது பேச்சினாலும் செயல்களினாலும் பயங்கரவாதத்தை அப்பாவிகளின் மேல் கட்டவிழ்த்து விட்டதனால் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் அடிபட்டவர். தனது குண்டர்படையுடன் பல ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாகினி தொலைக்காட்சியகத்துள் நுழைந்து செய்திப்பணிப்பளரைத் தாக்கி காயப்படுத்தியதுடன் அங்கு பணிபுரிந்தவர்களால் நையப்புடைக்கபட்டு பொலிஸாரின் துணையுடன் தப்பி வந்தது யாவரும் அறிந்ததே. இவரது செயல்கள் பல ஊடக தனிப்பட்ட அமைப்புக்கள் கண்டித்திருந்தன. அரசி…
-
- 7 replies
- 1.9k views
-
-
இலங்கையில் பொருளாதார, இராணுவ நலன்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க, இந்திய செயற்பாடுகள் [16 - February - 2008] காலகண்டன் கடந்த நூற்றாண்டில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இன முரண்பாடாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இதற்குப் பிரித்தானிய கொலனித்துவ வாதிகள் தமக்கே உரித்தான பிரித்தாளும் நரிக்குண பங்களிப்பை வழங்கிச் சென்றனர். அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலத்தில் அதே தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக வளர்த்தெடுத்து இரத்த ஆறு ஓடச் செய்ததிலும் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இருந்து வந்தபங்கையும் பணியையும் எவரும் நிராகரித்துவிட முடியாது. தத்தமது அக்கறைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டு வந்த இவ் அந்நியத் தலையீடு என்பது …
-
- 0 replies
- 1k views
-
-
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்? [16 - February - 2008] *பழ.நெடுமாறன் கேள்வி சென்னை: பலஸ்தீன மக்களுக்கு உதவ துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்தப் போக்கை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், அந்த மக்களுக்கு உணவு மற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ [16 - February - 2008] * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார். கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொ…
-
- 11 replies
- 3.1k views
-
-
கொழும்புக்கு வந்த புகையிரதங்கள் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனை 2/16/2008 11:29:22 AM வீரகேசரி இணையம் - வெளிமாவட்டங்களிலிருந்து நேற்றுக்காலை கொழும்பு நோக்கி வந்த சில புகையிரதங்கள் இடைவழியில் மறிக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை வேளையிலேயே கண்டி மற்றும் அதனை அண்டிய நகரங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வந்துகொண்டிருந்த பயணிகள் புகையிரதங்கள் ஒருசில புகையிரத தரிப்பிடங்களை அண்மித்த இடங்களில் நிறுத்தப்பட்டு படையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அம்பேபுஸ்ஸவை அண்டிய பகுதிகளிலேயே வழமைக்கு மாறாக புகையிரதங்கள் இடை நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் புகையிரதத்திலிருந்து இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை அரசும் படைத்தரப்பும் கூறுவது போல வடக்கில் தங்களுக்கு எதுவித இராணுவ அழுத்தங்கள் இல்லையெனவும் விரைவில் அவர்கள் உண்மை நிலையை உணருவார்களெனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தினக்குரலுக்கு மேலும் கூறுகையில் : வடக்கில் பல்பேவறு முனைகளிலும் தினமும் படையினர் முன்னேறுவது போன்றதோரு தோற்றப்பாட்டை உருவாக்க அரசும் படைத்தரப்பும் முனைகின்றனர். ஆனால், உண்மையில் களநிலை அவ்வாறில்லை. களமுனையிலுள்ள படையினருக்கு இது நன்கு தெரியும். தினமும் அவர்கள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். கொல்லப்படும் படையினரின் உடல்கனளைக் கூட அந்தந்தப் பகுதியிலேயே புதைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. வடக்கில…
-
- 1 reply
- 2.4k views
-
-
வவுனியா, மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கு அவசரமாக 11 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
பெப்ரவரி 14ம் திகதி வெலண்டைன் புனிதரை நினைவுகூறும் வகையிலேயே அமைந்துள்ளது. இன்று (பெப்ரவரி14) பௌத்த பிக்குகள், அறநெறிப் பாடசாலை மாணவியர் மற்றும் பெரியோர் விஹாரமாதேவி பூங்காவில் அமைந்துள்ள புத்த சிலைக்கு முன்பாக கூடினர். காதலர்கள் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இராணுவ வீரர்கள் மீது அன்பு செலுத்துவதற்குமே இவர்கள் கூடியிருந்தனர். தேசிய சங்க சம்மேளனத்தினால் 'அமா வஸ்ஸ' என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கி.பி. 270 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த வெலண்டைன் என்ற கிறிஸ்தவ மதகுரு, அக்காலத்தில் காலத்தில் திருமணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி தமது தேவாலயத்தில் பலரை திருமண பந்தத்தில் இணைத்திருந்தார். இதனை அறி…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான் தி.மு.க.வின் அனல் மனிதர் வெற்றிகொண்டான். பேசத் துவங்கினால் கனல் வந்து விழுகிறது. ஆவேசமாய்ப் பேசினாலும் ஆதாரங்களுடன் பேசுகிறார், குத்தல், நக்கல், கிண்டல், கேலி கலந்து. தமிழக அரசியலில் நிலவும் ஒரு பரபரப்பான சூழலில் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்திருக்கிறதே? ‘‘தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றாலும் சரி, ஊடுருவினாலும் சரி, அதை உடனே தனது உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்தியஅரசு. அவர்களையும் மீறி யாரும் இந்தியாவில் நுழ…
-
- 2 replies
- 2.8k views
-
-
ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி....? http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._jvp_ltte.shtml
-
- 5 replies
- 3.1k views
-
-
காங், பாமகவுக்கு திமுக 'எச்சரிக்கை' வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 சென்னை: கூட்டணிக்குள் இருந்து கொண்டே, கூட்டணி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் உயர் மட்டக் குழுவான தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து காரசாராமாக விவாதிக்கப்பட்டன. குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாமகவுக்கு 'எச்சரிக்கை' விடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த எச…
-
- 0 replies
- 2.6k views
-
-
வட மாகணத்து ஆளுனராக ஈனப்பிறவி ஆனந்த சங்கரி... இந்த பிறவி யை தான் வடமாகணத்து ஆளுநராக போட போகினமாம்
-
- 22 replies
- 4.1k views
-
-
இணைந்த கடற் கண்காணிப்பிற்கு இந்தியா அழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்த கடற் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த ஒத்துழைக்குமாறு அயல் நாடுகளிடம் இந்தியா அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தியாவில் இடம்பெற்றுவரும் கடற் கண்காணிப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா இந்த அழைப்பினை விடுத்திருப்பதாக றொயிற்றர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தியா, சிறீலங்கா, அவுஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் கடற்படைத் தளபதிகள் 26 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதுடன், மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை ஆரம்பித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதத்தை ஒழித்து, ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 1.2k views
-
-
இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றால் போர்நிறுத்தத்திலிருந்து விலகியது ஏன்? சிவாஜிலிங்கம் எம்.பி. கேட்கிறார் [Friday February 15 2008 06:28:35 AM GMT] [யாழினி] இலங்கையில் இராணுவத் தீர்வு சாத் தியமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். அவ்வாறெனில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியது ஏன்? இலங்கை அரசின் இரட்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இங்கு வைத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதென்ற இலங்கை அரசின் கருத்துத் தமது சொந்த நாட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
3 இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. [Friday February 15 2008 02:40:42 PM GMT] [யாழ் வாணன்] இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லியான் (வயது 25), சுனில் செல்வம் (வயது 20), நாகராஜ் (வயது 25), தினேஷ் (வயது 26), முத்துக்குமரன் (வயது 22) ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களது படகின் இயந்திரம் திடீரென பழுதானதால், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தினேஷ், முத்துக்குமரன் ஆகிய இருவர் மட்ட…
-
- 0 replies
- 940 views
-