ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
நாகா மற்றும் ஈழ விடுதலையில் "இந்து"வின் இரட்டை வேடம்: பெரியார் முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று, ஓயாது எழுதி வரும் "இந்து" பார்ப்பன நாளேடு (ஜூலை 30 ஆம் நாள்), நாகாலாந்து இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தையைப் பொறுப்புடன் நடத்த வேண்டும் என்று இந்திய அரசுக்கு "அறிவுரை" கூறுகிறது என்று பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகப்பூர்வ வார ஏடான "புரட்சி பெரியார் முழக்கம்" சாடியுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பெரியார் முழக்கம் (ஓகஸ்ட் 2) இதழில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை விபரம்: நாகா விடுதலைக்குப் போராடும் நாகா தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலுக்கும் இந்தியாவுக்குமிடையே இன்று …
-
- 1 reply
- 2.1k views
-
-
கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு இராணுவ தளபதி விரும்புகிறார்: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2007, 15:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் ஆயுதக்களைவை மட்டக்களப்பு சிறிலங்கா இராணுவ தளபதி விரும்புவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினருடனான அண்மைய சந்திப்பின் போது, 23 ஆம் டிவிசனைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரட்ணநாயக்க இதனைத் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஸ்டெய்னர் செவிய்ன்சன் தெரிவித்துள்ளார். கிழக்கில் அமைதி திரும்ப வேண்டுமானால் கருணா குழுவின் ஆயுதங…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று மாலை தோட்டத் தொழிளாலர் காங்கிரசைச் சேர்ந்த ஐந்து அமைச்சர் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரியவருகின்றது. தலைவர் ஆறுமுகம் தொண்டைமான்,எஸ்.ஜெகதீஸ்வரன், சிவலிங்கம், செல்லசாமி ஆகிய ஐந்து அமைச்சர் பிரதியமைச்சர்கள் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஈழத்திலிருந்து ஜானா
-
- 22 replies
- 3.3k views
-
-
கோத்தபாயா – கருணா எஜமானர்கள் கூத்து. கருணாவை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக கோத்தபாயாவின் வாராந்த ஓன்றுகூடலில் ஒவ்வொரு தடவையும் விவாதிக்கப்படும். காட்டிக் கொடுப்பவர்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக உலக வரலாற்றுக்கும், சிறீ லங்கா வரலாற்றுக்கும் பெரிதாக வேறுபாடு இல்லை, என்ற கருத்தை அனுபவப்பட்ட பொலிஸ், இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் நினைவூட்டினார்கள். எப்படியாயினும் கருணா நரி மூளைக்காரன். எல்.ரி.ரி. தலவைருக்கே தண்ணி காட்டியவன் என்ற கருத்து சில இராணுவப் புலனாய்வு எஜமானர்களுக்கு உள்ளது. இந்த விடயங்களைக் கையாளும் எஜமானர்கள் சொன்ன ஆலோசனைப்படியே பிள்ளையான் - கருணா பிரிவு சம்பவம் நடந்தேறியது. கருணாவின் எண்ணமெல்லாம் தான் கிழக்கின் மன்னர் என்பதேயாகும். சிங்…
-
- 1 reply
- 2.3k views
-
-
EPDP இன் முதலீடுகளைப் படடியலிடுகிறார் முன்னைநாள் ஆலோசகர் விக்னேஸ்வரன். Dr. விக்னேஸ்வரனுக்கு வயதாகிவிட்டாலும்கூட தமிழர் பிரச்சனையில் ஓரளவேனும் நிதானம் உள்ளது. இருப்பினும் துணிச்சல் இல்லாமையினால் சர்வ கட்சி ஆலோசனைக் குழுவில் இருந்துகொண்டு தனக்கு முடிந்தவரை தீர்வு யோசனையை எழுதியுள்ளார் (பாதுகாப்பு, அரசாங்கம்தானே வழங்கி வருகிறது.) ஈ.பி.டிp.பி. முன்னைநாள் தோழரும் டாக்டர் விக்னேஸ்வருனும், டக்ளசின் தகிடுதத்தங்களை தமக்குள் கதைத்து மனசாறியுள்ளனர். முன்னைநாள் தோழரும் டகளசுடன் இருக்கும்போது ஓரளவு பதவியில் இருந்தவர். டக்ளஸ் 1990 இல் இருந்து மக்களிடம் கொள்ளையடித்தவைகளையும் அரச பணத்தில் ஓதுக்கியவைகளையும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கி வைத்துள்ளார். உள்நாட்டில் றியல…
-
- 1 reply
- 2.4k views
-
-
வத்தளையிலுள்ள தமிழர் வீடுகளில் தகவல் திரட்டும் இனந்தெரியாதநபர்கள் [04 - August - 2007] * மக்களை விழிப்புடனிருக்குமாறு மனோகணேசன் அறிவிப்பு கொழும்பு வத்தளைப் பகுதியில் தமிழர் வீடுகளில் இனந்தெரியாத நபர்கள் தகவல் திரட்டுவது குறித்து மக்கள் விழிப்புடனிருக்க வேண்டுமென மேலக மக்கள் முன்னணித் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோகணேசன் கேட்டுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்; குறிப்பாக செல்வந்த வீடுகளில் நுழையும் இவர்கள் தாம் சி.ஐ.டி. புலனாய்வு பொலிஸார் என்று கூறி அடையாள அட்டைகளை பார்க்க வேண்டுமெனக் கூறி அலுமாரிகளை திறந்து உடைகளை கலைத்து வீசி சோதனையிடுவதுடன் பணம் நகை வங்கி நிலுவைகளை எவ்வளவு இருக்கின்றன என்று கேள்விகளை எழுப்புகிறார்கள். …
-
- 0 replies
- 1k views
-
-
கோப்பாயில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த ராஜேந்திரம் பவதீபன் (15) என்ற மாணவனே கடத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
-
- 1 reply
- 916 views
-
-
மணிலாவில்வைத்து போகொல்லாகம எச்சரிக்கை! தமிழீழவிடுதலைப் புலிகள் தமது தாக்குதல்களுக்குப் புதிய விய+கம் அமைத்துள்ளனர். சர்வதேச கடல் வழியாக எரிபொருட்கள் மற்றும் வலுச்சக்தி வளங்கள் என்பனவற்றை ஏற்றிச் செல்லம் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கொள்ளையிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே, புலிகளின் இத்தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து சர்வதேச கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கடற்பிரதேசப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மணிலாவில் இடம் பெற்ற செய்தியாளா மாநாடு ஒன்றிலே அவர் இப்படிக் கூறியுள்ளார். புலிகள் இதுவரை காலமும் தரைமார்க்கமாகவே தமது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். எனினும் எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
Posted on : 2007-08-04 தமிழ்ப் பேசும் தரப்புகள் வெளியேற முழுப்பேரினவாத மயப்படும் அரசு அரசுப் பக்கமும் எதிரணிப் பக்கமும் மாறி மாறி சாய்ந்தாடும் தனது வழமையான அரசியல் தந்திரோபாயத்தின் அடுத்த அத்தியாயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரங்கேற்றியிருக்கின்றது. புத்தாயிரமாம் ஆண்டு பிறந்த பின்னர் இந்த ஏழரை ஆண்டுகளுக்குள்ளேயே பல தடவைகள் அணி மாறிப் பாய்ந்து விட்டது சேவல் கட்சி. புத்தாயிரமாம் ஆண்டு பிறந்தபோது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த அக்கட்சி 2001 ஒக்டோபரில் எதிரணிக்குத் தாவியது. இரண்டு மாதத்தில் வந்த பொதுத்தேர்தலை ஐ. தே. கட்சியுடன் இணைந்து எதிர்கொண்டு, அந்த அரசுடன் இரண்டு ஆண்டுகள் இயங்கியது. அந்த அரசு 2004 இல் கலைக்கப்பட்டு 2004 ஏப்ரலில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சனி 04-08-2007 02:56 மணி தமிழீழம் [மயூரன்] அரசாங்கம் கிழக்கு வளங்களை கொள்ளையிட முயற்சி - ஐதேக ஸ்ரீலங்கா அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை கொள்ளையிட முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு நெருக்கடிகள் எதுவுமற்ற சீரான போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள தெற்கு மாகாணத்தை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாத அரசாங்கம் நெருக்கடி நிலையில் உள்ள கிழக்கினை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கின் அபிவிருத்தி என…
-
- 0 replies
- 733 views
-
-
இலங்கை மனித உரிமை நிலை குறித்து சர்வதேசப் பங்களிப்புடன் கண்காணிப்பு! அமெ.வெளிவிவகாரக் குழுவில் வலியுறுத்தல் இலங்கையில் மனித உரிமை நிலை குறித்து சர்வதேச மட்டத்திலான பங்களிப்போடு நேரடியாகக் கண்காணிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இவ்வாறு அமெ. வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றக் குழுவின் சுட்டத்தில் அமெரிக்க மூத்த உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருக்கின்றார். நேற்ற முன் தினம் நடைபெற்ற அமெ. நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் நியூ ஜேர்ஸி மாநில காங். உறுப்பினர் பிராங் பலோன் இப்படி வலியுறுத்தினார். 'இலங்கையில் புதிதாகத் தீவிரப்படுத்தபட்டிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் நூற்றுக் கணக்கானோர் தடுப்பு…
-
- 2 replies
- 1.3k views
-
-
அரசு சிறுபான்மை கட்சிகளுடன் நடந்துகொள்ளும் விதம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் இருக்கின்றோம். அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் கவனம் செலுத்திவருகிறோம். அரசுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா? இல்லையா? என்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அரசாங்கத்திலிருந்து விலக எடுத்த தீர்மானம் குறித்தும் அதன் பின்னரான சூழ்நிலை தொடர்பிலும் தாம் விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். இதுகுறித்து…
-
- 0 replies
- 825 views
-
-
புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு உடன்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுத விநியோகங்களை தடுப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உடன்பாடொன்றை எட்டியுள்ளதாக ஸ்ரீலங்காவின் வெளிவிவாகர அமைச்சர் ரோஹித போகொல்லகம தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களை பாக்கு நீரிணை ஊடாகவே தருவிப்பதால் பாக்கு நீரிணையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கடல் கண்காணிப்புக் கப்பல்கள் அதிகளவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் பொறி முறைகள் குறித்து அதிகம் அக்கறை கொள்ளவில்லை என்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையே விரும்புவதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவத…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
இன்று காலை (03-08-2007) 08.30மணியளவில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டதாகவும், ஒரு படையினன் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் வித்துடல்கள் விதைப்பு [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 18:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் நந்தகுமார்- 2 ஆம் லெப். தியாகமறவன் ஆகியோரின் வீரவணக்கக்கூட்டம் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி மாலைகள் சூட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து வித்துடல்கள் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித விதைகுழிகளில் வித்துடல்கள் முழுப்படைய மதிப்புடன் விதைக்கப்பட்டன. மன்னார் தம்பனையில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவியவர் லெப். கேணல் நந்தகுமார். வடபோர்முனையில் சிறிலங்கா படையினருடா…
-
- 3 replies
- 1.8k views
-
-
யாழில் மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சுட்டுப் படுகொலை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் சகாதேவன் நிலக்சன் (வயது 24) இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் தொடரூந்து வீதியில் உள்ள சகாதேவன் நிலக்சனின் வீட்டுக்குச் சென்ற துணை இராணுவக்குழுவினர் இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஆவார். யாழில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டிருந்த நேரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. -புதினம்
-
- 20 replies
- 4.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் சுட்டுக் கொலை Written by Pandaravanniyan - Jul 31, 2007 at 02:07 PM யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் 11.15 மணியளவில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆட்டோச் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார். நாவலர் வீதியில் உள்ள அன்னசத்திர ஒழுங்கையில் வைத்து இவர் மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். துப்பாக்கிப் பிரயோகம் இடம் பெற்ற வேளையில் நாவலர் வீதி உதயன் பணிமனை சந்தியிலும் மற்றும் இலுப்பையடிச் சந்தியிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்தாகும். மரணம் அடைந்தவர் அன்னசத்திர ஒழுங்கை கந்தர்மடம் என்னும் முகவாரியைச் சேர்ந்த வடிவேலு சந்திரப் பிரபு வயது 32 என்பவராகும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
வெள்ளி 03-08-2007 19:57 மணி தமிழீழம் [சிறீதரன்] வன்னியில் ஆளில்லா வேவு வானூர்தி நோட்டம் வன்னியில் சிறிலங்கா வான் படையினரின் ஆளில்லா வேவு வானூர்தி இன்று காலை நோட்டமிட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா யுத்த வானூர்திகள் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்த்து மக்கள் மத்தியில் பதற்றநிலை காணப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 1.3k views
-
-
முகமூடியிட்ட படையாட்சி -சேனாதி (தாயகம்) அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட விரும்பும் எந்த அரசு சாரா நிறுவனமும் படையினரின் விதிப்புக்களுக்கமையவே செயற்பட முடியும் என்ற சுற்றறிக்கையை தனது ஆளுகைக்கு உட்பட்ட ஆயுதப்படைக் கட்டமைப்புகளின் மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் கிழக்கு மாகாண ஆயுதப்படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய. இந்த நகர்வு, இனப்பிரச்சினை குறித்த சிங்கள நிகழ்ச்சி நிரலின் ஒரு பதம் என்றும் தமிழீழத்தின் மீதான கொழும்பின் மூலோபாய வெளிப்பாடுகளில் ஒன்று என்றும் கருதப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நிரலின் நீட்சியும் கொழும்பு வெளியிட விரும்பாத அதன் உண்மையான மூலோபாயமும் ஆய்விற்குரியவை. கடந்த வருடம் எட்டாம் மாதம் ஏ-9 சாலை மூடப்பட்டதில…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமைச்சர்களின் கைகளில் தான் மகிந்த ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவி உள்ளது : ரவூப் ஹக்கீம் Written by Ravanan - Aug 03, 2007 at 02:35 PM இலங்கையில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் தன்னுடன் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறி வருகிறார். 18 முஸ்லிம் அமைச்சர்கள் அரசில் அங்கம் வகிக்கின்றனர். இதனை கௌரவமாக பார்க்க முடியாது. இத்தகைய நிலை உண்மையிலேயே அவமானமாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அமைச்சுப்பதவிகளுக்காக சமுகத்தையும் கௌரவத்தையும் விற்றுவிட்டுப் போவதற்கு தயாரானவர்கள் இவர்கள் என மற்றைய சமுகம் எம்மை பார்க்கிறது. இத்தகைய நிலை இனிமேலும் நீடிக்கக்கூடாதென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார். கிண்ணியாவில் செவ்வாய்க்கிழமை மாலை முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்த…
-
- 0 replies
- 998 views
-
-
வன்முறையைக் கைவிட்டால் புலிகளுடன் பேச்சுகளுக்குத் தயார்: அமைச்சர் ரோகித போகல்லாகம [வியாழக்கிழமை, 2 ஓகஸ்ட் 2007, 18:39 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். மணிலாவில் ஆசிய பாதுகாப்பு சபையின் கூட்டத்தின் பின்னர் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம கூறியதாவது: இலங்கையில் அரசியல் பேச்சுக்கள் மூலம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. ஆனால் போராளிகள் தங்களது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். விடுதலைப் புலிகளுடன் நாளையே பேச்சுக்களை நடாத்…
-
- 10 replies
- 3k views
-
-
பிரபாகரனைப் பற்றி இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது: "றோ" முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா ஒப்புதல் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:53 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்கள் சார்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கக்கூடிவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிங்களத் தலைமைகள் மாற்றியிருந்ததை இந்தியா புரிந்துகொள்ளாதது தவறானது என்று இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் இந்திய உளவு அமைப்பான "றோ"வின் தலைவராக இருந்த ஏ.கே.வர்மா ஒப்புக்கொண்டிருக்கிறார். இலங்கையில் இந்தியாவின் தலையீடு தொடர்பாக முதல் முறையாக உத்தியோகப்பூர்வமான ஆராய்வாக புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஏ.கே.வர்மா கட்டுரை ஒன்றை வாசித்தார். அக்கட்டுரையின் தமிழ் வடிவம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் மீண்டும் அனைத்துலகத்தின் திருவிளையாடல் தொடக்கம் [வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:54 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய போர் நகர்வுகள் மேற்கொள்வதைத் தடுத்து மீளவும் அமைதிப் பேச்சு என்னும் சதிவலைக்குள் தமிழர் தரப்பை சிக்க வைக்க தனது திருவிளையாடல்களை அனைத்துலக சமூகம் மற்றும் ஒருமுறை இலங்கைத் தீவில் தொடங்கியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த இரு இளம் மாணவர்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்யும் நிகழ்வுகள் மீளவும் அரங்கேறியிருக்கும் இதே கால கட்டத்தில் தென்னிலங்கை அரசியல் களத்திலும் கள நிலைமைகள் மாற்றமும்…
-
- 0 replies
- 995 views
-
-
மகிந்த ராஜபக்ஸவை பலவீனப்படுத்தும் மேற்குலகம் - தமிழர் தரப்பை குறிவைத்து நடவடிக்கை! சிறிலங்காவின் அரசியல் நிலை கடந்த சில வாரங்களாக மிகப் பரபரப்பாகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சிகள் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. மகிந்தவின் அரசை கவிழ்க்கின்ற வேலைகள் திடீரென்று வேகம் எடுத்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு மகிந்த ராஜபக்ஸ எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பல உறுப்பினர்களை தன்னுடைய கட்சிக்குள் இழுத்தார். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளை வழங்கினார். 107 அமைச்சர்களோடு உலகின் மிகப் பெரிய அமைச்சரவையை மகிந்த ராஜபக்ஸ அமைத்தார். இந்த நேரத்தில் மகிந்தவின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருந்த மங்க…
-
- 1 reply
- 1.4k views
-