Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவில் கிபிர் விமானங்கள் குண்டுவீச்சு [வியாழக்கிழமை, 27 யூலை 2006, 14:52 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினரின் கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் இன்று வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன. முற்பகல் 9.00 மணியளவில் முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பிரதேசங்கள் மீதும் இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelampage.com/?cn=27826 SLAF Kfir bombers attack Mullaithivu village [TamilNet, July 27, 2006 08:12 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers Thursday mo…

  2. திருமலையில் கிபீர் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவு 4ம் கட்ட ஈழப்போர் எந்நேரமும் தொடங்கலாம். திருகோணமலை ஈச்சலம்பற்றுப் பகுதியில் சிறீலங்கா விமானப் படை விமானங்கள் இன்று மீண்டும் நடத்திய விமானக் குண்டு வீச்சில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்ததுடன் பத்துக்கு மேற்பட்ட வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். தமிழர் தாயகத்தின் மீது மேற் கொள்ளப்படும் விமானத்தாக்குதலோ அல்லது தரைத் தாக்குதலோ யுத்தப் பிரகடனமா கருதப்படும் என விடுதலைப் புலிகள் எச்சரித்த நிலையில் நடைபெற்ற இத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து 4ம் கட்ட ஈழப்போர் எந் நேரமும் தொடங்கலாம் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை முல்லை…

  3. அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவில் தமிழர்களை புலிகள் கொன்றுவிடுவர்: இந்திய பெண்களிடம் புளுகிய மகிந்த இந்தியாவுக்கு அகதிகளாகச் செல்லாவிட்டால் இரவு நேரங்களில் அவர்களை விடுதலைப் புலிகள் கொன்றுவிடுவர் என்று தன்னைச் சந்தித்த தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர் குழுவிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச புளுகியுள்ளார். தமிழரல்லாத இந்தியப் பெண் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச பேசியுள்ளதாவது: அண்மைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரணின் சிறிலங்கா பயணத்தின் போது கூட்டரசு போன்ற குறிப்பிட்ட சில யோசனைகளை முன்வைத்துள்ளார். அவற்றை நீங்கள் பரிசீலிக்கிறீர்களா? நாங்கள் நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அனைத்து அரசு அமைப்பு முறைகளையும் குறிப்பாக இந்திய அரசு முறை…

    • 4 replies
    • 1.9k views
  4. ஐ.நா.செயலர் தெரிவில் இலங்கைக்கு ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவு ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த செயலாளர் நாயகம் பதவிக்கு தனது மூத்த இராஜதந்திரியான ஜயந்த தனபாலவை நிறுத்தியிருக்கும் இலங்கைக்கு அத்தெரிவிற்கான ஆரம்பச் சுற்றிலேயே பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. பதினைந்து நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டபூர்வாங்க வாக்கெடுப்பு ஒன்றில் நான்காவது நிலையேகடைசி ஸ்தானமே ஜயந்த தனபாலவுக்குக் கிட்டியது. களத்தில் நிற்கும் நால்வரில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் பன் கீ மூன் முதலாவது நிலையையும், இந்தியப் பிரதி நிதி சஷி தரூர் இரண்டாமிடத்தையும், தாய் லாந்துப் பிரதிப் பிரதமர் சுரகிரத் சத்திராதி மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஐ.நா. செயலாளர் நாயகத்த…

  5. சிறிலங்கா இராணுவத் தளபதி பொறுப்பை மீண்டும் சரத் பொன்சேகா ஏற்றுள்ளார். கொழும்பு சிறிலங்கா இராணுவத் தலையமையகத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிங்கப்பூரில் சரத் பொன்சேகா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று திங்கட்கிழமை கொழும்பு திரும்பிய சரத் பொன்சேகா, மீண்டும் இராணுவத் தளபதி பொறுப்பை ஏற்றுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா மீது கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் தாக்குதல் நடத்தப்பட்டது. சரத் பொன்சேகா செயலிழந்த நிலையில் நந்தா மல்லவராச்சியை பதில் இராணுவத் தளபதியாக மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் சரத் பொன்சேகா பொறுப்பேற்றிருக்கிறார் -புதினம்

  6. தமிழர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியினை அரசுடமையாக்க அரசாங்கம் முடிவு. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்…

  7. கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் - அகாசி. கொள்கைக் பற்றில் உறுதி கொண்டவராக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் திகழ்வதாக யப்பானின் சிறப்புத் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். யப்பானில் தலைநகரில் வைத்து இந்திய ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான முடிவுகளை எடுக்கும் வல்லமை பொருந்தி ஒரே ஒரு மனிதராக பிரபாகரன் விளங்குவதாக அகாசி தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி சென்று எடுக்கவிருக்கும் முக்கிய தீர்மானங்கள் குறித்து பிரபாகரனுடன் எடுத்துரைக்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே சில அரசாங்கள் எடுத்து முடிவு போன்று தமிழிழ விடுதலைப…

    • 2 replies
    • 1.5k views
  8. வடக்கு கிழக்கிலிருந்து படைகளை விலக்க அரசு தயார் ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமாம்! இப்படிக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ரம்புக்வெல வடக்கு கிழக்கில் இருந்து படைகளை விலக்க அரசு தயார். அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை அரசிடம் கையளிக்க வேண்டும். இப்படிக் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல. ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதி நிதியாக கிளிநொச்சி சென்ற சுவீடனைச் சேர்ந்த சிறப்புத் தூதர் அன்ட்றோ ஒல்ஐன்ட் மூலம் அரசுக்கு விடுதலைப் புலிகள் அனுப்பியதாகக் கூறப்படும் செய்தி குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறுகையில் அவர் இப்படித் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் மக்கள் வாழ்விடங் களில் இருந்து படையினர் அகற்றப்…

    • 10 replies
    • 2.6k views
  9. ராஜீவின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன்: கொழும்பில் தாக்குதல் நடத்திய ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் 19 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்துத் தாக்கினேன். அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது- அதுவே என் நோக்கம்" என்று தாக்குதலை நடத்திய சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த பேரின வெறியரான விஜித ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார். 1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாளன்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தார். சிறிலங்கா அரச தலைவர் மாளிகையில் யூலை 30 ஆம் நாள் இந்தியாவு…

    • 2 replies
    • 1.5k views
  10. கொழும்பில் மூத்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 24 யூலை 2006, 11:12 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கும்பலான ஈ.பி.டி.பி.யின் மூத்த உறுப்பினர் மகா கணபதிபிள்ளை (வயது 55) இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈ.பி.டி.பி. கும்பலின் தலைவராகவும் மகிந்தவின் அமைச்சராகவும் உள்ள டக்ளசின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக செயற்பட்டு வந்த மகா கணபதி பிள்ளை மீது வெள்ளவத்த ஐ.பி.சி. வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த மகா கணபதிபிள்ளை கலுபொவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்…

    • 2 replies
    • 1.5k views
  11. புலம்பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள் செய்யவேண்டியவை என்ன? என்பதினை புதுவை ரத்தினதுரை அவுச்திரெலியா இன்பத்தமிழோசைக்கு வழங்கிய நேர் காணல். http://www.tamilnaatham.com/interviews20060221.html

  12. Started by vasanthan,

    - நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்) - எமது விடுதலைப் போராட்டவரலாற்றில் அதிசயமான வியக்கத்தக்க எத்தனையோ சாதனைகள் நடந்திருக்கின்றன. எங்களுடைய தமிழீழ தேசியத் தலைவர் எங்களுடைய இனத்தை ஒரு சமத்துவமான சமதர்மமுடைய நல்ல பலமான ஒரு இனமாக கட்டி வளர்த்து வருகிறார். களங்களையும் புலங்களையும் கண்டு பேனா முனையிலும் துப்பாக்கி முனையிலும் ஏர்முனையிலும் நின்று தன்னை நிலை நிறுத்தி இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பெண்மணியைச் சந்திக்கின்றோம். தமிழன்பன் (ஐவான்): ஏகப்பட்ட தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி அயராது உழைத்து நிமிர்ந்து நிற்கும் ஒரு உயர்ந்த இலட்சிய வாதியாகவும் ஒரு போராளியாகவும் இருக்கிறியள். ஒரு எழுத்தாளராக இருக்கிறியள். எழுத்தாளர் எனும்பொழுத…

    • 0 replies
    • 1k views
  13. தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ... ...... சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர். ... ..... http://www.eelampage.com/?cn=27378

  14. ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல்: மயிரிழையில் உயிர் தப்பினார் பவன் Friday, 21 July 2006 மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது ஆர்.பி.ஜி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இன்றிரவு 9:30 மணிக்கு இனந்தெரியாத ஆயுதபாணிகள் ஜெயானந்தமூர்த்தியை இலக்கு வைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். மட்டக்களப்பு பும்புகாரில் அமைந்துள்ள அவரது வீட்டின் படுக்கை அறையை இலக்கு வைத்து வீதியில் நின்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இது குறித்து எஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பி எமக்கு கருத்து தெரிவிக்கையில்:- அறையின் ஜன்னலை மூடிவிட்டு தான் திரும்பி…

  15. மஹிந்த அரசின் பொறுப்பற்ற போக்கால் நாட்டின் பாதுகாப்பு பெரும் நெருக்கடியில்! இந்தியாவில் ரணில் இப்படித் தெரிவிப்பு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தெளிவற்ற பொறுப்பற்ற கொள்கைகளின் விளைவாகவே இலங்கைத் தீவு இன்று பெரும் பாதுகாப்பு நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. இவ்வாறு இந்தியாவில் கருத்து வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. இந்தியாவில் விஜயம் மேற்கொண்டிருக் கும் ரணில் விக்கிரமசிங்க இந்திய பாதுகாப்பு ஆலோசகரும், மூத்த இராஜதந்திரியுமான எம்.கே.நாராயணனை சந்தித்து அவருடன் பேச்சு நடத்தியபோதே இந்தக் கருத்தை வெளி யிட்டிருக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, மிலிந்த மொ…

    • 0 replies
    • 917 views
  16. இராணுவத்தின் ஊன்றுகோல் -ஞாபகன் Friday, 21 July 2006 சிறிலங்கா இராணுவம் தனது பலம்சார் வல்லமை பற்றிய ஐயங்கள் பலவற்றோடு இருக்கின்றது. தனித்து சிறிலங்கா இராணுவம் என்ற கட்டமைப்புக்குள் இருக்கும் முப்படைகளோடும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முடக்கி, முறியடித்துவிட இயலாது என்று நம்புகின்றது. தென்னிலங்கை மக்களிடம் தனது வல்லமை பற்றி என்னதான் பிரதாபம் பேசமுற்பட்டாலும் அதன் உளவியல் சாதகமற்றே இருக்கின்றது. இதனை ஆணித்தரமாக கூறுவதற்கு ஒட்டுப்படைகள் என்று தமிழர்கள் கூறுகின்ற துணை ஆயுதக்குழுக்களை கட்டிஅணைத்து வைத்திருக்கின்றமையை நல்லவலுவான ஆதாரமாக காட்டலாம். தமிழ் மக்களின் படைபலத்தை கட்புலரீதியாக துண்டுபட்டிருப்பதாக, பிரிவுபட்டிருப்பதாக காட்டுவதற்கும் அதனை தனது த…

    • 0 replies
    • 1.1k views
  17. தமிழ்மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தேசப்பற்றாளர்களின் நடவடிக்கைகள் -வேலவன்- சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுப்பிரிவு செயலிழந்து விட்டதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பையே அவர்களால் நிலை நாட்ட முடியாதுள்ளதாகவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இப்பொழுது அது மக்களை புலனாய்வாளர்களாகச் செயற்படுமாறு கேட்டிருக்கின்றது. சிங்களப் பெயரில் தமிழர் ஒருவர் சிறிலங்கா காவல்துறையில் இருந்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பான அறிக்கையை மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபரிடம் கேட்டிருக்கின்றார். அமைச்சர்கள், படையினர் உட்பட உயர் நிலையிலுள்ள புலிகளுக்கு உதவும் 48 சிங்களர்களுடைய விபரங்கள் ஜாதிக ஹெல உறுமயவுக்குக் கிடைத்துள்ளது. சிங்களவர் மத்தியில…

    • 0 replies
    • 844 views
  18. இலங்கைத்தீவின் தமிழ் - சிங்கள இனப்பிரச்சனை வரலாற்றில் "அனைத்துக்கட்சி மாநாடு" என்ற அரசியல் நிகழ்ச்சியை சிங்கள அரசு காலத்திற்குக்காலம் அரங்கேற்றிவருகின்றது. ஒவ்வொரு "அனைத்துக்கட்சி" மாநாடும் நடாத்தப்பட்ட வேளைகளிலிருந்த அரசியற் புறச்சூழல்களை ஆராய்ந்து பார்த்தால் ஒரு அரசியல் உண்மை புலப்படும். அது சிங்கள ஆட்சியாளர்களின் இனவாத முகத்தையும் ஏமாற்று அரசியலையும் அம்பலப்படுத்திக் காட்டும். திம்பு பேச்சுவார்த்தைகளில் தமிழர்தரப்பு வைத்த அரசியற் கோரிக்கைகளை பரிசீலிக்கவே மறுத்த சிங்கள அரசு, பேச்சுக்களை முறித்துக்கொண்டது. அதைத் தொடர்ந்து அன்றைய ஜே.ஆர் அரசாங்கம் "அனைத்துக்கட்சி மாநாடு" என்ற அழகிய பெயரில் சிங்களக் கட்சிகளை ஒன்று கூட்டியது. தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்று தமிழர் தரப்பு …

    • 0 replies
    • 998 views
  19. சர்வதேசம் புலிகளை நிராகரிக்க வேண்டும் ஐ.தே.க. தீர்மானம் நிறைவேற்றியது [20 - July - 2006] [Font Size - A - A - A] -மேல் மாகாண சபையிலிருந்து பிரபா வெளிநடப்பு விடுதலைப் புலிகள் மிக மோசமானதொரு பயங்கரவாத இயக்கமெனவும் சர்வதேச சமூகம் அவர்களைக் கண்டித்து நிராகரிக்க வேண்டுமெனவும் கூறி, மேல் மாகாண சபையில் நேற்று புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சபையிலிருந்து பிரபா கணேசன் வெளிநடப்புச் செய்துள்ளார். இது தொடர்பாக பிரபா கணேசன் தெரிவிக்கையில்; இலங்கையின் தேசிய பாதுகாப்பு சீர்குலைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இன, மத, கட்சி வேறுபாடின்றி பயங்கரவாதப் புலிகள் இயக்கத்தின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கண்டி…

  20. இன்று வெளியாகிறது "விடுதலைப்புலிகள்" ஏட்டின் 131 ஆவது குரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் ஆனி-ஆடி 2006 மாதத்திற்குரிய 131 ஆவது குரல் இன்று வியாழக்கிழமை வெளியாகிறது. "ஒற்றையாட்சிக்குள் தீர்வென்றால் தனியரசு அமைக்க முயற்சி செய்வோம்" என்ற முகப்புச் செய்தியுடன் வெளிவருகின்றது. "ஒட்டுக்குழு அரசியலுக்கு வாகனேரியில் முற்றுப்புள்ளி" எனச்சொல்லும் ஆசிரியர் தலையங்கத்துடன் வரும் இந்த இதழில், க.வே.பாலகுமாரன் எழுதிய "வரலாற்றின் அனுபவக் களஞ்சியத்தின் மகத்தான ஆயுதம்" என்ற அரசியல் கட்டுரையும், "ராஜபக்சவின் நிபுணர் குழுவும் வேண்டாம் சர்வகட்சி மகாநாடும் வேண்டாம்- அவரது கொள்கைப் பிரகடனம் என்ன?", …

  21. http://www.tamilnaatham.com/articles/2006/.../sabesan/18.htm

  22. வடக்குகிழக்கு மாகாணத்தை பிரிக்கக் கோரும் வழக்கை ஜே.வி.பி யினர் சிறிலங்கா தலைமை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அது சட்டப்புூர்வமானது அல்ல என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனியான ஆளுநர்களை நியமிக்க வேண்டும் என ஜே.வி.பி.யினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர். ஜேவிபியினரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எச்.எல்.டி சில்வா ஆஜராகிறார். இவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை …

    • 23 replies
    • 4.4k views
  23. ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தியுடன் சிறப்புத் தூதுவர் வெள்ளியன்று கிளிநொச்சி விரைவு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை அடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறியால் பாரிய சிக்கலில் மாட்டியுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியவிடாது அமைதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கு கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார். கடந்த திங்கட்கிழமை கொழும்பு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புத் தூதுவரான சுவீடனை சேர்ந்த அன்ட்ரஸ் ஒஜேலன்ட் இன்று புதன்கிழமை சிறிலங்கா அரச பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். எதிர்…

  24. படையினர் பயணம்செய்த பேரூந்து மீது கிளேமோர்த் தாக்குதல்- இரு சிப்பாய் பலி - 12பேர் படுகாயம் - பாண்டியன் றுநனநௌனயலஇ 19 துரடல 2006 13:47 யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகே இன்று காலை 11.05 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உட்பட இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 12பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வர் உயிராபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு) விடுமுறையில் வீடு செல்வதற்காக உடுவில் இராணுவ முகாமிலிருந்து பேரூந்து ஒன்றில் சென்ற படையினர் 15பேரே இக்கிளைமோர் தாக்குதலில் சிக்கினர். இவர்களில் ஒரு அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டது…

  25. தமிழ்நாட்டில் தேடப்படுகிற கொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது: மன்மோகனிடம் வைகோ வலியுறுத்தல் தமிழ்நாட்டில் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மறுமலர்ச்சி பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மன்மோகன் சிங்கை இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ சந்தித்தார். சுமார் 25 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பிரதமரிடம் வைகோ விரிவாக எடுத்துச் சொன்னார். மன்மோகனிடம் அவர் அளித்த கோரிக்கை மனுவில், இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரேடார்களை வழங்கி இருப்பதை சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.