Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அகதி முகாம்களிலுள்ளோரை புகைப்படம் பிடிக்கும் அதிரடிப்படையினர். மட்டக்களப்பில் அகதி முகாம்களுக்குச் செல்லும் விசேட அதிரடிப்படையினர் அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாக புகைப்படமெடுத்து வருவதால் அவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தங்க இடமின்றி அகதிகள் தினமும் இடம் விட்டு இடம் மாறிக் கொண்டிருக்கையில் படையினரின் பெரும் கெடுபிடிகளால் அகதிகள் மேலும் மேலும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். களுவாஞ்சிக்குடி, எரிவில், கடற்கரை வீதிமுகாம், ஒந்தாச்சிமடம் காளியம்மன்கோயில் அருகிலுள்ள முகாம்களுக்குச் சென்ற அதிரடிப்படையினரே அங்குள்ளவர்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அத்துடன், சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடைபெறும் போது, முகாம்களிலுள்ளவர்களை அடையாளம் காண்…

    • 0 replies
    • 759 views
  2. மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதி நோக்கிய படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு மட்டக்களப்பு கொடுவாமடுப் பகுதியோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ் முன்னேற்ற முயற்சியில் சிறீலங்காப் படையினரும் துணை ஆயுதக்குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். சிறீலங்கா படையினருக்கு ஆதரவாக எறிகணைச் சூட்டாதரவும் டாக்கி மற்றும் துருப்புக் காவி சகிதம் சிறீலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். படையினரின் முன்னேற்றத்தை அடுத்து போராளிகள் படையினரை வழிமறித்து முறியடிப்புச் சமரை நடத்தி படையினருக்கு பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து படையினரும் துணை இராணுவக் குழுவினரும் அங்கிருந்து தப்பி யே…

  3. சிறீலங்கா இராணுவத்தால் விசாரணையின் பின் இளைஞர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா படையினரால் விசாரணை செய்தபின் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர் 23 அகவையுடைய லக்மனன் நிசாந்தன் வர்த்தகர் எனவும் நல்லூர் நோக்கி இவரது ஹயஸ் வானில் செல்லும் போது செவ்வாய்கிழமை 11 மணியளவில் சோதனைச் சாவடியில் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் உள்ளுர் மக்களின் கருத்துப்படி அவரது வாகனம் இனம் தெரியாத வேறு ஒருவரால் 11.30 மணியளவில் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. உறவினர்களுக்கு இவரை விசாரணையின் பின் விட…

    • 0 replies
    • 638 views
  4. இளம் யுவதிகளிடம் சேட்டை புரியும் படையினர். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:11 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளிடமும் பாடசாலை செல்லும் மாணவிகளிடமும் இப்பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபடும் படையினர் பாலியல் ரீதியான சேட்டைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாணவிகளின் புத்தகங்களையும், கைப்பைகளையும் சோதனையிடும் படையினர் பாலியல்ரீதியான சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், உடற்சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறி மறைவான பகுதகளுக்கு வருமாறு அழைப்பதாகவும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பெண்களிடம் சேட்டைகளில் ஈடுபடுவதுடன் உடற்சோதனைகளையும் சிறிலங்காப் படையினர் அநாகரிகமான முறையில் ஈடுபட்டுவருவதாக இப்ப…

  5. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு

    • 5 replies
    • 1.7k views
  6. மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு வாரம்: யு.என்.எச்.சி.ஆர் [புதன்கிழமை, 28 மார்ச் 2007, 20:06 ஈழம்] [காவலூர் சங்கீதன்] மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களில், இதுவரை குடியுரிமை தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது எதுவித குடியுரிமையும் இல்லாது வாழும் மலையக மக்கள், உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மனிதஉரிமை அமைப்பின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் சிறப்பு விவரண நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருக்கிறது. இதன்படி, தொடரும் ஐந்து நாட்களுக்கு, சிறிலங்காவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களிலும் இது தொடர்பான மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் வழங்க, யு.என்.எச்.சி.ஆர். ஒழுங்குகளை…

  7. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கொடுவாமடுவுக்குள் சிறிலங்கா இராணுவத்தினரும், துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் இணைந்து கவச வாகனங்கள் சகிதம் ஊடுருவ எடுத்த முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். செங்கலடிப்பாலம் இராணுவ முகாமில் இருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இம் முன்னகர்வினை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரும் மேற்கொண்டனர். முன்னகர்வை எதிர்த்து விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்திய போது, இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் ஆயுதங்களை கைவிட்டு பின்வாங்கி ஓடினர். ரி-56 ரக துப்பாக்கிகள் - 0…

  8. விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். எங்கை பேசலாம்? விமானத்தில் பேசலாமா?

    • 6 replies
    • 1.8k views
  9. [Wednesday March 28 2007 10:52:42 AM GMT] [யாழ் வாணன்] பிரிட்டன் பாராளுமன்ற அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தல் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை காண்பதற்கு பிரிட்டன், இலங்கை அரசாங்கத்துக்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டுமென வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரிட்டன் பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இது பாரதூரமானது. சமாதான செயல்முறையை ஆரம்பிப்பதிலும…

  10. ஜ குமுதம் ஸ - ஜ ஆயச 24இ 2007 05:00 புஆவு ஸ இந்த முறை ஒரு முடிவோடுதான் சிலோன் நேவிக்காரர்கள் சுட்டிருக்கிறார்கள்’’ திகிலில் உறைந்து போய்க் கிடக்கும் பாம்பன்இ மண்டபம் மீனவர்கள் பேசிக் கொள்வது இப்படித்தான். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகுஇ துணிந்து மீன் பிடிக்கப் போக மனமின்றிஇ படகுகளைச் சீர் செய்தபடியும்இ வலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டுமிருந்தனர்இ அந்தப் பகுதி மீனவர்கள். தாக்குதலில் பலியான கிறிஸ்டோபர் என்ற மீனவரோடு படகில் சென்ற தாசன் என்ற மீனவர்இ குண்டு காயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். ‘‘செவ்வாய்க்கிழமை காலையில கிளம்பறோம். நாலு நாளு தங்கி பாடு பார்க்கலாம்னு திட்டத்தோட போனோம். வியாழக்கிழமையன்றைக்குக் சாயங்காலம் ஒரு அஞ்சரை மணியிருக்கும்இ வல்ல…

    • 4 replies
    • 2.3k views
  11. எல்லோருக்கும் ஆபத்து: ராஜபக் ஷே அலறல்! மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் …

  12. புலிகளின் வான் தாக்குதல் முக்கிய நாடுகள் மெளனம். கட்டுநாயக்கா விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி சுமார் 46 மணித்தியா லங்கள் கழிந்த நிலையிலும் அமெரிக்கா உட்பட முக்கிய நாடுகள் இத் தாக்குதலைக் கண்டிக்கும் கருத்து எதனையும் வெளியிடவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற் றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்தும் இதுபற்றி அபிப்பிராயம் வெளியாகவில்லை. விடுதலைப் புலிகள் தங்கள் விமானங்கள் மூலம் அரச படைகளின் இராணுவ இலக்கு ஒன்றையே தாக்கியிருக்கின்றனர். தற்போதைய மோதல்களில் ஒரு பகுதியாகவே சர்வதேச சமூகம் இதனைக் கருதுகிறது. இதனால் தான் கண்டனம் தெரிவிக்க வெளிநாடுகள் தாமதிக்கின்றன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. -Uth…

  13. வான் புலிகள் தாக்குதல்.. மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது!!! தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் நடைபெற்றுவரும் போரில் முதல் தடவையாக வான் புலிப் படையைச் சேர்ந்த இரு விமானங்கள் பறந்துசென்று தலைநகரமான கொழும்புவில் உள்ள சிங்கள விமானப் படையைச் சேர்ந்த கட்டுநாயகா விமானத் தளத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துவிட்டு பத்திரமாகத் திரும்பியுள்ளன என்ற செய்தி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகாலமாக போர் நிறுத்த உடன்பாட்டினை விடுதலைப் புலிகள் உண்மையாக கடைப்பிடித்தனர். ஆனால் சிங்கள இராணுவம் கடைப்பிடிக்கத் தவறியதோடு தமிழர்கள் வாழும் பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தியும், பீரங்கித் தாக்க…

  14. இலங்கை திகில்... வானும் வசப்படும்? ஓர் அதிகாலை அட்டாக் மூலம் உலகையே ஆச்சர்யத்தோடும், லேசான மிரட்சியோடும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக் கிறார்கள் தமிழீழத்துக் காகப் போராடும் விடுதலைப் புலிகள்! கடந்த 26&ம் தேதி அதிகாலை சுமார் 12 மணி... கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள காட்டுநாயக்கா இலங்கை விமானப் படையின் தலைமைத்தளம், சில நிமிடங்களில் நேரப் போகும் பெரும் ஆபத்தை அறியாமல் துயிலில் இருந்தது. திடீரென வானில் தோன்றி ரீங்கரித்த இரண்டு இலகு ரக குண்டுவீச்சு விமானங்கள் அடுத்தடுத்து நான்கு குண்டுகளை இலங்கை படைத்தளத்தின் மேல் இடியென இறக்கியது. என்ன நடந்தது என அறிவதற்குள் தளத்தில் நின்று கொண்டிருந்த இலங்கை விமானப் படை விமானங்களு…

    • 8 replies
    • 2.5k views
  15. வான் புலிகளின் தாக்குதலிலும் அரசியல் லாபம் தேடும் முயற்சி ` கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதல், தென்னிலங்கையில் பலத்த அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக் கும் அதேசமயம், பெரும் வாதப் பிரதிவாதங்களை யும் தோற்றுவிக்கத் தவறவில்லை. தென்னிலங்கைத் தேசமே பெரும் அச்சுறுத் தலை எதிர்கொண்டிருக்கும் இச்சமயத்தில், குறு கிய அரசியல் வேறுபாடுகளைத் துறந்துவிட்டு, "பயங்கரவாதத்திற்கு' எதிராக ஒன்றுசேர்ந்து எழுமாறு சகல அரசியல் கட்சிகளையும் மக்களை யும் பகிரங்க அறிக்கை மூலம் அரசு ஒருபுறம் கோருகின்றது. ஆனால், மறுபுறத்திலோ, இந்த நெருக்கடி விவகாரத்தை கையாளும்படி அரசினால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அமைச்சர்களே, இந்த விடயத்திலும் தமது குறுகிய அரசியல் வேறுபாடுகளை சாதித்…

    • 2 replies
    • 1.4k views
  16. ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதல்: 10 இராணுவத்தினரும் 16 ஈ.பி.டி.பியினரும் பலி [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 13:50 ஈழம்] [க.திருக்குமார்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கொம்மாந்துறை இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பெண் சிறிலங்கா இராணுவத்தினர் உட்பட 10 இராணுவத்தினரும், 16 ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுமாக 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் இராணுவத்தினரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தாது போன உழவு இயந்திரம் ஒன்றின் சாரதியை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியதாக சிறிலங்கா படை…

  17. கண்காணிப்புக்குழுவினருக்கு கட்டுநாயக்கா விமான நிலையம் பார்வையிட தடை. - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 28 ஆயசஉh 2007 10:13 கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய விமானத்தளத்திற்கு சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரை சிறிலங்கா வான்படை அதிகாரிகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் இரு தடவைகள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதும் இதற்கான அனுமதியை வான்படை அதிகாரிகள் வழங்கவில்லை இதேவேளை வான்புலிகளின் இத் தாக்குதல் தமக்கு ஆச்சிரியத்தையளிப்பதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோப்பினூர் ஒமர்சன் கருத்து தெரிவிக்கையில்.வான் வழித்…

  18. புதன் 28-03-2007 10:32 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா இராணுவத்தால் விசாரணையின் பின் இளைஞர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் வீதியில் அரசடிச் சந்தியில் இளைஞர் ஒருவர் சிறீலங்கா படையினரால் விசாரணை செய்தபின் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளதாக யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர் 23 அகவையுடைய லக்மனன் நிசாந்தன் வர்த்தகர் எனவும் நல்லூர் நோக்கி இவரது ஹயஸ் வானில் செல்லும் போது செவ்வாய்கிழமை 11 மணியளவில் சோதனைச் சாவடியில் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் உள்ளுர் மக்களின் கருத்துப்படி அவரது வாகனம் இனம் தெரியாத வேறு ஒருவரால் 11.30 மணியளவில் ஓட்டிச் செல்லப்பட்டதாகவும் தெரியவருகி…

  19. கொழும்பு மார்ச்27 விடுதலைப் புலிகளின் வான் புலிகள் நடத்திய தாக்குதலை இந்தியா ஆழ்ந்த கவலையோடு உன்னிப்பாக நோக்குகின்றது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறன. இந்தத் தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு :- கடுமையான நெருக்கடிகள் மற்றும அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது வளைந்து கொடுக்காத உறுதியை இந்த வான் தாக்குதல் நடவடிக்கை மூலம் புலிகள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது கிளர்ச்சி அமைப்புக்கு ஒரு பெரிய இராட்சத பாய்ச்சலாகும். வெளிச் சக்திகளின் ஆதரவின்றி கிளர்ச்சி அமைப்பு ஒன்று உலகின் முதற்தடவையாக வான் வழித் தாக்குதலை நடத்திக் காட்டியிருப்பது இப்போதுதான். புலிகளிடம் வான்படைப் பிரிவு இருப்பது பல ஆண்டுகளாகத் தெரிந்த விடய…

    • 17 replies
    • 4.1k views
  20. சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது. இதுவரை செய்திகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில் மேல் உள்ள வரை படம் , தமிழீழ வான் படையின் விமானம் எங்கனம் கட்டுனாயாக்காவை உள்ளிட்டது என்பதை விளக்குகிறது.இங்கே கவனிக்கப்பட வேண்டியது தாக்குதல் நடந்த நேரம் அண்ணளவாக நள் இரவு பன்னிரண்டு மணி.இந்த நேரத்திலையே பல சர்வதேச விமானங்கள் கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கும்.விமான ஓடு தளம் ஆனது நீர் கொழும்பு ஏரியில் இருந்து ஒரு நேர் கோட்டில் இருக்கிறது.தமிழ் ஈழ வான் படையின் விமானம் இந்த நேர் கோட்டில் பயணித்தால், ராடார் கருவிகளில், விமானா ஓடு பாதையைப் பாவிக்கும் மற்ற சர்வதேச விமானங்களில…

    • 10 replies
    • 3.2k views
  21. திருந்துமா தரப்புகள்? நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது. வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான க…

    • 4 replies
    • 1.7k views
  22. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தாம் தயார் - மகிந்த சிறீலங்கா ஜனாதிபதி விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலையடுத்து கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல்களை தாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் விசேட தொலைதொடர்பு எண் (116) ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும

  23. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது

  24. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் வெற்றிகரமாக முறியடிப்பார்கள் என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஊடகத்துறையினரை தனது அலுவலகத்தில் சந்தித்த மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது: கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள எத்தகைய குறைபாடுகள் காரணம் என படைத்தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். மக்கள் சந்தேகத்திற்கு இடமான விமானங்களைக் கண்டால் 116 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தாக்குதல் தொடர்பாக சில இராஜதந்திர வட்டாரங்களை நம்ப வைப்பது அரசாங்கத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பல நாடுகள் எமக்கு தொழில்நுட்ப உத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.