Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காற்றழுத்தத்தால் கன மழையோடு காற்றும் வீசலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் By NANTHINI 18 DEC, 2022 | 07:32 PM தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத்தால் அப்பகுதியில் தொடர்ந்தும் பலத்த காற்று காணப்படுகின்றது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடலை அடையக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சுப்பிரமணியம் ரமேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அத்தோடு நாட்டை சூழவுள்ள பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்ப்பகுதி காரணமாக கிழக்கு…

  2. சர்வகட்சி தலைவர் கூட்டம் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை – எரிக் சொல்ஹெய்ம் சர்வக்கட்சி தலைவர் கூட்டம், இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறந்த வழிமுறை என சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் பசுமை நிலைபேறான திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களை நெருக்கடி நிலையில் இருந்து மீட்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் நாட்டில் பெரு…

  3. By VISHNU வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறி…

  4. இலங்கை தமிழரசு கட்சியின் 75 வது ஆண்டு தொடக்க விழா By Vishnu 18 Dec, 2022 | 11:34 AM இலங்கை தமிழரசு கட்சியின் 75 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (18-12-2022) பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது. நிகழ்வின் முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கட்சியின் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பாகி நடைபெற்றன. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் ப. சத்தியலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான …

  5. இராணுவத்தாலும் தனி நபராலும் அபகரிக்கப்பட்ட துயிலும் இல்ல காணியை விடுவிக்கக் கோரி போராட்டம் ; காணியை விடுவிக்க தனிநபர் இணக்கம் By Vishnu 18 Dec, 2022 | 12:04 PM தமிழ் மக்களால் வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம் ( டடிமுகாம்), அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் இறுதி யுத…

  6. இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் - விக்டர் ஐவன் By Nanthini 18 Dec, 2022 | 11:45 AM இலங்கையின் மறுசீரமைப்புக்கு இதை விட சிறந்த சந்தர்ப்பம் எதிர்காலத்தில் அமையாது என்று அரசியல் ஆய்வாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பின் மக்கள் இயக்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலங்கையின் மறுசீரமைப்புக்கான அம்ச கோரிக்கைகள்' அடங்கிய ஆவணத்தை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு கையளித்து விளக்கமளிக்கும் செயற்பாடுகள் கடந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,…

  7. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் - உறவினர்களிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரிக்கை By Vishnu 18 Dec, 2022 | 12:21 PM அரசாங்கங்களால் காலத்துக் காலம் அமைக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அரசாங்க ஆதரவு உடையவர்களின் வேலைவாய்ப்பையும் அவர்களுடைய வருமானத்தையும் அதிகரிப்பதற்கும் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காகவும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குள் எமது உறவுகள் அகப்பட வேண்டாம் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ…

  8. ஜனாதிபதியினுடனான பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக செல்வோம்; சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். காரைதீவில் நேற்று (17) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே இதை தெரிவித்தார் . தொடர்ந்து பேசுகையில், இன்று நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விதமான மன மாற்றம் தென்படுகின்றது. இதனை நாங்கள் சாதகமாக பயன்படுத்தி எமது மக்களது பிரச்சினையை தீர்க்க வேண்டிய காலம் கனிந்து இருக்கின்றது. அரசுடன் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. அங்கு நமது தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு…

  9. அரிசி இறக்குமதிக்கு தடை : நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் விவசாயிகள் ஆகும் கைதிகள் ! புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், சர்வதேச ஆதரவுடன் கைதிகளுக்கு நவீன விவசாய முறை குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றின் உதவியுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை முன்னெடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை …

  10. IMF உடன்படிக்கைக்கு முன்னதாக 16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் ! சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது. இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார். அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட…

  11. இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அனுமதி! இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய இலங்கைக்கு அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாயில் பரிவர்த்தனை செய்வதற்கு ‘வொஸ்ட்ரோ’ என்ற கணக்கை தொடங்க மத்திய வங்கி ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதம் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், ரஷ்யா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் இதே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. https://athavannews.com/2022/1315896

  12. தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார். அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்ம…

  13. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு By DIGITAL DESK 5 17 DEC, 2022 | 05:04 PM ( எம்.நியூட்டன்) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த…

  14. காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு! விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் முதலாவது தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றால் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதில் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். குறித்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்க…

    • 1 reply
    • 445 views
  15. நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்! துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ச…

    • 7 replies
    • 777 views
  16. வியட்நாமில் உயிரிழந்த தமிழரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது By RAJEEBAN 17 DEC, 2022 | 04:58 PM அண்மையில் கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது . சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுளதுடன், அதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (18-12-2022) சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக…

  17. சீனா இணக்கம் - IMF அறிவிப்பு உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=168803

  18. ஜனவரி முதல் மின்கட்டணத்தை 70 வீதமாக அதிகரிக்க மின்சார சபை அவதானம் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு By DIGITAL DESK 5 17 DEC, 2022 | 05:03 PM (இராஜதுரை ஹஷான்) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். கொழும்பில் உள்ள நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு கு…

  19. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு! – யாழில் கொடூரம்! யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் (14) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, தந்தை, மகன் மீது வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அயல் வீட்டாருடன் இடம்பெற்ற முரண்பாடு கைகலப்பாகிய நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலின் அடிப்படையில் பலாலி பொலிஸார், வாள்வெட்டினை மேற்கொண்ட ஒருவரை நேற்றையதினமும் மற்றைய இருவரை இன்ற…

  20. காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பதுளை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெறப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பதுளை மாவட்ட அபிவிருத்தி சங்க கூட்டம் நடைபெற்ற போது மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெற்று பதுளை பாடசாலை மாணவர்கள் முன்னிலையில் திகழ்கின்றார்கள். இருந்தபோதிலும் பதுளை மாவட்ட பாடசாலைகளில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது க…

  21. மூன்று லட்சம் அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும்-எம்.பி.கே.மாயாதுன்ன -சி.எல்.சிசில்- ஏறக்குறைய பதினைந்து லட்சம் அரசு ஊழியர்களை பன்னிரண்டு லட்சமாகக் குறைத்தால், பொதுச் சேவை மிக எளிதாகப் பராமரிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்தார். இதுவரை காலமும் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு, வெற்றிடங்கள் இருக்கும் போது அல்ல மாறாக அரசாங்கத்தின் பல்வேறு கொள்கைத் தீர்மானங்களினூடாகவே மேற்கொள்ளப்பட்டன என்றும் செயலாளர் வலியுறுத்தினார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபதாயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதுடன், இதே எண்ணிக்கையை மீண்டும் அரசுப் …

  22. தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் பேச்சு வார்த்தையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்போமானால் நமது இனம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார். சமகாலநிலவரம் குறித்து வல்வெட்டித்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுதந்த…

  23. ( எம்.எப்.எம். பஸீர்) கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டி ஆரச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை ( 16) கண்டி பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் செலுத்தி வெளிநாட்டு தூதுக் குழுவின் பயணத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியமை, பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனம் செலுத்திச் சென்றமை தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வெளிநாட்டு தூதுக் குழு கட்டுகஸ்தோட்டை பாலத்தை அண்மித்த பகுதியில் பயணிக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பாதுகாப்புக்கு சென்ற அதிகாரிகளின் தகவல்கள் பிரகாரம் சுதே…

    • 2 replies
    • 631 views
  24. ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.…

  25. வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல் By T. SARANYA 16 DEC, 2022 | 01:07 PM (எம்.மனோசித்ரா) வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கான ரஷ்ய மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது 'இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.