ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
வாக்குறுதி அளித்தவாறு ஆயுதக்குழுக்களை மஹிந்தா நிராயுதபாணிகள் ஆக்கவில்லை அதனாலேயே புலிகளும் அரசும் மோதத் தொடங்கினவாம் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக தேர் தலுக்கு முன்னர் பலகோடி ரூபாக்கள் அர சினால் புலிகளுக்கு கொடுக்கப்பட் டன. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அரசு புலிகளுக்குக் கூறியது போன்று கருணா குழுவினரையும் ஏனைய ஆயு தம் தாங்கிய குழுக்களையும் நிராயுத பாணிகளாக்கவில்லை. இதனால் ஆத் திரம் கொண்ட புலிகளுக்கும் அரசுக் கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. புலிகளுக்கு அரசு நிதி வழங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும். இனிமேலும் காலம் தாழ்த்துவது கூடாது. இவ்வாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சந்திரிகா வழியில் மஹிந்தரும் "வெற்றிப் பட்டயம்' பெறுகிறார் தொப்பிகல காட்டுப்பகுதியை இலங்கை அரசுப் படை கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டன என்ற குதூகல அறிவிப்பு நேற்று தென்னிலங்கையில் மகிழ்வோடு வெளி யிடப்பட்டது. தொப்பிகல மீட்போடு கிழக்கு மாகாணம் முழுமையாக அரசுப் படைகள் வசம் வந்துவிட்டன என்றும் தெற்கில் சந்தோஷம் கொண்டாடப்படுகின்றது. தொப்பிகல ஆக்கிரமிப்புடன் கிழக்கு மாகாணம் முழு வதும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது என்ற கூற்றின் உண்மைத் தன்மையை நிஜ நிலை மையை காலம் தான் உறுதிப்படுத்த வேண்டும். முழு வதுமாக மீட்பு என்ற திருப்திக்குப் பின்னால் ஒளிந்து கிடக் கக்கூடிய பூரணத்துவத்தை அல்லது ஓட்டைகள், ஒழுக்கு களை கால ஓட்டம்தான் நமக்கு வெளிப்படுத்தும். அ…
-
- 5 replies
- 1.4k views
-
-
கொக்கட்டிச்சோலையில் மீளகுடியமர்ந்தவர்கள் மீண்டும் இடப்பெயர்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 100 குடும்பங்கள் அண்மையில் மீளவும் குடியமர்ந்தப்பட்டிருந்தமை தெரிந்ததே இவர்கள் அங்கு இடம்பெற்று வரும் வன்சம்பவங்கள் கொலைகள் காணாமல்போதல் போன்றவற்றால் மீளவும் பாதுகாப்பான இடம்தேடி இடம்பெயர்ந்துள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு புதன்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. யூன் மாதம் 10 ம் திகதி மகிழடித்தீவில் 27 அகவையுடைய கணவதிப்பிள்ளை ரஜீந்திரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். யூன் மாதம் 4ம் திகதி 27 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணப்பிள்ளை ராஜேந்திரன் காணாமல்போயுள்ளார். யூன…
-
- 0 replies
- 1k views
-
-
10.07.07 அன்ற தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 3 replies
- 1.8k views
-
-
-
திருகோணமலைக்கு மகிந்த இரகசிய பயணம் திருகோணமலைக்கு கடந்த திங்கள்கிழமை இரகசியப் பயணம் மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அங்கு நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் இராணுவ முகாம் ஒன்றுக்கும் பயணம் செய்த மகிந்த அங்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களையும் தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்புக்களின் போது மகிந்த கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை முன்னேற்றுவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. கிழக்கில் நிலவும் வறுமை, வேலையின்மை பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவதில் அரசாங்கம் ஆவலுடன் உள்ளது. எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத இந்…
-
- 1 reply
- 1.7k views
-
-
யாழில் கிளைத் தூதரகம்: கனடா நாடாளுமன்றமன்ற உறுப்பினர்களின் தொடரும் ஆதரவு [புதன்கிழமை, 11 யூலை 2007, 16:50 ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் கனடா நாட்டின் கிளைத் தூதரகத்தை அமைக்க அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். கனடா பிரதமர் ஸ்டீபன் கார்பருக்கு அஜக்ஸ் பிகெரிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடந்த 9 ஆம் நாள் எழுதிய கடிதம்: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் சீர்குலைந்திருப்பது குறித்து என்னுடைய ஆழ்ந்த கவலையை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். கொழும்பில் உள்ள கனடிய தூதரகத்தினரால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள வடக்கு - கிழக்குப் பகுதியில் சேவையாற்ற கனேடிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் வான்குண்டு வீச்சு: சிறுவன் உட்பட இருவர் படுகொலை- 11 பேர் படுகாயம் முல்லைத்தீவு அளம்பிலில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபீர் ரக வானூர்திகள் இன்று நடத்திய குண்டுவீச்சில் சிறுவன் உட்பட அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு வயதுக்குழந்தை உட்பட அப்பாவி பொதுமக்கள் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவுக்கு தெற்காக உள்ள அளம்பில் இராமசாமித் தோட்டம் பகுதியில் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக உள்ள மீன்வாடிகள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. குண்டுகள் வாடிகள் மீதும் அதன் பகுதிகள் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன்போது அப்பகுதியில் தொழில் நிமித்தம் நின்ற பொத…
-
- 7 replies
- 1.5k views
-
-
புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித…
-
- 12 replies
- 3.4k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பிற்கு மாறியவர்களே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் பலாங்கொடையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்க தரப்பில் இணைந்து கொண்டுள்ள அமைச்சர்களான ஹெகலிய ரம்புக்வெல,மகிந்த சமரசிங்க ஆகியோரே மகிந்த ராஜபக்சவை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் சார்பில் குரல் தரவல்ல அமைச்சர்களாக ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத் தரப்பில் இணைந்து கொண்டவர்களே இருப்பதாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது. நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன. எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்
-
- 39 replies
- 7k views
-
-
ஆசியாவில் ஆட்கடத்தலில் சிறீலங்கா முதலிடம் - சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் நேற்று கொழும்பு ரேணுகா ஹொட்டலில் சட்டவிரோத ஆட்கடத்தல், மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் அதில் உள்ள ஆபத்துக்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் சிறீலங்கா குடிவரவு, குடியகல்வு சட்டங்களை முறையாக அமுல்படுத்தாமை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றால் சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் சிறீலங்கா ஆசியாவில் முதலிடம் வகிப்பதாக சர்வதேச குடியேற்ற ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும் சில ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பெரந்தொகையானோர் ஐரோப்பாவிற்கு குடியமர்வதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். -ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பு படுவான்கரையில் பாலசுந்தரம் தவமணி (வயது 22) என்ற இளம்பெண்ணின் வீட்டுக்குள் உள்நுழைந்து அவரைப் பலவந்தமாக வெளியே இழுத்து வந்த சிறிலங்கா இராணுவத்தினர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளனர். படுவான்கரை விடுதிக்கல் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை (07.07.07) இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் அப்பகுதி மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே இச்சம்பவம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் குழுவாக வீடுகளில் படுத்து உறங்கி வர…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம். இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரடஸ்கர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாற்றத்துடன் தனது தூதுவர் நிலையில் இருந்து பணி மாற்றம் பெறவுள்ள ஹன்ஸ் பிரஸ்கரின் கிளிநொச்சி விஜயமானது பிரியாவிடை பெறும் நோக்கிலானது என்று இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன நேற்று நோர்வே தூதுவர் தனது கிளிநொச்சி விஜயம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அதனை அடுத்து வெளிவிவாகர அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன அவருடைய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்க சமாதான செயலகம் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார் -Pathivu-
-
- 3 replies
- 1.7k views
-
-
கிழக்கை மீட்பது குறித்து விமர்சிப்பது தேசத்துரோகம்: கேகலிய ரம்புக்வெல ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:14 ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ கிழக்கு மாகாணத்தை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுவது தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பது தேசத்துரோகம் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றுவதில் அர்த்தமில்லை. அது முக்கியத்துவமில்லாத ஒரு நடவடிக்கை என சிலர் தவறாக கதை பரப்பி வருகின்றனர். கிழக்கை உள்ளடக்காத ஈழத்தைப் பிரபாகரன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அங்குள்ள பொருளாதார நலன்களுக்காகவே பிரபாகரன் இதனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
தவறுதலான வெடிவிபத்து: 3 போராளிகள்- 2 போர் உதவிப்படை வீரர்கள் வீரச்சாவு ஜசெவ்வாய்க்கிழமைஇ 10 யூலை 2007இ 20:25 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் போராளிகள் மூவரும் போர் உதவிப்படை வீரர்கள் இருவரும் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். லெப். கேணல் தமிழ்வாணன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் தமிழ்ச்செல்விஇ கிளிநொச்சிஇ திருநகர் வடக்கை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தகுமார்இ 2 ஆம் லெப். சங்கீதன் என்று அழைக்கப்படும் இலக்கம் 36 கோணாவில்இ கிளிநொச்சியைச் சேர்ந்த சாரங்கப்பாணி சசிக்குமார்இ வீரவேங்கை முரசொலி என்று அழைக்கப்படும் இலக்கம் 645 ஏ அரிகரன் மருத்த…
-
- 2 replies
- 2.1k views
-
-
~ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு..........| பாகம் - 1 -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும்| எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்|, ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்|, ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்|, ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை| - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார். ~யாரோ சிலரின்| தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய| தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில…
-
- 1 reply
- 2.1k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்கத் தரப்பில் இணையும் சாத்தியம்: கொழும்பு ஊடகம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் அரசாங்தரப்பில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கிசோர் அடிக்கடி காணப்படுவதாகவும் அரசாங்க தரப்பு அமைச்சர்களுடன் அவர் ஒன்றாக இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது -Pathivu-
-
- 8 replies
- 3.1k views
-
-
பாணந்துறைக் கிராமத்தில் கலவரம்: மூவர் வெட்டிப் படுகொலை 30 வீடுகள் சேதம். பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள அம்பிலாவத்த முஸ்லிம் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் மூவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதுடன் 30 வீடுகளும் சேதமடைந்துள்ளன எனத்தெரிவிக்கப்படுகின்றது. இக் கிராமத்தில் கொள்ளையடிப்பதற்கென வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கோஷ்டி ஒன்றைக் கிராமமக்கள் பிடிக்க முனைந்தபோது கிராம மக்களுக்கும் கொள்ளைக்கோஷ்டியினருக்கும் இடையில் ஏற்பட்ட கை கலப்பில் கொள்ளையரின் வாள் வெட்டுக்கு இலக்காகி கிராம மக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இச்சம்பவத்தின்போது அங்குள்ள வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ச…
-
- 4 replies
- 2.2k views
-
-
அக்சன் பெய்ம் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவன தொண்டர் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் என்ற யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் அக்சன் பெயம் நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அது தொடர்பான அறிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கடந்தவருடம் ஓகஸ்ட் 29ம் திகதி அனுப்பி வைத்திருந்தது. கண்காணிப்புக் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
"யாழில் தெருக்களில் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூடல்கள்" யாழ்ப்பாணத்தில் பாடசாலை வகுப்புக்கள் தகரக் கொட்டகைகளுக்குள் நடத்தப்படுவதுடன், பாடசாலையின் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் வீதியிலேயே நடத்தப்படுவதாக IRIN என்ற செய்தி நிறுவனம் தனது ஆய்வுச் செய்தில் தெரிவித்துள்ளது. அச்செய்தி விவரம்: யாழ். குடாநாட்டை ஆழிப்பேரலை தாக்கி இரண்டரை வருடங்கள் கடந்த நிலையிலும் பருத்தித்துறை வல்வை சிவகுரு வித்தியாலயத்தைச் சேர்ந்த 432 மாணவர்கள் தமது பாடசாலையின் மீள் கட்டுமாணப் பணிகள் முடிவடைவதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பருத்தித்துறையில் உள்ள மற்றுமொரு பாடசாலையான வல்வெட்டித்துறை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் கட்டடப் பணிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசின் தெளிவற்ற கொள்கை. தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மீன்டும் பேச்சு வார்த்தையை தொடங்க நடவடிக்கைகை மேற்கௌ;ளுமாறு அனுசரனைப்பணியில் ஈடுபட்டுள்ள நோர்வேயைக் கேட்கவில்லை என்று தங்களது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. பலரைக்குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. ஜனாதிபதி மகிந்த தனது சகோதரர் பசில் ராஜபக்சவை நோர்வேக்க அனுப்பி நோர்வேயிடம் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இது தொடர்பான கடிதம் ஒன்றும் மகிந்தவினால் அனுப்பப்பட்டதாகவும் சிறிலங்காவின் உத்தியோக ப+ர்வ ஏடுகள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.இதனை நம்பி பன்னாட்டு ஊடகங்களும் இணையத்தளங்களும் தூக்கிப்பிடித்துக்கொண்டு செய்தி வெளியிட்டன.கொழும்பு ஆங்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நுணாவில் படைமுகாமில் குண்டுவெடிப்பு. தென்மராட்சி நுணாவில் சிறிலங்காப் படைமுகாமில் நேற்று முன்தினம் இரவு 9.00மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள லேக்கவுஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பலதடவை பலாலிப் படைத்தளம் நோக்கி காயமடைந்த படையினரை எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் இக்குண்டுவெடிப்புத் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள படைத்தரப்பு முற்றாக மூடிமறைத்துள்ளது. - சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-
-
மாங்குளத்தில் இராணுவ ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 5 பேர் பலி- 2 பேர் படுகாயம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மாங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர் தாக்குதலில் தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவு பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்- இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் "புதினம்" செய்தியாளரிடம் இராசையா இளந்திரையன் கூறியதாவது: மாங்குளம் அருகாமையில் உள்ள கிராமத்துக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக தமிழீழ சுகாதார சேவைகள் பிரிவின் பணியாளர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போத…
-
- 2 replies
- 1.6k views
-
-
தொப்பிகலவின் "தோரா போராவை' படைகள் நேற்றுக் கைப்பற்றியதாகத் தகவல் இலங்கை கொமாண்டோக்கள், தொப் பிகல வனாந்தரப் பகுதியில், பரந்த கற்பாறைப் பீடமொன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் என நேற்றுத் திங்கட்கிழமை இரணுவம் கூறியதாக, ஏ.பி.செய்திச் சேவை தெரிவித் தது. கொமாண்டோக்கள் பாரிய கற்பாறைப் பீடத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு அவர்களால் "தோரா போரா'' என புனை பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து புதிய கொமாண்டோக்கள் அப் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவி ரப்ப டுத்தினார்கள் என இராணுவம் தெரி வித்தது. புல்வெளிகளிலும் புதர்களுக்குள் ளும் 200 புலித் தீவிரவாதிகள் வரை பதுங்கியி ருக்கலாம் என்ற நோக்கில், இத்திடீர் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இம் மாத இறுதிக்குள், கிழக்கிலங்கை அரச கட்…
-
- 11 replies
- 3.3k views
-