Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Sri Lanka battles rebels in east after independence vow COLOMBO, Nov 28 (Reuters) - Sri Lanka's military fought a fierce artillery duel with Tamil Tigers in the island's restive east early on Tuesday, just hours after the rebels said they were resuming their two-decade independence struggle. The military said the Tigers were using 152 mm artillery shells for the first time to target their forward defence line in the eastern district of Batticaloa, and had so far killed one soldier and injured two others. "Our defence lines have been mortared and shelled," said Major Upali Rajapakse, a spokesman with the Media Centre for National Security. "They are usin…

  2. "எம்மால் முடிந்தளவு சமாதன முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவந்தோம்.." "போதுமான அளவுக்கு பெறுமை காத்திருக்கிறோம்.." "இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களை தள்ளிப்போட்டோம்." "நடக்கமுடியாத விசயத்தில் நம்பிக்கை வைக்க இனியும் நாம் தயாரில்லை"

  3. மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஆரம்பம். தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் எழுச்சிவாரம் தமிழீழம் எங்கும் நேற்று உணர்ச்சிபூர்வமாக ஆரம்பமாகியது. www.uthayan.com

  4. திங்கள் 27-11-2006 22:16 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] மன்னார் முருங்கன் யாதவெள விசேட அதிரடிப்படை முகாம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. வவுனியா மன்னாருக்கிடையேயான முருங்கன் யாதவௌ விசேட அதிரடிப்படையினரின் முகாம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. இணைப்பைப் பற்றிய உறுதியை இந்தியா மஹிந்தரிடமிருந்து எதிர்பார்க்கின்றது இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசுகின்றார். இலங்கை இனப்பிரச்சினையும், அதை ஒட்டிய விவகாரங்களுமே இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பின்போது முக்கிய இடம் பிடிக்கப் போகின்றன என்பது திண்ணம். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகப் பல்வேறு விடயங்களை இந்தியத் தரப்பு இந்தச் சந்திப்பின்போது இலங்கை அரசுத் தலைவருக்கு முன்வைத்துச் சுட்டிக்காட்டும் என்றாலும் அவற்றுள் பிரதானமாக இடம்பெறப்போவது ஈழத் தமிழர் தாயகமான வடக்கும், கிழக்கும் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்ற அம்சம் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கன…

  6. Started by BLUE BIRD,

    somebody missing from your family or friends in srilanka or tamileelam,please contact to this address.but foto is very use full missingtamil@yahoo.co.uk or more information go to www.nitharsanam.com

  7. தமிழர் தாயகம் ஆக்கிரமிப்பாளரிடமிருந்து விரைவில் மீட்டெடுக்கப்படும்:-கேணல் தீபன் தமிழர் தாயகம் விரைவில் ஆக்கிரமிப்புக்களிடமிருந்து இருந்து மீட்டெடுக்கப்படும் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சி அக்கராயன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு அகிம்;சை வழி உரிய வழியல்ல ஆயுத வழிமூலம்தான் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பாட்டை உணர்ந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயுதத்தால் நசிக்கப்பட்ட தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தை ஆயுதத்தாலேயே வெல்லப்படவேண…

    • 12 replies
    • 2.7k views
  8. திங்கள் 27-11-2006 01:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வடமராச்சி பகுதியில் புலிகளின் சீருடையில் இளைஞர்கள் நடமாட்டம் சிறிலங்கா இராணுவத்தினர் வடமராச்சி, வலிகாமம், தென்மராச்சி பகுதிகளில் முகாம்களுக்குள் முடங்கியிருப்பதாகவும் இதேவேளை சுவரொட்டி மூலம் படையினரை இராணுவ முகாமிற்குள் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் மக்கள் பயம் கலந்த பீதியுடன் காணப்படுவதாகவும் அறியமுடிகிறது. வடமராச்சி பிரதேச குடிசார் தகவலின் படி இளைஞர்களை விடுதலைப்புலிகளின் சீருடையுடன் வடமராச்சியின் பலபகுதிகளில் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் அறியமுடிகிறது. இதேவேளை யாழ்பாணம் பல்கலைக்கழக பரமேஸ்வரா சந்தி பலாலி வீதியில் இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகிறது …

    • 2 replies
    • 2.6k views
  9. http://karthikai27.com/ இத் தளத்தில் மாவீரருக்கு ஒளிவிளக்கேற்றுவோம். ஈழத்திலிருந்து ஜானா

  10. TELO leader Mr.N.Srikantha திங்கள் 27-11-2006 00:39 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதிய ததேகூ நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ அமைப்பான ரெலோ இயக்கத்தின் முதல்வரும், சட்டவாளருமான சிறீகாந்தா அவர்கள் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 30ஆம் நாள் வியாழக்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினராக சிறீகாந்தா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீகாந்தா அவர்கள், சட்டவாளராக கடமையாற்றிய போது இருந்ததை விட, தற்போது பொறுப்பும், பணியும் அதிகரித்திருப்பதாக கு…

    • 0 replies
    • 1.2k views
  11. ஏ-9 திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க புலிகள் முடிவு: இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 06:24 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் திறக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார ஏட்டுக்கு இளந்திரையன் தெரிவித்துள்ள கருத்து: நீண்டகாலமாக ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் பட்டினிச் சாவை நோக்கி உள்ளனர். ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகும். எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் இதுவிடயத்தில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக…

  12. தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும். தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும். அதனைத்தொடர்ந்து 6.07 மணி…

    • 0 replies
    • 1.4k views
  13. தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலிகள் குரல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடர்பு எண்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் 52 ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" மூலம் வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0094 21 222 42 60 0094 21 222 42 61 www.puthinam.com

  14. யாழ்பாணத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல்-5000 பேர் பாதிப்பு. யாழ் பகுதியில் சிக்கின் குனியாவை ஒத்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும் இந்நோயினால் 5000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்பிரதி மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் டாக்ரர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் பகுதியிலேயே இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும், இந்நோயின் தாக்கத்தால் ஊரெலுவைச் சேர்ந்த கனகலிங்கம் சர்மிலா என்ற யுவதியே யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்ததாகவும் அவர்மேலும் தெரிவித்தார். www.pathivu.com

  15. சிறிலங்காவில் ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை அமைக்க வலியுறுத்தல். சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் எதிர்வரும் திங்கட்கிழமை கூடும் ஐ.நா. கூட்டத்தில் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை செயற்பட வேண்டும், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது இராணுவத்துக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்…

  16. வாகரையில் இராணுவத்தினரின் நகர்வு முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பு வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாங்கேணி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நகர்வு நடவடிக்கையை விடுதலைப் புலிகள் முறியடித்ததுடன் படைத்தரப்பினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இழப்புக்களோடு இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றனர். இழப்பு விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இராணுவத்தினரின் நகர்வு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்தார். …

  17. இஸ்ரேல்- அமெரிக்காவுக்கு ஆதரவாக ஐ.நா. வாக்கெடுப்பில் சிறிலங்கா பங்கேற்கவில்லை [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 14:31 ஈழம்] [ம.சேரமான்] பலஸ்தீனத்தின் காசாப் பகுதியில் இஸ்ரேலிய இரானுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா குழுவினர் பங்கேற்கவில்லை. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான வாக்கெடுப்பானது கடந்த நவம்பர் 17 ஆம் நாள் நடைபெற்றது. காசாப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு ஆதரவாக 156 பேர் வாக்களித்தனர். அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்திரேலியா எதிராக வாக்களித்தன. 6 நாடுகள் பங்கேற்கவில்லை. அணிசேரா நாடுகள் ம…

    • 0 replies
    • 850 views
  18. தமிழர் தாயகத்திலிருந்து சிங்களப் படைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் : பாஸ்டன் குளோப் இதழ் எச்சரிக்கை தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்காப் படைகள் விலக்கிக்கொள்ள அமெரிக்கா உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையங்கத்தின் தமிழாக்கம் வருமாறு: இலங்கையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களுக்கும் தமிழ் புலிகளுக்கும் இடையே விட்டுவிட்டு நடைபெறும் யுத்தமானது கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீடித்து 65 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். உலகின் கொடூரமான யுத்தமாக இது இருப்பினும் அமெரிக்கா நேரடியாக தலையிடுகிற மற்ற யுத்தங்களைக் காட்டிலும் குறைவான கவனத்தையே ஈர்த்துள்ளது. இருதரப்பிலும் இரத்தகளறிய…

  19. ஏ-9 மூடப்பட்டதற்கு முன்னரும் அதன் பின்னருமான யாழ். விலைகள் [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:35 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் ஏ-9 பாதையை சிறிலங்கா இராணுவம் மூடியதற்கும் அதன் பின்னருமான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை விவரம்: (இரண்டாவதாக தரப்பட்டுள்ள விலை முன்னையது- மூன்றாவதாக உள்ளவை தற்போதைய விலை) அரிசி 1 கிலோ- ரூ. 35 - ரூ. 180 மா 1 கிலோ - ரூ. 40 - ரூ. 150 சீனி 1 கிலோ - ரூ. 60 - ரூ. 400 பால் மா 400 கிராம் ரூ. 145- ரூ. 400 1 தேங்காய் - ரூ. 15- ரூ. 90 தேங்காய் எண்ணெய் 1 லிற்றர்- ரூ. 75- ரூ. 450 செத்தல் மிளகாய் 1 கிலோ - ரூ. 160 - ரூ. 480 புளி 1 கிலோ - ரூ. 60- ரூ. 150 வெள்ளைப்பூடு 1 கிலோ - ரூ. 60-…

  20. யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது [ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2006, 08:15 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ். பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.கந்தசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக நிலைமைகள் குறித்து கந்தசாமி தெரிவித்துள்ளதாவது: யாழ். பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்பட வேண்டுமாயின் பல விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. வெளியிடங்களில் உள்ள மாணவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் தங்களது படிப்பைத் தொடர வேண்டுமாயின் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும். மாணவர்களுக்கான தங்குமிட வசதியும் பிரச்சனையாக உள்ளது. பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள வீடுகளில் உள்ளோர்…

    • 2 replies
    • 1.1k views
  21. இன்று பிரபாகரனின் 52 ஆவது பிறந்ததினம் நாளைய உரையில் அனைவரது கவனமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது 52 ஆவது வயதில் காலடி பதிக்கிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த இவர்இ இன்று உலகின் கவனத்தை மிகவும் கவர்ந்த விடுதலை அமைப்பொன்றின் தலைவராகத் திகழ்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் போராட்ட களத்தில் குதித்த இவரை இலங்கையில் போரென்றாலும் சரி சமாதானமென்றாலும் சரி அதில் மிகவும் முக்கியமாயிருப்பவர் என்று பெரும் எண்ணிக்கையானோர் கூறுகின்றனர். மிகவும் கட்டுக்கோப்பானதும் ஒழுக்கமுடையதுமான பெயர் பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று உலகில் விடுதலை அமைப்புகளில் தரைப்படையுடன் கடற்படை மற்றும் விமா…

  22. கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். நன்றி - பதிவு இணையம். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1& இது இவையளுக்கு தேவையோ????

  23. மட்டக்களப்பின் வாகரையில் பட்டினிச்சாவுக்கு வயோதிபத் தாய் ஒருவர் பலி மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினி அவலத்தினை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் 6 பிள்ளைகளின் தாயாரான வி.பொன்னம்மா (வயது 60) என்ற வயோதிபத்தாய் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பட்டினியினால் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பினை வாகரை மருத்துவமனை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். Puthinam வாகரையில் தொடரும் வான்படைத் தாக்குதல் வாகரைப் பகுதியில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகலில் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு கிபி…

  24. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையேல் அடுத்தவருட மாவீரர் உரை யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத்தில் கஜேந்திரன் எம்.பி. உரை ""வடக்கு கிழக்கில் அரச படையினர் மேற்கொண்டு வரும் அடாவடித்தனம் தொடர்ந்தால் அடுத்த வருடம் நவம் பர் மாதம் 27ஆம் திகதி எமது தலைவர் யாழ்ப்பாணத்திலி ருந்து மாவீரர் தின உரையை நிகழ்த்துவார். ""எமது மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் விரைவில் நாம் தமிழீழத்தை அமைப் போம். எமது கொடி ஐ.நாவில் பறக்கும். படையினர் உடனடி யாக வடக்கு கிழக்கை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாம் வெளியேற்றுவோம்''. இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைச்சு களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…

  25. ராஜ பக்ஷே இந்தியா வருகை: தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு....!!! ------------------------------------------------------------ இலங்கை அதிபர் மஹிந்த ராஜ பக்ஷே யின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப் புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது என்று கட்சி உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரவிக்குமார் கூறினார். நாளை இலக்கியம், கலை மற்றும் திரைப்படத்துறையினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கும் இந்தப் போராட்டத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.