Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் பேரழிவுக்கு சாட்சியம் இல்லாமல் செய்யவே கண்காணிப்புக் குழு வெளியேற்றப்படுகிறதுஅரசின் உள்நோக்கத்தை அம்பலமாக்குகிறார் கஜேந்திரகுமார் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பது என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது தான் கட்டவிழ்த்துவிடப்போகின்ற பேரழிவிற்கு சாட்சியங்கள் எவையுமிருப்பதை அரசு விரும்பவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இதன் காரணமாகவே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். "தமிழ்நெற்' இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள ஒரு செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கை அரசு யுத்தநிறுத்த உடன்படிக்கையிலி…

    • 0 replies
    • 900 views
  2. த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மோதிக் கொள்ள அங்கு முஷ்டியை முறுக்கிக் கொண்டு கோதாவில் இறங்கினா. சமூக சேவைகள் அமைச்சன் டக்ளசு தேவானந்தா. 'தைரியமிருந்தால் கீழே இறங்கிவா" எனச் சபை நடுவில் நின்று அவ. மேலும் சாவால் விடுத்தா.. இப்படியான ஒருசம்பவம் நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது. அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதம் இடம் பெற்ற போதே இச்சம்பவம் இடம் பெற்றது. சபை நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்தன த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் அரியநேத்திரவைப் பேசும்படி அழைத்தார். அரியநேத்திரன் தனது உரையின் ஆரம்பத்திலேயே மகேஸ்வரனின் …

    • 0 replies
    • 2.9k views
  3. கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களால் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பை அச்சம் சூழ்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  4. கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைக் காரியாலயத்தின் முன் சற்றுமுன்னர் ஒரு குண்டு வெடித்துள்ளது. விபரங்கள் தொடரும் ஜானா

    • 14 replies
    • 3.6k views
  5. மன்னாரில் மோதல் 14 படையினர் பலி : 40 பேர் காயம் செவ்வாய்கிழமை (08-01-08) காலை மன்னார் முள்ளிக்குளம் பகுதியுயூடாக மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி கடுமையான 3 மணிநேர சமரையடுத்து விடுதலைப்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இம் மோதலின்போது 14 படையினர் கொல்லப்பட்டும் 40 படையினர் காயமடைந்தள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இம்மோதலின்போது கடுமையான பல்குழல் எறிகணை வீச்சுகளையும் ஆட்டிலறி சூட்டாதரவையும் கிபிர் விமானங்களின் துணையையும் சிறீலங்கா படையினர் உபயோகித்து முன்னேற்ற ம…

    • 1 reply
    • 1.8k views
  6. சர்வதேசத்திற்கு பேரிடியான அரசாங்கத்தின் அறிவிப்பு -அருஸ் (வேல்ஸ்)- இலங்கைத்தீவில் முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இனப்போர் மிகவும் உக்கிரமான கட்டத்தை அடைந்த போது நோர்வே நாடு அமைதியை நிலைநாட்டவென களமிறங்கியது. இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிநிச்சயம் என்ற மிகப்பெரிய படை நடவடிக்கை தோல்வி கண்ட பின்னர், வடக்கில் இராணுவத்தின் பலமிக்க தளமான ஆனையிறவு படைத்தளத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சிக்கே நோர்வே அனுசரணை வழங்கியது. ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சியுடன் அந்தத் தளத்தின் பிரதான படையணியான 54 ஆவது படையணி கலைக்கப்பட்ட பின்னர், 55 மற்றும் 53 ஆவது படையணிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தீச்சுவாலை படை நடவடிக்கை மிகப்பெரு…

    • 3 replies
    • 1.8k views
  7. சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.7k views
  8. செவ்வாய் 08-01-2008 18:58 மணி தமிழீழம் [தாயகன்] திருமலையில் கடற்படை - புலிகள் மோதல் திருகோணமலை உப்பாறு, பேராறு பகுதிகளில் சிறீலங்கா கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேடுதலில் ஈடுபட்ட கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 3 replies
    • 2.6k views
  9. திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு மூன்று தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 749 views
  10. மட்டக்களப்பு மகிழூர்ப் பகுதியின் ஆற்றங்கரையோரத்திலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 732 views
  11. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  12. தமது அச்சுறுத்தலுக்கு அடங்காது தொடர்ந்து செய்ற்பட்டு வரும் மகேஸ்வரன் எம்.பி. யைக் கொன்று, அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி மீது சுமத்தி அதன் மீது கறைபூசி, 'ஒரு கல்லில் இருகனி பறிக்கும் செயலில்' ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைப் புலிகள். இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி) இது தொடர்பான அக்கட்சியின் ஊடகப் பிரிவு நேற்று 'அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்ககையிலேயே இவ்விடயம் தெரிவிக்கபட்டுள்ளது. முழு அறிக்கை :- 'உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் நீ கருதுச் சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும…

    • 9 replies
    • 3.1k views
  13. மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத் தலைவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சந்திவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் நந்தகுமார் (வயது 31) என்று அழைக்கப்படும் தொண்டர் ஆசிரியரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை சந்திவெளிப் பிரதேசத்தில் இவர் நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று இரவு இவர் நிற்கும் வேளையில் இவரைத் தேடிச்சென்ற அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல வருட காலமாக தொண்டர் ஆசிரி…

  14. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  15. செவ்வாய் 08-01-2008 15:34 மணி தமிழீழம் [தாயகன்] மருதானையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம் கொழும்பு மருதானையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மருதானை தொழில்நுட்ப சந்தியில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இது பாதாள உலகக்குழு மோதலாக இருப்பலாம் எனவும், சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  16. 06.01.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....e599c2a9c9d0bbd

  17. சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்களினால் பூநகரிப் பிரதேச நடமாடும் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 940 views
  18. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபீக் ரஜாப்டீன் பதவி பிரமாணம் 1/8/2008 1:27:39 PM வீரகேசரி இணையம் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் பாராளும்னற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின், இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று காலை கூடியபோது சபீக் ரஜாப்டீன் சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்துக்கொண்டதன் பின்னர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  19. Posted on : 2008-01-08 வலைப்பொறி விரித்தமையை ஒப்புக்கொள்கின்றார் ரணில் ""சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளைக் கட்டுப்படுத்தி, அமுக்கும் தனது அந்தரங்கத் திட்டத்தையே "சர்வதேசப் பாதுகாப்பு வலைப் பின்னல்' என ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். சமாதானத்தின் பெயரால், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன், விக்கிரமசிங்க அரசு விரித்துவைத்த அரசு வலைப்பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில் எமது இயக்கத் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. அதேவேளை, சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் வெற்றிகண்டோம்.' நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் பற்றிய தமது மதிப்பாய்வின் முடிவிலே இவ்வாறு குறிப்ப…

  20. படையினரின் ஆளணிப் பற்றாக்குறை: கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வு மட்டக்களப்பிலிருந்து சிறீலங்காப் படையினர் வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாக மட்டக்களப்பு குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்காச் சிறப்பு அதிரடிப்படையினர் வட பகுதி நோக்கி நகர்த்தப்படுகின்றனர். இதனால் மட்டக்களப்பில் உள்ள பாதுகாப்பு சிவில் அலுவலகர்கள் மற்றும் சாதாரண காவல்துறையினருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் சீருடைகள் வழங்கப்பட்டு, சிறப்பு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ள தோற்றப்பாட்டை சிறீலங்கா படையினர் ஏற்படுத்தி வருகின்றனர். சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்பில் இயங்கிவரும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழு மற்றும் கருணா குழுவின் நடமாட்டங்களும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்…

  21. விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா? கடந்த 18.12.2007 அன்று விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருந்து. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி அந்த அறிக்கையை தயாரித்திருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்து வரையப்பட்டிருந்த அந்த அறிக்கையில், யாழ் குடாவில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் அடைத்து கொடுமைப்படுத்தி வருவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிற்பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடிவைத்துள்ளதானது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ஒரு செயல் என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. யாழ் குடாவில் உள்ள மக்களின் மோசமான மனிதாபிமான …

  22. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. தொடர் தாக்குதல்களை நடத்தி அதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்குவதே சிறிலங்காப் படையினரின் உத்தி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  24. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயற்பட துணை இராணுவக் குழுக்கள் முயற்சித்த போதும் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து அங்குள்ள துணை இராணுவக்குழுக்கள் இரண்டாகப் பிளந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.3k views
  25. இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.