Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐக்கிய நாடுகள் சபையில் மூக்குடைபட்ட சிங்கள அரசபிரதிநிதிகள். - பண்டார வன்னியன் குசனையலஇ 30 துரநெ 2006 20:17 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபைகளின் முதலாவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று சுவிஸை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் 'சர்வதேச சர்வ நம்பிக்கை" என்ற அரச சார்பற்ற அமைப்பினால் நாடாத்தப்பட்ட 'தென் ஆசியாவில் மக்கள் உரிமை" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கருத்தரங்குக்கு சர்வதேச சர்வ நம்பிக்கை அமைப்பின் பொதுச் செயலளார் சாள்ஸ் கிறேவ் தலைமை தாங்கினார். …

  2. ரி.பி.சி வானொலியின்; அரசியல் கலந்துரையாடல்களில் பங்கெடுத்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்;ள கண்ணகி சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையில் மனைவி குழந்தைகளைப்பார்க்கச்சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் இன்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகரில் வசிக்கும் 41 வயதுடைய ஜான் என்கிற பெயரில் ரி.பி.சி வானொலியின் அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ளும் வடிவேல் புவனேந்திரன் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அரசியல் புகலிடம் பெற்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இந்த நபர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊர் திரும்பி மட்டக்களப்பு நகரில் த…

    • 16 replies
    • 5.3k views
  3. இலங்கை ராணுவத்துக்கு உதவும் இந்தியா - புலிகளின் கப்பல்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதில் அக்கறை காட்டாமல் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டவரான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். அதிபரின் இந்த திடீர் மனமாற்றத்திற்குக் காரணம்... பேசாலை பகுதியில் அண்மையில் கடற்புலிகள் நடத்திய தாக்குதல்கள்தான். இதில்தான் மிரண்டது இலங்கை. இந்த அசாதாரண சூழ்நிலையில் புலிகளின் கடற்படை தளபதி சூசையின் பேட்டிக்காக நக்கீரன் பல கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைத்தது. ஒருவார கால இடைவெளிக்குப் பிறகு சூசையிடமிருந்து பதில்கள் சீறி வந்தன. நக்கீரன் : ஒரு நாட்டிற்கான கடற்படை வலிமை என்பது உங்களிடம்…

  4. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு: இந்திய எழுத்தாளர் கமலாதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு என்று இந்திய எழுத்தாளரான கேரளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களுக்குப் பிடித்த தமிழர் என்று யாரைச் சொல்வீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். எனக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மிகவும் பிடிக்கும். இலங்கையில் நான் தங்கியிருந்தபோது அந்த அமைப்புடன் எனக்கு நிறைய பழக்கம் இருந்தது. பிரபாகரனை ஒரு தீவிரவாதியாக இந்தியா சித்தரிப்பது தவறு. விடுதலைப் ப…

  5. மன்னார் கடலில் சண்டை மன்னார் கடற்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுடன் நடத்திய மோதலில் 5 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டனர். 55 நிமிட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு போராளி வீரச்சாவைடந்தார். இரு போராளிகள் காயமடைந்தனர்.

  6. கொழும்பு மாநகர புதிய மேஜர் பதவியேற்பும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பும் ஒளிப்பதிவில்... Click here to watch Sri-lanka-Political நன்றி சக்தி டிவி

    • 14 replies
    • 4.5k views
  7. தமிழ்நாட்டில் அவலநிலையில் இலங்கை அகதிகளின் முகாம்கள் விடைகொடு எங்கள் நாடே.... பனைமரக் காடே... பறவைகள் கூடே... மறுமுறை ஒருமுறை பார்ப்போமோ? புலம்பெயர் வாழ்வின் துயரங்களை வலியோடு பதிவு செய்த பாடல் இது. இதோ மறுபடியும் இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகி விட்டது. உயிர்பயம் உந்தித்துள்ள தங்களின் ஆதி சொந்தங்களைத் தேடி, கள்ளத்தோணியில் கடல் கடந்து, அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள். நாளுக்கு நாள் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால், ஏற்கனவே இங்கிருக்கும் அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தடுமாறித் தத்தளித்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி அகதிகள் முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து வந்து அறிக்கைக் கொட…

    • 2 replies
    • 1.9k views
  8. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள்இ பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண…

  9. கொழும்பில் குண்டு வெடிப்பு கொழும்பு பன்னிபிட்டிய பகுதியில் சற்று நேரத்துக்கு முன் குண்டு ஒன்று வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விபரங்கள் அறிந்தவர்கள் உடன் தகவல் தாருங்கள் தலைப்பை மாற்றியுள்ளேன் - மதன்

  10. சிங்கப்பூர் தமிழ் முரசில் இருந்து -உயிர் பிழைக்க உயிரே பணயம் http://tamilmurasu.asia1.com.sg/25-06-2006...6/TM25PG8-9.pdf http://www.tamilnaatham.com/pdf_files/tami..._2006_06_25.pdf

  11. தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் துணைப்படைக்கு ஆள்திரட்ட "றோ' உதவி? தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழ் அகதிகள் மத்தியில் இருந்து துணைப்படைக்கு ஆள்களைத் திரட்டும் முயற்சிகளுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ' உதவுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களும், ஒட்டுப் படைகளும் தற்போது தமது அணிகளுக்கு ஆள்திரட்டும் முயற்சிகளை இந்தியாவில் ஆரம்பித்திருக்கின்றன என்றும் இந்திய செய்தி ஏஜென்ஸிகளை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் துணைப்படைகளின் இந்த முயற்சிக்கு இந்தியாவின் உளவு அமைப்பான "றோ'வின் மறைமுக உதவி கிடைப்பதாகவும், இந்திய இணையத்தளம் ஒன்றை ஆதாரம் காட்டி "தமிழ்நெற்' இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்ற…

  12. றொய்ற்றர் செய்தி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. http://www.alertnet.org/thenews/newsdesk/SP27609.htm

    • 0 replies
    • 1.8k views
  13. இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை Dr. Brian Senewiratne : பாகம் 1 மூலம்: Dr. Brian Senewiratne தமிழில் Dr. Brian Senewiratneவின் அனுமதியுடன்: புனிதன் (அவுஸ்திரேலியா) சர்வதேச சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள்; - 9 ஜுன் 2006 இலங்கைப் பிரச்சினை - ஒரு யதார்த்தமான பார்வை இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ்ப் பகுதிகள் மட்டுமல்ல, தெற்குச் சிங்களப் பகுதிகள் கூட, ஏன்? இலங்கை முழுவதுமே ஒன்றாக அழிவதை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கைப் பிரச்சினையை தெளிவாக விளக்குதற்காக இது வரையப் படுகிறது. இலங்கை அரசு, பிரச்சினையே தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம்தான் என்று சொல்லிக் கொள்கிறது. இலங்கை…

  14. எமது கனவு, மரண பயமற்ற தமிழ் ஈழம் - சு.ப.தமிழ்ச்செல்வன் ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டி http://www.tamilnaatham.com/pdf_files/vika..._2006_06_23.pdf

  15. தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் தூதுக்குழு ஐரோப்பா பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களடங்கிய தூதுக் குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக முறையிடவுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்துமூலம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான ஏற்பாடுகளை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பின்லாந்துக்கு பயணமாகி…

  16. வாத விவாதங்களிற்கிடையே தெரிய வரும் முக்கிய நிலைப்பாடுகள் -பீஷ்மர்- கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள், அதன் பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட விருந்த சூழலில் அது பற்றிய தனது கருத்து நிலைப்பாடுகளை இலங்கை அரசாங்கத்துடனிருந்து செயலமர்வு நிலையில் தான் எதையும் பேசமுடியாதென்றும் நோர்வே அரசாங்கத்திடம் அதனை நேரடியாகக் கூறுவதே தனது நிலைப்பாடென்றும் விடுதலைப்புலிகள் அண்மையில் எடுத்த நிலைப்பாடு ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவுள்ளது. கண்காணிப்புக் குழுவைப் பற்றியோ ஒழுங்கு செய்த கூட்டத்தையே அரசியல் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதி என்று எடுத்துகூறி புலிகள் பேச்சுவார்த்தைகளைக் குழப்பிவிட்டனர் என்ற குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது சர்வதேச அரங்கிலும் குறிப்பாக உள்நாட்ட…

  17. இலங்கை- இந்திய உறவின் போக்கு மாற்றமடைய ஆரம்பித்துள்ளதா? -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- பொதுவாக வெளிவிவகாரக் கொள்கை என்பது மாற்றமடையக் கூடியதொன்றாகும். அதேபோன்று இரு நாடுகளுக்கிடையிலான உறவு என்பதும் எப்பொழுதும் ஒரே விதமாக இருப்பதன்று. இருந்த போதும் நீடித்து நிலைத்திருக்கின்ற உறவுகளும் இல்லாதிருப்பதில்லை. உதாரணமாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவையே கூட எடுத்துக் கொள்வோமாயின், அது அதிகம் மாற்றமுறுகின்ற ஒன்று அல்ல. இரு நாடுகளும் இந்நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் உறுதியான அதேசமயம் நட்புணர்வுடைய உறவைக் கொண்டுள்ளன. இப்போக்கு குறுகிய எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இருப்பினும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு அவ்விதமானதல்ல. உண்ம…

  18. படைத்தரப்பின் அத்துமீறல்களை இறுக்கிப்பிடிக்க ஜனாதிபதி முடிவு. அவற்றை அம்பலப்படுத்த தமிழர்கள் தரப்பு முனைப்பு தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களினாலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் மக்களுக்கு எதிரான அராஜகங்கள், அத்துமீறல்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார் என்று நம்பகமாக அறியவந்தது. அதேசமயம், படைத்தரப்பின் அடாவடித்தனங்களை சர்வதேச ரீதியில் திட்டமிட்ட வகையில் பிரசாரப்படுத்தி, அம்பலப்படுத்துவதில் தமிழர் தரப்பு முனைப்புக் காட்டியிருப்பதாகத் தெரிகின்றது. தமிழர் தாயகத்தில் இலங்கைப் படை யினராலும், ஒட்டுக்குழுக்களினாலும் மேற் கொள்ளப்படுகின்ற பல்வே…

  19. பிராயச்சித்தம் செய்யாமல் வேதம் ஓதும் பிரிட்டன் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க் கொட் கொழும்பில் நடந்த பகிரங்க நிகழ்வு ஒன்றில் இலங்கை அரசுக்கு அறிவுரையும், விடுதலைப் புலிகளுக்குப் புத்திமதியும் கூறியிருக்கின்றார். விடயம், விவரம் புரியாமல் சரித்திரம் தெரியாமல் அவர் "தத்துவம்" பேசியிருப்பதை அவதானிக்கும் போது ஈழத்தில் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாட்டின் இலங்கைத் தீவின் இன்றைய இழிநிலைக்கு வினை விதைத்தவர்களே பாவத்துக்குக் காரணமானவர்களே பாவவிமோசனத்துக்கான உபாயம் உரைப்பது நகைப்புக்கு இடமானது. சர்வதேச பொலீஸ்காரனுக்குக் காவடி தூக்கும் "சிறப்பை" வைத்துக்கொண்டு எதையும் எங்கும் உபதேசிக்கலாம் என்று ச…

  20. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்: நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி... தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்ட…

  21. கருணா குழுவை அடக்கினால் தாக்குதல்களை நிறுத்துவீர்களா?: மகிந்த இரகசிய ஒப்பந்தம்!! இரு வாரங்களுக்கான தற்காலிக பயிற்சித் திட்டமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்துள்ள அந்தரங்க முன்னெடுப்புக்கள், சிறிலங்கா அரசியல் உலகை அதிர வைத்துள்ளன. சண்டே லீடர் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் செய்தியின் படி, துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் தாக்குதல்களை முற்றுமுழுதாக நிறுத்திக் கொண்டால், விடுதலைப் புலிகளும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை முற்றாக நிறுத்த முன்வருவார்களா என்று இரகசிய ஒப்பந்த ரீதியாக வினவியுள்ளார் என்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ஆசிரியர் என்.வித்யாதரன் மற்றும் அதன் வெளியீட்டாளர் ஈ.சரவணபவன் ஆகியோரிடம், கட…

  22. விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக 28 இராணுவத்தினரின் விவரங்கள் கண்டுபிடிப்பு வெலி ஓயா கல்யாணபுர சிறிலங்கா இராணுவ முகாமுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பார்த்ததாக கூறப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் அந்த முகாம் அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவரைப் போன்று விடுதலைப் புலிகளுக்கு உளவு பார்த்த மேலும் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள் என 28 பேரின் விவரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக செயற்பட்ட இராணுவ காவல்துறையினர், மேலும் 5 பேரை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதலில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை கோமரன்கடவெல பிரதேசத…

    • 1 reply
    • 1.2k views
  23. கண்காணிப்புக்குழுவை மீளமைக்க செப். 1 வரையிலும் காலக்கெடு நீடிப்பு நோர்வேயின் வேண்டுகோளை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்களை இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து அகற்றி புதியவர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதிவரை நீடித்துள்ளனர். நோர்வேயின் வேண்டுகோளை ஏற்றே விடுதலைப் புலிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அனு சரணை வகிக்கின்ற நோர்வே மற்றும் ஐஸ் லாந்து, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய ஐந்து நோர்ட்டிக் நாடுகளின் பிரதிநிதிகள் யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் தற் …

  24. கெப்பிற்றிக்கொல்லாவில் நடந்தது என்ன? அம்பலமாகி வரும் கொடூர சதிச்செயல்கள் http://www.tamilnaatham.com/articles/2006_...lan20060624.htm

  25. அல்லைப்பிட்டி மக்களை நிவாரணத்தின் பெயரால் ஏமாற்றிய இராணுவம் யாழ்ப்பாணம் தீவகத்தில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் கட்டாயப்படுத்தி மீளக் குடியேற்றிய மக்களை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறிலங்கா இராணுவத்தினர் நிவாரணம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தென்னிலங்கை மக்களுக்கு காட்டும் முயற்சியாக தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் யாழ். குடாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மக்கள் இருப்பதாக காட்ட முற்பட்ட இராணுவத்தினர் நிவாரணம் தருவதாக அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தமைக்கு இண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.