Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அனுராதபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா வான் படையின் 18 வானூர்திகள் அழிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ 6.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன விவரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.8k views
  2. அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளில் 20 மாவீரர்களின் வித்துடல்களை புதைத்து விட்டதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 3k views
  3. புலிகளை முற்றாக தோற்கடிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் நாட்டை முற்றாக அழித்துவிடக் கூடாது - வ. திருநாவுக்கரசு * இந்தியாவை போற்றிப் புகழும் ஆட்சியாளர் `வேற்றுமையில் ஒற்றுமை' காணும் அந்நாட்டின் முன்னுதாரணத்தை பின்பற்ற மறுப்பது மட்டும் ஏன்? கிழக்கு கைப்பற்றப்பட்டது போல், வடக்கையும் கைப்பற்றுவோம். கிழக்கு மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது போல, வடக்கிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், இவ்வாறாகவே அரச தரப்பு உயர் மட்டத்தினர் அண்மைக் காலமாக மார்தட்டி வந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் 3 ஆயுதக் கப்பல்களை தாக்கி அழித்து விட்டதாகப் பறைசாற்றி திருகோணமலை கடற்படைத்தளத்தில் கொண்டாட்டம் நடத்தப்பட்ட …

  4. அனுராதபுரம் வான் படைத்தாக்குதலை "தாம் வன்மையாக கண்டிப்பதாக" வீ.அனந்தசங்கரி கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 12 replies
    • 3.8k views
  5. சிறிலங்கா வான் படையினரால் வான் படைத்தளங்களைப் பாதுகாக்க இயலாமையால் அப்பொறுப்பு சிறிலங்காவின் தரைப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  6. ராடர் மூலம் வழிப்படுத்தப்படுகின்ற ஏவுகணைகளை சுவீகரிக்க முயற்சி? தமிழர் தாயகத்தின் வடபகுதி மீது தான் மேற்கொள்ளும் பெரும் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அநுராதபுரம் விமானத் தளத்தையே தனது முக்கிய விநியோக மையமாக அரசுப் படைகள் பயன்படுத்தி வருகின்றன. முழு சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தளத்தின் மீது ஊடுருவி இரு முனைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள். இந்த "எல்லாளன் நடவடிக்கை' மூலம் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கும் செய்தியை தகவலை இலங்கை அரசுத் தரப்பு புரிந்து கொள்ளுமா என்பதே கேள்வி. "விமான எதிர்ப்புப் பொறிமுறையை வசமாக விரித்துவிட்டோம். இனிப் புலிகள் வான் தாக்குதல் நடத்தவே முடியாது ' என அரச உயர்மட்டம் வரை மார்தட்டிக் கூறப்பட்டது. …

    • 3 replies
    • 3.2k views
  7. டக்ளஸை நோக்கிப் புத்தகங்களை வீசி எறிந்தார் சிவாஜிலிங்கம் எம்.பி. நாடாளுமன்றில் நேற்றுத் தன்னைப் பேசவிடாமல் தொடர்ந்தும் இடையூறு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் புத்தகங்களையும் பைல்களையும் அள்ளிவீசினார். அதேநேரம் டக்ளஸூக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. சிவாஜி லிங்கம் பேசி முடிக்கும் வரைக்கும் இந்த வாக்குவாதம் தொடர்ந்தது. நாடாளுமன்றில் நேற்று உள்ளூராட் சித் தேர்தல் திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் மா…

  8. உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தியது யார்?: குழப்பத்தில் சிறிலங்கா படைத்தரப்பு [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 06:02 AM ஈழம்] [அ.அருணாசலம்] அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலின் போது வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட பெல்-212 ரக உலங்குவானூர்தியை படையினரா அல்லது விடுதலைப் புலிகளா சுட்டு வீழ்த்தியது என்ற குழப்பம் தோன்றியுள்ளதாக என்று கொழும்வு ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  9. அநுராதபுர வான் படைத்தள தாக்குதலானது புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல்: பி.இராமன் [புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2007, 07:18 AM ஈழம்] [காவலூர் கவிதன்] அநுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளின் துல்லியமும், துணிவும் நிறைந்த செயல் என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் பி.இராமன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

    • 3 replies
    • 2.3k views
  10. எங்களுடைய தமிழ் மண்ணில் மானமுள்ள ஒரு தமிழன் இருக்கும் வரை சிங்களப் பேரினவாதிகளுக்கு அடிமையாக மாட்டோம். பதவிக்கும் பகட்டிற்கும் சோரம் போகவும் மாட்டோம். இவ்வாறு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் சூழுரைத்தார். உள்ளுராட்சி சபை தேர்தல்கள் திருத்தச் சட்ட வரைவு தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். மாவை தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் கூறியதாவது:- நாட்டில் அமைதி இல்லை. பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. யுத்த சூழ்நிலையில் தேர்தல் நடத்த முடியாது.தேர்தல்கள் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையாளர் கூறியதை தொடர்ந்தே உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டன. அப்படியானால் இப்போழு…

  11. இரு விமானங்கள் வீட்டுக்கு மேலாக சென்று முகாம் மீது இரு தீப்பந்தங்களை போட்டன நேரில் கண்ட பெண் கூறுகிறார். ஜ புதன்கிழமைஇ 24 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இதுவரை கேட்டறியாத சத்தத்துடன் வந்த இரண்டு விமானங்கள் எமது வீட்டுக்கு மேலாக சென்று விமானப்படை தளம் மீது இரண்டு தீப்பந்தங்களை போன்ற பொருளை போட்டன. சிறிது நேரத்தில் பெரும் சத்தங்கள் கேட்டன என்று அநுராதபுரம் விமானப்படைத் தளத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்துவரும் குடும்பப் பெண்ணான தமயந்தி என்பவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த இவர் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் குறித்து மேலும் தெரிவித்ததாவது, நானும் எனது இரண்டு குழந்தைகளும் வீட்டில் நித்திரையில் இருந்தவேளையில், எமது வீட்டுக்கு மேலாக சில …

  12. யால தாக்குதல்கள் சொல்லும் செய்தி -சி.இதயச்சந்திரன்- 1995 இல் யாழ். குடாவிலிருந்து வெளியேறிய புலிகள் வன்னியில் திரளும் போது, ஜெயசிக்குறு படை நடவடிக்கை மூலம் அவர்களை அழித்து விடலாமென கனவு கண்டார் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா. அது நடக்கவில்லை...விபரங்களுக்கு

  13. மகிந்த ராஜபக்சவின் யுத்த மூலோபாயம் சிதைக்கப்பட்டுள்ளது - ரெலிகிராப் நாளேடு ''எல்லாளன்'' நடவடிக்கை மூலம் சிறீலங்கா அரசாங்கம் 20 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான 17 வானூர்திகளை இழந்துள்ளதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் ரெலிகிராப் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.அநுராதபுர வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் 21 கரும்புலிகள் மற்றும் இரு வானூர்திகள் நடத்திய அதிரடித் தாக்குதல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த மூலோபயம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.சிறீலங்கா வான்படை இழந்துள்ள வானூர்திகள்01. பீச் கிராவ் வேவு வானூர்தி - 1 (14 மில்லியன் பிரித்தானியா ஸ்ரேலிங் பவுஸ்)02. எம்.ஜ 24 ரக வானூர்திகள் - 203. எம்.ஜ 17 ரக வானூர்திகள் - 204. ஆளில்லா வேவு வான…

    • 0 replies
    • 1.6k views
  14. அமெரிக்காவின் வேண்டுகோள்: சிறிலங்கா நிராகரிப்பு இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்திருந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோகன்ன அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: அனுராதபுரம் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 கரும்புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தாலும் இருதசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுக்கள் நடத்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் விருப்பத்தில் எதுவித மாற்றமும் இல்லை. அனுராதபுரம் தாக்குதல் ஒரு சிறு இராணுவ நடவடிக்கை. அவ்வளவுதான். அதனால…

    • 0 replies
    • 1.4k views
  15. புனித நகருக்கு விழுந்த பூஜை அடி சிங்களத்தில் : விமல் தீரசேகர தமிழில் : அஜீவன் விமான படைத் தளத்தை தாக்க வந்தவர்கள் படகுகளில் வந்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அனுராதபுரத்தை புனித நகர் என அழைத்தாலும் , அதை விட அந்த நகரை இராணுவ நகர் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும். வட கிழக்கு யுத்த தேவைகள் அனைத்தையும் செய்வதில் அனுராதபுரத்தின் இராணுவ நிலையே முதன்மை வகித்து வந்தது. இப்படியான ஒரு பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது எல்.டீ.டீ. போராளிகள் ஊடருவி தொடுத்த தாக்குதல் மற்றும் விமான தாக்குதல் ஆகியன ராஜபக்ஸ அரசின் யுத்த அட்டவனை குறித்தும் பாதுகாப்பு நிலமை தொடர்பு குறித்தும் கேள்விகளை எம் மனதில் எழுப்பவே செய்கிறது? இது குறித்து பேசுவதோ அல்…

    • 17 replies
    • 6.5k views
  16. அநுராதபுரம் விமானப்படை முகாம் மீது நேற்று (ஒக்.22) மேற்கொள்ளப்பட்ட தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி உறுப்பினர்களின் சடலங்கள் பிறந்தமேனியாக புனித அநுராதபுர நகரத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் 18 கரும்புலி உறுப்பினர்களும் 03 பெண் கரும்புலி உறுப்பினர்களும் உயிரிழந்ததுடன், இந்தச் சடலங்கள் விமானப்படை முகாமின் விமானப்படைத்தளத்திற்கு அருகில் வீழ்ந்து காணப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஊயிரிழந்த கரும்புலி உறுப்பினர்களின் சடலங்களை இன்று உழவு இயந்திரங்களில் ஏற்றி வைத்தியசாலையின் பிரேத அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்தநிலையில், அநுராதபுரம் நகரத்தின் மத்…

  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் கை ஓங்கும் முன்னரே தற்போதைய நிலையைத் தக்க வைத்துக்கொண்டு புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று திங்கட்கிழமை கூறியதாவது: அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கார்ப் பந்தயப் போட்டி நடைபெற்ற போது புலிகளின் அணி ஊடுருவியுள்ளமை தெரியவந்துள்ளது. அரசாங்க ஊடகங்களே இன்று நாட்டிற்கு வினையை தேடிக்கொடுக்கின்றன. தொப்பிக்கலவில் அரசு தாக்குதல் நடத்தப்போவதாக அரச ஊடகங்கள் முந்திக்கொண்டு தகவல்களை வெளியிட்டதால் அங்கிருந்த 1,200 புலிகளும் தாக்குதலுக்கு முன்னரே பாதுகாப்பாக வெளி…

  18. அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை த…

    • 5 replies
    • 3k views
  19. http://www.yarl.com/videoclips/view_video....75065399b0d1e48

  20. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தாக்குதலுக்கு இலக்காயிருக்கும் அநுராதபுரம்: ஐ.தே.க. சோழ மன்னனின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசின் ஆட்சிக்காலத்திலேயே அனுராதபுரம் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது..விபரங்களுக்கு

    • 3 replies
    • 3.4k views
  21. வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளை கைப்பற்றி வான்படைத் தளத்தினை தாக்கிய புலிகள்: "டெய்லி மிரர்" நாளேடு அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலையை கைப்பற்றி அதனைக் கொண்டும் வானூர்திகளின் தரிப்பிடங்களை தாக்கியழித்துள்ளதாக கொழும்பு நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த "டெய்லி மிரர்" நாளேடு வெளியிட்ட முக்கிய பகுதிகள்:.விபரங்களுக்கு

    • 0 replies
    • 3k views
  22. புலிகளின் தனிநாட்டுப் பிரகடனம் தாமதம் ஏன்?: க.வே.பாலகுமாரன் விளக்கம் தமிழீழத் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசை நீண்டகாலமாக நடத்தி வந்தபோதும் தனிநாட்டுப் பிரகடனத்தை ஏன் தாமதிக்கப்படுகிறது என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் விளக்கம் அளித்துள்ளார். சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல் .விபரங்களுக்கு

    • 0 replies
    • 2k views
  23. வரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம் -சேனாதி "எனது சிறகுகள் அகலமானவை, ஒடுக்க முடியாதவை" - தேசியத் தலைவர். புலிகளை ஒடுக்கி தமிழர் மீது எதேச்சாதிகாரமான தீர்வொன்றைத் திணிப்பது பற்றிய உரையாடல்கள் முன்னெப்போதையும் விட இப்போது தென்னிலங்கையில் சூடுபிடித்து நிற்கின்றன. தமிழருக்கு சமஷ்டியா பஞ்சாயத்தா போன்ற வாதங்கள், போர்த்திட்டங்களும் இராசதந்திர வியூகங்களும் பற்றிய கருத்துக்கள் என கொழும்புத் தலையாரிகள் வாய்வீசத் தொடங்கிவிட்டார்கள். சிலர் ஒரு படி அப்பாலும் போய் ராஜ் நாராயணன் மற்றும் சுப்ரமணியம் சுவாமி பாணியிலான அரசியல் கோமாளித்தனத்தில் சக்கைப்போடு போடுகிறார்கள். புலிகளை நிபந்தனையின்றிய பேச்சுக்கும் அழைக்கிறார்கள். ஊகமும் உள்ளீடும் உண்மையும் சேர்ந்த கலவை மத…

  24. சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது. அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது. மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது. 1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூ…

    • 1 reply
    • 2.9k views
  25. அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிரடித் தாக்குதலை நடத்தியதனைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவசர ஆலோசனை நடத்தியதாக இந்திய இணையதளமான "இந்தியா டெய்லி" செய்தி வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ராடாரின் வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணைகளைக் கொண்டு விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது சிறிலங்கா தாக்குதல் நடத்தலாம் என்றும் அத்தகைய நவீன தொழில்நுட்ப ஆயுதத்தை பயன்படுத்தும் முன்னர் இப்பிராந்திய நாடுகள் பலவற்றுடன் சிறிலங்கா ஆலோசனை நடத்துகிறது என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://puthinam.com/full.php?2e32PCCca3dcd...cJYg52cceQd6W2e

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.