Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுன்னாகத்தில் வீட்டுக்குள் கைக்குண்டு வீச்சு யாழ்ப்பாணம் ஊரடங்கு வேளையில் வீட்டிற்கு கைக்குண்டு வீச்சு மேற் கொள்ளப்பட்ட போதிலும் கைக்குண்டு வெடிக்காமையால் வீட்டில் உள்ளவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்கள். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம் பெற்ற இக்கைக்குண்டு வீச்சினால் வீட்டுக் கூரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. சுன்னாகம் பூதராயர் கோவிலடியைச் சேர்ந்த சாயீஸ்வரன் என்பவருடைய வீட்டின் மீதே இக் கைக்குண்ட வீச்சு இடம் பெற்றது. இராணுவத்தினர் கைக்குண்டு வீச்சு இடம் பெற்றவேளையில் அந்தப் பகுதியில் நடமாடியதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இன்று காலையில் இராணுவத்தினருக்கு வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர…

  2. விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவர்கள் இராணுவத்தினர் நெருக்கடி யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம் பெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற மாணவ மாணவிகள் மீது இராணுவத்தினரும் இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களும் இணைந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றார்கள். கடந்த இரண்டு நாட்களாக இந்த தடகள விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணம் பல் கலைக்கழக மருத்டதுவ பீடத்திற்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. நேற்றும் இன்றும் இடம் பெறும் இப்போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மைதான வாசலில் வைத்து இராணுவத்தினரின் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ப…

  3. வவுனியா - மன்னார் எல்லையோரத்தில் உள்ள முள்ளிக்குளம், மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளில் அமைந்திருந்த படையினரின் முன்னரங்க நிலைகள் விடுதலைப் புலிகளின் வசமாகியுள்ளது. இதன்போது படையினரின் கவச வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்களம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. [TamilNet, Sunday, 03 June 2007, 07:10 GMT] Liberation Tigers launched a commando raid Saturday night into Vavuniyaa Mannaar border villages where the SLA had recently advanced its Forward Defence Line (FDL), LTTE Military Spokesman Irasiah Ilanthirayan said. The Tigers have destroyed a SLA artillery launchpad, seized military hardware including Buffel Armoured Personnel Carriers and established their FDL…

    • 50 replies
    • 8.1k views
  4. செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் கொலை - பிரிட்டன் கண்டனம். சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரிட்டன் தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் டொமினிக் ஷில்கொற் தெரிவித்துள்ளார். மேலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்களும் நாட்டின் நெருக்கடியான பாதுகாப்பு நிலைமைகளையும் சிறிலங்கா அரசின் சட்டவிதிகள் மீறப்படுவதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்தவாரம் சன நெருக்கடி மிகுந்த நேரத்தில் இரத்மலானைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏழு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். அதனைத் தொடர்ந்து க…

  5. நிலக்கீழ் கண்ணியில் படையினரின் வாகனம் வெடித்துச் சிதறியது: 3 படையினர் பலி. மட்டக்களப்பு புலுட்டுமான் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினரின் வாகனம் ஒன்று சிக்கியதில் சிறீலங்காப் படையினர் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். இன்று புலுட்டுமான் பகுதியில் ஊடாகச் வானம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே வாகனம் புதைத்து வைக்கப்பட்ட நிலக்கீழ் கண்ணியில் சிக்கியதிலேயே இப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கண்ணில் சிக்கிய வானம் தூக்கி வீசப்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது. -Pathivu-

  6. வடபோர்முனையில் 200 இராணுவத்தினர் பலி: ஐ.தே.க. வடபோர்முனையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் ஐ.தே.க.வின் ஜோன் அமரதுங்க கூறியதாவது: கடந்த மூன்று தசாப்த காலங்களை விட கடந்த ஆண்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 61,196 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளன. வடபோர் முனையில் கடந்த சில நாட்களில் 200 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்தத் தகவல்களை மக்களிடத்தில் அரசாங்கம் மறைத்துவிட்டது. இதுவரை 90 இராணுவத்தினர் காணாம…

  7. கொழும்பில் 58 இடங்களில் விமானஎதிர்ப்பு துப்பாக்கிகள் கொழும்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 58 இடங்களில் சிறீலங்கா படைகளால் விமான எதிர்ப்பு விமான துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்ந்த கட்டிடங்கள், தொடர்மாடிக் குடியிருப்புகள் சிலவற்றின் மீதும் இத்துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையிலேயே இவ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/

  8. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங் கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் காரணமின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட…

  9. வியாழன் 07-06-2007 06:14 மணி தமிழீழம் [சிறீதரன்] நான்கு போராளிகள் வீரச்சாவு அறிவித்தல்கள் வவுனியா மேற்கு பாலமோட்டை களமுனையில் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 2ம் லெப்பினன்ட் தமிழ்வேந்தன், 2ம் லெப்ரினன்ட் காவற்சுடர், வீரவேங்கை சோலைவேல், வீரவேங்கை அன்பரசன் ஆகிய நான்கு போராளிகளுமே வீரச்சாவை அணைத்துக் கொண்டவர்களாவர். pathivu

  10. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு: த.தே.கூ. நிராகரிப்பு. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேசியதாவது: அரசாங்கத்தின் இராணுவ வழித் தீர்வுத் திட்டத்தையே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கிறது. பெரும்பான்மை தேசிய இனத்தினரைத் திருப்திபடுத்தும் வகையில்தான் சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டதால்தா

  11. ஒரு வாரத்தில் 1,000 பேர் கடத்தல்? சிறிலங்காவில் ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டதாக செய்திகள் பரப்பப்படுவதில் உண்மை ஏதும் இல்லை என்று அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கேகலிய ரம்புக்வெல, சில ஊடகங்கள் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் சிறிலங்காவின் நன்மதிப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஒரே வாரத்தில் 1,000 பேர் கடத்தப்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இவை உண்மையல்ல. அதேபோல் பல முஸ்லிம்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார் அவர். ஆனால் எந்த ஊடக நிறுவனம் அத்தகைய செய்திகளை வெளியிட்டத…

  12. ரணிலின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன: அமைச்சர் ஜோன் செனிவிரட்ன [வியாழக்கிழமை, 7 யூன் 2007, 10:13 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று மின்சாரத்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜோன் செனிவிரட்ன பேசியதாவது: சிறிலங்கா குறித்து அனைத்துலக சமூகத்தில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார். வேறு எந்த ஒரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவர் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை. ரணிலின் செயற்பாடுகள் தேசப்பற்று அல்லாத வகையிலேயே உள்ளன. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகள் மோசமடைந்தமைக்கு ஐக்கிய…

  13. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைக் கைவிட ஜே.வி.பி. வலியுறுத்தல் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட போது 14 பக்க இணைப்பையும் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர். பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மறைக்கிறது. மகிந்த சிந்தனையை மக்களிடத்தில் கையளித்த மகிந்த, இந்த நாட்டின் பாதுகாவலன் நான் என்றார். நாட்டின் உரிமையாளர் நானி…

  14. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன - இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு கொழும்பிலும் வடக்கு, கிழக்கிலும் அன்றாடம் கொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவசரகாலச் சட்டம் மக்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்கின்றது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் சபையில் குற்றம் சாட்டினார். அரசாங்கம் நேர்மையுடன் செயற்பட்டு இனப் பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய இரா. சம்பந்தன் எம்.பி. கடந்தகால அரசியல் வரலாறுகளை ம…

  15. Posted on : 2007-06-07 "பரதேசி'களின் பிடியில் கொழும்பு அரச நிர்வாகம் அமெரிக்காவும் இலங்கையும் இந்த வருடத்தில் தமக்குள் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பாதுகாப்பு சேவைகள் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி நாடாளுமன்றத்தில் கோரியிருக்கின்றது ஜே. வி. பி. தங்களை சிவப்பு வர்ணக் கோட்பாட்டைப் பிரதி பலிக்கும் இடதுசாரிகளாக அடையாளப்படுத்தும் ஜே. வி. பியினர், அதை உறுதிப்படுத்துவதற்காகவேனும

  16. மீனவர்கள் கடத்தல், சிங்களர் உதவியுடன் "ரா" உளவுத்துறை நடத்திய நாடகம், தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பு, முன்னுக்குப்பின் முரணான செய்திகள் - முழுப்பொய்கள் - சி.கனகரத்தினம் தமிழக மீனவர்கள் கடத்தல், சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள செய்திகளை வரிசைப்படுத்தி ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிங்களக் கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி …

  17. உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியவாறு மிகப்பெரும் கவனயீர்ப்பை செய்த மயுரன் அவர்கள் தனது நண்பர்களான அனு, சர்வா, கண்ணன், அஜந்தன், ஆதி, மாலன், ஜே, ஆகியோருடன் குழுவாக கனேடியத்தலைநகர் ஒட்டாவாவை நோக்கி நடைப்பயணம் ஒன்றை கடந்த மே மாதம் 22ம் திகதி ஆரம்பித்து இன்று 15 வது நாளாக 300 கிமீ தூரம் சென்றடைந்துள்ளனர். ரொரன்ரோ நாதன் பிலிப் சதுக்கத்தில் ஆரம்பித்து பிக்கரிங், ஏஜாக்ஸ், விற்பி, ஒசாவா, போமன்வில், நியுகாசில், போர்ற்கோப், கோபேர்க், ருரான்ரன், பெல்வில், கிங்ஸ்ரன், ஆகிய நகரங்களைக் கடந்து தற்போது புரோக்வில் நகரை அண்மித்துள்ளனர். நடந்து கடந்து வரும் நகரங்களில், நகரபிதாக்கள், காவல்துறை அதிகாரிகள், பழங்குடிமக்கள், மாணவர்கள், பல்லின மக்கள், அரசி…

  18. எம்.கே.நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலையே சிறிலங்கா நடத்துகிறது: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 6 யூன் 2007, 20:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கருத்துப்படி தற்காப்புத் தாக்குதலைத்தான் நடத்துகிறோம் என்று சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: மூத்த சகோதரர் போன்றது இந்தியா. சீனா, பாகிஸ்தானிடன் ஆயுதம் வாங்க வேண்டாம் என்று இளைய சகோதரரிடம் சொல்வதற்கு இந்தியாவுக்கு உரிமை உண்டு. இளைய சகோதரருக்கு மூத்த சகோதரர் உதவாவிட்டால் இதர உறவு நிலை சகோதரர்களிடம் (பாகிஸ்தான், சீனா) செல்வோம். சிறிலங்காவுக்கு இந்தியா இராணு…

  19. வியாழன் 07-06-2007 05:25 மணி தமிழீழம் [தாயகன்] இராணுவ நடவடிக்கையால் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு உகந்தது அல்ல எனவும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அரசு உடனடியாக முன்வைக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜிய தலைநகர் பிறசல்சில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக்குழு மாநட்டில் இந்தக் கருத்துக்கள் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. சிறீலங்கா இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுனாமி மீள் கட்டுமானப் பணிகள் மற்றும் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களும் மனிதாபிமானப் பணிகளும் என இரண்டு கட்டமாக இந்தக் கூட்டம் இடம்பெற்று வருகின்றது. நன்றி பதிவு.

  20. தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். "புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு: உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் …

  21. இலங்கையில் இயற்கை அழிவை விட நிர்வாக சீரழிவுகளே அதிகமுள்ளன : ஜரோப்பிய நடாளுமன்றம். இலங்கையில் இயற்கைச் சீரழிவை விட நிர்வாக நடைமுறைச்சிக்கலே அதிகம் காணப்படுகின்றன என நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் பகிரங்க விசாரணைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. பிரஸெல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டடத்தில் பகிரங்க விசாரணைக் கூட்டம் நேற்று ஆரம்பமானது. இதில் குறிப்பாக இலங்கை இந்தோனேசிய நாடுகளில் ஆழிப்பேரலை அனர்த் தத்திற்குப் பின்னரான மீள் கட்டமைப்பு, மனித உரிமைகள், மனிதாபிமான உதவிகள் குறித்து பொது விசாரணைகள் ஆரம்பமாகின. ஆழிப்பேரலைக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு குறித்த விவாதம் முதலில் நடைபெற்றது. இலங்கை அரசின் சார்பில் …

  22. படைத்துறை உதவி, கூட்டுக் கடற்கண்காணிப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு சிறீலங்காவிற்கான இந்தியாவின் படைத்துறை உதவி, மற்றும் இந்திய - சிறீலங்கா கடற்படைகளின் கூட்டுக் கடற்கண்காணிப்பு திட்டம் என்பவற்றிற்கு, பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி இணைந்த கடற்கண்காணிப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும், சிறீலங்கா அரசிற்கு தேவையான படைத்துறை உதவிகளை தமது அரசு செய்யும் எனவும் எம்.கே. நாராயணன் கூறியிருந்தார். இந…

  23. ஜப்பானும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் - சிறீலங்கா அரசு ஜப்பான் அரசும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக விரைவில் தடை செய்து, நிதி முடக்கத்தை மேற்கொள்ளும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜப்பான் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய இருந்ததாகக் கூறினார். ஆனால் விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானப்பேச்சை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதால், ஜப்பான் அரசின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டதாகவும், கெஹெலிய ரம்புக்வெல விளக்கமளித்திருக்கின்றார். தற்பொழுது சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப…

  24. தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் தந்திரம் அமெரிக்காவின் இரட்டை வேடம்! மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிக்கூடம் ஒன்றில் போரினால் இடம்பெயர்ந்து தங்கியிருந்த தமிழ்மக்கள் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 8 பொதுமக்கள் காயப்பட்டதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் எனவும் காவல்துறை செய்திகள் தெரிவிக்கின்றன. காத்தான்குடி முஸ்லிம்கள் 100 விழுக்காடு (37,815) பெரும்பான்மையாக வாழும் ஊராகும். மட்டக்களப்புக்குத் தெற்கே 7 கிமீ தொலைவில் உள்ளது. நார்வே ஏதிலி அவையின் அறிக்கைப்படி 2006 ஏப்ரலில் தொடங்கி திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் 314,378 பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.…

  25. ஈழத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப மறுப்பு: இந்திய அரசைக் கண்டித்து பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் [செவ்வாய்க்கிழமை, 5 யூன் 2007, 19:44 ஈழம்] [க.நித்தியா] யாழ்ப்பாணக் குடாநாட்டில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி பட்டினியால் வாடி வருகின்றனர். பட்டினியால் வாடும் தமிழர்களுக்காக தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.