Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்கான போட்டி இவ்வருட இறுதியுடன் தனது பதவிக்காலத்தை முடிவுசெய்யும் கொபி அனானுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பந்தயம் முடிவுக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. வேட்பாளர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவை அறிந்து கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் மத்தியில் நடத்தப்படும் பரீட்சார்த்தமான முறைசார வாக்கெடுப்பின் (ஸ்ட்ரந் Pஒல்ல்ச்) நான்காவது சுற்று இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. கடந்த வியாழனன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் 13 ஆதரவு வாக்குகளையும் ஒரு எதிர்ப்பு வாக்கையும் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவிக்காத ஒரு வாக்கையும் பெற்ற தென்கொரிய வெளியுறவு அமை…

  2. கடத்தல்களுக்கு காரணமான துணை இராணுவக்குழுக்களின் ஆயுதங்களைக் களைக: மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட நீதிக்கும் புறம்பான படுகொலைகளுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரது ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் கண்காணிப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் சிறிதுங்க ஜயசூர்ய கூறியுள்ளதாவது: சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையின் படியே கடத்தல்களும் படுகொலைகளும் மிகவும் மோசமாக உள்ளது. கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டோருக்கும் தமிழீழ விடுதலைப் புல…

  3. முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன். சிங்கள மொழி மறந்து தமிழில் உரையாடும் இவர் மருத்துவமனையில் அனுமதி நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாண யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொச்சிக்கடை காவற்துறையினர்இ இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும் இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப்…

    • 28 replies
    • 6.9k views
  4. மூதூரில் பிரசுரம் வீசியது புலிகள் அல்ல: கண்காணிப்புக் குழு மூதூர் முஸ்லிம்களை வெளியேறுமாறு கோரி துண்டுப் பிரசுரங்களை வீசியது விடுதலைப் புலிகள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. கண்காணிப்புக் குழுவினரின் கடந்த வார அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மூதூரில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. மூதூரில் மீளக் குடியேறுமாறு சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?c…

    • 6 replies
    • 2.1k views
  5. Started by Vanni01,

    புலிகளின் "விடுதலை"க் கனவு என்பது கனவாகத்தான் இருக்கும்: பாலித கோகென்ன ஞாயிற்றுக்கிழமை 1 ஒக்ரொபர் 2006இ 19:32 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ தமிழீழ விடுதலைப் புலிகளின் "விடுதலை" கனவு என்பது கனவாகத்தான் இருக்கும் என்று சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன கூறியுள்ளார். ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கு பாலித கோகென்ன அளித்த நேர்காணல்: பேச்சு மேசைக்குத் திரும்புவதாக அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகிறது. ஒக்ரோபர் ஓஸ்லோப் பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் நோர்வே அணுசரணையாளர்களுடன் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். ஆகையால் நிச்சயமாக பேச்சுக்கள் நடைபெறும். ஆனால் ஒரே வருத்தம்... இந்த சமாதான காலத்தைப் பயன்படுத்தி போர் நடவடிக்கைகள் மற்றும் ஆட்சேர்ப்பு- ஆயுதக்குவிப…

    • 0 replies
    • 1.1k views
  6. அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் பொதுமக் கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை ய…

    • 12 replies
    • 2.6k views
  7. சிறு குழந்தையின் வலதுகால் விரலில் காயம் இடதுகால் விரல் நகத்தை அகற்றிய டாக்டர் கைது Saturday, 30 September 2006 -------------------------------------------------------------------------------- சிறுகுழந்தை ஒன்றின் வலதுகாலில் காயமடைந்த விரல் ஒன்றின் நகத்தை அகற்றுவதற்கு பதிலாக குழந்தையின் இடதுகால் விரலின் நகத்தைக் கழற்றிய தம்புள்ள வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தம்புள்ள பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்துள்ளனர். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குழந்தையின் வலது காலில் இரும்பு உபகரணம் ஒன்று விழுந்ததால் விரல் ஒன்று நசுங்கி காயமேற்பட்டது. இதையடுத்து இக்குழந்தையின் தாய் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றார். இரவு ந…

  8. என் அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது: ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 06:20 ஈழம்] [ச.விமலராஜா] ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான எதுவித சாத்தியமும் இல்லாத நிலையில் விலகிக் கொண்ட சிறிலங்காவின் ஜயந்த தனபால தான் விலகியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு திரும்பிவிட்ட ஜயந்த தனபால இது தொடர்பில் கூறியுள்ளதாவது: என்னுடைய அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது. அதனால் இயற்கையாகவே வருத்தம் ஏற்படும். ஒரு தொழில்முறை சார் நெறிமுறைகள் சார் மிகக் குறைந்த திட்டமிடலில் நான் எனது வேட்பாளருக்கான தகுதிகளை முன்வைத்தேன். வேட்பாளர் போட்டிய…

    • 1 reply
    • 1.4k views
  9. நோர்வே "கல்யாண தரகர்" வேலை மட்டும்தான் பார்க்க வேண்டும்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுக்களுக்கான "கல்யாண தரகராக" உள்ள நோர்வே அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்- கல்யாண நாள் மற்றும் இடம் பார்ப்பது அதன் வேலை இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம…

  10. சிறிலங்கா அராசங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தாளை எடுத்து கைப்பட எழுதிக் கொடுத்தால்தான் பேச்சுக்கள் என்ற எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது: கடந்த 23 ஆண்டுகால வரலாற்றில் அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் தனது நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக் கொண்டதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய சூழ்நிலையால் பிரபாகரன் கூடுதலான பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறார். நோர்வே அமைதி அனுசரணையாளர்களைக் க…

  11. வவுனியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு மாணவியின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, கண்டியில் சிகிச்சை பெற்று, வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரணமடைந்த மாணவியின் உடல் இன்னும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று மாணவிகள் வவுனியா வைத்தியசாலை ஊடாக கண்டிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு கண்டி பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரில், ஒர…

  12. இலங்கை நிலைமை குறித்து ஐ.நா. பிரதிநிதி கவலை இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் துண்டிப்பு ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆழிப்பேரலை மீளமைப்பு பணிகளுக்கான சிறப்பு துணைப் பிரதிநிதி எரிக் ஸ்வார்ட்ஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த இரு மாத காலங்களில் 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்திருப்பது எம்மை மிகவும் பாதித்துள்ளது. ஆழிப்பேரலை மீளக் கட்டமைப்பு பணிகளில் சர்வதேச சமூகத்தினரால் குறிப்பிடத்தகுந்த அளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இப்போது அது பா…

  13. ஐநா சிறுவர் மையத்தின் தெற்காசிய பணிப்பாளராக சந்திரிகா நியமனம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் மையத்தின் தெற்காசியப் பணிப்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தமது முதல் கட்ட உத்தியோகபூர்வ விஜயத்தை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானில் அவர் அவசர முகாமைத்துவம் தொடர்பில் சொற்பொழிவை நடத்தவுள்ளார். இதன் பின்னர் இந்தியாவுக்குச் செல்லும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அந்த விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்குத் திரும்பவுள்ளார். pathivu.com/

  14. யாழில் இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் வாகனங்கள் பறிப்பு யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பொதுமக்களின் நூற்றுக்கும் மேற்பட்ட லொறிகள், சிறு வான்கள், உந்துருளிகளை இராணுவத்தினர் அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் அரச அதிபர் செயலகத்தில் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். 106 லொறிகள் உட்பட பல சிறு வான்கள் மற்றும் பெருந்தொகையான உந்துருளிகளை பறித்துச் சென்று தற்போதைய மோதல் நடவடிக்கைகளின் போக்குவரத்துக்காக இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தம் ரூ. 300 மில்லியன் மதிப்பிலான லொறிகளை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்துச் சென…

  15. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து எதிர்வரும் வாரம் சிறிலங்கா நீக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து சிறிலங்காவை நீக்குவது தொடர்பான முயற்சிகள் தீவிரமான முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாட்டில் மிக அதிகமான விமர்சனங்களுக்குள்ளான ஒரே நாடு சிறிலங்கா. எதிர்வரும் வாரம் மனித உரிமைகள் ஆணையத்தில் சிறிலங்கா நீடிப்பது குறித்த முடிவு மேற்கொள்ளப்பட உள்ளதால் அதனைத் தடுக்கும் இராஜதந்திர செயற்பாடுகளில் சிறிலங்கா கவனம் செலுத்தி வருகிறது. வடக்கு - கிழக்கில் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்த…

  16. பிரபாகரனுக்கு வெண்ணிறச் சால்வை குரு ரவிசங்கர் பரிசாகக் கொடுத்தார் புதுடில்லி, செப். 29 "வாழும்கலை' நிறுவுநர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த வாரம் கிளி நொச்சிக்கு விஜயம் செய்திருந்த சமயம் வெண்ணிறச் சால்வை ஒன் றைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக் குப் பரிசாகக் கொடுத்தார். குரு ரவிசங்கரின் பேச்சாளர் ஒருவர் இத்தகவலை "ஐ.ஏ.என்.எஸ்.' செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்திருக்கிறார். இலங்கை உட்பட உலகெங்கும் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் சுவாமி குரு ரவிசங்கர் தாம் விஜயம் செய்யும் இடங்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வெண்ணிறச் சால்வைகளைத் தமது ஆசீர்வாதத் தின் ஆடையாளமாக வழங்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி சென்றி ருந்த சமயம் அங்க…

  17. பொத்துவில் படுகொலையும் பொய் பரப்புரையும்: பாதுகாப்பு அமைச்சின் செய்தியே அம்பலப்படுத்துகிறது சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் பொத்துவிலில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவும் அது தொடர்பில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட கபட வேலையானது அந்த அமைச்சின் செய்தி வெளியீட்டினாலாயே அம்பலமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணைய தளத்தில் நேற்று வெள்ளிக்கிழமையன்று "பொத்துவில் படுகொலை, தெளிவாக விடுதலைப் புலிகளின் செயற்பாடுதான் - கிழக்கு முஸ்லிம் சமூகத் தலைவர்கள்" என்ற தலைப்பில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு, - அ…

  18. வள்ளிபுனத்தில் உயிர்பிழைத்த மாணவியையும் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம்: மருத்துவ அறிக்கையில் அம்பலம் முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப் படை நடத்திய கோரத் தாக்குதலில் உயிர்பிழைத்த மாணவியரில் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்து எதுவித சிகிச்சையும் அளிக்காமலே சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்துள்ளமையானது வவுனியா மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளது. வான்படைத்தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையில் கண்டிக்கு 3 மாணவிகள் கொண்டு செல்லப்பட்டனர். அம்மாணவிகள் சிறிய அளவில் தேறிய நிலையிலேயே அவர்களை சிறிலங்கா காவல்துறையினர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர். அவர்களில் ஒ…

  19. வவுனியா கிளைமோரில் மூன்று காவல்துறையினர் பலி வவுனியாவில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா சலம்பைக்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஜே.எம். புஞ்சி பண்டா, ஆர்.எம்.சி. பிரியதர்சன மற்றும் ஜி.ஜயரத்ன ஆகியோர் கொல்லப்பட்டனர். http://www.eelampage.com/?cn=29044

  20. ஐ.நா. செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் போட்டியிலிருந்து சிறிலங்காவின் ஜயந்த தனபால விலகி விட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பிரசாத் கரியவசம், பி.பி.சி. சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் இதனை அறிவித்துள்ளார். ஜயந்த தனபாலவின் முழு ஒத்துழைப்புடன் போட்டியிலிருந்து தனது வேட்பாளரை விலக்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். செயலாளர் நாயகம் தேர்தலுக்கு முன்னைய உத்தேச வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்த உத்தேச வாக்கெடுப்பிலும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கி மூன் வெற்றி பெற்றதையடுத்து புதி…

  21. அம்பாறையில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொலை [திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 13:57 ஈழம்] [ம.சேரமான்] அம்பாறை மாவட்டத்தில் 11 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. அம்பாறை பனாமா நகருக்கு அருகே இக்கொலைச் சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று நடந்திருக்கக் கூடும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ( Puthinam)

  22. அனுசரணையாளர்களின்றி நேரடிப் பேச்சுக்கு வர வேண்டும்: பிரபாகரனுக்கு சிறிலங்கா பிரதமர் அழைப்பு அனுசரணையாளர்கள் எவருமின்றி நேரடிப் பேச்சு நடத்த தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் முன்வர வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: அமைதியை உருவாக்க வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினால் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் நேரடியாக பேச்சுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகள் வலு இப்போது குறைந்துவிட்டது. இதற்கு முன்னைய காலங்களிலிருந்து நாம் பாடங்களைப் பெற்றுள்ளோம். பேச்சுக்களின் மூலமாகத்தான் அவர்கள் பலமடைகின்றனர். தற்போதைய அரசாங்கமானது இந்த நாட்டுக்கும் மக்…

  23. நாடாளுமன்றில் எம்.பியின் கேள்விக்கு பதிலளிக்க மேர்வின் சில்வா மறுப்பு! தொண்டையில் மீன்முள்ளு குத்தியதாகக் காரணம் நாடாளுமன்றத்தில் நேற்று தொழிற் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவைப் பார்த்து ஐ.தே.கட்சியின் எம்.பி யான தயாசிறி விஜேசேகர கேள்வி ஒன்றை எழுப்பினார் அப்போது அந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் மேர்வின் சில்வா. ""எனது தொண்டையில் மீன் முள் சிக்கியிருப்பதால் என்னால் பதிலளிக்க முடியாது'' என்று கூறிவிட்டு பேசா மல் இருந்துவிட்டார் அவர். நாடாளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தலைமையில் கூடியது. வாய்ப்பே கிடைக்காததால் கேள்வி நேரத்தின் போது குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி.தயாசிறி விஜேசேகர மலேஷியாவுக்கு தொழில் வாய்ப்பு…

  24. இனவெறிபிடித்தலையும் மகிந்த ராஜபக்ஷவின் கொலைவெறிக்கு, ஒவ்வொரு நாளும் ஐந்து -த்துஎனதமிழர்கள் பலியாகிவருகின்றனர்.சிங்களப் படைகளின் கட்டுப் பாட்டிலுள்ள தமிழர் தாயகப் பகுதியெங்கும் இந்தக் கொலைச்செயல்களைச் சிங்களப் படைகள் நடாத்திவருகின்றன. தினம் தினம் நடாத்தப்படும் இந்தத் தமிழர் படுகொலை மகிந்த அரசின் உத்தரவின் பேரில்தான் நடாத்தப்படுகின்றது என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்விதம் அறுநூறு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமற்போயுள்ளனர். கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டவர் கள் பெரும் சித்திரவதைக்குப் பின்னரே கொல்லப்பட்டுள்ள னர். வீசியெறியப்பட்டுக் கிடந்த அவர்களின் உடல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.