ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
அரசுடன் இணைந்தது பௌத்த பேரினவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய. சிங்கள பௌத்த பேரினவாத இனவெறிக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உறுமயவினர் இன்று புதன்கிழமை சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே இந்தக் கட்சியிலிருந்து கருத்து பேதங்களால் வெளியேறிய வண. ஒமல்பே சோபித தேரவின் இடத்திற்கு, அக்கட்சியின் ஆலோசகராகவும் வன்முறை அரசியலை அக்கட்சிக்குள் புகுத்துபவராக அங்கம் வகித்து வரும் சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட்டார். இதன்மூலம், ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்சியினர், தங்களை ஆளும் சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் ந…
-
- 6 replies
- 1.6k views
-
-
முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் - சோனியா காந்தியும், பிரதமரும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும் - தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை ஈழத்தமிழர்கள் பசியின் கொடுமையால் சாகும் கொடுமை! முக்கிய சாலையைத் திறந்து, இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்தவேண்டும் இந்த இரண்டையும் செய்யாமல் எப்படி அரசியல் தீர்வு காண முடியும்? இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களைக் களைய, முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தினைக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு: நமது பக்கத்து நாடான இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள், கொலை, பாலியல் வல்லுறவு …
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - ஆறு சிங்கள காவல்துறையினர் பலி Wednesday, 31 January 2007 11:33 மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைப் பகுதியில் வைத்து சிங்களக் காவல்துறையினரின் ஊர்தியை இலக்கு வைத்து இன்று நண்பகல் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆறு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் வீடு சென்ற காவல்துறையினரே இத்தாக்குதலுக்கு இலக்கானதாக சிங்களப் படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சங்கதி
-
- 4 replies
- 2.6k views
-
-
முன்னணி தொழிலதிபருடன் தொடர்பு கொண்டு தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த மகிந்த. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை தொடர்ந்து சுதந்திரக் கட்சிக்குள் கடுமையான விரிசல்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தனது அரசின் மூத்த அமைச்சர்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்வதை தடுக்குமாறு கேட்டுள்ளார். இது தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது: கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த, அவருக்கும் தேசிய பாரம்பரிய அமை…
-
- 2 replies
- 1.4k views
-
-
சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…
-
- 8 replies
- 2.2k views
-
-
உதவிவழங்கும் மாநாட்டிற்கு கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம். சிறீலங்கா அரசின் அமைதி முயற்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் என்பன தொடர்பாக விசனம் அடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்கட்கிழமை காலியில் ஆரம்பமான சிறீலங்காவிற்கு உதவிவழங்கும் நாடுகளின் மாநாட்டிற்கு தமது கீழ்நிலை அதிகாரிகளையே அனுப்பியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு தமது மகிழ்ச்சி அற்ற நிலையை வெளிக்காட்டியுள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை மேலும் தெரிவித்ததாவது: கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் அரசின் அமைதி நடவடிக்கைகளிலும் நாட்டில் தோன்றியுள்ள மனித உரிமை மீறல்களிலும் மகிழ்ச்சி அற்ற நிலையில் உள்ளதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம் [புதன்கிழமை, 31 சனவரி 2007, 02:09 ஈழம்] [காவலூர் கவிதன்] காலியில் இடம்பெற்ற சர்வதேச நிதிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பையடுத்து, சில முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளோடு, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி பயணமாகியுள்ளனர். அவர்கள் கிளிநொச்சி செல்வதற்கான உலங்குவானூர்தி ஒழுங்குகளை, நேற்று இரவு வரை சிறீலங்கா அரசு வழங்கவில்லை. இருப்பினும் தாங்கள் தரை மார்க்கமாகவாவது கிளிநொச்சி செல்லவுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர். வேறு வழியின்றி, விமானப் பயணத்தை வழங்க சிறீலங்கா அரசு பின்னிரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந…
-
- 13 replies
- 2.9k views
-
-
போதிய ஆசன வசதிகள் இன்மையால் புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. புதிதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 52 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையின் இன்று புதன்கிழமை இடம்பெற இருந்த முதலாவது கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அமைச்சரவையில் ஏறக்குறைய 33 அமைர்களே காணப்படுவர்.அதற்கேற்றவாறே அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை 52 அமைச்சுக்கள் பதவியேற்றுள்ளமையால் அவர்களுக்கான போதிய ஆசன வசதிகள் இன்மையால் இன்று நடைபெற இருந்த புதிய அமைச்சரவை கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. -Tamilwin-
-
- 5 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு, வாகரையில், சிறீலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய கதிரவெளி பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் குண்டொன்று வெடித்தபோது, அதில் சிக்கிய இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டார். இவரது உடல் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது thanks:www.puthinam.com
-
- 2 replies
- 1.4k views
-
-
செவ்வாய் 30-01-2007 13:43 மணி தமிழீழம் [செந்தமிழ்] உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு இலங்கைக்கு பெரும் பின்னடைவு? இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் காலி மகாநாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது மோதல்கள் நிறுத்தப்பட்டு அமைதி பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படும் வரை உதவித் தொகைகளை நேரடியாக வழங்கப் போவதில்லை என பல்வேறு உலக நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் திட்டவட்டமாக தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கமானது உதவி வழங்கும நாடுகளின் மகாநாடு குறித்து மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டுள்ளதாக…
-
- 7 replies
- 2.3k views
-
-
Sinhala Ultra Nationalist All Monks party, the Jathika Hela Urumaya (JHU), which is opposed to power-sharing and Norwegian facilitation, Wednesday replaced their National List parliamentarian monk Ven. Omalpe Sobhita Thero with a prominent militant leader of the National Movement Against Terrorism (NMAT), Patali Champika Ranawaka, paving way for him to assume a cabinet post this week, when the party with 9 parliamentary seats, is expected to join Sri Lankan President Mahinda Rajapakse's UPFA alliance. Ranawaka, a former militant JVPer from 1980's, who agitated against the Indo-Lanka accord, had split from the JVP contradicting with the militant Marxist founder of th…
-
- 0 replies
- 953 views
-
-
அரசுக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபரின் உதவியை நாடிய மகிந்த - பண்டார வன்னியன் Wednesday, 31 January 2007 12:16 ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டதால் சிரேஷ்ட அமைச்சர்களால் அரசாங்கத்துக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஒருவரின் உதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, தேசிய மரபாண்மை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க மற்றும் துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட அமைச்சர்கள் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடியமை தொடர்பாகக் கலந்துரைடியதுடன், அரசில் பிழவு ஏற்பட…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 30-01-2007 22:11 மணி தமிழீழம் ஜமோகன்ஸ காலி மாநாட்டில் 4.5 பில்லியன் டொலர் உதவிவழங்கப்படுமா என்பதில் முரண்பாடான தகவல்கள் காலில் இடம்பெற்ற உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சிறீலங்காவிற்கு 2007-2009 ஆண்டுகால அபிவிருத்தி பணிகளுக்கு 4.5 பில்லின் அமெரிக்க டொலர் உதவி பெறப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ் உதவித்தொகையானது வீதி அபிவிருத்திஇ நெடுஞ்சாலைகளின் உருவாக்கம்இ துறைமுக மேம்பாடுஇ அனல்மின் நிலையம் உருவாக்கம் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளின் பெறுபேறாக எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 9 பில்லியன் டொலர் பணம் உதவித்தொகையாக சிறீலங்கா அரசாங்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
[30 - January - 2007] [Font Size - A - A - A] பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல் நாடகத் தொடரின் `வனப்புமிகு' காட்சியொன்றை இலங்கை மக்கள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தரிசித்தனர். சுதந்திர இலங்கையின் பிரமாண்டமான அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டது. அமைச்சரவையின் 52 உறுப்பினர்களும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற 33 அமைச்சர்களும் 19 பிரதியமைச்சர்களும் ஜனாதிபதியுடன் சேர்ந்து காலிமுகத்திடல் நோக்கி புன்னகை பூத்தவண்ணம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் 19 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும்தரப்புக்குத் தாவியதையடுத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
24 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவினர். - பண்டார வன்னியன் Sunday, 28 January 2007 12:30 சிறிலங்காவின் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சிகளில்இருந்து 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாவியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.தே.க.விலிருந்து 18 பேரும் முஸ்லீம் கொங்கிரசிலிருந்து 6 பேருமே இவ்வாறு கட்சிதாவியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகிய லூசியன் இராஜகருணநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற சிறிலங்கா அமைச்சரவை விஸ்தரிப்பின் போது இந்தக்கட்சி தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களுட் பலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். கொழும்பின் இரண்டு பிரதானகட்சிகளிடையேயும் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர…
-
- 17 replies
- 3.1k views
-
-
[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
மு.காங்கிரஸிலிருந்து விலக நிஜாமுதீன் எம்.பி. முடிவு? அமைச்சுப் பதவி கிடைக்காததால் ஏமாற்றம். அமைச்சுப் பதவி பெற்றுத் தருவதாகக்கூறி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இறுதி நேரத்தில் ஏமாற்றப்பட்டார் எனக் கூறப்படும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.பியான நிஜாமுதீன் அக்கட்சியை விட்டு விலகத் தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டது. கட்சியின் மொத்தம் 6 எம்.பிக்களில் ஐவர் அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். நிஜா முதீனுக்கு மாத்திரம் அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. அமைச்சுப் பத…
-
- 0 replies
- 645 views
-
-
நேற்று முன்தினமிரவு வவுனியா மருக்காரம்பலை வீதி கணேசபுரத்தில் வீடொன்றிற்குச் சென்ற இனந்தெரியாத ஆயுததாரிகள் வீட்டில் இருந்த இளைஞன் வெளியில் அழைத்துச் சுட்டுக்கொன்றுள்ளனர். இதன்போது கொல்லப்பட்டவர் தேவதாசன் கெவின் சுரேந்திரன் (அகவை 24) என உறவினர்களால் இனம் காணப்பட்டுள்ளது. நேற்றுக்காலை வவுனியாவைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட இறந்தவரின் சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்திய வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் உத்தரவுக்கமைய மருத்துவபரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 937 views
-
-
இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி கண்டனம் - ராணுவ நடவடிக்கையில் வெற்றி பெற்றே தீருவோம் மஹிந்த சபதம். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர நார்வே நாடு முயற்சி மேற்கொண்டது. பல முறை இரு தரப்பிலும் அமைதிப் பேச்சு நடந்தும் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதனால் உள்நாட்டுப் போர் நீறு பூத்த நெருப்பாக கனன்று வருவதுடன், அவ்வப்போது இந்த நெருப்பு கொழுந்து விட்டு எரியவும் செய்கிறது. இலங்கையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஜப்பான், உலக வங்கி ஆகியவை அதிக அளவில…
-
- 3 replies
- 1.7k views
-
-
கொழும்பு பிரதமநீதிபதி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொழும்புக்கிளையில் பணிபுரியும் மூன்று முக்கிய உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 7 ம் திகதி நீதிமன்றில் சமூகமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளார். இதேவேளை தமிழர்புனர்வாழ்வக்கழகத்துக
-
- 0 replies
- 621 views
-
-
சிறீலங்கா இராணுவம், சிறீலங்கா வான்படையினர் மற்றும் காவல்துறையினரும் கூட்டாக திருகோணமலைக்கு 24 கிலோமீற்றர் தென்மேற்காக அமைந்துள்ள மொறவீவா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்கிழமை காலை மொறவீவா பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாம்மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதையடுத்தே இக்கூட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 703 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நேற்று காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை கிளிநொச்சியிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியக முன்றலில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு ஊடகப்பிரிவு, நடுவப்பணியகம். 30.01.2007. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களை விடுவிக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நேற்று காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணிவரை கிளிநொச்சியிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நடுவப்பணியக முன்றலில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 29.01.2006, 30.…
-
- 0 replies
- 639 views
-
-
ரிக்கட்பெற நின்ற மக்கள் கலகம் விமான சேவை அலுவலகம் தாக்கப்பட்டது. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 30 துயரெயசல 2007 09:45 யாழ் குடாநாட்டிலுள்ள தனியார் விமானசேவை அலுவலகத்தில் ரிக்கட் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் கலகத்தில் ஈடுபட்டதில் அந்த அலுவலகம் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவதற்காக விமான டிக்கட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நேற்று அதிகாலை 4.00 மணிமுதல் அந்த விமானசேவை அலுவலகத்துக்கு முன்னால் 2 ஆயிரத்தக்கும் அதிகமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்களில் ஆயிரம் பேருக்கு மாத்திரம் ‘டோக்கன்’ வழங்கப்பட்டதால் ஆத்திரமுற்றவர்கள் அலுவலகத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் அலுவல…
-
- 2 replies
- 1.4k views
-
-
நான் மேற்கொள்ளும் நல்லவிடயங்களை கூறாது தவறை மட்டும் சுட்டிக்காட்டவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையத்தளப்பிரிவு நான் மேற்கொள்கின்ற நல்ல விடயங்களை கூற வேண்டாம் மாறாக எனது தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டவும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி சபை மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு நோக்கி வருகையில் இறக்குவானை அஸ்லாம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். அங்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆ…
-
- 1 reply
- 1k views
-
-
நான் என்னை அமைச்சர் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு வீரகேசரி நாளேடு நான் என்னை அமைச்சர் என்று கூறிக்கொள்வதற்காக வெட்கப்படுகிறேன். இதனை நான் உண்மையான உணர்வுடனேயே கூறுகின்றேன். அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக மக்கள் விசனங்களை தெரிவித்துள்ளனர் என்று விவசாய அபி விருத்தி மற்றும் கமநல சேவைகள் அமை ச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சின் அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது. இந்த அளவு அமைச்சர்களின் எண்ணிக்கையானது நாட்டின் …
-
- 2 replies
- 1.1k views
-