Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தற்போதைய நிலைமைக்கு அமைய தேர்தலை பிற்போட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைமுறை சட்டத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலை பிற்போட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல்கள…

  2. சாரதிகளை கண்காணிக்க அதிநவீன உபகரணம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை பயன்படுத்தி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான விபத்துக்கள் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவதாகவும், அதைக் குறைக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பக் க…

  3. எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்! ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வியடத்தினைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும்…

    • 3 replies
    • 689 views
  4. குடிவரவுத் திணைக்களத்தின் 2021 அறிக்கையின்படி, 912 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இலங்கையில் அகதிகளாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை 709 ஆகும். மேலும், 113 ஆப்கானிஸ்தான் பிரஜைகள், 24 ஈரானிய பிரஜைகள், 6 பாலஸ்தீனியர்கள், 4 சூடான் பிரஜைகள், 15 யேமன் பிரஜைகள், 35 மியான்மர் பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த தலா ஒருவர் என அகதிகளாக இந்நாட்டில் தங்கியிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அகதிகள் விவகாரப் பிரிவின் மேற்பார்வையிலேயே இந்தக் குழு இலங்கையில் தங்கியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 709 பேர் இலங்கையில் அகதிகளாக தஞ்சம்! | Virakesari.…

  5. இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் வேலைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பத்தரமுல்லையில் உள்ள SLBFE தலைமைக் காரியாலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தகுதியானவர்களை பதிவு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை, பாடசாலை வெளியேறும் சான்றிதழ், G.C.E உயர்தர சான்றிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு…

    • 2 replies
    • 288 views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், மழைநீர் வழிந்தோட முடியாமல் வடிகான்களில் தேங்கியுள்ளதனால் நுளம்பு பெருக்கமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 7அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 9அங்குலமும், இக்குளத்தில் ஒரு அங்குலம் அளவில் மேலதிக நீர் வெளியேறுகின்றது. வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 2அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலமும், இக்குளத்தில் 2அங்கு மேலதிக நீர் வெளியேறுகின்றது, கித்துள்வெவகுளத்தின் நீர்மட்டம் 7அடி ஒரு அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்ட…

  7. தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இ…

  8. தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார். ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார். வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம் இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவத…

    • 3 replies
    • 624 views
  9. நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது – உறவுகள் எச்சரிக்கை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நிதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இவ்வளவு காலமும் நீதி அமைச்சர் கூறி வருகிறார்.எங்களுக்கு இந்த இழப்பீடு வேண்டாம் என்று நாங்கள் கூறி வந்தோம்.காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளும்,பிள்ளைகளுமே …

  10. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினருக்கும் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தலைமைகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை மீண்டும் பேச்சுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த நிலையில் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது. அரசு தரப்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்‌ச, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் ந…

    • 3 replies
    • 856 views
  11. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார். ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது. தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம் இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ…

    • 4 replies
    • 1.1k views
  12. எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன் எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளரான எழிலனை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனவே எழிலனுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டியது இராணுவத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். …

  13. மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும், 2018ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்களத்தினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் வறுமை கோட்டில் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானத்தைப் பெற்று வந்தனர். அத்துடன் குறித்த உணவகத்தில், குறைந்த விலையில் பார…

  14. (எம்.நியூட்டன்) இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் இன்று புதன்கிழமை (டிச. 21) பகல் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், ஒரு படகையும் அதிலிருந்த 11 மீனவர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது | Virakesari.lk

  15. (இராஜதுரை ஹஷான்) நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல அரச நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி தயாரிக்கப்படும் அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரத்தை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்பான அதிகாரிகளிடம் குறிப்பிட்டார். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்து மக்களுக்கு தேவையான காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஒருசில அரச சேவையாளர்கள் உக்ரைன் -ரஷ்யா போன்று செயற்படுகிறார்கள்.மக்களுக்கான சேவையை இழுபறி நிலையில் முன்னெடு…

  16. 26 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினம் ! By VISHNU 22 DEC, 2022 | 12:11 PM டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 25 ஆம் திகதி நத்தார் பண்டிகை இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருகின்றமையால் மறுநாள் திங்கட்கிழமை விசேட அரசவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/143833

  17. சஜித் பிரேமதாசவால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு! By DIGITAL DESK 2 22 DEC, 2022 | 03:34 PM திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்மக் (சுவாசம்)' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொடர் பயணத்தின் 55ஆவது நிகழ்வில் பங்கேற்க இன்று வியாழக்கிழமை (டிச. 22) சஜித் பிரேமதாச திருகோணமலை மாவட்டத்துக்கு சென்…

  18. பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட முடிவு! தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்க தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து நான்கு நாட்கள் பேச்சுக்களை நடத்தித் தீர்வுக்கானத் தீர்மானங்களை எட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) மாலை 6:15 முதல் 7 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, வெளிவ…

  19. டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்! யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமையினால் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்ற நிலையில் ஈழ மக்கள்…

  20. இலங்கை சீனா இந்தியாவின் கடன் உத்தரவாதங்களிற்காக காத்திருக்கின்றது - மத்திய வங்கி ஆளுநர் By Rajeeban 22 Dec, 2022 | 11:28 AM இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக இலங்கையின் மத்தியவங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை சீனா இந்தியாவின் உத்தரவாதங்களிற்காக காத்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். தசாப்த காலங்களில் இல்லாத வகையில் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக இலங்கை செப்டம்பரில் சர்வதேச நாணயநிதியத்தின்2…

  21. கிழக்கில் நெல் பயிர்ச்செய்கை மூலமாக அரிசியை நியாய விலையில் பெற சீன அரசாங்கத்துடன் கிழக்கு ஆளுநர் பேச்சு By Nanthini 22 Dec, 2022 | 12:09 PM கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சீன அரசாங்கத்திடம் அடுத்த பருவத்திலும், கடந்த பருவத்திலும் விவசாயிகளுக்கு இலவச அரிசியை வழங்குவதற்கு பதிலாக சந்தை வாரியத்தின் மூலம் கொள்வனவு செய்ய நிதியுதவி வழங்குமாறு திருகோணமலையில் சீன தூதுக் குழுவுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றபோது தெரிவித்திருந்தார். இதன்போது இந்த நிதியுதவி மூலம் விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான நியாயமான விலை கிடைப்பதுடன், நுகர்வோரும் அரிசியை நியாயமான விலையில் வாங்க முடியும…

  22. நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர் காலத்து கோட்டை, போர்த்துக்கேயர் காலத்து வைத்தியசாலை மற்றும் மேலும் பல தொல்பொருள் சான்றுகள், வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் நெடுந்தீவிற்கு வருகை தருகிறார்கள். https://…

  23. 16 பில்லியன் ரூபாய் சீனி வரி மோசடி தொடர்பில் கோட்டாவை விசாரிக்க தீர்மானம்? னி வரி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஆங்கில பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சீனி வரி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அப்போது வர்த்தக அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதற்கு வேறு திகதியை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பந்துல குணவர்தனவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் குறித்த தகவல்களை தயார் செய…

  24. யாழில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு! யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற கப்பலை யாழ். மீனவர்கள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர். மீனவர்கள் கப்பலைப் பற்றி உடனடியாக கடற்படைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்த இடத்திற்கு மூன்று படகுகளை அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான குறித்த படகில் இருந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2022/1315994

  25. லங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கத்திற்கும் தமிழ் கட்சிகளிற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படப்போவதில்லை என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் எரிக்சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் எதிர்கட்சி தலைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் இந்த பேச்சுவார்த்தைகள் சூழல் சார்ந்த விடயங்கள் பற்றியே அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். எரிக்சொல்ஹெய்ம் மீண்டும் மத்தியஸ்தராக செயற்படவேண்டும் அரசியல் தீர்வை காண்பதற்கு உதவவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகியுள்ளன. எனினும் ஜனாதிபதியின் காலநிலை விவகாரங்களிற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.