Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓஸ்லோ குழுவினருக்கு உலங்குவானூர்தி ஏற்பாடு செய்தமை தொடர்பில் சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சுவிஸ், சூரிச்சிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 6 பேர் கொண்ட குழு புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நோர்வே தரப்பினருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை வரைக்கும்தான் உலங்குவானூர்தி ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையிலிருந்து விடுதலைப் புலிகளின் …

  2. வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு" வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப்…

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதி சபை கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே.ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாள்கின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டு…

  4. சிறிலங்கா இராணுவத்தின் விமானத் தாக்குதல் யுத்த நிறுத்த மீறலே: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:31 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய விமானத் தாகுதல், எறிகணைத் தாக்குதல் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்தான் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் திருமலை மாவட்ட தலைவர் ஓவ் ஜென்சென் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். மூதூர் கிழக்கு சம்பூரில் உள்ள திருமலை மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய எழிலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகள் ம…

    • 0 replies
    • 1k views
  5. ஆழ ஊடுருவும் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் சிறப்பிப்பு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] வவுனியா நைனாமடுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினரை கடந்த மூன்று நாட்களாக சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த முற்றுகையை உடைத்து செல்ல முயன்ற சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் இன்று சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டனர். நைனாமடுப் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய துணைப்படை மற்றும் மக்கள் படை ஆகியவற்றால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர

  6. பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது: இலங்கையில் உள்ள கள நில…

    • 1 reply
    • 1.2k views
  7. சிறிலங்கா தாம் மூன்று கடற்கலங்களை இழந்துள்ளதாக பீபீசிக்கு தெரிவித்துள்ளது.

    • 16 replies
    • 4.6k views
  8. மன்னாரில் கடற்படையின் தாக்குதல் கடற்புலிகளால் முறியடிப்பு - கடற்படைக்கு பாரிய இழப்பு மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலை கடற்புலிகள் வெற்றிரகமாக முறியடித்துள்ளனர். இதன்போது சிறீலங்கா கடற்படைக்கு கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கடற்புலிகளின் படகுகள் மீது சிறீலங்கா கடற்படைக் கலங்கள் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கடுமையான பதில் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இரு தரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் நடைபெற்றது. கடற்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்…

    • 30 replies
    • 6.4k views
  9. மன்னாரில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல்! 30ற்கு மேற்பட்டோர் படுகாயம்! சிலர் கொல்லப்பட்டிருக்கலாமென அச்சம்! மன்னார் பேசாலையில் இன்று காலை சிறிலங்கா கடற்படையினர் மக்கள் குடியிருப்புக்க ளுக்குள் நுழைந்து மேற்கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத் தாக்குதலில் சுமார் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்கள்; சலர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு போதுமான அம்புலன்…

    • 4 replies
    • 1.7k views
  10. அண்மையில் வந்த தமிழீழ காணிச்சட்டத்து சரத்து ஒண்று பற்றிய விவாதம் ஒண்று இங்கு காரசாரமாக நடந்தது. அதுசம்பந்தமாக தெளிவு பெற நான் தமிழீழ சட்டவியல் தலைவர் பரா அண்ணாவுக்கு மின்னஞ்சம் அனிப்பி இருந்தேன். அதுக்கு அவர் பதில் அனுப்பியும் இருக்கிறார். பலர் மனங்களில் இது பாலை வார்க்கலாம்.! எனது மின்னஞ்சல் தமிழில் இருந்ததால் யுனிக்கோட் பிரச்சினையால் எனது அஞ்சலை படிக்க கஸ்ரப்பட்டதுபோல தெரிகிறது.! அதனால்த்தான் தாமதமாக பதிலை பெற்று உள்ளேன். http://img131.imageshack.us/my.php?image=p...araanna16yn.gif நான் அனுப்பிய மடல் நான் தாயகத்தில்சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்டு.1999ம் வருடத்தில் இருந்து புலம்பெயர்ந்து. இங்கிலாந்துநாட்டில்வாழ்ந்த

  11. தமிழர் புனர்வாழ்வுக் கழத்தின் களஞ்சியறையில் கருணா குழுவினர் திருட்டு. மட்டக்களப்பு பழைய வீதியில் அமைந்துள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மாவட்ட அலுவலக காரியலய களஞ்சிய நிலையம் நேற்றிரவு 10.30 மணியளவில் கருணா அணியினரால் களவாடப்பட்டுள்ளது. இதில் தளபாடங்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்க்கான உலர் உணவுப்பொருள்கள் மருந்து பொருள்களையும் எடுத்து சென்று கோவிந்த வீதியில் அமைந்துள்ள கருணா குழுவின் அலுவலகத்தில் இறக்கியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பிட்டட அலுவலகம் இரு தடவைகள் கைகுண்டு தாக்குதலின் போது ஒரு காவலாளி கொல்லப்பட்டமையால் எவரும் இங்கு இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்து. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&…

    • 2 replies
    • 1.8k views
  12. கிளைமோர் தாக்குதல் முறியடிப்பு: ஒருவர் சுட்டுக்கொலை: மூவர் கைது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 1.00 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக மட்டக்களப்பு அரசியல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இத்தாக்குதல் மேற்கொண்டவர்களின் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு மற்றொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புளொட் உறுப்பினர்கள் என்றும் மட்டக்களப்பு பல்பொடி கம்பனி இராணுவ முகாமில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி முக்கியஸ்த்தர்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இத்தாக்குலில் எவ்விதமா…

  13. கிளேமோர் தாக்குதலில் பயணிகள் பஸ் தப்பியது; கனகராயன்குளம் பகுதியில் சம்பவம் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கனகராயன்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை ஆழ ஊடுருவும் படையணியினர் பயணிகள் பஸ் ஒன்றின் மீது கிளேமோர் தாக்குதலை நடத்திய போதும் அந்த பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. முகமாலையிலிருந்து புளியங்குளம் நோக்கி `ஏ 9' வீதியில் வந்து கொண்டிருந்த பயணிகள் பஸ் மீதே காலை 8.30 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கனகராயன் குளத்திற்கும் மன்னார் குளத்திற்குமிடையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குறித்த இடத்தை பஸ் தாண்டிய பின்பே கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பஸ் மயிரிழையில் தப்பியுள்ளது. இதனால் …

  14. யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து ஒரு கடிதம் மாசிலான் அன்புக்குரிய தென் தமிழீழ மக்களுக்கு! மீண்டும் மனிதப்புதைகுழி கலாசாரம் யாழ்ப்பாணத்தில் தோன்றியுள்ளது. 1995இல் யாழ்ப்பாணத்தைச் சிங்களப் படையினர் முற்றாக கைப்பற்றியவுடன் ஒட்டுமொத்தத் தமிழினமும் வெளியேறிய வரலாறு மறக்க முடியாதது. அவ்வாறு வெளியேறிய மக்களுக்குப் பாதுகாப்புத் தருவதாக அன்றைய சனாதிபதி சந்திரிக்கா கூறி யாழ்ப்பாணத்திற்குத் திரும்பும் படி அழைத்தார். 1996இல் சந்திக்காவை நம்பித் திரும்பிய மக்களில் பலநூற்றுக் கணக்கானோர் காணாமல் போனோர் பட்டியலில் இடம்பிடித்துக் கொண்டனர். அதன் பின்புதான் செம்மணிப் புதைகுழி அம்பலமாகியது. அதே போன்று யாழ்ப்பாணம் நகருக்குள்ளே இருக்கும் விளையாட்டரங்கிலும் மனிதப்பு…

  15. தமிழ் மக்களிடம் உலகை நோக்கி கேக்க ஆயிரம் கேள்விகள் http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2011.pdf

    • 12 replies
    • 2.5k views
  16. http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2023.pdf

  17. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா முடிவு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான அரசியல் மற்றும் இராணுவ அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என்றார் -புதினம்

  18. அழுத்தம் மூலம் தமிழர் தரப்பை அடிபணிய வைக்க முடிந்ததா? நோர்வே சந்திப்புக்களை முடித்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு திரும்பிய கையோடு பலரும் எதிர்பார்த்தபடி இலங்கைத் தீவில் வன்முறை மோசமாக வெடித்தி ருக்கின்றது. தீவிரமடைந்து வரும் வன்முறைகள், தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் மென்தீவிர யுத்தத்தை ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வைக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கள யதார்த்த நிலைகளை நிலைமைகளை கவனத்தில் எடுக் காமல் இவ்விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் கையாள்வதே நாடு இத்தகைய மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முக் கிய காரணமாகும். தமது இனத்தின் இருப்புக்காகவும், வாழ்வியல் உரிம…

  19. 2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: இராணுவத்தை மீட்க வந்தோர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனையில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு தாக்குதலை நடத்தியோர் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியோரை மீட்க வந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலுப்பையடிச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இரவு போக்குவரத்தில் ஈடுபட்டோரை இலக்குவைத்து கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் ஈடுபட்டனர். அவர்களை விடுதலைப் புலிகள் துரத்திச்சென்ற போது வாவிக்கரை காட்டுக்குள் தப்பி நுழைந்துள்ளனர். அப்பகுதி விடுதலைப் புலிகளால் சுற்றி…

  20. இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி! கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online முழுப்பதிவிற்கும் http://bhaarathi.net/sundara/?p=273

    • 3 replies
    • 3k views
  21. கிளிநொச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிறிலாங்க இராணுவத்தின் கிபிர் விமானங்கள் மூன்று மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஐந்து தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன சேத விபரங்கள் உடன் தெரியவில்லை நன்றி தகவல் வெற்றி

    • 24 replies
    • 4.2k views
  22. தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேசம் கொச்சைப்படுத்தினால் வரலாறு பாடம் படிப்பிக்கும் [15 - June - 2006] [Font Size - A - A - A] -கஜேந்திரகுமார் சபையில் தெரிவிப்பு விடுதலைப் புலிகளை தடை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தலாமென சர்வதேச நாடுகள் கருதுமேயானால், அவர்கள் வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வார்களென தமிழ்க் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "இலங்கையில் ஜனநாயக அரசு நடக்கிறது. இது சட்ட ரீதியான அரசு எ…

    • 0 replies
    • 975 views
  23. உயிரிழந்த படைவீரரின் சடலத்தை இராணுவம் கையேற்க முன்வந்ததாக புலிகள் தெரிவிப்பு [15 - June - 2006] [Font Size - A - A - A] -பொய்ப் பிரசாரமென கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு வன்னியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த முற்பட்ட போது இடம் பெற்ற மோதலில் உயிரிழந்த இராணுவச் சிப்பாயின் சடலத்தை கையேற்க படையினர் முன்வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக இந்தச் சடலத்தை பொறுப்பேற்க படையினர் முன் வந்துள்ளதாகவும், முதலில் சடலத்தை ஏற்க மறுத்த படையினர் பின்னர் அதற்கு இணங்கியதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலத்தை ஓமந்தை சோதனை நிலையத்த…

  24. இலங்கை வன்முறைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை - எம்.ஆர்.நாராயணன். இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பில் இந்தியா ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளதாக இந்திய ஊடகவியலாளர் எம் ஆர் நாராயணன் தமது செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில தற்சமயம் ஒரு சிறிய யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் இடம்பெறும் வன்முறைகளினால் அதிகமாக பாதிப்படுவது இந்தியாவே என ஊடகவியலாளர் நாராயணன் தெரிவித்துள்ளார் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வு முனைப்புகள் உரிய முறையில் செல்வதையே அந்த நாடு விரும்புகிறது. தற்போதைய நிலையில் நோர்வேயின் சமாதான முனைப்புகள் தோல்வியடையுமானாhல் அது பாரிய பாதிப்புக்கு உள்ளாகும். எந்த ஒர…

    • 1 reply
    • 1.2k views
  25. இன்று மதியம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் ஜெற் விமானங்கள். தமிழீழ வான்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான முல்லைத்தீவிலே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டதினால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என் அறியப்படுகின்றது. இருப்பினும் இவ்விமானத்தாக்குதலால் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டதாக இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.