Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவ்வாய் 19-02-2008 01:07 மணி தமிழீழம் [தாயகன்] மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவலம் சிறீலங்காப் படையினரின் படை நடவடிக்கை காரணமாக மன்னாரிலிருந்து கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மடு, மாந்தை மேற்குப் பிரதேசங்களிலிருந்து 918ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், இவர்களுக்கான உலர் உணவுப் பொருள்கள் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு உலர் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ள சிறீலங்காப் படையினர், கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கு இரண்டு மா…

  2. மன்னாரில் மும்முனைகளில் படையினர் முன்நகர்வுத் தாக்குதல்கள் [திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2008, 06:24 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் மும்முனைகளில் இன்று அதிகாலை முதல் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுக்கரை, பாலைக்குழி, உயிலங்குளம் ஆகிய பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுகளுடனும், டாங்கி மற்றும் வான் தாக்குதல்கள் சகிதம் படையினர் பாரிய முன்நகர்வுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இம் மும்முனை நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். புதினம்

  3. ஆயுதங்களுடன் சிங்களவர் மூவர் கைது வெலிகந்தையில் சம்பவம் 2/18/2008 6:23:20 PM வீரகேசரி இணையம் - பொலன்னறுவை வெலிகந்தை பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை வைத்திருந்த மூன்று சிங்களவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள் ளனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இவர்கள் வெலிகந்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதுடன் கூலித்தொழில் செய்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது : கொலகனவாடிய செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமகேலாகே தர்மசேன எனும் தர்மே (27வயது), மஹாவௌ செவனபிட்டியவைச் சேர்ந்த முதுகமலாகே ரஞ்சித் (31 வயது)…

  4. கொழும்பில் வங்கிக் கணக்கொன்றை திறப்பதாயின் பொலிஸ் பதிவு அவசியம். 18.02.2008 / நிருபர் எல்லாளன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள வங்கிகளில் கணக்கொன்றை திறப்பதாயின் அதற்கு வங்கிகளில் பொலிஸ் பதிவு கோரப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் கொழும்பிலுள்ள தனியார் வங்கிகளில் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கு சில தனியார் வங்கிகள் பொலிஸ் பதிவுக்கான அத்தாட்சிகளைக் கோருவதாகத் தெரியவருகிறது. கொழும்பிலுள்ள சில தனியார் வங்கிகளின் முகாமைத்துவம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் மாத்திரம் பொலிஸ் பதிவுப் பிரதிகளைக் கோருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரணமாக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்குக் கோரும் ஆவணங்களுடன், யாழ்ப்பாணத்தைச் …

  5. Sunday, 17 February 2008 இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்வதற்காக போட்ட ஒரு சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களில் 10 தமிழரும் 4 சிங்களவர்களும் அடங்குவர். சிங்களவரில் ஒருவர் ஜனாதிபதியின் ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகும். அடுத்த மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள். அடுத்தவர் ஒரு பெளத்த துறவியாகும். மேலதிக தகவல்கள்

  6. குற்ற உணர்வு ஏதுமற்ற ராஜபக்ச சகோதரர்கள் -வேலவன்- முன்னாள் சனாதிபதி பிரேமதாசா ஒருமுறை 'மகாத்மா காந்தி எனது ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான பழியையும் என்மீதே சுமத்தியிருப்பர்" என்று கூறினார். உண்மையில் அவர் இதனை மனப்பூர்வமாகக் கவலையுடன் தெரிவித்தாரா? அல்லது அவ்வாறு கவலைப்படுவதாக நடித்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவ்வாறு வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மகிந்த ஆட்சியும் இன்று அவ்வாறுதான் இருக்கின்றது. அதாவது பிரேமதாச காலத்து மனித உரிமை மீறல்களை அன்று உலகிற்கு வெளிப்படுத்திய மகிந்தவின் ஆட்சியும் அந்த நிலையை அடைந்துள்ள போதும் இது குறித்த உணர்வுகள் எதுவும் மகிந்த ஆட்சியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பி…

  7. அம்பாறையில் அங்கிலிக்கன் மதகுரு சுட்டுக்கொலை: மனைவியும் மகனும் காயம் அம்பாறையில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் அங்கிலிக்கன் மதகுரு ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

    • 2 replies
    • 1.7k views
  8. வவுனியா தோணிக்கல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கி முனையில் குடும்பம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்டபோது அவர்களிடம் இருந்த துப்பாக்கியைக் குடும்ப அங்கத்தவர்கள் பறித்தெடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்? -சண். தவராஜா- ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவரைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிட்டியது. கதைக்கும் போது கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா பற்றியும் அங்கு தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அக்கறை பற்றியும் விவாதித்தோம். 'மூன்று தசாப்த காலமாக தமிழர் தாயகத்தில் நடக்கும் யுத்தம், அதில் சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டமை, தமிழ் இனத்தின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு வீதத்தினர் அகதிகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பது, இந்நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் காட்டாத கரிசனையை சர்வதேச சமூகம் கென்யா விவகாரத்தில் காட்டுகின்றது. அங்கு இதுவரை சுமார் 700 வரையான பொதுமக்கள…

  10. எஸ்.ஆர். லெம்பேட் - மன்னார் தள்ளாடி படை முகாம் மீது இன்று திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர் . இச்சம்பவம் காலை 9.30 மணியளவில் இடம் பெற்றது . விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் இரண்டிற்கு மேற்பட்ட குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளது . இதன் போது 02 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . இவர்கள் உலங்கு வானுர்த்தி மூலம் அனுராத புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் . இதனைத் தொடர்ந்து மன்னார் மதவாச்சி பிரதான பாதையுடனான போக்குவரத்து 1 மணி நேரம் தடை செய்யப்பட்டு பின் போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டது நன்றி : வீரகேசரி இணையம்

  11. அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதரகத்தின் உயர் பொறுப்பில் சர்ச்சைக்குரிய அலிசாஹீர் மௌலானாவை மகிந்த ராஜபக்ச அரசு நியமித்தமை குறித்து அமெரிக்க அரசாங்கம் கடும் அதிருப்தியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  12. தள்ளாடி புனித அந்தோனயார் ஆலயம் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் அதுபற்றி கத்தோலிக்ககுருமார் கண்டன அறிக்கை வெசளியிடவில்லையென ஆளும் கட்சியின் பிரதான கொரடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த காலங்களில் கத்தோலிக்க ஆலயங்களுக்கருகில் எத்தகைய சிறு சம்பவங்கள் நடந்தாலும் அதுபற்றி ஆயர்க்ள அறிக்கi வெளியிடுவார்கள். ரோமன் கத்தோலக்க திருச்சபைக்கும் இது பற்றி அறிவிப்பார்க்ள. கத்தோலிக்க திருவச்சபையின் சார்பினல் அல்லது பாப்பரசா சார்பில் இச்சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவிததோ, கண்டனம் தெரிவித்தோ எத்தகைய அறிக்கையும் வெளியிடப்படவில்லை. தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயத்தை புலிகள் தாகக…

  13. விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யும் சிங்களவர்கள் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும் [18 - February - 2008] * அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து செயற்படும் பொலிஸாரும், படை அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். புத்தளம் கச்சேரியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; `இரத்தினபுரிப்பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் விடுதலைப்புலிகளுக்கு சிங்கள மக்களே உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது விடுதலைப…

  14. இலங்கையில் "தனியான தமிழர் தாயகம்' ஒன்று வரலாற்றில் என்றுமே இருந்ததேயில்லையாம்! அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் அங்கு விளக்கம் இலங்கை பிளவுபடாத ஒரு தேசமாக விளங்குவதற்கான சக்தியை அமெரிக்கா வழங்கவேண்டுமென அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார். "வாஷிங்டன் டைம்ஸ்' இதழில் ஞாயிற்றுக்கிழமை தாம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான தனது முயற்சிக்காக புதிய பகுதிகளை தேடிக்கொண்டிருக்கையில், இலங்கை போன்ற பிரதேசங்களில் ஜனநாயகங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஜனநாயக எதிர்ப்பு சக்திகள் குறித்து அது விழிப்புடனிருக்கவேண்டுமென பேர்னாட் குணதிலக தெரிவித்துள்ளார். இலங்கையின் மோதல்…

  15. ஆயிரத்தில் ஒருவன் ஐயா நீ! தமிழருக்காகக் குரல் கொடுக்கும் சிங்களர் (உங்களில் பலர் டாக்டா பிரயன் செனிவிரத்தின பற்றி அறிந்திருக்கக் கூடும். ஈழத்தமிழர் உரிமைக்காக உலகம் முழுவதும் சென்று பேசியும் எழுதியும் வரும் இவர் ஒரு சிங்கள மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களுடைய போராட்டத் தையும் அதில் இருக்கும் நியாயத்தையும், தமிழ் மக்கள் படும் அவலங்களையும் உலக அரஙகில் எடுத்துச்சொல்லி இலங்கை அரசாங்கத்தைத் தலைகுனிய வைப்பதுடன் தமிழ் மக்கள் மீது கட்ட விழ்த்துப் விடப்பட்டிருக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றித் தன் சொந்த செலவில் குறுவட்டுக்கள், துண்டுப் பிரசுரங்கள் முதலியவற்றைப் பிரசுரித்து இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட தமிழ்மகனும செய்திருக்காத ஒருபெரும் விழிப்புணர்வை உல…

  16. தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.6k views
  17. பாரிய நெருக்கடிக்குள் படை நகர்வுகள் -விதுரன்- வன்னிக்கள முனையில் கடந்த சில தினங்களாக மோதல்கள் சற்றுத் தணிந்துள்ளன. எதிர்பார்த்தபடி முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் விடுதலைப் புலிகளின் கடுமையான பதில் தாக்குதல்களால் படையினர் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையிலும் வன்னிக்கள முனையில் பாரிய முன்நகர்வு முயற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலை படையினருக்கு ஏற்பட்டுள்ளது. வன்னிக்கள முனையில் பாரிய அளவில் படைநகர்வு, சிறு சிறு குழுக்களாகச் சென்று தாக்குவதென்று படையினர் தங்கள் தந்திரோபாயங்களையும், உத்திகளையும் மாற்றி மாற்றி அமைக்கின்றபோதும் விடுதலைப் புலிகளும் அதனை மிக நுட்பமாக எதிர்கொண்டு அவர்களது தந்திரோபாயங்களுக்கும், உத்திகளுக்கும் பதிலடி கொடுக்கின்றனர். இது படை…

  18. ஞாயிறு 17-02-2008 16:05 மணி தமிழீழம் [தாயகன்] கொழும்பில் மூன்று தமிழர்கள் கடத்தல் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மூன்று தமிழர்கள் இனம் தெரியத நபர்களால் கைது செய்யப்பட்டிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. தெஹிவளையில் இருவரும், கிறான்பாஸ் பகுதியில் மற்றொருவருமாக நேற்றிரவு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு சிறீலங்கா காவல்துறையினர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  19. விடுதலைப்புலிகளின் பலம் குறித்து முரண்பாடான பிரசாரங்கள் 2/17/2008 9:57:14 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் குறித்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ போன்றோரும் அண்மையில் ஊடகங்களுக்கு தீவிரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் விடுதலைப் புலிகள் பாரியவலிந்த தாக்குதல்களைத்தவிர்த்து வருவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, புலிகளை அழிப்பது தொடர்பான காலக்கெடுக்களும் இவர்களால் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கெடுவை விதிப்பது ஒருபுறம் நிகழ, இன்னொரு புறத்தில் முன்னுக்குப்பின் மு…

  20. சுமார் ரூ.10 கோடி பெறுமதிக்கு ஆறாயிரம் கிலோ எடையில் நடமாடும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் புலிகளுக்காக செஞ். குழுவினர் தருவிப்பாம்! "அரச படைகளினால் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு என்ற பெயரில், நடமாடும் சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கான சுமார் பத்துக்கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ளன. ""ஆனால் இவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை.'' இப்படி சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று அவரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. சுமார் ஆறாயிரம் கிலோ எடை கொண்ட இந்த உப…

    • 1 reply
    • 1.3k views
  21. அடம்பனுக்காக உக்கிர மோதல் 2/17/2008 10:05:13 AM வீரகேசரி வாரவெளியீடு - மன்னார் களமுனையில் அடம்பன் நகரைப் படையினர் கைப்பற்றி விட்டதாகப் பலமுறை செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பின்னர் அடம்பன் சந்திக்கு தெற்கே 1.கி.மீ தொலைவில் படையினர் நிலை கொண்டிருப்பதாகவும், மேற்கே 800 மீற்றர்வரை முன்னேறியிருப்ப தாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அடம்பன் களமுனையின் முக்கியத்துவம், அதன் இன்றையநிலை என்பனவற்றை இந்த வாரம் எடுத்து நோக்குவது பொருத்தமானது. சிலர் கூறுவதைப் போன்று அடம்பன் ஒன்றும் பெரியநகரம் சார்ந்த பகுதியல்ல. இங்கு இருக்கின்ற ஒரேயொரு பெரியவிடயம் அடம்பன் தள வைத்தியசாலையாகும். மிக அண்மையில்தான் தொண்டர் நிறுவன உதவி யுடன் இது புனரமைக்கப்பட்டது. மன்னாரின் ம…

    • 3 replies
    • 2.8k views
  22. அனைத்துலக மன்னிப்புச் சபை பக்கசார்பாக நடந்து வருவதாக சிறீலங்கா அரச கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையையும், அதனது பொதுச் செயலாளர் ஐறின் கானையும் வன்மையாகக் கண்டித்த சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, மன்னிப்புச் சபையின் பக்கசார்பான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதேபோன்ற கருத்தினை நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற உலகின் முன்னணி அமைப்புகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால், ஆத்திரமடைந்த …

  23. திங்கள் 18-02-2008 02:00 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியா முன்னரங்க நிலைகள் மீது தாக்குதல் : ஒரு படையினர் பலி: இருவர் காயம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் வவுனியா நாவற்குளம் சிறீலங்கா படையினரது முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இதன்போது ஒருபடையினர் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை பாலமோட்டை பகுதியில் இரவு முதல் ஞாயிறு காலை 10 மணிவரை கடும் எறிகணை தாக்குதல்கள் இருபகுதிகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. ஞாயிறு 17-02-2008 16:00 மணி தமிழீழம் [தாயகன்] கைக்குண்டு வெடித்ததில் படை உறுப்பினர் பலி யாழ் வடமராட்சி முள்ளியில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் காவலரணில்; இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பில் சிறீலங்காப் படை உறுப்பினர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 35 அகவையுடைய ஜயந்த காமினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்ற பருத்தித்துறை சிறீலங்கா நீதியாளர் கே. அரியநாயம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பிட்ட படை உறுப்பினர் பணி நேரத்தில் நித்திரை செய்தபோது கைக்குண்டு தவறுதலாக வெடித்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. கைக்குண்டு வெடிப்பைத் த…

  25. -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.