Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்கள், முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பியினர் திட்டம் கட்சியின் முக்கியஸ்தர் அனுரகுமார திஸநாயக்கா செவ்வி தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட மூவின மக்களையும் ஒன்றுதிரட்டி, தற்போதைய அரசைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்ற தீர்மானம் எடுத்துள்ளது ஜே.வி.பி. ஜே.வி.பியை தமிழர் மற்றும் முஸ்லிம் களுக்கு விரோதமான இனவாதக் கட்சியா கப் பொய்யாகச் சோடித்தவர்கள் தடம் தெரி யாமல் மறையும் காலம் வந்துவிட்டது என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கின்றது. ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் எம்.பியு மான அனுரகுமார திஸநாயக்கா நேற்று உதயனுக்கு அளித்த விசேட செவ்வியில் இவ்விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: தமிழ் முஸ்லிம் உ…

  2. கண்காணிப்புக் குழு உறுப்பினரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்க வேண்டுகோள் இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 30 ஆக உள்ள யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் சோல்பேர்க் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலையில் தம்மிடம் உள்ள 30 உறுப்பினர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது கடினம் என்றும் தமது பணி மிகவும் சிக்கலானது என்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார் -பதிவு - - - - - - - - - - - - இலங்கை போர் நிறுத்தக் கண…

  3. மட்டக்களப்பில் இராணுவ முகாமாக தமிழர் வழிபாட்டுத் தலம்: விடுதலைப் புலிகள் கண்டனம் மட்டக்களப்பில் உள்ள புகழ்பெற்ற தாந்தாமலை தமிழர் வழிபாட்டு ஆலயத்தை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து இராணுவ முகாமாக மாற்றியமை ஒரு கலாச்சார படுகொலை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களை சிறிலங்கா இராணுவம் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வருகிறது. தமிழ் மக்களின் கலாசார உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இராணுவப் பயன்பாட்டுக்காக அவற்றை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்துகிறது. அண்மையில் மட்டக்களப்பில் உள்ள மிகப் புகழ்பெற்ற தாந்தாமலை இந்து ஆலயத்தை சிறிலங்கா …

  4. கருணா குழுவினரின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: கண்காணிப்புக் குழு மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுவின் வாராந்த அறிக்கை (ஜூன் 25- ஜூலை 1)யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலையில் கருணா குழுவிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் நடமாடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. கண்காணிப்புக்குழுவால் பதிவு செய்யப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் குறைவாக இருப்பினும் மட்டக்களப்பு நகரில் கொள்ளை அச்சம் அதிகரித்து வருகிறது. கருணா குழுவினர் என சந்தேகிக்கப்படுவோரால் மேற்கொள்ளப்பட்ட …

  5. இணைத்தவைமை நாடுகளின் மாநாடும் எதிர் விளைவுகளும் - நா.யோகேந்திரநாதன் ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இணைத்தலைமை நாடுகளின் சமாதான முயற்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பாக நம்பிக்கை இழந்து கொண்டிருந்த நிலைதான் காணப்பட்டது. இது தொடர்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் போர் நிறுத்தத்தை சரியாகக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்பதைத் தெட்டத்தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவோ போர் நிறுத்த மீறல்களைப் பதிவு செய்வது மட்டும் எனத் தனது பணிகளைச் சுருக்கிக் கொண்டு தனது பலவீனமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. இதேவேளையில் இம்மாநாடு இடம்பெற்றிருக்கும் போதே இது ஒரு வழமையான ச…

  6. ஈ.பி.டி.பியினருக்கு, பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும்! ஜ செவ்வாய்கிழமைஇ 10 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.டி.பி. யின் அலுவலகங்களில் இருந்து வரும் டக்ளசின் தோழர்கள் கடந்த ஐந்து நாட்களாக பச்சைத் தண்ணியுடனும் வெறும் பருப்புக் கறியுடனும் சோறுசாப்பிட்டு வருகின்றனர். என்னப் பிரச்சினை என்று கேட்டால்! கடைத் தெருவுக்கு வந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பனாகொடை புகழ் கருணாவின் நபர்கள் மிரட்டல்கள் விடுத்திருக்கின்றராம். இதனால்தான் பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும் சாப்பிடவேண்டியுள்ளது. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இனிய பாரதி (இப்போது புளித்த பாரதி) ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை தலைகீழாக தொங்கவிட்டுக்கொண்டு அலுவலகம் முன்பாக மோட்டார் சைக்க…

  7. அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்சினையே சரியான களம். அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்க ஈரானைவிட ஈழப் பிரச்னையே சரியான களம் என்பதை இந்திய இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனில் அவர் எழுதியுள்ள கட்டுரை: இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை …

  8. முல்லைத்தீவு- கிளிநொச்சியைக் கைப்பற்றும் யுத்தத்துக்கு ஆதரவளிப்போம்: ஐ.தே.க முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நடத்தினால் ஆதரவளிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியதாவது: சிறார்களின் வாழ்க்கையை ஏலத்திலே விட்டுவிட்டு கேளிக்கைக்காக குடும்பிமலை (தொப்பிக்கல) யுத்தத்தை மகிந்த அரசாங்கம் நடத்துகிறது. குடும்பிமலை யுத்தத்தை ஊடக கேளிக்கைகளுக்காக அரசாங்கம் முக்கியத்துவப்படுத்துகிறது. இதே பகுதியை 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் நாள் அரசாங்கம் ஆக்கிரமித்திருந்தது. கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம், சி…

    • 5 replies
    • 1.3k views
  9. மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேச உயர்பாதுகாப்பு வலயத்தின் உள்நோக்கம் என்ன? 08.07.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு

  10. இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் நோர்வே மெத்தனப்போக்கு [09 - July - 2007] -அமந்த பெரேரா- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேசியவாத அரசாங்கத்திற்கும் தமிழினக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மத்தியஸ்த நாடு என்ற முக்கிய பாத்திரத்தை நோர்வே மீண்டும பொறுப்பேற்பதனால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இவ்வேளையில், ஸ்கண்டினேவிய நாடான நோர்வேயின் அதிகாரிகள் இவ்விடயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏற்கனவே செய்திகள் வெளியானது போன்று, விசேட சமாதானத் தூதுவர் ஜொஹான் ஹன்ஸன் பவர் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கு செல்வதற்கானத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நோர்வேத் தூதரகப் பேச்…

  11. எரிக்சொல்ஹெய்ம் ஒரு திருடர் என்கிறது நோர்வே அமைப்பு [09 - July - 2007] இனப்பிரச்சினை சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையேயான சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கும் மத்தியஸ்த செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவரும் அமைச்சருமாகிய எரிக் சொல்ஹெய்ம் ஒரு திருடர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை "நேற்" (NAT) எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான நோர்வே நாட்டு அமைப்பு தெரிவித்து அவர்மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. மேற்படி, அதனுடைய அறிவிப்பு ஒன்றில் இவ்வாறு நோர்வே சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் பற்றி வெளிப்படுத்தியுள்ள தகவல்களுக்கேற்ப அவரை நோர்வே மொழியில் "நாமெயா" என்று குறிப்பி…

    • 2 replies
    • 2.7k views
  12. ஈ.பி.டி.பி.- கருணா குழு மோதல் கிழக்கில் தீவிரமடையும் அறிகுறி இணையத்தளங்கள் ஊடாக இருதரப்பும் "சர்' ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், கருணா பிரிவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலி களும் தத்தம் இணையத்தளங்கள் வாயிலாக, ஒன்றை ஒன்று மும்முரமாகச் சாடத் தொடங்கி யுள்ளன என்று ஆங்கில வார இதழொன்று தெரிவித்துள்ளது. இந்தச் சாடல் சமர் குறித்து, அது மேலும் பின்வருமாறு விவரித்துள்ளது: இவ்விரு அமைப்புகளும் கிழக்கு மாகா ணத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட் சித் தேர்தல்களில் ஈடுபடுவதற்காக தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. அதேவேளை, எதிரும் புதிருமான சாடல் சமர்களையும் பிரகடனப்படுத்தியுள்ளன. இவற்றுக்காக, இரு தரப்புகளும் தம் இணை யங்களை தக்கவகையில் பெரிய அளவில் பய…

  13. கல்கிசையில் தேடுதல் 39 பேர் பொலிஸாரால் கைது [Monday July 09 2007 06:56:21 AM GMT] [pathma] கல்கிசை பிரதேசத்தில் நேற்று அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பhரிய தேடுதல் நடவடிக்கையின்போது தமது அடையாளத்தினை உறுதிப்படுத்த தவறிய 39 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பாரிய தேடுதல் நடவடிக்கை அதிகாலை 3.00 மணி முதல் காலைவரை இடம்பெற்றுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிலர் தேசிய அடையாள அட்டையினை தம்வசம் த்திருக்கவில்லையெனவும் தெரியவருகின்றது.சந்தேகத்தின

  14. மக்கள் கவனத்தைத் திசை திருப்ப போரியல் போக்கை நாடும் அரசு இலங்கைத் தீவின் நிலைமை இன்று மிக மோசம். சகல துறைகளிலும் பெரு வீழ்ச்சி. பொருளாதாரம் படுத்துவிட்டது. வாழ்க்கைச் செலவு என்றுமில்லாதவாறு எகிறிவிட்டதால் மக்களின் அன்ற ?975; வாழ்க்கை அவலமாகி விட்டது. ஒரு புறம் விலைவாசி உயர்வு. மறுபுறம் ரூபாவின் பெறுமதி பெருவீழ்ச்சி. ஏற்றுமதி சரிந்து விட்டது. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன. அந் நிய முதலீட்டாளர்கள் மூடை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற ஆரம்பித்து விட்டனர். யுத்தச் செலவினம் எல்லை கடந்ததால் நாடு தடு மாறுகின்றது. தேசத்தின் வருமானமும் தேய்ந்துவிட்டது. வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர் கள் அங்கிருந்து வெளிநாட்டுப் பணத்தில் அனுப்பும் ஊதிய உழைப…

  15. சரிவை நோக்கிய திசையில் மகிந்த அரசு மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த நாள் தொடக்கம் தன் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக் கட்சிகளுக்குள்ளேயும், தனக்கெதிராக செயற்பட முற்படுபவர்களை தந்திரோபாயமாக கையாண்டு வந்தார். ஜே.வி.பி. யினுடைய ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும் பின்னர் ஜே.வி.பி உள்ளேயிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும், அதனை தந்திரமாக வெட்டிவிட்டார். நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைக்க ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். சிறுபான்மை கட்சிகளை விலைக்கு வாங்கினார். இதில் மூன்று இலாபங்கள் அவருக்கிருந்தன. ஒன்று ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவது, நாடாளுமன்றத்தில் தனக்கான பலத்தை தக்கவைப்பது, மற்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்துவது. இவற…

  16. யப்பானின் நகர்வுகளும் அதற்கான பின்னணிகளும் -மனோகரன்- பொதுவாக யப்பானியப் பொருட்களுக்கு இலங்கை மக்களிடையே அதிக கவர்ச்சியுண்டு. யப்பானியப் பொருட்கள் தரமானவையென்ற நம்பிக்கை இந்தக் கவர்ச்சிக்கு அடிப்படையானவையாக இருக்கலாம். அடுத்தது கடந்த முப்பதாண்டுகால இலங்கைச் சந்தையை அதிகமும் யப்பானே வைத்திருந்ததும், ஏகபோகம் செய்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னான காலத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பியப் பொருட்கள்தான் இலங்கையில் அதிகமும் புழக்கத்திலிருந்தன. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. அதிலும் ஐ.தே.க ஆட்சியில் மளமளவென்று யப்பான் இலங்கைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. இதன் உ…

  17. துணை இராணுவக்குழுவின் சிறார் படைச்சேர்ப்பு: ஐ.நா. செயலாளரிடம் அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் சிறார் படைச்சேர்ப்பு தொடர்பான புதிய அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகமான பான் கீ மூனுக்கு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக கருணா குழுவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் பாதுகாப்பு அமைப்பான யுனிசெஃப்பிற்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் யுனிசெஃப்பின் கொழும்புப் பகுதியின் பாதுகாப்புத் தலைவரான அன்டி புறூக்ஸ் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் சிறார்களின் உரிமைகளுக்கு எதிரா…

  18. கிழக்கில் முளைக்கும் புத்தர்களால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் கிழக்கில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை தோற்றுவிப்பதில் ஒரு சக்தி மிக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. காலத்துக்குக் காலம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஏதோவொரு திட்டத்தைத் தீட்டி கலவரங்களைத் தோற்றுவித்து வருகின்றனர். மிகக் கூடுதலாக சமய விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தியே பேரினவாத சிங்கள சக்திகள் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டிப்பார்க்கின்றன. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இந்த அவலம் இடையிடையே தலைதூக்கவே செய்கின்றது. பௌத்த இனவாதச் சக்தியொன்று அதிலும் தீவிரப் போக்குக் கொண்ட சக்தியொன்று சிங்கள சமூகத்தை முஸ்லிம் சமூகத்துக்கெதிராகத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றது. மு…

    • 1 reply
    • 1.2k views
  19. சர்வதேசத்தின் அரசியல் முற்றுகைக்குள் மகிந்த அரசு சிக்குகின்றதா! ஒன்றரை வருட மகிந்தரின் ஆட்சியில் சிங்கள அரசு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது. சர்வதேசத்தில் இருந்துவரும் அரசியல் நெருக்கடி களாலும் - உள் முரண்பாட்டால் எழுந்த அரசியல் சிக்கல்களாலும் மகிந்த அரசு தடுமாறுகின்றது. தமிழருக்கு எதிரான இனக்குரோதச் செயற்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி வெளிநாடுகள் மீது வெறுப்புணர்வு காட்டல் என்ற கட்டத்திற்கு மகிந்த அரசுசென்றுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் கொழும்பு அரசாங்கம் மீது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் எல்லை கடந்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகிற்குக் கூறிக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்…

  20. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அதிகார வர்க்க ஊடகங்களின் சதி! ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்... - கலைஞன் கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்க வேண்டுமென இந்திய அதிகார வர்க்க ஊடகங்கள் மத்திய அரசை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இலங்கை தனக்கு தேவையான உதவிகளை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ பெறக்கூடாதென கண்டித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியாவே இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமென அறிவித்தார். இதையடுத்து இலங்கையிலும் இந்தியாவிலும் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்து பின்ன…

  21. ஞாயிறு 08-07-2007 22:40 மணி தமிழீழம் [செந்தமிழ்] கருணா - ஈ.பி.டி.பி குழுவிற்கு இடையில் சிறீலங்கா இராணும் சமரசம் கிழக்கில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா அரச துணை ஆயுதக் குழுக்களான கருணா குழுவிற்கும் ஈ.பி.டி.பியிற்கும் இடையில் தோன்றியுள்ள முறுகல் நிலையை சமரசம் செய்வதில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வருகின்றது கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.டி.பி அமைப்பு செயல்படுவதை கருணா குழு தடை செய்துள்ளதுடன் அந்த குழுவின் உறுப்பினர்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது இந்த இரு துணை ஆயுதக் குழுக்களுக்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதலில் கருணா குழுவின் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் இதனை அடுத்து ஈ.பி.டி.பியினர் மீது பெருமெடுப்பில் தாக்குதல் நடத்துவதற…

    • 1 reply
    • 1.4k views
  22. இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரச…

  23. மக்களை ஏமாற்றுவதற்கே யுத்தம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே பேச்சு வீரகேசரி நாளேடு சமாதான செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தையா ? அல்லது யுத்தமா ? என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்குமாயின் தற்போது ஏன் யுத்தம் செய்யப்படவேண்டும் ? என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான தகவல்கள் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அரசாங்கம் மக்களை ஏமாற…

  24. இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)- சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும். அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்துறை…

  25. மகிந்தவின் "புலிகளுடனான தேர்தல் உடன்பாடு" என்ன?: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 08:06 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதாக கூறப்படும் உடன்பாடு என்ன என்பது குறித்து கொழும்பு வார ஏடான சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: இந்த உடன்பாட்டின் போது போலியான வீடமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பல மில்லியன் ரூபாய்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவிலாறு பகுதியில் 15,000 சிங்கள விவசாயிகள் நீரின்றி நெருக்கடிகளுக்கு உள்ளன போதும், பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மூதூரில் இடம்பெயர்ந்த போதும், கடும் மோதல்களில் நூற்றுக்கணக்கான…

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.