Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது. சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவ…

  2. திங்கள் 04-09-2006 20:06 மணி தமிழீழம் [சிறீதரன்] . அல்லைப்பிட்டியில் மீண்டுமொரு தடைவை சிறீலங்கா கடற்படையினரால் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினுள் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தென்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறீலங்காப் படைகள் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 1.1k views
  3. திங்கள் 04-09-2006 20:13 மணி தமிழீழம் [சிறீதரன்] நாகர்கோவில் பகுதியில் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு. நாகர்கோவில் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நேற்று மாலையும் இன்று காலை விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேற முயற்ற சிறீலங்காப் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகளின் பேராளிகள் களமாடி வருதோடு முறியடிப்புப் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற உக்கிர மோதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பலாலி மருத்துமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோக…

    • 0 replies
    • 713 views
  4. ஸ்ரீலங்காவில் ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் அல்ல. அனைத்து ஸ்ரீலங்கா நாட்டினர்களினதும் அரசாங்கம் என்பதையும் தற்போது அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஷ்ரீலங்கா அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியதே தற்போதுள்ள அவசரமான தேவையாகும். இதற்காக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலைப்பாட்டில் உடனடியானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ஆளும் அரசுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்களின் ஜனநாயக கட்சிகள், அமைப்புகளை கூடுதலாக அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வது மேற்குறிப்பிடப்பட்டதும் அ…

    • 3 replies
    • 1.6k views
  5. தமிழ் ஊடகங்களின் முரண்பட்ட செய்திகள்! ஏன்? கடந்த சில நாட்களாக, குறிப்பாக இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பின் புலத்திலிருந்து மட்டுமல்ல களத்திலிருந்தும் வெளிவரும் இணைய ஊடகங்களில் சில முரண்பாடான செய்திகள் வெளிவருவதையும், சில திரிக்கப்பட்ட செய்திகளாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள் ஏன் ஏற்படுகின்றன? தவிர்க்கப்பட முடியாதவைகளா? உதாரணத்துக்கு நாம் வாழும் புலத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல பத்திரிகைகள், செய்தி இணைய ஊடகங்கள் வெளிவருகின்றன. அவைகள் குறிப்பிட்ட ஒரு ஈராக்கில் நடைபெற்ற சம்பவத்தை வெளியிடுகின்றதென்றால், இங்குள்ள அத்தனை ஊடகங்களும் ஒரே மாதிரியாக அந்தச் செய்தியை…

  6. ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே தீவிர யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வழமையாக யுத்த ஆயுதங்கள், உபகரணங்களை ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவந்தபோதும், ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, யுத்தம் மூலமான தீர்வை மட்டுமே நாடி நிற்பது தவறான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டை அண்மையில் வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அரசு மேற்படி யுத்த ஆயுத உதவிகளை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்காதிருக்கும்படி பாகிஸ்தான் மீது இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகித்துள்ளது. இவ்வாறு அமெரிக்க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும் அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை அமெரிக்க அரசாங்கமே …

  7. தன்னை யார் கடத்தினார்கள் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு யார் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற உண்மையை குருபரன் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் இராணுவ புலனாய்வு பிரிவினர் குருபரனை செவ்வாய்கிழமை கடத்தி சென்று தடுத்து வைத்திருந்த போது என்ன நடந்தது யார் யார் குருபரனை சந்தித்தார்கள் என்ற விபரங்களை நிதர்சனம் விரைவில் வெளியிடும். http://www.nitharsanam.com/2006/08/31/50617.php

  8. சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக…

  9. தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளில் மோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிற்குமிடையே ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி வரணியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் படைத்தளத்திலிருந்து உக்கிரமான ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானு}ர்திகளும் அப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.3k views
  10. ஞாயிறு 03-09-2006 15:49 மணி தமிழீழம் [மயூரன்] பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் …

    • 0 replies
    • 762 views
  11. ஞாயிறு 03-09-2006 17:53 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்க கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்தியா பயணம் வடக்கு கிழக்கு நிலைமை மற்றும் தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்று இந்தியா சென்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் டில்லித் தலைவர்களைச் சந்திப்பதற்காக தமிழகம் சென்றுள்ளனர். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உயர் மட்டத் தலைவர்களை இந்தக் குழுவினர் சந்திக்கவிருக்கின்றனர். ஈழத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக பிரதமருக்கு …

  12. Started by tamilmobile,

    வடக்கு கிழக்கின் கடற் பிராந்தியத்தை இந்தியப் பாதுகாப்பிலும் வான் தரைப் பகுதியை பாகிஸ்தான் இராணுவத்திடமும் நாட்டின் பொருளாதாரச் சுமையினை இணைத்தலைமை நாட்டிடம் ஒப்படைக்கும்

  13. புலிகளின் முக்கிய செய்தி நோர்வேக்கு அனுப்பி வைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய செய்தி ஒன்று நோர்வே அனுசரணையாளர்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த செய்தியின் உள்ளடக்கத்தை நோர்வே அனுசரணையாளர்களே வெளிப்படுத்துவர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது இவ்வாறிருக்க சம்பூர் பகுதியை நோக்கி முன்னேறும் தமது நடவடிக்கை தொடர்வதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  14. திருகோணமலை மாவட்டத்திலிருந்து இன்று 16,540 குடும்பங்கள் இடம்பெயர்வு. திருகோணமலை மாவட்டத்திலிருந்து சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி தமிழ்க் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.மகேசன் அவர்கள் இன்று கருத்துத் தெரிவிக்கையில்: இதுவரை 16,540 குடும்பங்களைச் சேர்ந்த 62,643 பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 10,657 குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் 5 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் இதனிடையே செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைக்கு உணவுப் ப…

  15. பாய்ச்சலுக்கு புலிகள் தயராகி விட்டாhக்கள்.......!!! சிங்கள படைகள் முன்னெடுத்து வரும் வலிந்து தாக்;குதலை முறியடிக்க தற்காப்பு சமரை நடத்தி வரும் புலிகள் எத்தனை காலத்திற்க்கு இதனை செய்யப் போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.... மூதுரில் இருந்து தொடங்கப்பட்ட தாக்குதலில் இருந்து இது வரை 125 போரளிகளை வீடுதலைப்புலிகள் இழந்துள்ளார்கள் இத்தனை போராளிகளையும் பலி கொடுத்து அவர்கள் சும்மாய் இருக்க போவதில்லை.... மாறாக அவர்களும் தமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிருபிக்க வேண்டிய இக்கெட்டான நிலைக்குள் சிக்கியிருக்கிறார்கள். பலம் இழந்தார்கள் புலிகள் என பறை சாற்றும் சிங்கள பேரினவாத படைகளிற்க்கு பெரும் அடி கொடுக்க புலிகள் நிச்சயம் முனைவார்கள். …

    • 10 replies
    • 2.9k views
  16. பலாலிக்குள் புலிகள் ஊடுருவலாம் படையினர் தீவிர தேடுதல். யாழ். குடாநாட்டில் பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் விடுதலைப்புலிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறி கடந்த சில தினங்களாக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் படையினர் தீவிர தேடுதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை இரவு பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் தொடர்ச்சியாக, கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலை புலிகள் நடத்தியிருந்தனர். மறுநாள் காலையும் பலாலி விமானத் தளம் மீது தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வேளைகளில் பலாலி படைத்தளத்தினுள் மோதல்கள் இடம்பெற்றது போல் தொடர்ச்சியாக பலத்த சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. இரவிரவாகக் கேட்ட சத்தம் மறுநாள் காலையும் அங்கு கேட்டது. அதிஉயர்…

  17. விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி தொடரும் இடப்பெயர்வு சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.மகேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இதுவரை 16,540 குடும்பங்களைச் சேர்ந்த 62,643 பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 10,657 குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் 5 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றார். இதனிடையே செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல…

  18. போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி விவகாரம்: ஐ.தே.க.வின் மகரூப்பிடம் நாளை விசாரணை போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகரூப்பிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவின் தலைவர் சரத் லுகொட கூறியதாவது: மகரூப்பின் பிறப்புச் சான்றிதழ் மோசடியை அம்பலப்படுத்தியமைக்காக லேக் ஹவுசின் பிரதி ஆசிரியர் பிரசாத் குணவர்த்தவனை படுகொலை செய்யும் பொறுப்பை இரு நபர்களிடம் மகரூப் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து நாளை திங்கட்கிழமை விளக்கம் அளிக்குமாறு மகரூப்புக்கு தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து சிறிலங்கா காவல்துறையினரும் விச…

  19. கடத்தப்பட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலமாக கொழும்பில் மீட்பு. ஜசனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 23:19 தமிழீழம்ஸ ஜகிருஷ்ணப்பிள்ளைஸ கொழும்பில் வைத்து இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் கடத்தி செல்லபட்ட பிரபல பொலிஸ் அத்தியட்சகரின் மகன் சடலாமாக இன்று இராணுவ புலனாய்வு பிரிவினால் வீசப்பட்டுள்ளார். கொழும்பு 15 மட்டக்குளியில் வாழ்ந்துவரும் பொலிஸ் அத்தியட்சகரின் மகனான றெஜினோல்ட் யேசுதாசன் நேற்றையதினம் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டார். இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனமான யூனியன் அசுறன்ஸ் காப்புறுதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். http://www.nitharsanam.com/2006/09/02/50671.php

  20. தூங்கியவர்களை தட்டியெழுப்பும் சரத் பொன்சேகா..... விடுதலைப் புலிகளின் தாக்குதலால் நிலகுலைந்து போயிருக்கும் யாழ்குடா படைகளை தட்டி எழுப்பி ஊக்க மாத்திரை அழித்து போயிருக்கிறார் இலங்கை இராணுவ தளபதி. சரத்பொன்சேக... புலிகளின் விமானங்களும். அவர்களின் இலக்கு தவறா ஆட்லெறி தாக்குதலும் உள் நுழைந்து தாக்குதல் நடத்திய புலிகள் சிறப்பு படையனிகளின் தாக்குதலில் கதி கலங்கி போய் இருந்த படைகளிற்க்கு ஓடி வந்து ஊக்க மாத்திர அளித்துள்ளார். முகமாலையை அன்மித்த உயர் முன்னனி படை நிலைக்கும் சென்று படைகளிற்க்கு உற்சாகம் வழங்கியிருக்கிறார். இவ்வாறான நிகழ்வுகள் கடந்த காலங்களில் இருந்த படை நிலை தளபதிகளும் இதைத்தான் செய்தனர். குண்டு வைப்பில் காயப்பட்ட பின்னர் அங்கு …

  21. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாதாந்த சஞ்சிகையான `முரகல' (காவற்கல்) சஞ்சிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியான "இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் என்ன?" என்ற சிங்களக் கட்டுரையின் தமிழாக்கம். -தமிழில் ப.பன்னீர்ச்செல்வம்- சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவி வகித்த காலத்தில் பாண்டுங் நகரில் வலய நாடுகளின் மாநாடொன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் சேர்.ஜோன் "ஏகாதிபத்திய வாதிகளுக்கு சார்பான" உரையொன்றை நிகழ்த்தினார். இவ்வுரையை செவிமடுத்த ஜவஹர்லால் நேரு கொத்தலாவலவின் அருகில் வந்து இந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் அதன் பிரதியை ஏன் தன்னிடம் காண்பிக்கவில்லையென வினவினார். இதற்கு பதிலளித்த சேர் ஜோன் எனது உரையின் பிரதியை நான் ஏன் உனக்கு காட்ட வேண்டும்? நீ உனது உரையின் பிரதியை எனக்கு…

  22. பருத்தித்துறை கடற்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 போராளிகள் உயிரிழந்ததாக சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுவது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் கடற்சமர் குறித்து எழுதிய கட்டுரையில் இதனை இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை கடற்சமர் குறித்து அக்கட்டுரையில் இக்பால் அத்தாஸ் மேலும் கூறியதாவது: - சிறிலங்கா கடற்படை மீது அல்லது கடற்படைக் கப்பல் மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தவறிவிட்டதா? - திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு கடற்பிரதேசம் வழியாகத்தான் இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கான விநியோகப்பாதை அமைந்துள்ளது வெளிப்படையான ஒன்று. அப்படியான…

  23. மூதூரிலிருந்து ஒரு நேரடி விளக்கம் -கொத்தியார்- மனித அவலங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் அண்மையில் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இடம்பெயர்வுகளில் முஸ்லிம்களையும் இடம்பெயர்வு தொட்ட பின்பே, இந்த அவலங்கள் அரசியல் வாதிகளுக்கும் அரச உயர் மட்டத்தினருக்கும் அகதிகள் பற்றிய அனுதாபம் ஏற்பட்டிருக்கின்றது. ஏப்ரல் 25 ஆம் திகதி இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்குப் பின்பு, பதில் நடவடிக்கையாக சம்பூர் பிரதேசத்தின் மீது நடத்தப்பட்ட வான் மற்றும் எறிகணை தாக்குதலால் மூதூர் கிழக்குப் பகுதியில் பதினொரு கிராம அதிகாரி பிரிவுகளில் வசித்த 18 ஆயிரத்து 360 மக்கள் இடம்…

  24. தான் பிறந்த மண்ணில் வாழும் உரிமை எனக்கு இல்லையா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு வழங்கிய கொமாண்டோ பாதுகாப்பு மற்றும் வாகனங்களை குறைப்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளாருக்கு என்ன உரிமை இருக்கிறது எனவும் அவர் கேட்டுள்ளார். இக் கடிதம் இந்த மாதம் 25ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.திசாநாயக்க செய்தி சேவைக்கு ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற நாளில் இருந்து பல சந்தர்ப்பங்களில் தனது பாதுகாப்பு பிரதான…

  25. இங்கிலாந்து பிரதமர் ரொனி பிளேயருடன் இந்தியாவின் ஆதரவு குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இது தொடர்பில் மகிந்த கூறியுள்ளதாவது: இந்தியாவுடன் எனக்கு நல்லுறவு உள்ளது. இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியத் தரப்பினருடன் நான் நேரடியாக பேசுவேன். சர்வதேச நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்களை ரொனி பிளேயருடன் பேசினோம். அதுபற்றி விரிவாக தெரிவிக்க இயலாது. எமது அருகாமை நாடான இந்தியாவுடனான உறவுகள் குறித்து விவாதிக்க மூன்றாம் தரப்பின் உதவியைக் கோரியதாக நினைப்பது ஆச்சரியமளிக்கிறது என்றார் மகிந்த ராஜபக்ச. இங்கிலாந்துக்கு திடீர் பயணத்தை மகிந்த மேற்கொண்டிருந்த நிலையில் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவின் ஆதரவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.