ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
இலங்கைக்கு ஐ.எம்.எஃப். நிதி: நிபந்தனைகள் என்ன? இலங்கை விஷயத்தில் இந்தியா, அமெரிக்கா தோல்வி அடையுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் முதலாவது தவணை தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமீபத்தில் தெரிவித்தார். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற…
-
- 2 replies
- 371 views
- 1 follower
-
-
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/246142
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
வலுசக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:45 PM (எம்.மனோசித்ரா) மின்சக்தி மற்றும் வலு சக்தி துறையில் முதலீடுகள் குறித்து இந்தியா - இலங்கைக்கிடையில் இருதரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலையை சக்தி மையமாக அபிவிருத்தி செய்தல், எரிபொருள், எரிவாயு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோகாபன் மற்றும் சக்தித்துறை சார்ந்த பரந்தளாவான முன்முயற்சிகளிலும் ஏனைய திட்டங்களிலும் ஒத்துழைப்பினை மேலும் வலுவாக்கும் நோக்குடன் இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சின…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 03:18 PM அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர். அனைத்துப் பல்கலைக்கழக மா…
-
- 1 reply
- 726 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து வெளியேறுங்கள் – ஆளுநர் உத்தரவு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த…
-
- 0 replies
- 709 views
-
-
பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்! டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை விட அதிகமாக அறிவிட்ட 08 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுக்கூடங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை, நுகேகொடை நீதவான் நீதிமன்றங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை தாக்கல் செய்த வழக்குகளிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான துரித இரத்தப் பரிசோதனைக்குரிய உச்சபட்ச கட்டணம் 1200 ரூபாவாகும். எனினும், இதற்காக 3000 ரூபாய் வரை கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முழுமையான இரத்த பரிசோதனைக்கான …
-
- 0 replies
- 349 views
-
-
சித்தார்த்தனை இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் – சஜித் எச்சரிக்கை! சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசியலமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளதாகவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தர்மலிங…
-
- 0 replies
- 207 views
-
-
இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள் உணவுபாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் - செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் Published By: Rajeeban 25 Mar, 2023 | 12:25 PM இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் இன்னமும் ஓரளவு அல்லது மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. போதுமான வாழ்வாதார உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் தற்போதைய நிலை 2023 இல் மோசமடையும் எனவும் செஞ்சிலுவை செம்பிறைச்சங்கங்களின் சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. பொருளாதாரநெருக்கடியின் தாக்கம் தொ…
-
- 0 replies
- 137 views
-
-
மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது - தயாசிறி ஜயசேகர Published By: T. SARANYA 25 MAR, 2023 | 08:58 AM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) இலங்கை மின்சார சபையின் பாவம் ஒட்டுமொத்த மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.மின்சார சட்டத்திற்கு புறம்பாக நியாயமற்ற வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் அறிவுறுத்தல் நிபந்தனையாக விதிக்கப்பட்டதா, இல்லையா என்பதை சர்வதேச நாணய நிதியம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்த…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது முறிந்து விழுந்த மரம் : மயிரிழையில் தப்பிய தாய்மார் Published By: T. SARANYA 25 MAR, 2023 | 11:05 AM வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர். நேற்று (24) மாலை வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை ம…
-
- 2 replies
- 320 views
- 1 follower
-
-
லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த 24 இலங்கையர்கள் மீட்பு Published By: RAJEEBAN 25 MAR, 2023 | 10:35 AM லாவோஸின் பலவந்த நிதி மோசடி முகாமொன்றில் சிக்குண்டிருந்த 24 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். லாவோஸின் பலவந்த நிதி மோசடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபடுமாறு துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் - இவர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நான்கு மாதங்களிற்கு முன்னர் வர்த்தக விசாவில் தகவல்தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக லாவோஸ் சென்ற இலங்கையர்களே இந்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் லாவோஸ் சென்றதும் இவர்களின் கடவுச்சீட்டுகள் தொலைபேசி…
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
வட மாகாண ஆளுநருக்கு எதிரான மனு குறித்து விசாரணை Published By: NANTHINI 24 MAR, 2023 | 05:52 PM வட மாகாண ஆளுநர் நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்தமை தவறான செயற்பாடு என்று சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து குறித்த வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு மேன்முறையீட்டு நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குறித்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக எதிர்வரும் மே 24ஆம் திகதியன்று மீண்டும் இவ்விடயத்தினை மன்று கவனத்தில் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தன்னிச்சையாக நியதிச் சட்டங்களை இயற்றி வர்த்தமானியில் பிரசுரித்த வட மாகாண ஆளுநர் ஜீவன் …
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
மத்திய வங்கி சர்வதேசத்தின் ஆதிக்கத்திற்குட்படும் - உதய கம்மன்பில Published By: VISHNU 24 MAR, 2023 | 04:02 PM (எம்.மனோசித்ரா) மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் ஊடாக அது மக்களின் நிர்வாகத்திலிருந்து விலகி சர்வதேசத்தின் நிர்வாகத்திற்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் நிறைவேற்றதிகாரம், பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் மிக்கதாக மத்திய வங்கி மாற்றமடையும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தினை சர்வசன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுமீதா…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்! Published By: T. SARANYA 24 MAR, 2023 | 11:48 AM யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற இலங்கை நடவடிக்கை எடுக்கும் – ஜனாதிபதி தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித…
-
- 9 replies
- 584 views
- 1 follower
-
-
டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு வழங்க அவதானம் - விமல் வீரவன்ச Published By: Digital Desk 5 24 Mar, 2023 | 09:18 AM இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிலைமை தோற்றம் பெறும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்த…
-
- 2 replies
- 889 views
- 1 follower
-
-
கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ; மக்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட வேண்டும் நீதவான் உத்தரவு! Published By: T. Saranya 24 Mar, 2023 | 10:08 AM கிளிநொச்சி கிராஞ்சி கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தவணையிடப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கடலட்டை பண்ணைக்கு அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்க…
-
- 0 replies
- 672 views
-
-
இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார் Published By: Rajeeban 24 Mar, 2023 | 10:02 AM தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழர் தேசமான ஈழத்தினை சுய ஆட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இந்த அவையின் அங்கத்துவ நாடுக…
-
- 0 replies
- 196 views
-
-
பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது – ஊடகப் பிரதானிகள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு! தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பி…
-
- 0 replies
- 592 views
-
-
ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை! நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு நடை பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூரநோக்கமானசெயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நா…
-
- 3 replies
- 591 views
-
-
அலி சப்ரி- விஜயதாச ராஜபக்ஷ தென்னாபிரிக்காவுக்கு பயணம்! வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதில் தென்னாபிரிக்காவின் அனுபவம் குறித்த நுண்ணறிவுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இவர்களின் பயணம் அமைந்துள்ளது. தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில், இவர்கள் தென்னாபிரிக்காவுக்கு தொழில்முறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உள்நாட்டுப் பொறிமுறைகளின் மூலம் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதில் உறுதியாக இருப்பதாக சர்வதேச அரங்குகள் உட்பட பல தளங்களில் உறு…
-
- 1 reply
- 265 views
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
பொருளாதார மீட்சிக்கு தடையான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது - காஞ்சன விஜேசேகர Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:28 PM ஊழல்மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படும் தொழிற்சங்க தலைவர்களின் நோக்கங்களுக்கு அரச சேவையாளர்கள் பலியாகக் கூடாது,பொருளாதார மீட்சிக்கான திட்டங்களுக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது. நாட்டின் எதிர்காலத்துக்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
பாரிய கடன்களை மீள செலுத்தவே நிறுவனங்களை விற்க நடவடிக்கை - அமைச்சர் பந்துல Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:08 PM (எம்.மனோசித்ரா) இலாபமீட்டும் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் மீதே முதலீட்டாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். எனவே தான் அதிக இலாபமீட்டக் கூடிய வகையிலும், பாரிய கடன்களை மீள் செலுத்தக் கூடிய வகையிலும் சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளயர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்…
-
- 8 replies
- 950 views
- 2 followers
-
-
கோட்ட கோ கமவில் ஐக்கிய தேசியக் கட்சியே முதல் குடிலை அமைத்தது: விமல் காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலைஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார். http…
-
- 0 replies
- 545 views
- 1 follower
-