ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா ஆகியன கூட்டிணைந்து நடாத்தவுள்ள கடன்கள் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்பு Published By: VISHNU 14 FEB, 2023 | 02:27 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இந்தியா என்பன கூட்டிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்தவுள்ள கடன்கள் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளது. நிகழ்நிலை முறைமையில் நடைபெறவுள்ள இந்த வட்டமேசை மாநாட்டில் தற்போது கடன் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற மற்றும் ஜி-20 அமைப்பின் பொதுச்செயற்திட்டத்தின்கீழ் அதற்கான தீர்வினைக் கோரியிருக்கின்ற இலங்கைக்கு மேலதிகமாக எதியோப்பியா, ஸாம்பியா, கானா, சூரிநேம் மற…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
தடையற்ற சுகாதார சேவைக்காக 38 மில்லியனை வழங்கும் ஜப்பான் Published By: DIGITAL DESK 5 14 FEB, 2023 | 05:14 PM (எம்.மனோசித்ரா) சுகாதார சேவைகளை தடையின்றி வழங்குவதற்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 38 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்தி இலங்கையில் சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் விநியோகத் தொகுதியை மேம்படுத்துவதற்காக ஜப்பான், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிதி வழங்கப்படவுள்ளது. தற்போது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் பொருளாதார மற்று…
-
- 0 replies
- 364 views
- 1 follower
-
-
நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆள முடியாது - பந்துல Published By: VISHNU 14 FEB, 2023 | 12:59 PM (எம்.மனோசித்ரா) கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் மார்ச் இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்டுவதற்கே முயற்சிக்கின்றோம். சீனா அதற்கான நிதி உத்தரவாதத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறன்றி நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டாமல் எவராலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகைய…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக 10 கிலோ அரிசி ; அரசாங்கம் அறிவிப்பு Published By: T. SARANYA 14 FEB, 2023 | 12:52 PM (எம்.மனோசித்ரா) குறைந்த வருமானம் பெறும் , உணவு பாதுகாப்பற்ற நிலைமையிலுள்ள 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு கிலோ கிராம் நெல்லை 100 ரூபா நிர்ணய விலையில் கொள்வனவு செய்வதற்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற போத…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
க.விஜயரெத்தினம் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியில் இடப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. வனவிலங்குகளிடமிருந்து நெற்செய்கையை பாதுகாக்க மட்டக்களப்பு - தொப்பிகலயில் உள்ள வயல் காணியில் சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமான வயல் காணியிலேயே இந்த சட்டவிரோத மின்வேலி இடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர். எனி…
-
- 0 replies
- 850 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் தேவையில்லாத முரண்பாடுகளை தோற்றுவிப்பதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் உண்மை நிலைப்பாட்டை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் இல்லாவிடின் மீண்டும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் பேரவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத…
-
- 0 replies
- 199 views
-
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் மீண்டும் தோற்கடிப்பு !!! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. https://athavannews.com/2023/1324067
-
- 3 replies
- 851 views
-
-
கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்! Published By: DIGITAL DESK 5 14 FEB, 2023 | 09:37 AM இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் திங்கட்கிழமை (13) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேன்கொண்டிருந்தார். கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது. இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்…
-
- 0 replies
- 686 views
- 1 follower
-
-
13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி உறுதியளிக்கவில்லை – சாகர காரியவசம் 13 ஆவது திருத்தத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஆளும்கட்சி மக்களுக்கு வாக்குறுதி வழங்கவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கே முழுமையான ஆதரவு வழங்குவோம் என்பதனால் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியால் தனித்து எவ்வித தீர்மானமும் எடுக்க முடியாது என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார். அதற்கு மூன்றில…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பிணை! தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு 15 வருடங்களின் பின்னர் இன்று(திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ, சரோஜா, பந்துல மற்றும் அஜித் ஆகிய 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 23 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 04 பிரதிவாதிகளுக்கு எதி…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை செய்யப்படவுள்ளன. https://athavannews.com/2023/1324055
-
- 0 replies
- 281 views
-
-
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்டார் எனக் கூறப்படும் இளைஞர் மற்றும் பெண் ஆகியோரை ட்ரோன் , நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரினுக்கு (40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் இன்று (13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படும் முஹமட் ஹனீபா அர்சாத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து போதைப்பொருளை அளவிடம் இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் …
-
- 4 replies
- 857 views
-
-
மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை கூறினார் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.கவின் தமிழக தலைவர் கு.அண்ணாமலைக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையில் இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றது. …
-
- 0 replies
- 506 views
-
-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் காதலர் தினமான எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை வாழ் பெற்றோர்கள், சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கல்முனை மாநகர மேயர் தெரிவித்தார். “கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களிடமும் தங்களது ஆண், பெண் பிள்ளைகளை அன்றைய தினத்தில் மேலதிக வகு…
-
- 0 replies
- 256 views
-
-
நாடு முழுவதும் இராணுவ விவசாய பண்ணைகளில் மரக்கறிகள் மற்றும் நெல் அறுவடை அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாடு முழுவதும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் உள்ள இராணுவப் விவசாய பண்ணைகளில் பெரும்போக நெல் அறுவடை மற்றும் பருவகால மரக்கறிகளை அறுவடைசெய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதற்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேயால் நிறுவப்பட்ட பசுமை விவசாய வழிநடத்தல் குழுவுடன் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படையினர், பங்கொல்ல, தயாகம, ரிதியகம, மெனிக்பார்ம், வீரவில மற்றும் இரணைமடு ஆகிய இராணுவப் விவசாயப்பண்ணைகளில் கடந்த சில நாட்களாக நெல் மற்றும் மரக்கறிகளை அறுவடை செய்தனர். அதன்படி இராணுவப் பண்ணைகளில் இரு…
-
- 9 replies
- 622 views
-
-
13வது திருத்தம், அதிகாரப் பகிர்வு தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல; முஸ்லிம்களினதும் உரிமைகளுக்கு இவை அவசியம் என்கிறார் மு.கா.தவிசாளர் மஜீத் (சாய்ந்தமருது நிருபர்) 13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு என்பன தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தானது எனவும் அது முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பாக அமைந்து விடும் எனவும் தப்பபிப்பிராயம் பரப்பப்படுகிறது. ஆனால் இத்தகைய அதிகாரப் பகிர்வின் மூலம்தான் முஸ்லிம்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்த…
-
- 0 replies
- 662 views
-
-
இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்பை யாழ்.கலாசார நிலையம் அடையாளப்படுத்தும் – இந்திய பிரதமர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் ஒரு முக்கிய செயற்திட்டமாக யாழ்ப்பாணம் கலாசார நிலையம் காணப்படுகிறது. இத்திட்டத்தின் ஊடாக பெருமளவான மக்கள் நன்மையடைவார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் ஊடாக வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதியுயர் பிரசன்னம் யாழ்ப்பாண கலாசார நிலையம் திறப்பு விழாவை மேலும் சிறப்பித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான கலாசார ஒத்துழைப்புக்களை அடையாளப்படுத்தும் ஒரு முக்க…
-
- 0 replies
- 388 views
-
-
சமஷ்டி பற்றி வாய் திறக்காதீர்கள்! – தமிழ்த் தலைவர்களை எச்சரிக்கிறார் சாந்த பண்டார “தயவுசெய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என்று தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம். சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் . ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது.” – இவ்வாறு இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ. சாந்த பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு – கிழக்குதமிழ் மக்கள் அன்றிருந்து இன்று வரை கேட்பது அரசியல் தீர்வைத்தான். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்குச் செல்கின்ற போது தமிழ் மக்கள் அரசியல் தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. …
-
- 0 replies
- 695 views
-
-
13 ஆவது திருத்தம் எலும்புக்கூடு க.அகரன் நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்தது. “13ஆவது திருத்தத்தை நீக்குமாறு பிக்குகளும் பல சிங்கள அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதையும் இது காட்டுகிறது. 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் 2/3 பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி…
-
- 0 replies
- 225 views
-
-
13ஆவது திருத்தத்தை வலியுறுத்த இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என்கின்றார் சரத் வீரசேகர 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவின் மேற்பார்வையுடனான விசேட பொறிமுறையை உருவாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் தமிழ் தலைவர்கள், அடிப்படை பிரச்சின…
-
- 0 replies
- 619 views
-
-
சீனா நெருங்கிய நண்பன், இந்தியாவின் உறவையும் சீர்குலைக்கோம் – வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நெருங்கிய நண்பனான சீனாவுடன் எப்போதும் கைகோர்த்து செயற்படுவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை சீர்குலைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். கொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாகரீகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான பிணைப்பு காணப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும் இந்தியாவின் பாதுகாப்…
-
- 0 replies
- 237 views
-
-
மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – எச்சரிக்கும் பீரிஸ் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்த பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதோடு அதன் முடிவுகள் பெரிய அலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் மிக…
-
- 0 replies
- 147 views
-
-
நாட்டைவிட்டு இலண்டனுக்கு ஓடுங்கள்! – விக்கிக்குப் பொன்சேகா எச்சரிக்கை இலங்கையில் வாழ முடியாவிட்டால் இங்கிலாந்தை நோக்கி ஓடச் சொல்லுங்கள்” – என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையானது ஒற்றையாட்சி நாடாகும். இங்கு சமஷ்டிக்கு இடமில்லை. இங்கு வாழ முடியாவிட்டால் விக்னேஸ்வரனை இங்கிலாந்து போகச் சொல்லுங்கள். விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணையே திருமணம் முடித்துள்ளார். அவர்களின் பிள்ளைகளும் அப்படித்தான். விக்னேஸ்வரன் தெற்கில்தான் படித்தார். தொழில் செய்தார். தற்போது வடக்க…
-
- 4 replies
- 978 views
-
-
தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன் கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கொக்கட்டிச்சோலை, முனைக்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தனித் தமிழ்க் கட்சியில் தான் எதிர்வரும் தேர்தலில்…
-
- 3 replies
- 534 views
-
-
தமிழர்களின் இறுதித் தீர்மானம் என்ன? உலகத்தமிழர் மாநாட்டை கூட்டி தீர்மானிக்க வேண்டும் - இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் சிறிதரன் எடுத்துரைப்பு Published By: Nanthini 12 Feb, 2023 | 01:29 PM ஈழத் தமிழர்களின் நீண்டகால அரசியல் பிரச்சினை குறித்து ஈழத்தமிழ் தலைவர்கள், தென்னிந்திய தமிழ் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட தலைமைகள் ஒன்றிணைந்து ஆராய வேண்டும். இது குறித்த மாநாட்டை இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த த…
-
- 2 replies
- 241 views
-