Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மேலும் ரூ. 3400 கோடிக்கு ஆயுதக் கொள்வனவு மற்றோர் ஊழலுக்கு தயார் என்கிறது ஐ.தே.க.! ராஜபக்ஷ அரசு இந்த வருட இறுதிக் குள் மேலும் 30 கோடி அமெரிக்க டொலர் (சுமார் மூவாயிரத்து நானூறு கோடி ரூபா) பெறுமதியான யுத்தத் தளபாடங்களை விமானப் படையினருக்குக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு ஊழல் மோசடிக்கு ஆரம்ப ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குற்றம் சுமத்தும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் வர்த்தகம் கட்டுமட்டில்லாமல் தொடர்வதாகவும் சீறி யிருக்கின்றது. "மிக்' ரக யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசா ரணைகள் இன்னும் முடுக்கி விடப்படாத நிலையில் மீண்டும் ஒரு ஊழல் நடவடிக்கை யில் ஈடுபட அரசு முடிவெடுத்து…

  2. மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கருணா அணியின் 10 பணிமனைகள் கிழக்கு மாகாணத்தைப் படையினர் புலிகளிடமிருந்து மீட்டதை அடுத்து கருணா அணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்து அலுவலகங்களைப் புதிதாகத் திறக்க வுள்ளனர் எனப் புலனாய்வுத் துறையினர் அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றா

  3. உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய கருத்தாடல்கள் தொடங்கப்பட்டு இருகின்றது கீழ் வரும் இணைப்புகளில் அந்த கருத்தாடல்களை காணலாம் madu church Massacre by srilankan govenment http://worldub.blogspot.com/2007/08/madu-c...-srilankan.html Rajiv Gandhi's War Crimes in Tamil eelam http://worldub.blogspot.com/2007/08/rajiv-...amil-eelam.html Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle http://worldub.blogspot.com/2007/08/sri-la...-and-tamil.html உங்களின் பங்களிப்பினை நல்குவதன் மூலம் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகின்றோம் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்

  4. அன்பளிப்பாகக் கிடைத்த பேரீச்சை விற்பனையில்! அரசியல் வாதிகளின் கைவரிசை இது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட பல மெற்றித் தொன் பேரீச்சம்பழம் இப்பொழுது கொழும்பிலும் கிழக்கு மாகாணத் திலும் சந்தையில் விற்பனைக்கு வந் துள்ளதாம். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட் டத்தின் கீழ் பெருந்தொகையான பேரீச் சம்பழத்தை சவூதி அரசு வழங்கியுள் ளது. இவை அனைத்தும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடமே ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற பேரீச் சம்பழம் உரிய முறையில் பங்கீடு செய் யப்படாததனால் அவை பொதுச் சந்தை யில் விற்பனை செய்யப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின் றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

  5. Posted on : 2007-08-30 சர்வதேசத்தைக் கையாள்வதில் தவறு இழைத்து வரும் கொழும்பு மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இலங்கையின் பெயர் கெட்டுப் போயி ருக்கும் இந்தச் சூழலில் அடுத்து வரும் மாதங்களில் முக்கிய மான நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது. அதேசமயம் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டமும் நியூயோர்க்கில் நடைபெற விருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்காக இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்று ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் கூட் டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சில தரப்புகள் வற்புறுத்தி வரும் பின்னணியில், அந்த முயற்சி மேற்படி கவுன்ஸிலின் முன்னைய கூட்டத் தொடர்களில் ஆரம்பிக்…

  6. வியாழன் 30-08-2007 03:39 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் பிரித்தானியா தூதரகத்தின் விசா வழங்கும் பிரிவு விரைவில் சென்னைக்கு மாற்றம்? சிறீலங்காவில் பிரித்தானியா தூதரகம் தமது விசா வழங்கும் பிரிவினை சென்னைக்கு மாற்ற இருப்பதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் தூதரக பேச்சாளர் ஜோன் கொலி கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இம் மாற்றம் தொடர்பில் இறுதியான முடிவு எடுத்தபிற்பாடு அறிவிக்கப்படும் எனவும் தற்போது இது பரிசீலனையில் இருப்பதாகவும் அறியமுடிகிறது. இதுதொடர்பில் மேலதிக தகவல்களை கூற மறுத்த அவர் மேலதிக விபரங்கள் செப்ரம்பர் மாதமளவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். நன்றி பதிவு.

    • 2 replies
    • 1.1k views
  7. வியாழன் 30-08-2007 04:25 மணி தமிழீழம் [மயூரன்] ரணில் சந்திரிக்கா சந்திப்பு சிறீலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை நேற்று சந்தித்து மனிதஉரிமை மீறல்கள்இ சமாதான முயற்சி உட்பட பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இச்சந்திப்பு சுமார் 45 நிமிடநேரம் குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சுதந்திரக்கட்சி மக்கள் முன்னணி தலைவர் மங்களசமரவீர அவர்கள் குமாரதுங்கவை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  8. லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவ…

    • 6 replies
    • 1.9k views
  9. 3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம் வீரகேசரி நாளேடு வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் …

  10. பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு வீரகேசரி நாளேடு எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கி…

    • 7 replies
    • 1.8k views
  11. புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu

  12. ஐ.நா. தீர்மானத்தை தடுக்க சிறிலங்கா குழு ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:50 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று எதிர்வரும் மாதம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்ரெம்பர் 10 முதல் 28 ஆம் நாள் வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் …

  13. சிறிலங்கா இராணுவத்தினரின் மன்னாரில் உள்ள பிரதான படைத்தளமான தள்ளாடி முகாம் மீது இன்று 6 மணி நேரத்துக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி தொடக்கம் விடுதலைப் புலிகள் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறனர். இத்தாக்குதல்கள் இன்று இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்கின்றன. சிறிலங்காப் படைத்தளத்துக்குள் பலத்த அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்புகள் உறுதி செய்கின்றன. இத்தாக்குதல்கள் தொடங்கிய நேரம் தொடக்கம் தள்ளாடி படைத்தளத்தில் இருந்தும் அதனை அண்மித்த சிறிலங்கா இராணுவப் படைத்தளங்களில் இருந்தும் படையினரும் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர் நன்றி புதினம். …

  14. சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் - ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்கின்றது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருவது தொடர்பாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்திருப்பதாகஇ கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்றின் பிரதம செய்தி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கடந்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்த போதிலும்இ சிறீலங்கா அரசு கொடுத்த வாக்குறுதி காரணமாக அது கைவிடப்பட்டிருந்தது. இருப்பினும்இ அரசின் மனித உரிமை மீறல்கள்இ ஆட் கடத்தல்இ காணாமல்ப் போகச் செய்தல் போன்றன அதிகரித்து வருவதால்இ ஐரோப்பிய ஒன்றியம் இந்த முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டு வருவதாக நம்பப்படுகின்றது. ஐ…

    • 1 reply
    • 1k views
  15. மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது! ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை

    • 3 replies
    • 1.2k views
  16. மீண்டும் கருணா - பிள்ளையான் குழுக்களிடையே மோதல்;: மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இன்று காலை எட்டு முப்பது மணியளவில் திருகோணமலையில் உள்ள அண்புவலிபுரம் என்னும் இடத்தில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஆரம்பகால உறுப்பினரும், முக்கியஸ்தர் மார்க்கன் அவர்களின் மைத்துனருமான முரளி என்பவர், கருணாவின் கொலைக்கருவி வீரா என்பவரால் நயவஞ்சகமாக அழைத்துவரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பொழுது கருணா குழுவினர், பிள்ளையான் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களை கொன்றொழித்து வருகிறார்கள். வீரா. முரளியை சுட்டுக்கொண்றத…

  17. சமகால அரசியல் மற்றும் புலம்பெயர் வாழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி வழங்கிய நேர்காணலின் பாகம் - 1 http://www.tamilnaatham.com/audio/2007/aug...gi20070829.smil அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்களும் தெரிந்து கொள்வேண்டியவை குறிப்பாக புலிகள் பாயவில்லையென விசனம் தெரிவிப்பவர்கள், விரக்கியடைந்தோர் கட்டாயம் கேட்க வேண்டியது. புலம்பெயர் தேசத்தில் ஆய்வாளர்களாக தமிழ் ஊடகங்களில் வந்து புலிகளின் பாய்ச்சல் எப்போது என ஆரூடம் கூருவோர் அனைவரும் கேளுங்கள்.

  18. வறணி படைத்தளங்களில் உலங்குவானூர்திகள் பறப்பு. Written by Pandaravanniyan - Aug 29, 2007 at 04:48 PM யாழ்ப்பாணம் வறணிப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளத்திற்கும் அம்பன் படைத்தளத்திற்கும் இன்று வழமைக்கு மாறாக சிறிலங்காப் படையினரின் ஆறு உலங்குவானூர்திகள் பறப்புக்களின் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை இக் குறிப்பிட்ட படைத்தள முகாமிற்கு உயர் அதிகாரிகள் வந்திருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கதி

  19. புதன் 29-08-2007 16:35 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் காவல்துறை பயிற்சி பெற்றதாகக்கூறி அரசு விசாரணை சிறீலங்கா அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் 12 உறுப்பினர்கள் வட அயர்லாந்துக்குச் சென்று காவல்துறைப் பயிற்சி பெற்றிருப்பதாக, கொழும்பில் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும், நோர்வே அரசின் அனுசரணையும் இருந்ததாகவும் அரசாங்கத்தின் ஆங்கில ஊடகம் மேலும் குற்றம் சாட்டுகின்றது. திருகோணமலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட 29 அகவையுடைய காளிமுத்து வினோத்குமார் என்பவரும் வட அயர்லாந்தில் பயிற்சி பெற்ற 12 பேர…

    • 3 replies
    • 1.7k views
  20. 28.08.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் நிகழ்ச்சி http://www.yarl.com/videoclips/view_video....a845e1c2e8a762b

  21. போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் கிளிநொச்சி விஜயம் வீரகேசரி இணையத்தளப்பிரிவு போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் , சோல் பேர்க் இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் வவுனியா சென்ற போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் அங்கிருந்த எ9 நெடுஞ்சாலை மூலம் கிளிநொச்சி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி விஜயம் செய்யும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் விடுதலை புலிகளின் சமாதான செயலக பணிப்பாளார் புலித்தேவனை சந்தித்து பேசவுள்ளார். எனினும் இச் சந்திப்பு வழமையான தொன்றென தெரிவிக்கப்படுகிறது

  22. இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை * சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரத…

  23. சர்வதேச நிறுவனங்கள் கடன்வழங்கப் பின்னடிப்பு. - மகிந்த விசனம். தற்போதைய அரசாங்கம் பெறும் கடனை ஐ.தே.கட்சி பதவிக்கு வந்தால் மீளச்செலுத்தமாட்டாது என ரணில் விக்கிரமசிங்க கடிதமூலம் அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச நிதிநிறுவனங்கள் அரசிற்குக் கடன் வழங்கப்பின்னடித்து வருகின்றன. இதனால் மகிந்த அரசு கடும் விசனமடைந்துள்ளது. சிறிலங்கா அரசிற்கு கடன் வழங்கவேண்டாம் என்றுகோரும் கடிதங்களை சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் ரணில்விக்கிரமசிங்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு அனுப்பிவருவதையிட்டு சிறிலங்கா அரசு கடும்விசனம வெளியிட்டுள்ளது. ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் கடன்தொகையை திருப்பிச்செலுத்தமாட்டாது என்று அனைத்துலக வங்கிகளுக்கு ரணில் விக்கிரமசிங்க அ…

  24. தேசியத்தலைவர் அவர்களின் நம்பிக்கை நிதியத்திலிருந்து விமானத்தாக்குதலில் காலிழந்த சிறுவனுக்கு உதவி. மன்னார் படகுத்துறைக் கிராமத்தில் சிறிலங்கா விமானப்படை கிபிர் குண்டு வீச்சுத்தாக்குதலில் வலது காலை தொடையுடன் இழந்த ஜெ.அன்ரனி என்ற ஆறுவயதுச் சிறுவனிற்கு தமிழீழத் தேசியத்தலைவர் நம்பிக்கை நிதியத்திலிருந்து ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. பூநககரி நாச்சிக்குடா, குமுழமுனையில் அமைந்துள்ள சிறுவனின் இல்லத்தில் வைத்து நேற்றுக்காலை 9.50 மணிக்கு சிறுவனிடம் தமிழீழ வைப்பக வைப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தமிழீழ அரசியல்துறைத் துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் கையளித்தஷார். மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப்பi கிபிர் விமானங்கள் கடந…

  25. சுகாதார அமைச்சில் ரூ 500 கோடி மோசடி; நடவடிக்கை எடுக்க 2 வாரக் காலக்கெடு! அரசுக்கு விதிக்கிறது சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் ஐந்நூறு கோடி ரூபா மோசடி மற்றும் ஊழல் தொடர் பாக விசாரணைகளை ஆரம்பித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சுகா தார சேவைகள் சங்கம் அரசிற்கு 14 நாள்கள் காலக்கெடுவை விதித்துள்ளது. 14 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் செப் ரெம்பர் மாத நடுப்பகுதியிலிருந்து தொடராக நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத் துவது என அச்சங்கம் தீர்மானித்திருக் கின்றது. சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றிய தக வல்களையும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.