Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Written by Ellalan - May 27, 2007 at 12:12 PM சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்தித்திருந்தார். என்னிடம் அதற்கான …

    • 0 replies
    • 579 views
  2. சிறிலங்காவிற்கான அனைத்துலகத்தின் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம். சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மனித உரிமை மீறல்களை தடுக்காது போனால் அரசுக்கான அனைத்துலகத்தின் உதவிகளை அந்த நாடுகளின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்போவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளதாவது: எமது அமைப்பு சிறிலங்கா தொடர்பான விடயங்களில் செயற்திறனுள்ள நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, யப்பான் உட்பட பல நாடுகளுடன் சிறிலங்காவில் உள்ள தற்போதைய நிலை தொடர்பாக தொடர்புகளை கொண்டுள்ளது. எனினும் நாம் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தும்…

  3. May 27, 2007 at 12:25 PM ஆள்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் மனிதப் படுகொலைகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி உடன் தலை யிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்வலியுறுத்தி உள்ளது. நேற்று இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட் டத்தில் இது சம்பந்தமான பல யோசனைகள் நிறைவேற் றப்பட்டன என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஹால் ஜெயமான தெரிவித்தார். ஆள்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் மனிதப் படுகொலைகள் ஆகியவற்றைத் தடுக்க ஜனாதிபதி நட வடிக்கை எடுக்கும் அதேவேளை, இவ்வாறான செயல் களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண் டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுள்ளதாகவும் நிஹால் ஜெயமான தெரிவித்தார்…

    • 0 replies
    • 528 views
  4. கொழும்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, துறைமுகத்தில் இறக்கப்பட்ட ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்டதா?: படைத்தரப்பினர் சந்தேகம். சிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இருந்து இறக்கப்படும் ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்ட குண்டா? என படைத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இத்தகவலை தனது பாதுகாப்பு ஆய்வில் வெளியிட்டுள்ள 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண்டிய பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இது…

  5. ஞாயிற்றுக்கிழமைஇ 27 மே 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இருந்து இறக்கப்படும் ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்ட குண்டா? என படைத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இத்தகவலை தனது பாதுகாப்பு ஆய்வில் வெளியிட்டுள்ள 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண்டிய பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இது தூர இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்படும் குண்டு. படையினரின் பேரூந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படைத்தரப்பை…

    • 0 replies
    • 570 views
  6. ஞாயிற்றுக்கிழமைஇ 27 மே 2007 அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று அமர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் குழு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அரசையும் அதன் அபிவிருத்தித் திட்டங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகங்கள், அரச ஊழியர்கள், தொழிற் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இப் பொலிஸ் குழுவின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இப்பொலிஸ் குழு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பு வைத்திருப்போர், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடய…

    • 0 replies
    • 586 views
  7. -ேசா.ஜெயமுரளி- இலங்கையின் இனக்குழும சிக்கலை தீர்த்து வைப்பதற்கு பிரித்தானியா எவ்வாறு உதவலாம் என்கின்ற வகையில் கடந்த மே மாதம் 02 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மூன்று மணிநேரம் சூடான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முக்கிய பகுதிகளை `ஞாயிறு தினக்குரல்' தந்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்று லவ், இலங்கையில் ஐ.நா.வின் அனுசரணையுடன் அமைக்கப்பட வேண்டுமென சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்படும் மனிதஉரிமைகள் கண்காணிப்பு ஆணைக்குழு குறித்த பிரித்தானிய அரசின் கருத்துப் பற்றி கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் கலாநிதி குவெல்ஸ் பதிலளித்திருந்தார். அமைச்சர் தனது பதிலில் மேலும் க…

  8. நாடுபூராவும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள், கைது, காணாமல் போதல் போன்ற மிக மோசமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் அது தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் கண்டனங்கள் எழுப்பப்படும் நிலையில் அதனை தட்டிக்கழிக்கும் போக்கொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதையே காணக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் மிக மோசமான வன்முறைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையொன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் அயல்நாடான இந்தியா மற்றும் அமெரிக…

  9. சனி 26-05-2007 19:40 மணி தமிழீழம் [மயூரன்] யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடகிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் - ஜனாதிபதி தற்போது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் யுத்த முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லது அது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதே உடங்கள் தவறாகப் புரிந்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் புரிந்து வருவதாக பாரியளவில் பரப்புரைகளை மேற்கொண்டுவருதாகத் குறிப்பிட்டுள்ளார். யார் எதைக்கூறினாலும் அரச படைக…

  10. இன நெருக்கடிக்குத் தீர்வுகாண இந்திய மத்தியஸ்தம் அவசியம் - இலங்கையர்கள் நம்புவதாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஹக்கீம் [27 - May - 2007] சென்னையிலிருந்து எம்.ஏ.எம்.நிலாம் இலங்கைப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் அவசியமென இலங்கையர்கள் நம்புவதாக, தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழகத் தலைநகர் சென்னையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வைக் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் தேவை என இலங்கை முழுவதும் நம்புவதாகவும் அவர் அங்கு சுட்…

  11. ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு மட்டும் மாதம் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபா சம்பளம்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் ஆலோசகர்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் எட்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றது. மேலும் அவரது ஒருங்கிணைப்பு செயலாளர்களுக்கு இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 410 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. மேலும் தொலை பேசி மற்றும் எரிபொருள் செலவினங் களுக்கும் வழங்கப்படுகின்றன. இவர்களில் வண.மாத்தனே அமர வன்ச தேரர், ஜயந்த தனபால, ஜயரத்ன பி.விஜயக்கூன், ஹரீந்திர விதானகே, வண வல்பொல பியானந்ததேரர், காமினி குணரத்ன மஞ்சு ஹொட் தொட்டுவ மற்றும் அனுரா சொலமன்ஸ் என்போர் ஜனாதிபதியின் ஆலோ சகர்களாக கௌரவ நிலையில் பணி யாற்றுகிறார்கள். சஜின் வாஸ் குணவர்த் தன மாத்திரம் ஒருங்கிணைப்புச் செ…

    • 1 reply
    • 865 views
  12. ஒரு புறம் ராஜபக்‌ஷ சகோதரர்கள் அன்கோ, மறுபுறம் புலிகள் நாட்டை அழிப்பதாக ஐ.தே.க. தலைவர் குற்றச்சாட்டு [27 - May - 2007] * பலவீனமான நிலையில் புலிகளுடன் பேசமுடியாதென்கிறார் -ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் அவரது சகோதரர்களும் இணைந்து கொண்டு ஓரு புறம் நாட்டை அழிவுப்பாதையிலிட்டுச் செல்கின்றனர். மறுபுறம் புலிகள் நாட்டை அழிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதுபோன்றதொரு சூழ்நிலையில் ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென தெரிவித்தார். பிட்ட கோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கல்விச் சேவையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் கலந்துகொண்டு …

  13. தென்னிலங்கையின் காய்ச்சலுக்கு இலக்காகித் தடுமாறும் பிரிட்டன் "தீர்ப்பு நமது பக்கத்துக்குச் சார்பாக அமைந்தால் நீதி பதி நல்லவர். ஆனால் அவரின் தீர்ப்பு எதிராளி பக்கத் துக்கு சார்பாக அமைந்தால் நீதிபதி பக்கச்சார்பானவர்.' சர்வதேசம் குறித்து தென்னிலங்கைச் சிங்களம் கொண்டிருக்கும் கருத்தும் நிலைப்பாடும் இதுதான் போலும். இலங்கை இனப்பிரச்சினை, அதனால் மோசமாக வெடித்திருக்கும் போர், அந்த யுத்தத்தினால் ஏற்பட் டுள்ள பெரும் மனிதப் பேரவலம் போன்றவை குறித் தெல்லாம் கவனமும் அதிக சிரத்தையும் கொண்டுள்ள பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களின் குழு ஒன்று இவ்விடயம் குறித்து கருத்து வெளி யிட்டிருக்கின்றது. அக்கருத்துகள் தென்னிலங்கையைக் கொதித்துச் சீற வைத்திருக்கின்றன. புண…

  14. இலங்கைக்கான நிதி உதவியைக் குறைக்குமாறு ஜப்பான் மீது அழுத்தம் ஆனால் அதற்கு அந்நாட்டு அரசு மறுப்பு இலங்கைக்கு மிகக் கூடுதலான நிதி உதவி வழங்கும் ஜப்பானை, அதனைக் குறைக்குமாறு சர்வதேச மனித உரிமை கள் அமைப்பான "ஹியுமன் றைட்ஸ் வார்ச்' பெரும் அழுத்தம் கொடுத்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை நிறுத்து வதற்கு, வழிக்குக் கொண்டுவரும் விதத் தில், நிதி உதவியை வெட்டவேண்டும் என்று மேற்படி மனித உரிமை அமைப்பு ஜப்பானிடம் கேட்டுள்ளது. இலங்கையில் நடைöறும் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கு உட னடியாக நடவடிக்கை எடுக்காவிடில் நிதி உதவிகளைக் குறைக்கப்போவதாக ஜப்பான் எச்சரித்தால் அது இலங்கை அரசிடம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று ஹியுமன் றைட்ஸ் வார்ச்சின…

  15. சாவகச்சேரியில் இரு இராணுவம் பலி யாழ்பாணம் தென்மராட்ச்சி மீசாலைப்பகுதியில் வியாழக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் சிறீலங்கா இராணுவத்தினர் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தையடுத்து சிறீலங்கா படையினர் பெருமளவில் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி ஏ- 9 பகுதிக்கு மேற்காகவும், மந்துவில், டச்சு வீதி மற்றும் மீசாலைப்பகுதியிலும் மேற்கொண்டுள்ளதாக சாவகச்சேரி குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/

    • 0 replies
    • 709 views
  16. ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஜரோப்பிய ஒன்றியம் அடுத்த வருடத்திற்கு நீடிப்பதற்கு ஆலோசிப்பதையிட்டு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை ஜரோப்பிய ஒன்றிய தலைமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. கடிதத்தின் முழு வடிவம் இங்கே கிளிக் செய்யவும் (pdf) -Sankathi-

    • 5 replies
    • 2.9k views
  17.  சனி 26-05-2007 18:20 மணி தமிழீழம் [மயூரன்] KY-11 ரக ராடர் கொள்வனவுக்காக கோத்தபாய ராஜபக்ச இந்தியா பயணம் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியா சென்றுள்ளார். இவரது இந்தியப் பயணம் இந்தியாவிடமிருந்து ராடர்களைக் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே அமைந்துள்ளதாக கொழும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியவிடமிலிருந்து KY-11 ரக ராடர்களை கொள்வனவு செய்யும் பொருட்டு புதுடெல்லி சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ச உயர்மட்டப் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார். சிறீலங்காவால் கேட்கப்படும் KY-11 ரக ராடார்களை சிறீலங்காவுக்கு வழங்குவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்பதால் அதனை வழங்க மறுத்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியா சென்ற…

    • 1 reply
    • 1.1k views
  18. சனி 26-05-2007 18:29 மணி தமிழீழம் [மயூரன்] நான்கு மிக்-29 ரக யுத்த விமானங்கள் மற்றும் நான்கு எம்.ஜ-24 ரக யுத்த உலங்கு வானூர்த்திகள் கொள்வனவு செய்யத் அரசாங்கம் தீர்மானம் சிறீலங்கா அரசு நான்கு மிக் - 29 ரக யுத்த விமானங்களையும் நான்கு எம்.ஜ - 24 ரக யுத்த உலங்கு வானூர்த்திகளையும் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது. இந்த யுத்த வான்கலங்களைக் கொள்வனவு செய்வதற்காக விமானப்படை பொறியியலாளர் ஏயார் வைஷ் மார்ஷல் பிரசாந்த டி சில்வா தலைமையில் விசேட குழுவொன்று மிக விரைவில் ரஷ்யா மற்றும் உக்கிரேன் நாட்டுக்கச் செல்லவுள்ளது. ஏற்கனவே மிக் - 29 யுத்த விமானங்களுக்காக 800 கோடி இலங்கை ரூபாக்களை ஒதுக்கியுள்ள சிறீலங்கா அரசாங்கம் மேலும் நான்கு எம்.ஜ - 24 யுத்த உலங்கு வானூர்திகள…

    • 1 reply
    • 1.2k views
  19. ஆக்கிரமிக்கக்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையில் 27 படை முகாங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு படுவான்கரையைச் சூழ சிறீலங்காப் படையினரால் 27 படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. மட்டக்களப்பின் பிரதான படைமுகாங்களில் இருந்த படையினரில் பெரும்பாலானோர் புதிதாக அமைக்கப்பட்ட படைமுகாங்களில் நகர்த்தப்பட்டுள்ளார். 27 படைமுகாங்களில் பிரதான முகாங்கள் மற்றும் மினி முகாங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இந்த படைமுகாங்களை பாதுகாக்கும் காவரண்களை படையினர் அவசர அவசரமான அமைந்து வருகின்றனர். ஆக்கிரமித்த மக்கள் குடியிருப்புக்களையும் மக்களின் வீடுகளையும் மையப்படுத்தியே இப்படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினர் தற்பொழுது குடும…

    • 3 replies
    • 1.4k views
  20. ஞாயிறு 27-05-2007 01:31 மணி தமிழீழம் [சிறீதரன்] பருத்தித்துறையில் படைப் புலனாய்வாளர்களினால் இளைஞன் கடத்தல் பருத்தித்துறை மணியகாரன் சந்தியில் வைத்து இளைஞர் ஒருவர் படைப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை காலை இக்கடத்தல் இடம்பெற்றுள்ளது. கடத்தப்பட்டவர் கரவெட்டியைச் சேர்ந்த 27 அகவையுடைய ஆறுமுகம் வீரதீபன் என்ற இளைஞனே கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீதியில் வழிமறிக்கப்பட்ட இளைஞனை வெள்ளைச் சிற்றூர்தியில் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட இளைஞன் பல்லப்பை படைப்புலனாய்வாளர்களின் வதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நன்றி பதிவு

  21. இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது - பாரதீய ஜனதாக் கட்சி இந்தியா, சிறீலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பாரதீய ஜனதாக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் செயலாளரும். நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.pathivu.com/

    • 4 replies
    • 1.1k views
  22. ராஜபக்ச அரசின் நெருக்கடியும் சர்வதேச நன்கொடையாளர்களும் -புரட்சி (தாயகம்)- கடந்த வாரம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, சுவிடன், யப்பான், நோர்வே, ஜேர்மனி, சுவிற்லாந்து ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் தூதரக அதிகாரிகளும் ஒன்றுகூடி சிறிலங்காவிற்கு எதிர்காலத்தில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திக்கான நிதியுதவி வழங்குவதானால் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான பத்துக் கடப்பாடுகளை அறிக்கையாக வெளியிட்டார்கள். இதன்பின் யப்பானிய விசேட தூதுவரான யசுசி அக்காசி மற்றும் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரான அலெக்சாண்டர் டௌனர் ஆகியோர்; தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்ப…

  23. சிறிலங்கா மீது ஜப்பான் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம். சிறிலங்காவிற்கு மிகவும் அதிகளவு நிதி உதவிகளை வழங்கிவரும் ஜப்பான் சிறிலங்கா மீது அதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எனினும் ஜேர்மனி மற்றும் பிரித்தானிய ஆகிய அரசுகளின் தீர்மானங்களை பின்பற்றி சிறிலங்காவிற்கான நிதி உதவிகளை மட்டுப்படுத்தும் நோக்கம் ஜப்பானுக்கு இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் அதிகாரிகள் உடனான சந்திப்பின் பின்னர் இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பகத்தனை சேர்ந்த சோபி றிச்சார்ட்சன் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு சிறிலங்காவில் மனித உரிமைகள் மோசமடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 100,0…

  24. சாவகச்சேரி தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்தவர் பலி. யாழ். சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக உள்ள இராணுவ காவலரண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்தியோருக்கும் இராணுவத்தினருக்கும் இடையே 10 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. படுகாயமடைந்த இராணுவத்தைச் சேர்ந்தவர் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…

  25. பௌத்த சங்க பிரதிநிதிகளை சந்திக்க பிரிட்டன் தூதர் மறுப்பு பௌத்த சங்கங்களின் சம்மேள னப் பிரதிநிதிகளை சந்திக்க கொழும்பி லுள்ள பிரிட்டிஷ் தூதுவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக மேற்படி பௌத்த சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் பிரிட்டிஷ் தூதுவர் சிவில் சமூகங் களை சந்திக்கப் பயப்படுகிறார். பயங் கரவாத பிரச்சினை தொடர்பாக பிரிட் டிஷ் அரசாங்கமும் இலங்கையிலுள்ள அதன் தூதுவரும் மேற்கொள்ளும் நட வடிக்கைகள் எம்மை கவலை கொள்ளச் செய்துள்ளன. பிரிட்டனுடனான இலங்கை யின் உறவுகளை பெரிதும் பாதிக்கும் வகையில் அலுவல்கள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட் டுள்ளது உதயன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.