ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142583 topics in this forum
-
இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம். நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.
-
- 248 replies
- 31k views
-
-
சரத் பொன்சேக மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்திய பெண் உயிருடன் இருபதாக அறிவிப்பு. லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் இருப்பதாக குற்றப் புலாய்வாளர் ஒருவரை மேற்கோள்காட்டி லங்கா நியூஸ் என்ற சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 8 அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும் அவற்றில் வவுனியாவைச் சேர்ந்த அனோஜா குகேந்திரராசா என்பருடைய அடையாள அட்டையும் உள்ளங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதை அடுத்து வவுனியாவுக்கு விரைந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் பெண் உயிரு…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள தமிழர்கள் தற்போது சிறீலங்காவில் அல்லது தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்தால் 28.04.2006 ம் திகதிக்கு முன்னர் சிறீலங்காவை விட்டு வெளியேறுமாறு IBC அறிவிப்பொன்று கூறுகிறது................ பயண தேவைகளுக்காக குடியுரிமை பெற்றுள்ள அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ள நாட்டுத் தூதரங்களுடன் தொடர்பு கொள்க. இதுபற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தால் இணையுங்கள். நன்றி: http://www.ibctamil.co.uk/
-
- 20 replies
- 4.7k views
-
-
EPDPஅமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் தோழர்களால் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஜ சனிக்கிழமைஇ 25 பெப்ரவரி 2006 ஸ ஜ லக்ஸ்மன் ஸ ஒட்டுக்குழுத் துரோகி டக்ளசின் கோர முகம். மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி டக்ளஸ் தேவானந்தாவிற்கு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. இது நன்றாகத் தெரிந்தும் இவர் ஏன் நாய் வேடம் போட்டார்? யார் இந்த டக்ளஸ் தேவானந்தா? மேலும் வாசிக்க::::::: http://www.nitharsanam.com/?art=15535
-
- 12 replies
- 3.4k views
-
-
இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களும் இராணுவப் பயிற்சியும் வளங்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு உறுதியளித்திருக்கிறார். http://www.wpherald.com/storyview.php?Stor...09-011638-8899r கடந்த வாரம் பார்த்தோமானால் பிரபல இந்திய பத்திரிகைகளில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை பெறவிரும்புவதாக ஒரு ஆயுதப்பட்டியலை வெளியிட்டிருந்தது. http://72.22.81.139/forum3/viewtopic.php?t=10718 இது வெளிவந்து ஓரிரு நாட்களுக்கு பிறகு இலங்கை அரசு தான் இச் செய்தியைப்பார்த்து அதிர்ச்சி அடைவது போலவும் தமது இரகசியங்கள் எப்படி வெளியாயின என்று தாம் குளம்பிப் போய் இருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டது. உண்மையில் நடந்தது என்னவென்றால், உள்நாட்டெதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவிலிருந்து இலங்…
-
- 0 replies
- 862 views
-
-
வவுணதீவு புளியடி முன்னரங்க நிலைகளை நோக்கி இன்று பிற்பகல் 3:25 மணிக்கு சிறிலங்கா படையினர் மோட்டார் மற்றும் ஆர்.பி.ஜி எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு முறைப்பாடு செய்தனர். கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே திரும்பவும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் நேரடியாகவே சிறிலங்கா அரச படைகளின் யுத்த நிறுத்த மீறல்கள் புலப்படுத்தப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 866 views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை யப்பான் சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். அரசியல்துறை நடுவப் பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி நேர்காணல் பின்வருமாறு:- கேள்வி:- இன்றைய சந்திப்பு தொடர்பாக? பதில்:- இன்றைய சந்திப்பில் யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அக்காசி அடங்கிய தூதுக்குழுவினரை சந்தித்துக் கலந்துரையாடினோம். இன்றைய சந்திப்பில் முக்கியமாக இலங்கை அரசின் இரட்டைத் தன்மைபற்றி விளக்கப்பட்டது. அரசு பேச்சுவார்த்தைக்கு தயாரென்று கூறிக்கொண்டு போலித்தனமான அறிவுப்புக்களை விடுத்துக்கொண்டு, மறுபுறத்தில் தமிழர் தாயக பிரதேசத…
-
- 0 replies
- 767 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினரும் ஒட்டுக்குழுக்களும் மேற்கொண்டு வரும் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே மீளவும் பேச்சுக்கள் நடைபெறும். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன்பாலசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தாவது:- சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதில் அரசு சரியான முறையில் செயற்படவில்லை. போக்குவரத்தால் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலை தற்போதய நிலைமையினால் மிகவும் மோசமடைந்துள்ளது. தமிழ் மக்கள் மீது ஒட்டுப்படைகளும் சிறிலங்கா படையினரும் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் பேச்சுக்கள் தடைப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. அதேவேளை ஜெனீவாப் பேச்சுக்கள…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீண்டும் குடியேற விடவேண்டும் என்று சிறிலங்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் 90ம் ஆண்டில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் குடியேறுவதற்கு சிங்கள இராணுவம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே!
-
- 1 reply
- 1.3k views
-
-
கொக்குளாய்ப் பகுதியிருந்து சுமார் 246 குடும்பங்களைச் சேர்ந்த 954 சிங்களவர்கள் இடம் பெயர்ந்து தமது சொந்தப் பகுதியான நீர்கொழும்புக்குச் சென்றுள்ளதாக நீர்கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 30ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே புல்மோட்டைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இக்குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இவர்கள் இடம்பெயர்ந்து முதலில் புல்மோட்டைக்குச் சென்று அங்கிருந்து நீர்கொழும்பும்பைச் சென்றடைந்ததாக தெரியவருகிறது. தமது பாரம்பரிய பிரதேசமான கொக்குளாய் பகுதியிலிருந்து ஒரே இரவில் சிறிலங்கா படைகளால் 46 000 தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு இந்தச் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்:ம…
-
- 4 replies
- 1.7k views
-
-
தென்மராட்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தங்கியிருந்தவேளை காணாமல் போன எட்டு இளைஞர்களும் சடலங்களாக வடமராட்சியின் கப்பத்து வெளிப்பகுதியில் மீட் கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பத்து பகுதிக்கு அண்மையாகவுள்ள கொம்பிமுனைக் காட்டுப் பகுதியிலேயே இ ந்த இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் பெருமளவு சிங்களப் படையினர் குவிக்கப்பட்டு எவரும் அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று கொடிகாமம் நெல்லியடி வீதிää சாவகச்சேரி பருத்தித்துறை வீதி உள்ளிட்ட கப்பத்துப் பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்து படையினரால் மூடப்பட்டு பெருமளவான படையினர் …
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வவுணதீவு பிரதேச கிராமங்கள் நோக்கி நேற்று காலை 6.00 மணி தொடக்கம் பகல் ஒருமணி வரை படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதனால் குறிஞ்சா முனை, காயான்மடு, புளியடிமடு, மங்கிக்கட்டு வவுணதீவு சாளம்பைக்கேணி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அத்துடன் பதட்டமும் அச்சமும் காணப்படுகிறது. எறிகணைத் தாக்குதலை நடத்திய அதேவேளை 140 மில்லி மீற்றர் ரக கனரக ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வவுணதீவூடான போக்குவரத்துக்கும் படையினர் நேற்று தடை விதித்தனர். நேற்று காலை மட்டக்களப்பு நகருக்கு வைத்திய வசதி உட்பட பல்வேறு தேவைகளுக்குமாக வவுணதீவு படைசோதனை சாவடியூடாக மக்கள் செல்ல முற்பட்ட…
-
- 0 replies
- 985 views
-
-
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக துப்புத்துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரகசியப் பொலீசார் தற்கொடையாளியை வழி நடத்தியவர்களை கண்டறிவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்கொடைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது தற்கொடையாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் செல்போன் சிதைவடைந்த போதும் அதனுடைய சிம்காட்டை தாம் கண்டெடுத்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கிறது. உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொடையாளியுடன் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை கண்டறியும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்கு வெளிநாட்டு உதவி வேண்டப் படுவதாகவும் சம்மந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
http://nitharsanam.com/?art=17105 ஐயோ என்ன நடக்குது நாட்டில... குண்டுவெடிப்பு அரசின் தீவிர பிரச்சாரத்துக்கு வழிசெய்ததை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஜெயராஜ் ஆனால் இது அவர் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டதாக அர்த்தமாகிவிடாதே?
-
- 0 replies
- 1.3k views
-
-
வரப்போவது போரா சமாதானமா? [07 - May - 2006] [Font Size - A - A - A] -கலாநிதி குமார் ரூபசிங்க- சர்வதேச பின்னணி உலகம் முழுவதிலுமான பிரதானமான ஆயுத முரண்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு முன்னரிலிருந்து இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்திருக்கிறது என்பதை அறிய முடிந்தது. கடந்த இரண்டு தசாப்த காலங்களாக உலகம் முழுவதிலும் 32 ஆயுத முரண்பாடுகளை கண்காணித்து வருகின்ற எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. என்ற வருடாந்த புத்தகத்தின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ அரைவாசியாக குறைவடைந்திருக்கிறது. 17 முரண்பாடுகளே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2001 செப்டெம்பர் 11 ஆம் திகதியன்று அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுட…
-
- 0 replies
- 901 views
-
-
கொடிகாமத்தில் எதென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஆசிரியர் ஒருவர் மற்றும் இளைஞர்கள் என எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து காணாமல் போன இளைஞர்களின் உறவினர்களால் கொடிகாமம் சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கொடிகாமம் மந்துவில் அம்மன் கோவில் கும்பாவிசேத்துக்குச் சென்று நேற்றிரவு கோவிலில் தங்கிநின்ற இளைஞர்களே காணாமற்போனவர்களாவார். இவர்கள் இன்று காலை வீடு திரும்பாததையடுத்துத் தேடிச்சென்ற உறவினர்கள் குறித்த ஆலய உட்புறத்தில் இரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இராசநாயகம் சிவானந்தமூர்த்தி (வயது-35) இராமச்சந்திரன் இராஜ்குமார் (வயது 22) வைகுந்தவாசம் வைகுண்டம் (வயது 12) மார்க்கண்டு புஸ்பகாந் (வயது 18) கந்தசாமி…
-
- 2 replies
- 1.2k views
-
-
போர் நிறுத்த மீறல். நிழல் யுத்தம். போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகல். போர். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்திலிருந்து சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மோசமான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசு முழு அளவில் போரைத் திணித்துள்ளதையே காட்டுகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து ஆங்காங்கே போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் படைத்தரப்பு ஈடுபட்டதால் சமாதான வழிமுறைகளில் நம்பிக்கை பலவீனமடைந்தது. எனினும், உடன்பாடு முன்னெடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்…
-
- 0 replies
- 815 views
-
-
அனுப்பியவர்: தமிழவன் Wednesday, 03 May 2006 சிங்கள அரசின் நயவஞ்சகப் போக்கிற்குத் தமிழகத்தின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் மே 3ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு இலங்கை துணைத்தூதுவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கம் போல் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஊர்வலமாக இலங்கைத் துணை தூதுவர் அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட 500க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய இயக்கம் கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம் வே. ஆனைமுத்து, த…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-
-
யாழ் நமது ஈழநாடு சுற்றி படையிரால் முற்றுகை: துப்பாக்கிச் சத்தங்கள் செவிமடுப்பு! யாழ் நமது ஈழநாடு பத்திரிகை இராணுவத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை இப்பகுதியில் 15 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். Pathivu
-
- 1 reply
- 1k views
-
-
பலவீனமான துணைப்படையும் சிங்கள அரசின் நிழல் போரும் கடந்த வாரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் போர் நிறுத்தத்தை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டுவந்து, மீண்டும் ஒரு முழு அளவிலான போரை ஏற்படுத்திவிடுமோ என்ற கருத்தைவிட, சிங்கள அரசின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தியது என்பதே பொருத்தமாகும். சிறிலங்கா இராணுவத்தளபதி மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கான பதிலடியாக மக்கள் குடியிருப்புக்கள் மீதான குண்டுவீச்சுக்கள் சிங்கள அரசின் சாமாதான முகமூடியை உலகிற்கு தெளிவாக காட்டியுள்ளது. அதேபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலநறுவைப் பகுதியின் தீவுச்சேனையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது சிறிலங்கா இராணுவத்தினாலும் அரசினாலும் மிகவும் பாதுகாப்பாக வைக்க…
-
- 0 replies
- 739 views
-
-
யாழ்ப்பாணம் உதயன் நாளேட்டின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு உள்நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உதயன் ஆசிரியர் குழுவினரை நோக்கி இன்று இரவு 7.45 மணியளவில் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உதயன் அலுவலகத்திற்குள் 40 தடவைகளுக்கும் மேல் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாக அருகாமையில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்டோர் உதயன் நாளேட்டின் அலுவலக முகாமையாளர் சுரேஸ் என்றும், மற்றொருவர் பத்திரிகை மடிப்பவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயன் நாளேட்டின் கொழும்பு வெளியீடான சுடரொளியின் அலுவலகத்தின் மீது முன்னர் இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்ப…
-
- 23 replies
- 5k views
-
-
வேறொரு இணையத்தில் கண்டு அதிர்ந்து போனேன் :shock:
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்குப் பத்திரிகையாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம். சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறுவது தற்பொழுது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் மீது சிறீலங்காப் படைத்துறை கட்டவிழ்த்து விட்டுள்ள மனித உரிமை மீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது கொலைத் தாக்குதல்களும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்துள்ளதன் காரணமாக, தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் நாட்டை விட்டுத் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. 31.05.2004ம் திகதி மட்டக்களப்பின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான திரு ஐயாத்துரை…
-
- 0 replies
- 1.5k views
-
-
பொலநறுவை மாவட்டம் வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் சிறிலங்காப் படையின் துணை இராணுவக் குழுவினரின் முகாம் தாக்கியழிக்கப்பட்டதாகவும் இதில் 15-க்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டதாகவும் பலரைக் காணவில்லை என்றும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டதாகவும் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முகாமை நோக்கி ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிறிதொரு தகவல்களின் படி இம் முகாம் பகுதியில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் வாகனமும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும்…
-
- 33 replies
- 6.9k views
-
-
AIR FORCE • Two UAVs • Cluster and fuel air bombs for Kfirs (50 each) • 20 laser/precision guided bomb kits • 30 deep penetration bombs • 500 80mm rockets with fuel air explosive warhead ARMY • 10 Bakhtar Shiken anti-tank guided missile launcher • 300 Tandem warhead missiles • 1000 radio sets NAVY • 5000 mortar bombs • 250 night vision goggles http://www.indianexpress.com/story/3678.html
-
- 0 replies
- 929 views
-