ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கீழ்த்தரமான இராஜதந்திர செயற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது: தற்போதைய சமரில் நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய யாழ். முற்றுகையின் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமது இராணுவத்தினரை மீட்கவோ யுத்த நிறுத்தத்தை உருவாக்கவோ முன்வரவில்லை. சிறிலங்கா நட்பு சக்திகளோடு இராணுவ உறவை முன்னெடுத்து பயங்கரவாதிகளைத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலர் வை. கோபாலசாமியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று முன்தினம் சந்தித்த சுப்பிரமணிய சுவாமி, இந்திய அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்ககு ஆதரவான மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாட்டாளி முன்னேற்றக் கழகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கட்சிகள் காஷ்மீர் போன்ற நிலைமைகளை தென் இந்தியாவிலும் ஏற்படுத்த முயல்வதாக சுப்பிரமணி சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பாலஸ…
-
- 0 replies
- 1.1k views
-
-
அகதிகள் முகாமில் தொற்றுநோய் கந்தளை, ஆக. 31: இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் சண்டை காரணமாக பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். கந்தளை என்ற நகரில் மட்டும் இடம் பெயர்ந்து வந்த 29 ஆயிரம் பேர் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற சூழ்நிலையில், இவர்களுக்கு தட்டம்மை, வயிற்றுபோக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. இப்போது மழை பெய்வதால் மலேரியா போன்ற நோய்கள் பரவலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். http://www.dinakaran.co.in/epaperdinakaran...5507&code=16445
-
- 1 reply
- 880 views
-
-
சம்பூரை நோக்கிய படையெடுப்பில் இதுவரை தாங்கள் கட்டைப்பறிச்சான் வரை முன்னேறி விட்டதாகவும்..சம்பூரை அடைய இன்னும் 2 கிலோமீற்றர்கள் மட்டுமே உள்ளதாகவும் சிறீலங்கா படைத்துறைத் தலைவர் கூறியுள்ளார். அதையும் தாங்கள் சில தினங்களுக்குள் பிடித்து திருமலையை புலிகளிடமிருந்து பாதுகாத்துவிடுவினமாம்..! இதேவேளை சண்டைக்குப் பயந்து வெளியேறிய முஸ்லீம் மக்களை இராணுவம் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லையாம்..! சம்பூர் இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து புலிகள் இன்னும் எதுவும் சொல்லவில்லை..! Fonseka vows to capture Sampur [TamilNet, August 31, 2006 09:25 GMT] Sri Lanka Army (SLA) commander Lt. Gen. Sarath Fonseka vowed Thursday to take control of Tamil Tiger…
-
- 5 replies
- 2.4k views
-
-
இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலாளராக சிவசங்கர் மேனன் (எஸ்.எஸ்.மேனன்) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கான இந்திய தூதுவராக சிவசங்கர் மேனன் தற்போது பணியாற்றி வந்தார். இந்தியா- அமெரிக்கா இடையேயான அணு சக்தி தொடர்பான விடயங்களுக்கான சிறப்புத் தூதுவராக சியாம் சரண் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்த
-
- 2 replies
- 1.1k views
-
-
வவுனியா கோரமங்கலம் பகுதியில் இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 16 அப்பாவி தமிழர்களின் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. யாழ்ப்பாணம், திரிகோணமலை மாவட்டங் களில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை பிடிக்க ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை விடுதலைப்புலிகள் வீராவேசமாக போரிட்டு முறியடித்து வருகிறார்கள். தோல்வியை தழுவி வரும் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்களை கொல்கிறார்கள். கடந்த மாதம் மூதூர் பகுதியில் ஐ.நா.சபை சார்பில் சுனாமி நிவாரண பணிகளில் அமர்த்தப்பட்ட 17 அப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதை அடுத்து இலங்கை அரசுக்கு ஐ.ந…
-
- 1 reply
- 1.6k views
-
-
சூரியன் எஃப்.எம் வானொலியின் செய்திப்பிரிவு மேலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டுள்ளார் சூரியன் எஃப்.எம் வானொலியின் செய்திப் பிரிவு மேலாளரும், முதன்மைச் செய்தியாசிரியருமான நடராஜா குருபரன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி;ன்றன. இன்று அதிகாலை கடமைக்காக தனது அலுவலகம் நோக்கி மகிழுந்தில் சென்றிருந்தார். எனினும் அவர் அலுவலகத்திற்கு வராததையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது செல்லிடப்பேசிக்கு நீண்ட நேரமாகத் தொடர்பு எடுத்தபோதும், தொடர்பு ஏற்கப்படாத நிலையில், குருபரனின் வீட்டிற்கு அழைப்பு எடுத்தனர். இதனையடுத்து குருபரின் மனைவியும் அவரின் செல்லிடப்பேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியபோதும் அழைப்பு ஏற்கப்படவில்லை. இந்நிலையில் கு…
-
- 24 replies
- 4.3k views
-
-
பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பற்ற திடீர் பயணமொன்றை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். சந்திரிகா அம்மையாருடன், தமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருகடிகளைத் தீர்க்கும் வண்ணம் பேச்சுவார்த்தை நடத்த இலண்டன் வந்துள்ளார் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகம் வெளியிட்ட நிலையில் அவரின் பயணமானது, அதற்கும் பாற்பட்டதொரு நகர்விற்கான பயணமாகக் கருத இடமுண்டு. இருப்பினும் பிரித்தானியா என்கிற பின்கதவால் இந்தியாவை அணுகும் அதிரடி இராஜதந்திர நகர்வாகவே இதனை நோக்கலாம். பாகிஸ்தானின் இலங்கைப் பிரசன்னம் குறித்து நோர்வேயிடம் இந்தியா சுமத்திய குற்றச்சாட்டினால் எழுந்த புதிய சிக்கல்களால் தடுமாறிய ராஜபக்ச, பிரித்தானியாவினூடாக சில நகர்வுகளை மேற்கொள்ள முயற்சிக்கிறார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
மூதூர் கிழக்கை கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் முயற்சி: புலிகள் பதில் தாக்குதல் [திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் மும்முனையில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி பல்குழல் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களுடன் இன்று அதிகாலை 4.30மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் தொடங்கினர். இந் நடவடிக்கைக்கு ஆதரவாக சிறிலங்கா கடற்படையினரும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் எமக்குத் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தின் இ…
-
- 16 replies
- 2.4k views
-
-
வங்கதேசத்தை உருவாக்கிய கடமை உணர்வோடு தனி ஈழம் அமைய இந்தியா உதவ வேண்டும் என்று தினமணி நாளேட்டில் அதன் வாசகர் எழுதிய கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தினமணி வாசகர் டி.வி.கோவிந்தன் (மேல்மருவத்தூர்) எழுதிய கடிதம்: இலங்கை ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை எல்லாம் இலங்கை ஆட்சியாளர்கள் அழித்து விட்டார்கள். எனவே தமிழ் ஈழம் உருவாவதற்கான அனைத்து நியாயங்களும் உள்ளன. ராஜீவ் காந்தியின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்குப் பெரும் பின்னடைவு. ஆனால் அதையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதால் இன்று இலங்கைத் தமிழர்களுடைய மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 44 ஆண்டுகளுக்கு முன், நண்பனாக இருந்த சீனா, இந்தியாவின் சில பகுதிகளைப் பிடித்துக் கொ…
-
- 3 replies
- 1.3k views
-
-
முல்லைதிவில் கிபிர் கண்டு தாக்குதலில் கொல்லப்பட்டது பாடசாலை மாணவர்கள் என்பதனை இலங்கை அரசு எற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசில் அமைச்சராக இருக்கும் கே.என்.டக்.ளஸ் தேவானந்தா முல்லைதீவில் கொல்லபட்டது பாடசாலை மாணவர்கள்தான் என்பதை எற்றுக்கொள்வதாக தனது ஊடகம் ஒண்றின் ஊடாக அறிவித்துள்ளார். இதெ நெரம் இலங்கையின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கெகலிய றம்hக்வெல் எண்ற அமைச்சர் மல்லைதீவில் கொல்லபட்டது பாடசாலை சிறுமிகள் இல்லை எண்று தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதே நேரம் பால வயது வேறுபாடற்ற மறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் என்ற கருதப்படும் அனைவரம் கொல்லபடுவர் எண்றும் கெகலிய றம்பக் வெல் தெரிவித்திருந்தார். மேலம் கொல்லபட்ட பாடசாலை சிறுமகளன் அனைத்தும் பலிகள் எண்றும் குண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்.குடாநாட்டிற்கான பாதை திறப்பதற்கான கடிதங்கள் புலிகளால் அனுப்பி வைப்பு.யாழ்.குடாநாட்டிற்கான தரைவழி பாதையை திறப்பதற்கு சம்மதம் தெரிவித்து அணைத்துலக செஞ்சிலுவை சங்கம்,ஐக்கிய நாடுகள் அகதிகளிற்கான அமைப்பு போன்ற நிறுவனங்களிற்கு அதிகாரபூர்வ கடிதங்களை விடுதலைப்புலிகள் இன்று அனுப்பி வைத்துள்ளனர். கடந்த வாரம் இவ்வமைப்பின் பிரதிநிதிகள் புலிகளை சந்தித்து பாதை திறப்பதற்கான பேச்சுக்களை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 913 views
-
-
கொழும்புக்கு ஆங்கில நாள் போட்டிக்கு வந்த சேர்ந்த 30 மாணவர்கள் யாழ்ப்பாணம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அனைத்து இலங்கை ஆங்கில நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்புக்கு இம்மாணவர்கள் வந்தனர். ஆனால் பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி ஆங்கில நாள் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ். மோதலையடுத்து யாழ்ப்பாணத்துக்கு திரும்ப முடியாமல் கொழும்பில் மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொழும்பில் தங்குவதற்கும் அவர்களுக்குரிய வசதிகளைச் செய்து கொடுக்கவும் சிறிலங்கா கல்வி அமைச்சு அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று இலங்கை ஆங்கில ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கொழும்பில் உள்ள உறவினர்…
-
- 0 replies
- 838 views
-
-
மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு - பிரதி மாகாண சுகாதார பணிப்பாளர் கே.நந்தகுமாரன் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளில் முக்கிய மருந்துகள் முடிவடைந்துள்ளதுடன், சில மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண சுகாதார பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளில் முடிவடைந்த முக்கிய மருந்துகளை வவுனியா பிரதிமாகாண சுகாதார பணிமனையிலிருந்து செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக கிளிநொச்சிக்கு எடுத்து வருவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தடைவிதித்துள்ளது. எமது நெருக்கடிகளை பாதுகாக்கும் அமைச்சுக்கும், மாகாண சுகாதார அமைச்சுக்கும் தெரியப்படுத்தி மருந்துப் பொருட்கள் விர…
-
- 0 replies
- 772 views
-
-
மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்த
-
- 0 replies
- 871 views
-
-
அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்: கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றச்சாட்டு மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவை: இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசி…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் மிக உயரத்தில் பறந்தபடி கிளிநொச்சி புறநகர் பகுதிகளில் 3 குண்டுகளை வீசிச் சென்றுள்ளன..! தேச விபரம் அறியப்படவில்லை..! SLAF bombs Kilinochchi [TamilNet, August 31, 2006 07:53 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers dropped at least 3 bombs on the suburbs of Kilinochchi Thursday around 9:45 a.m. Sri Lanka Army fired artillery shells hit 5 villages in Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled territory in Vanni for 6 hours from 3:00 a.m. Normalcy was disturbed in Kilinochchi town after SLAF dropped bombs from high altitude hit the suburbs of the town. Kfir bombers also bombed Iyakkachchi area Wednesday…
-
- 0 replies
- 996 views
-
-
சம்பூரை சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம்: சரத் பொன்சேகா [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 06:11 ஈழம்] [கொழும்பு நிருபர்] சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்வரும் சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது: யுத்தகளம் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. http://www.eelampage.com/?cn=28554 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த கட்டைப்பறிச்சான் எமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சம்பூரை நோக்கி நாம் நகர்ந்துள்ளதால் அங்கிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுகின்ற…
-
- 8 replies
- 1.9k views
-
-
வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு மாற்றப்பட்ட 20 சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் 20 பேர் அப்பகுதிகளுக்குச் செல்ல மறுத்துவிட்டனர். பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக தங்களை அப்பகுதிகளிலிருந்து விடுவிக்குமாறும் அவர்கள் கோரியுள்ளனர். இது குறித்து தேசிய காவல்துறை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.eelampage.com/?cn=28552
-
- 0 replies
- 810 views
-
-
சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவதாக நோர்வே வானொலியான (என்.ஆர்.கே.பி1) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை மேற்கோள்காட்டி நோர்வே வானொலி இச்செய்தியைத் தெரிவித்துள்ளது. ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி ஒலிபரப்பிய செய்தி விவரம்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருந்திருந்தால் சிறில…
-
- 3 replies
- 959 views
-
-
சிறிலங்காவுக்கு இராணுவ உதவி இல்லை: வைகோவிடம் இந்தியப் பிரதமர் உறுதி சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவி அளிக்க மாட்டோம் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து புதுடில்லியில் சிறிலங்கா தூதுவரகம் முன் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். மன்மோகன்சிங்கின் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பு 20 நிமிட நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது - சிறிலங்காவுடன் இந்திய அரசாங்கம் இராணுவ உறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது - இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவிப்பு தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாக, பிரித்தானிய (Welsh) வேல்ஸ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டு, எம்மிடம் கருத்துரைத்திருக்கும் வேல்ஸ் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Highwell William) ஹைவெல் வில்லியம், சிங்கள அரசாங்கங்களின் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக, பல வருடங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு, வேல்ஸ் தேசியக் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் தமிழ் மக்களுடன், வேல்ஸ் தேசியக் கட்சி நல்லுறவைப் பேணி வருவதாக சுட்டிக் காட்டியிருக்கும…
-
- 0 replies
- 850 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தில் இணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருப்பதை அக்கட்சியின் முன்னனித் தலைவரான எஸ்.பி.திசநாயக்க சாடியுள்ளார். இது குறித்து எஸ்.பி. திசநாயக்க கூறியதாவது: மகிந்தவின் கடிதமானது ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும் செயற்பாடாகும். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பாமல் பிரதித் தலைவர் கரு ஜயசூர்யாவின் பெயருக்கு ஏன் மகிந்த கடிதம் அனுப்பினார்? கட்சிக்குள் தேவையற்ற முரண்களை உருவாக்கும் செயலாக நான் கருதுகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்திவிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலுக்கு மகிந்த திட்டமிடுகிறார். இனப்பிரச்சனை மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் மகிந்…
-
- 0 replies
- 756 views
-
-
தமிழ் மண்ணின் பிழையை மன்னியுங்கள்: வைரமுத்து உருக்கம்ஆகஸ்ட் 30, 2006 சென்னை: சீககிய மண்ணின் பிழையை (இந்திரா காந்தி படுகொலை) மன்னித்த சோனியா காந்தி அம்மையார், தமிழ் மண் செய்த பிழையையும் (ராஜீவ் காந்தி படுகொலை) மன்னித்து ஈழத் தமிழர்களின் அவலம் தீர உதவ வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தமிழர் பேரவை சார்பில் இலங்கையின் செஞ்சோலை முகாமில் இலங்கை விமானத்தாக்குதலில் உயிர் நீத்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. செஞ்சோலை முகாமில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகு வர்த்திகள் ஏற்றப்பட்டன. சுப. வீரபாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத…
-
- 31 replies
- 5.4k views
-
-
இலங்கையில் அண்மைய மோதல்களினால் இடம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்காக 37.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்க ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நா. அமைப்புகள் சார்பில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமைச் செயலகம் மற்றும் ஜெனீவா அலுவலகங்களினூடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "அவசரமான மனிதாபிமான உதவி இது" என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரசீத் கலிக்கொவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 மில்லியன் மக்கள் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிகையானது மேலும் உயரும்" என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பாலானோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்க…
-
- 0 replies
- 923 views
-