ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142604 topics in this forum
-
தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ... ...... சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர். ... ..... http://www.eelampage.com/?cn=27378
-
- 16 replies
- 4.3k views
-
-
ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பினார் பவன் Friday, 21 July 2006 மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இன்றிரவு 9:30 மணிக்கு இனந்தெரியாத ஆயுதபாணிகள் ஜெயானந்தமூர்த்தியை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். மட்டக்களப்பு பும்புகாரில் அமைந்துள்ள அவரது வீட்டின் படுக்கை அறையை இலக்கு வைத்து வீதியில் நின்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இது குறித்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பி எமக்கு கருத்து தெரிவிக்கையில்:- அறையின் ஜன்னலை மூடிவிட்டு தான் திரும்பி…
-
- 5 replies
- 1.6k views
-
-
மஹிந்த அரசின் பொறுப்பற்ற போக்கால் நாட்டின் பாதுகாப்பு பெரும் நெருக்கடியில்! இந்தியாவில் ரணில் இப்படித் தெரிவிப்பு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தெளிவற்ற பொறுப்பற்ற கொள்கைகளின் விளைவாகவே இலங்கைத் தீவு இன்று பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. இவ்வாறு இந்தியாவில் கருத்து வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. இந்தியாவில் விஜயம் மேற்கொண்டிருக் கும் ரணில் விக்கிரமசிங்க இந்திய பாதுகாப்பு ஆலோசகரும், மூத்த இராஜதந்திரியுமான எம்.கே.நாராயணனை சந்தித்து அவருடன் பேச்சு நடத்தியபோதே இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, மிலிந்த மொ…
-
- 0 replies
- 910 views
-
-
இராணுவத்தின் ஊன்றுகோல் -ஞாபகன் Friday, 21 July 2006 சிறிலங்கா இராணுவம் தனது பலம்சார் வல்லமை பற்றிய ஐயங்கள் பலவற்றோடு இருக்கின்றது. தனித்து சிறிலங்கா இராணுவம் என்ற கட்டமைப்புக்குள் இருக்கும் முப்படைகளோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கி, முறியடித்துவிட இயலாது என்று நம்புகின்றது. தென்னிலங்கை மக்களிடம் தனது வல்லமை பற்றி என்னதான் பிரதாபம் பேசமுற்பட்டாலும் அதன் உளவியல் சாதகமற்றே இருக்கின்றது. இதனை ஆணித்தரமாக கூறுவதற்கு ஒட்டுப்படைகள் என்று தமிழர்கள் கூறுகின்ற துணை ஆயுதக்குழுக்களை கட்டிஅணைத்து வைத்திருக்கின்றமையை நல்லவலுவான ஆதாரமாக காட்டலாம். தமிழ் மக்களின் படைபலத்தை கட்புலரீதியாக துண்டுபட்டிருப்பதாக, பிரிவுபட்டிருப்பதாக காட்டுவதற்கும் அதனை தனது த…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தேசப்பற்றாளர்களின் நடவடிக்கைகள் -வேலவன்- சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப்பிரிவு செயலிழந்து விட்டதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பையே அவர்களால் நிலை நாட்ட முடியாதுள்ளதாகவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பொழுது அது மக்களை புலனாய்வாளர்களாகச் செயற்படுமாறு கேட்டிருக்கின்றது. சிங்களப் பெயரில் தமிழர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையில் இருந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான அறிக்கையை மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபரிடம் கேட்டிருக்கின்றார். அமைச்சர்கள், படையினர் உட்பட உயர் நிலையிலுள்ள புலிகளுக்கு உதவும் 48 சிங்களர்களுடைய விபரங்கள் ஜாதிக ஹெல உறுமயவுக்குக் கிடைத்துள்ளது. சிங்களவர் மத்தியில…
-
- 0 replies
- 837 views
-
-
இலங்கைத்தீவின் தமிழ் - சிங்கள இனப்பிரச்சனை வரலாற்றில் "அனைத்துக்கட்சி மாநாடு" என்ற அரசியல் நிகழ்ச்சியை சிங்கள அரசு காலத்திற்குக்காலம் அரங்கேற்றிவருகின்றது. ஒவ்வொரு "அனைத்துக்கட்சி" மாநாடும் நடாத்தப்பட்ட வேளைகளிலிருந்த அரசியற் புறச்சூழல்களை ஆராய்ந்து பார்த்தால் ஒரு அரசியல் உண்மை புலப்படும். அது சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத முகத்தையும் ஏமாற்று அரசியலையும் அம்பலப்படுத்திக் காட்டும். திம்பு பேச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பு வைத்த அரசியற் கோரிக்கைகளை பரிசீலிக்கவே மறுத்த சிங்கள அரசு, பேச்சுக்களை முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் "அனைத்துக்கட்சி மாநாடு" என்ற அழகிய பெயரில் சிங்களக் கட்சிகளை ஒன்று கூட்டியது. தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்று தமிழர் தரப்பு …
-
- 0 replies
- 995 views
-
-
சர்வதேசம் புலிகளை நிராகரிக்க வேண்டும் ஐ.தே.க. தீர்மானம் நிறைவேற்றியது [20 - July - 2006] [Font Size - A - A - A] -மேல் மாகாண சபையிலிருந்து பிரபா வெளிநடப்பு விடுதலைப் புலிகள் மிக மோசமானதொரு பயங்கரவாத இயக்கமெனவும் சர்வதேச சமூகம் அவர்களைக் கண்டித்து நிராகரிக்க வேண்டுமெனவும் கூறி, மேல் மாகாண சபையில் நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சபையிலிருந்து பிரபா கணேசன் வெளிநடப்புச் செய்துள்ளார். இது தொடர்பாக பிரபா கணேசன் தெரிவிக்கையில்; இலங்கையின் தேசிய பாதுகாப்பு சீர்குலைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இன, மத, கட்சி வேறுபாடின்றி பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கண்டி…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று வெளியாகிறது "விடுதலைப்புலிகள்" ஏட்டின் 131 ஆவது குரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆனி-ஆடி 2006 மாதத்திற்குரிய 131 ஆவது குரல் இன்று வியாழக்கிழமை வெளியாகிறது. "ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றால் தனியரசு அமைக்க முயற்சி செய்வோம்" என்ற முகப்புச் செய்தியுடன் வெளிவருகின்றது. "ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி" எனச்சொல்லும் ஆசிரியர் தலையங்கத்துடன் வரும் இந்த இதழில், க.வே.பாலகுமாரன் எழுதிய "வரலாற்றின் அனுபவக் களஞ்சியத்தின் மகத்தான ஆயுதம்" என்ற அரசியல் கட்டுரையும், "ராஜபக்சவின் நிபுணர் குழுவும் வேண்டாம் சர்வகட்சி மகாநாடும் வேண்டாம்- அவரது கொள்கைப் பிரகடனம் என்ன?", …
-
- 0 replies
- 869 views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/18.htm
-
- 0 replies
- 871 views
-
-
வடக்குகிழக்கு மாகாணத்தை பிரிக்கக் கோரும் வழக்கை ஜே.வி.பி யினர் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அது சட்டப்புூர்வமானது அல்ல என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.யினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர். ஜேவிபியினரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வா ஆஜராகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை …
-
- 23 replies
- 4.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தியுடன் சிறப்புத் தூதுவர் வெள்ளியன்று கிளிநொச்சி விரைவு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை அடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறியால் பாரிய சிக்கலில் மாட்டியுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியவிடாது அமைதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கு கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத் தூதுவரான சுவீடனை சேர்ந்த அன்ட்ரஸ் ஒஜேலன்ட் இன்று புதன்கிழமை சிறிலங்கா அரச பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். எதிர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
படையினர் பயணம்செய்த பேரூந்து மீது கிளேமோர்த் தாக்குதல்- இரு சிப்பாய் பலி - 12பேர் படுகாயம் - பாண்டியன் றுநனநௌனயலஇ 19 துரடல 2006 13:47 யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகே இன்று காலை 11.05 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வர் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு) விடுமுறையில் வீடு செல்வதற்காக உடுவில் இராணுவ முகாமிலிருந்து பேரூந்து ஒன்றில் சென்ற படையினர் 15பேரே இக்கிளைமோர் தாக்குதலில் சிக்கினர். இவர்களில் ஒரு அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டது…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்நாட்டில் தேடப்படுகிற கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது: மன்மோகனிடம் வைகோ வலியுறுத்தல் தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார். மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சு…
-
- 1 reply
- 2k views
-
-
மட்டக்களப்பில் ஆழ ஊடுருவிய படையினர் மீது தாக்குதல்: 8 படையினர் பலி! மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகுள் சிறீலங்காப் படையினரும் மற்றும் துணை ஆயுதக்குழுவினரும் ஊடுருவ முற்பட்ட போது விடுதலைப் புலிகளில் பதில் தாக்குதலில் 8 படையினர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகனேரிப் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 6மணிக்கு ஊடுருவிய படையிருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதலிலேயே படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களின் சடலங்களை விதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளா தயாமோகன் எமது செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து படையினர…
-
- 71 replies
- 9.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை கடத்தியது துணை இராணுவக் கும்பலே: சிறிலங்கா மனித உரிமைகள் குழு அறிக்கை மட்டக்களப்பில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரை கடத்தியது சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கும்பல்தான் என்று சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியாவுக்கு கடந்த ஜனவரி 29 ஆம் நாள் தமிழர் புனர்வாழ்வுக் கழக வான் சென்றுள்ளது. முன்பள்ளி ஒருங்கிணைப்பாளரான தோசினியும் அந்த வாகன பயணத்தில் இணைந்து கொள்வதாக தெரிவித்திருந்தார். மட்டக்களப்பின் நாவற்குடாவிலிருந்து ஜனவரி 29 ஆம் நாள் மாலை 5.45 மணிக்கு வாகனம் புறப்பட்டுச் சென்றது. வாகனத்தில் முன்பள்ளி அபிவிருத்தி மைய ச…
-
- 0 replies
- 896 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடுவதா?: சிறிலங்காவுக்கு ஆசிய மனித உரிமைகள் மையம் கண்டனம் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான 2000 முறைப்பாடுகளை கைவிடும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முடிவுக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆசிய மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கை: சர்வதேச அளவில் காணாமல் போதல் சம்பவங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தின் இத்தகைய பகிரங்க அறிவிப்பானது ஆச்சரியமளிக்கிறது. காணாமல் போவோர் தொடர்பான விசாரணைகளை தொடரும் நிலையில் நட்ட ஈடு உள்ளிட்டவைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்காக விசாரணைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்நிலைப்பாட்டை…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை: பிரித்தானிய தூதுவர் இலங்கைக்கு பிரித்தானிய அளித்த யாப்பின் மூலம் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை- அந்த ஏற்பாடு போதுமானதும் வலுவானதும் அல்ல என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார். வீரகேசரி வார வெளியீட்டுக்காக அவர் அளித்த நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது: பிரித்தானியா புலிகள் நேரடி பேச்சுக்கு தடையில்லை கேள்வி: பிரித்தானியா விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளமையானது விடுதலைப் புலிகளுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்குமா? பதில்: அப்படி ஒரு முட…
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.bbc.co.uk/sinhala/news/story/20...ayamaster.shtml
-
- 3 replies
- 2.6k views
-
-
சிங்களப் பத்திரிகை லங்காதீபவில் வந்த செய்தி இந்தியப்படையினரிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பிரபாகரன் ஸ்ரீ லங்காவின் பாதுகாப்புப் படையினருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமல்ல என்பதே யதார்த்தம். உலகில் மிகக் கூடுதலான எண்ணிக்கையிலான இராணுவத்தை உடையதாகக் கருதப்படும் இந்தியாவின் படையினர் ஸ்ரீ லங்காவில் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் பிரபாகரனைப் பிடிப்பது இலகுவான விடயமாக அமையவில்லை. ஒருமுறை இந்தியப் படையினர் புலிக்குட்டி ஒன்றைச் சுட்டுக் கொன்று விட்டு அது பிரபாகரன் செல்லமாக வளர்த்த புலிக்குட்டி எனக்கூறி அதன் புகைப்படத்தை ஸ்ரீ லங்கா ஊடகங்கள் மூலம் காட்டி பிரபாகரனை தம்மால் பிடிக்க முடியாவிட்டாலும் பிரபாகரன் இருந்த இடத்தை அ…
-
- 7 replies
- 3.7k views
-
-
விடுதலைப்புலிகளின் ஊடகத்துறைப் பேச்சாளர் தயா மாஸ்ரர், அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைகளை முடித்துக்கொண்டு தனது குடும்பத்தினருடன் சிறிலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்க வன்னி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் "காணாமல்" போகும் தமிழர்கள்: ரொறன்ரோ ஸ்ரார் இலங்கையில் தமிழர்கள் காணாமல் போவது குறித்து ரொறன்ரோ ஸ்ரார் என்ற கனேடிய பத்திரிகை விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரை விவரம்: யாழில் சில வாரங்களுக்கு முன்பாக நள்ளிரவில் வெள்ளை வானில் வந்த இராணுவத்தினர் கனகன் சசிகரன் என்பவரது வீட்டின் முன்பாக வந்திறங்கினர். வீட்டின் பின் கதவை 15-க்கும் மேற்பட்டோர் காலால் உதைத்து உடைத்தனர். அவர்களில் சிலர் கறுப்பு முகமூடி அணிந்திருந்தனர். வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சசிகரனை (வயது 29) படுகொலையிலிருந்து இழுத்து வானில் ஏற்றினர். அவரது மனைவியின் முகத்தில் ஏ.கே.௪7 ரக துப்பாக்கி முனையினால் இராணுவத்தினர் தாக்கினர். அதன் பின்னர் சசிகரன் இருப்பிடம் குற…
-
- 2 replies
- 1.4k views
-
-
பவுத்த பேரினவாத மகிந்தவின் இரட்டை வேடம். - தயா மாஸ்ரரை கைது செய்மாறு தனது இனவாதிகளை தூண்டிவிட்டு விட்ட மகிந்த. வியாழக்கிழமைஇ 14 டிசெம்பர் 2006 மௌலானா தயா மாஸ்ரரை கைது செய்யுமாறு பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யபட்டுள்ளது. இலங்கையின் சிங்கள பொலிஸ் மா அதிபருக்கு இனவாத அமைப்பு ஒண்று இதனை செய்துள்ளது. அதற்கான ஆதரமாக பொலிசார் கொடுத்த கடிதம். மருத்துவமனையிலை அனுமதித்துவிட்டு எந்த மருத்துவ மனை என்று இனவாதிகளுக்கு கூறிவிட்டு ஆர்பாட்டம் நடாத்துமாறு தூண்டிவிட்டு ஆர்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்குமாறு பொலிசாரையும் தூண்டிவிட்டு ஆர்பாட்டத்தில் தயாமாஸ்ரருக்கு எதிராக முறைப்பாடு பொலிசில் பதிவு செய்யுமாறு தூண்டிவிட்டு அந்த முறைப்பாடடை பொலிசார் ஏற்றுக்கொள்ளுமாறு தூண்டிவிட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சம்பத் சில்வா கொலையை விசாரித்த 4 பொலிஸ் குழுக்களும் விலகல். ஊடகவியலாளர் சம்பத் லக்மல் சில்வா கொலை விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறை குழுக்களில் நான்கு குழுக்கள் விலகியுள்ளன. பிரதிகாவல்துறை அதிகாரி ஒருவரின் பணிப்புரையின் அடிப்படையிலேயே இந்த குழுக்கள் விலக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கல்கிஸ்ஸை காவல்துறையின் குழு ஒன்று மாத்திரமே தற்சமயம் இந்த கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
சரத் பொன்சேகா மீது தாக்குதல்: உயிருடன் இருக்கிறார் தற்கொலைதாரி என அறிவிக்கப்பட்ட "மஞ்சுளாதேவி" [வெள்ளிக்கிழமை, 14 யூலை 2006, 17:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டிருந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என்பவர் உயிருடன் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என்று சிறிலங்காவின் இரகசியப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. முதலில் ரம்புக்கனையிலும் பின்னர் வெலிவேரியவிலும் வசித்து வந்த தற்கொலைதாரி மஞ்சுளாதேவி என அடையாளம் காணப்பட்டதுடன் அவரின் அடையாள அட்டையையும் இரகசியப் பிரிவினர் கண்டுபிடித்திருந்ததாக கூறப்பட்டது. பின்னர் மஞ்சுளாதேவி சிறு வயதில் தங்கிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
:!: நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமி படையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு :!: நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது. அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார். நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில்…
-
- 2 replies
- 2.2k views
-