Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் இரு வாரங்களில் 800 மாடுகள் உயிரிழப்பு : கால்நடை வளர்ப்பாளர்கள் சோகத்தில் By DIGITAL DESK 2 06 NOV, 2022 | 09:49 AM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் நோய் காரணமாக தினமும் 10 மாடுகள் வீதம் சுமார் 800 மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய பகுதிகளான மேச்சல் தரை பகுதிகளில் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீடக்கப்பட்தாக கால் நடைவளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்தனர். சித்தாண்டி மற்றும் கிரான் கால்நடை திணைக்களப் பிரிவுகளான சந்தனமடு ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியான சித்தாண்டி 4ஆம் பிரிவு, ஈரளக்குளம், ஆலையடி, சேரடி, வேறம் பெரியவெட்டை, மற்றும் வட்டுவான், வெள்ளா மைச்சேனை, கூளாவடி, கோரவெளி, மாதந…

  2. யாழில். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு தாக்குதல்! By DIGITAL DESK 5 05 NOV, 2022 | 03:48 PM யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் , விடுதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்…

  3. வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது By T. SARANYA 05 NOV, 2022 | 12:51 PM (K.B.சதீஸ்) வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 - 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் …

  4. கைக்குழந்தை உட்பட 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை இன்று (05) காலை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இவர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்றடைந்தனர். இந் நிலையில் நேற்று (04) இரவு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அனுஷ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும் முல்லைத்தீவு…

    • 0 replies
    • 287 views
  5. யாழில் கடந்த 11 மாதங்களில் டெங்கினால் 8 பேர் உயிரிழப்பு By NANTHINI 05 NOV, 2022 | 12:19 PM யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மாதங்களில் 2774 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ 5) ஊடகங்களை சந்தித்தபோது இத்தரவினை வெளிப்படுத்தி அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்த மாவட்டத்தில் இன்று நவம்பர் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில…

  6. எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான வாகனங்களின் வரிசை திங்கட்கிழமையுடன் குறையும் By T. SARANYA 05 NOV, 2022 | 01:38 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான வாகனங்களின் வரிசை திங்கட்கிழமைக்குள் குறைந்துவிடும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை குறையும் என எண்ணி கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எம்மிடம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை. இதன் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். கியூ ஆர் மூலம் எரிபொருள் நிரப்பப்படுவ…

  7. தமிழ் மக்களின் அடையாளமாக விக்னேஸ்வரன் பார்க்கப்படுகிறார் - உடுவில் பிரதேச செயலர் By VISHNU 03 NOV, 2022 | 09:24 PM நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார். இன்று (03) வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கொள்வரவு செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வர…

  8. ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது – கல்வி அமைச்சு! பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான ஆடையை மாற்றுவதற்கான பொறுப்பு கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அ…

  9. ஜீவன் தொண்டமான், பவித்ரா உள்ளிட்ட சிலருக்கு அமைச்சு பதவி? வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவையை 30 ஆக ஜனாதிபதியினால் அதிகரிக்க முடியும். அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. …

  10. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர். நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் சென்று இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் நடுதிட்டு பகுதியை சென்று அடைந்தனர். குறித்த சம்பவம் தொடர்ப்பாக தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபடுவார்கள் என மரைன் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெர…

  11. யாழ். மாவட்டத்தில்15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோய்! யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோயின் தாக்கம் இருப்பதாக, யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு அகஞ்சுரக்கும் தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000க்கும் மேற்பட்டநீரிழிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 – 40 வயத…

  12. பாவனைக்குதவாத 27 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு யார் பொறுப்பு ? - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 03:13 PM (எம்.மனோசித்ரா) நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய தாமதக் கட்டணம் 250 கோடி ரூபாவை அண்மித்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும். இவ்வாறான நிலைமையில் ராஜபக்ஷ புதல்வரின் தலையீட்டுடன் பாவனைக்கு உதவாத 27 000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்…

  13. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் அரசமுறை கடனான 47 பில்லியன் டொலருக்கு தீர்வாகாது - நாலக கொடஹேவா By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 03:41 PM (இராஜதுரை ஹஷான்) தவணை கடன் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ள நபர் மகிழ்வுடன் இருப்பதை போன்று அரசாங்கமும் தற்போது மகிழ்வுடன் உள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் தோல்வியடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் 47 பில்லியன் டொலர் அரசமுறை கடனுக்கு தீர்வாக அமையாது,பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் எரிமலை போல் வெடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார். நாவல பகுதியில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த…

  14. வடக்கு, கிழக்கில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுத்துவரும் பணிகள் சிறப்பானதாக உள்ளபோதிலும், நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் துரிதமாக செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிற்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் நீதியமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், மற்றும் நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க கையாளும் நகர்வுகள் குறித்தும் இரு தரப்பின…

  15. முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா ? நபர் சார்ந்து எடுப்பதா ? சிறிதரனிடம் சர்வேஸ்வரன் கேள்வி By DIGITAL DESK 2 04 NOV, 2022 | 03:07 PM (எம்.நியூட்டன்) முடிவுகளை கொள்கை சார்ந்து எடுப்பதா? நபர் சார்ந்து எடுப்பதா ? என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன் கேள்வி ஏழுப்பிநுள்ளார். அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான செவ்வி ஒன்றில் சுமந்திரன் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானாகவே முடிவுகளைஎடுப்பதாகவும் இனிவரும் காலங்களில் சுமந்திரனின் முடிவை ஏற்கமாட்டோம் என்றும் அவரது முடிவுகளுக்கு எதிராகவ…

  16. கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு, தமிழ் தரப்பு முன்வரா விட்டால்.. இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது – ஹரீஸ் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு ஒன்றித்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். சமகால அரசியல் விடயங்கள் குறித்து அண்மையில் கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கல்ம…

  17. இளம் பெண் ஆசிரியையின் போலி நிர்வாணப் படங்களை பகிர்ந்த இளம் பிக்குவுக்கு சிறை By T. SARANYA 04 NOV, 2022 | 05:04 PM (எம்.எப்.எம்.பஸீர்) இளம் பெண் ஆசிரியையின் செம்மைப்படுத்தப்பட்ட நிர்வாண படங்களை வட்ஸ்அப்பில் பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்தது. கொழும்பு பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க இதற்கான உத்தர்வை இன்று (04) பிறப்பித்தார். கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், குறித்த தேரருக்கு 5,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் இந்த தீ…

  18. அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்ட திலினியை கூட தெரிவு செய்வார்கள் - தேர்தல் ஆணையாளர் By RAJEEBAN 04 NOV, 2022 | 12:22 PM அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்க…

  19. பருவ மழைக்காலத்தின் பின்னர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் – டக்ளஸ் வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கு, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை சென்ற அமைச்சர் அங்கு கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் “வடக்கு கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.…

  20. காணாமல்போனோர் பற்றிய முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 2023 டிசம்பருக்குள் முடிவிற்கு கொண்டுவரப்படும் -அமெரிக்கத் தூதரிடம் நீதியமைச்சர் விஜயதாஸ வாக்குறுதி By DIGITAL DESK 5 04 NOV, 2022 | 11:39 AM (நா.தனுஜா) காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கும் நபர்கள் குறித்த அனைத்து விசாரணை நடவடிக்கைகளையும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிவிற்குக்கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கிடம் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (02) கொழ…

  21. பிள்ளையான் துணை போகின்றார் : சாணக்கியன் எம்.பி அபிவிருத்தி குழு கூட்டம் என்ற பெயரில் காணிகளை அபகரிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் துணை போகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாமல், நேற்றைய தினம் வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடாத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தான் ஒரு சதி நடவடிக்கையாகவே பார்ப்பதாகவும், குறிப்பாக வாகரையினை முற்றாக அரசாங்கத்திற்கு தாரை வார்ப்பதற்குரிய நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெட…

    • 1 reply
    • 177 views
  22. இலங்கை எதிர்பார்த்த கடனை இந்த வருடம் IMFஇடம் இருந்து பெற முடியாதென தகவல்! சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்த்த கடன் தொகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் பெற்றுக்கொள்ள முடியாது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை மேலும் குழப்பும் என பொருளாதார நிபுணர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களை சீனா தொடங்காததே இந்த கடன் தொகையை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று அந்தச் செய்தியில் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 2.9 பில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளை இலங்கை ந…

  23. கடந்தகால 4 வரைபுகளை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் அரசியலமைப்பு - டிலான் By T. SARANYA 04 NOV, 2022 | 11:48 AM (ரொபட் அன்டனி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரசியல் தீர்வுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குமாயின் அதற்கு முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம். ஏற்கனவே 1995, 1997, 2000, 2018 ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பு குறித்தவரைபுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி ஒரு மாதகால காலத்தில் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முடியும் என்று டலஸ் அணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பானது மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். 13 பிளஸ் அடிப்படையில்…

  24. இலங்கை முதல் 4 மாதங்களில் பெற்றுள்ள கடன் இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என ஆய்வில் தகவல்! புதிய வரிகளை விதிக்காமல் அரச பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட தொகை இருக்க வேண்டும் என விசேட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கை பெற்றுள்ள கடன் தொகையானது இவ்வருடத்தின் மொத்த அரசாங்க செலவீனத்தைவிட அதிகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்காக எஞ்சியிருக்கும் பணம் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இல்லை என …

  25. காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் நிறைவடையும் – நீதியமைச்சு காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று (வியாழக்கிழமை) நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும் சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்தும் தூதுவர் பாராட்டினார். அத்தோடு, வடக்கு – …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.