Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தால் இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. 1,800 இற்கு…

    • 2 replies
    • 252 views
  2. இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது. இத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும் எனவும் தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டது. இதற்காக அறிஞர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் பல வருட அனுபவமும் கொண்ட தொழில் வல்லுநர்கள் ந…

  3. இலங்கையின் வறுமை நிலை குறித்து வௌியிடப்பட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்டத்தை அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குறைந்தபட்ச மாதாந்தத் 13,810 ரூபா தேவையாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட அடிப்படையின்படி, கொழும்பு மாவட்டத்தில் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபாவான அதிகளவான தொகை தேவையாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவைக் கொண்டுள்ளதுடன் அந்த தொகை 13,204 ரூபாயாகும். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 20…

  4. கெஸ்பேவ நீதிமன்ற பொலிஸ் அறையிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களான 'சுட்டியா' மற்றும் 'சுடியா' ! By VISHNU 15 DEC, 2022 | 03:04 PM அடையாள அணிவகுப்புக்காக கெஸ்பேவ நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த 'சுட்டியா', மற்றும் 'சுடியா' ஆகிய இரு கொள்ளையர்கள் கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள்போன்று வேடமணிந்து பிலியந்தலை நகரில் உள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்றில் 7,000 ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே இவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்கள…

  5. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் நாளை மீள ஆரம்பம் By T. SARANYA 15 DEC, 2022 | 12:56 PM (எம்.வை.எம்.சியாம்) மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடந்த 70 நாட்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மூலம் நாளொன்றுக்கு 1,600 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெற்றோல், 950 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் விமானங்களுக்கு தேவையான 1,450 மெட்ரிக் தொன் எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெர…

  6. நாங்கள் பொறுமையிழந்துகொண்டிருக்கின்றோம் என்பதை சர்வதேச நாணயநிதியத்திற்கும் உலக நாடுகளிற்கும் தெரிவித்துள்ளோம் - அலி சப்ரி By Rajeeban 15 Dec, 2022 | 11:38 AM சர்வதேச நாணய நிதியத்திற்கும் எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும் எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துள்ளோம் என அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார் இலங்கையர்களின் நன்மைக்கும் உலக பொருளாதாரத்தின் நன்மைக்கும் இது அவசரமான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்கு அப்பால் அடுத்த வருடம் சர்வதேச அமைப்புகளிடம் இர…

  7. இந்திய இலங்கை கடற்படை தளபதிகள் சந்திப்பு By RAJEEBAN 13 DEC, 2022 | 12:08 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது இரு கடற்படையினரிடையிலுமான ஆளுமைவிருத்தி செயற்பாடுகளை மேலும் வலுவாக்குதல் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துதுதல் ஆகிய விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன https://www.virakesari.lk/article/142982

  8. சம்பந்தன் போர் குற்றவாளியா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி சம்பந்தன் போர் குற்றவாளியா? என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்ச…

    • 2 replies
    • 258 views
  9. எதிர்காலத்தில் கடும் மின்சாரமின்றி நாடு இருளில் மூழ்கக்கூடும்! எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார். தற்போதைய சூழலில் நிலக்கரியுடனான 24 கப்பல்கள் நாட்டை வந்தடைந்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.…

  10. 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்! சட்டரீதியாக முப்படைகளை விட்டு வெளியேறுவதற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை 15 ஆயிரத்து 891 படையினர், சட்டரீதியாக முப்படையிலிருந்து விடுபட விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 32 பேர் அதிகாரிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களில் 15 ஆயிரத்து 616 பேர் சேவையில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளனர். https://athavannews.com/2022/1315635

  11. 13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில் 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுத…

  12. தமிழ்த் தலைமைகளின் பேச்சுவார்த்தை – தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம்! எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்று கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இன்று நாங்கள் பாலசிங்கம் ஐயாவினுடைய நினைவு நாளை மேற்கொண்டிருக்கின்றோம். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய காலகட்டம் அவர் ஒட்டுமொத்த தமிழ்த்தேசத்திற்கும் கையாளுகின்ற ஒரு நிலைமையாகத்தான் இருக்கும். …

  13. 13 பிளஸ் யோசனையால் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது – பஷில் 13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது. எனவே, எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பஸில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ’13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. …

  14. நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! Sri Lankan Peoples 21 மணி நேரம் முன் நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன. ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவன…

  15. நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன By DIGITAL DESK 2 13 DEC, 2022 | 01:35 PM (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) நடைபெற்ற போது , நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்ப…

  16. 60இல் கட்டாய ஓய்வு: நீதிமன்றம் அதிரடி 2022 டிசெம்பர் 14 , பி.ப. 08:41 அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, ஜனவரி 25ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. 176 விசேட வைத்திய ஆலோசகர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://w…

  17. அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய தனிநபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா தேவை By DIGITAL DESK 5 14 DEC, 2022 | 05:12 PM (இராஜதுரை ஹஷான்) ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. (ஒக்டோபர் மாத தரப்படுத்தல்) மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 14,894 ரூபாவாக காணப்படுவதுடன்,மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 13…

  18. கடலட்டைப் பண்ணைக்கான அனுமதியை விரைவுபடுத்த வலியுறுத்தி பூநகரியில் அமைதிப் பேரணி 14 DEC, 2022 | 07:43 PM கடலட்டைப் பண்ணையை விரைவுபடுத்த வலியுறுத்தி பூநகரியில் அமைதிப் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கற்றொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி இன்று பூநகரி அன்னை மரியாள் தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு பூநகரி பிரதேச செயலகத்தினை சென்றடைந்ததுடன், பூநகரி பிரதேச செயலரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் பல்வேறு தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போதிலும், தற்போதைய நிலையில், பொருளாதார சுமைகளை எதிர்கொள்ளுமளவிற்கு போதுமானளவு வருமானத்தினை பெறமுடியாத நிலை காண…

  19. திட்டமிட்ட குற்றவாளியான மத்துகம சஹானின் மனைவி கட்டுநாயக்கவில் கைது! By DIGITAL DESK 2 14 DEC, 2022 | 11:36 AM சுமார் 25 கோடி ரூபா பணத்தை வங்கிக் கணக்கிலும் வைப்பிலும் வைத்திருந்த மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளியான சஹான் அரோஸ் ஜயசிங்க என்ற மத்துகம சஹானின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (டிச.13) மத்துகம நீதிவான் நீதிமன்றில் விமானப் பயணத் தடை உத்தரவைப் பெற்றதாகவும், அதன் பிரகாரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றப் ப…

  20. இவ்வருட மேலதிக கொடுப்பனவை வேண்டாமெனக் கூறும் மின்சார சபை ஊழியர் சங்கங்கள் By DIGITAL DESK 5 14 DEC, 2022 | 03:37 PM பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த ஆண்டு (2022) அனுமதித்துள்ள மேலதிக கொடுப்பனவை (போனஸ்) இரத்துச் செய்வதற்கு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இணங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்களும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/143059

  21. பல்கலை மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி? பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அதேவேளை, பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு, மூன்று, நான்கு மாதங்களாவது இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்க வேண்டும்.“…

  22. இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாய்! இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 7 இலட்சத்து 93 ஆயிரத்து 888 ரூபாயாக இருந்தது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின்படி, 2022 ஆகஸ்ட் மாத இறுதியில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 2469 பில்லியன் ரூபாய் அல்லது 24 டிரில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் 13,119.4 பில்லியனும், வெளிநாட்டுக் கடன்கள் 11,574 பில்லியனும் அடங்கும். தனிநபர் கடன் சுமையின் கணக்கீடு வருடாந்த மொத்தக் கடனை சராசரி வருடாந்த சனத்தொகை…

  23. இலங்கையில் இனிமேல் பாலியல் துன்புறுத்தல் குற்றவியல் தண்டனை ! அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க, சட்ட வரைவாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2022/1315357

  24. விட்டுக்கொடுப்புக்கு இம்மியும் இடமில்லை! – சம்பந்தன் திட்டவட்டம் “தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாம் ஏமாறவும் தயாரில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் பேச்சை முன்னெடுப்பதாக இருந்தால் அவரின் வா…

    • 7 replies
    • 719 views
  25. சீனா, இந்தியா, ஜப்பானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி ; ஜனவரியில் நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் - பந்துல By DIGITAL DESK 5 13 DEC, 2022 | 01:54 PM (எம்.மனோசித்ரா) சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுனரால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரி மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்க முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13) இடம்பெற்ற போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.