Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்' - சபேசன் கடந்த 10.06.07 அன்று வெளியாகிய, சிறிலங்காவின் அரச வர்த்தமானியின் ஊடாக, மகிந்த ராஜபக்சவின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனை, மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. 'சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசங்களை, அதியுயர் பாதுகாப்பு வலையமாகப்' பிரகடனப்படுத்தி உள்ள இந்த அரச வர்த்தமானி, 'அங்கே மக்கள் மீளக் குடியேற முடியாது' என்றும் 'மீறி அப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றும் அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணைப் பறிப்பதற்காகச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற பேரினவாதச் செயற்பாடுகளின் நீட்சிதான், இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.! தமிழ் மக்களின் தாயகப் பிர…

  2. வெள்ளை வான்களின் நிறங்களை மாற்ற தீர்மானம் வீரகேசரி நாளேடு வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களை நோக்கி நகைச்சுவையாகத் தெரிவித்தார். கொழும்பு கேம்பிரிஜ் டெரஸிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக்காலை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினரை சந்திப்பதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியலில் என்ன மாற்றம்? என்று ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கேட்ட எதிர்க்கட்சித் தலைவர், வெள்ளை வான்களின் நிறங்களை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாம் எனவும் சிரித்துக்கொண்டு நகைச்சுவையாக கூறினார். இதனையடுத்து, …

  3. முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐ.தே.க.வுடன் இணைவர் அரசியல் அநாதையாகிவிடாமல் ஜே.வி.பி.யும் சேரவேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கத்திலிருந்து முக்கிய அமைச்சர்கள் பலர் விரைவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. எந்தெந்த அமைச்சர்கள் எமது கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர் என்பதனை விரைவில் அறிவிப்போம். இன்னும் மூன்று மாதங்களில் நாட்டின் அரசியலில் பாரிய மாற்றங்கள் இடம்பெறும். ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் பொது கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஜே.வி.பி.க்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பத்திரிகையாளர்களுக்கு தண்டனை வழங்கும் குற்றவியல் ச…

  4. வியாழன் 28-06-2007 17:53 மணி தமிழீழம் [கோபி] சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவி சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித நேயப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக யப்பான் வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளளார். யப்பான் சென்றுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம யப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து உரையாடிய பின்னர் இத்தகவலை யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த போகல்லாகம மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பட…

  5. தினக்குரல் ஊடகவியலாளர் வான் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வான் படையினரால் தினக்குரல் ஊடகவியலாளர் கே.பி.மோகன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகிந்தவின் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போது அவரை வீதியில் வைத்து வழிமறித்து வான் படையினரும் மகிந்தவின் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து தாக்கியுள்ளனர். பாதுகாப்புத் தடைகளைத் தாண்டிச் செல்ல முற்பட்டதால் அவர் தாக்கப்பட்டார் என்று வான் படையினர் தெரிவித்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்குள்ளான கே.பி.மோகன், கோட்டை காவல் நிலையத்தில் வான் படையினரால் கையளிக்கப்ப…

  6. கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களையும் அண்மையில் கைப்பற்றிவிட்ட ஸ்ரீலங்கா அரச படையினர் தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தொப்பிகல பகுதியில் புலிகள் வசமிருந்த பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தொப்பிகலயிலுள்ள புலிகளின் பிரதான பலம் வாய்ந்த முகமாகிய பெய்ரூட் பேஸ் முகாமையும் அதன் இணை முகாம்களாகிய ஷோவன் பேஸ், புலிபாய்ந்தகல் பேஸ் ஆகிய முகாம் தொடர்களை பெருமளவு அரச படையினர் சுற்றிவளைத்து வைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. பீரங்கி அணிகளுடன் குறித்த புலிகளின் பலம் வாய்ந்த மேற்படி பெய்ரூட் பேஸ் , ஷோவன் பேஸ் முகாம்களை நோக்கி அரச படையினர் முன்னேறிவிட்ட நிலையில் அந்த முகாம்களிலிருக்கும்…

  7. இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த முயற்சித்தார்: மங்கள குற்றச்சாட்டு. இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு தவறாக புரிதலை ஏற்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார். இந்திய நாளேடான இந்துஸ்தான் ரைம்சுக்கு மங்கள சமரவீர அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க- ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து இந்தியா-சிறிலங்கா உறவானது வலுவானதாக இருந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர், இந்தியா-சிறிலங்கா உறவானது உயர்நிலையில் இருப்பதாகக் கூறினார். ஆனால் தற்போதைய ராஜபக்ச அரசாங்கமானது 4 மாதங்களில் அந்த உறவ…

  8. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் [சிறீதரன்] வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் பற…

    • 1 reply
    • 1.4k views
  9. நெடுங்கேணியில் விமான தாக்குதல் வீரகேசரி இணையம் வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பகுதியில் இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி தென்கிழக்கு பகுதியிலுள்ள விடுதலை புலிகளின் இரு நிலைகள் மீது இன்று காலை 6.15 மணியளவில் விமான படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதன் போது விடுதலை புலிகளின் இரு நிலைகளும் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பாக விடுதலை புலிகள் இதுவரை எது வித தகவலையும் வெளியிடவில்லை.

  10. ஏழாலையில் இளைஞர்கள் மீது ஈ-பி-டி-பியினர் தாக்குதல். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உந்துருளியில் வந்தவர்களினால் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இரவு நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத நேரம் சுமார் 6.45 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த சுமார் ஆறு பேர் இந்த இளைஞர்களை எந்த வகையான கேள்விகளும் இன்றி தாக்கிவிட்டுச் சென்றள்ளார்கள். இந்த சம்பவம் ஏழாலை மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்றுள்ளது. இதில் காயப்பட்ட இருவர் தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றள்ளார்கள். சுன்னாகத்தில் உள்ள ஈ.பி.டி.பி முகாமில் உள்ளவர்களே இத்தகைய நடவடிக்கையில் ஈடபட்டதாக தெரிய வருகின்றது. இவர்கள் பகல் வேளையில் சுன்னாகம் மற்றும் மருதனார் மடம் பகுதிகளில…

  11. தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் கால இழுத்தடிப்புக்களை இனியும் அனுமதிக்காது. தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களாகவே தீர்மானிப்பார்கள்.... 27.06.07 அன்றைய காலக்கணிப்பு

  12. யாழ் - நாவாந்துறை காக்கைதீவு வீதியில் கிளைமோர் தாக்குதல்: இரு இராணுவத்தினர் பலி. வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நாவாந்துறை காக்கைதீவு வீதியில் ஈருறுளியில் சென்றுகொண்டிருந்த சிறீலங்கா காவல்துறையினர் மீது பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தாக்குதலையடுத்து தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது -Pathivu-

  13. பசுவதை கூடாது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஈழத் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியிடம் அண்ணா தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரான கவிஞர் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களை (சங்கராச்சாரியாரை) கைது செய்த போது தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? பசுவதை கூடாது என்று கூறும் நீங்கள்இ ஈழத்தில் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் உங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க ய…

  14. மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி புதன்கிழமை 27 யூன் 2007 05:53 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்படஇ இழப்புக்களுடன் இராணுவ…

  15. Posted on : 2007-06-28 பிரிட்டன் பிடியை இறுக்குவது ஏன்? ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை சர்வதேசம் கையாளும் முறைமைகள் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் குறை கூறியும் விசனம் தெரிவித்தும் வந்துள்ளோம். அந்த வரிசையில் இப்போது ஈழத் தமிழர் விவகாரம் குறித்து பிரிட்டன் நடந்துகொள்ளும் புதிய போக்குக் குறித்து குறிப்பிட வேண்டியிருக்கின்றது. லண்டனில் உள்ள புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் நீண்ட காலம் அங்கு தங்கியிருப்பவர். தமது பழைய வழைமையான நடவடிக்கைகளையே தொடர்ந்தும் மேற்கொண்டுவந்த அவரும், அவரது உதவியாளர் ஒருவரும் அங்கு கைதுசெய்யப்பட்டிருக் கின்றார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த சில அமைப்புகள் பிரித்தானிய அதிகாரிகளால் குடையப்பட…

  16. புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழில் நிபுணர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்…

  17. Posted on : Thu Jun 28 7:52:47 EEST 2007 கிழக்கில் முதல் கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல்கள் கிழக்கில் முதற்கட்டமாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின் கிழக்கில் முதற் கட்டமாக பிரதேச சபை, நகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவும் இரண்டாவது கட்டமாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 சதவீதமான பகுதிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சிய பகுதியும் சில தினங்களில் மீட்கப்படும் என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேர்தல்களை நட…

  18. "ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…

  19. இராணுவ பலத்துடனேயே தமிழருடன் இணக்கப்பாடு - சிங்களவர் மனதை வென்றெடுப்பது அவசியம்; வாஷிங்டனில் பீரிஸ் [24 - June - 2007] சிறுபான்மை தமிழ் சமூகத்தினருடன் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இராணுவ ரீதியில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்வது தேவையானதென்றும் இதன்மூலமே பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் ரீதியான ஆதரவை வென்றெடுக்க முடியுமெனவும் ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியிலேயே பீரிஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை இராணுவ ரீதியில் தனது பலத்தை வெளிப்படுத்த வேண…

  20. புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:34 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கல…

  21. வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் சிறீதரன் வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் ப…

  22. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …

    • 13 replies
    • 2.3k views
  23. விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்கள் வெலிக்கடசிறைச் சாலையில் வீரகேசரி இணையத்தளப்பிரிவு விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுக்கொண்ட என்ற சந்தேகத்தின் பேரில் புரட்சிகர விடுதலை இயக்க ஆரம்பித்துள்ள தென் பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர் கைது செய்யப்பட்ட இவர்கள் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் கொழும்பு மேலதிக நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அதே வேளை ஏற்கனவே விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 மலையக இளைஞர்கள் வெலிக்கடை சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்

  24. புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: பெர்னாண்டோ புள்ளே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது: ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்…

    • 2 replies
    • 2.9k views
  25. திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் தீவிபத்து 4 மீன் பிடி படகுகள் நிர்மூலம் நிஷாந்தி திருகோனமலை கொட்பே துறைமுகத்துக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது 4 ஆழ்கடல் மீன்பிடிப்ப்டகுகளில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை இப்ப்டகுகளில் தீவிபத்தையடுது அங்கே நின்ர கடற் படையினருக்கும் பொலிஸருக்கும் வேறு படகுகளிற்கு தீ பரவவிடாமல் கட்டுப்படுத்தியதாக திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் கீத் ஸ்ரீ தயானந்தா தெரிவித்தார். வீரகேசரி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.