ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
'பட்டினி வலயங்களாக' பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் By VISHNU 09 OCT, 2022 | 10:43 AM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் 'பட்டினி வலயங்கள்' என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 'உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ…
-
- 1 reply
- 546 views
-
-
கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் மற்றும் ஆனந்தசங்கரி இடையில் சந்திப்பு பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் இன்று (ஞாயிற்க்கிழமை) தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் குறித்த சந்திப்பு கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஈழத்தமிழர் விடயம் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளும், இலங்கை அரசியல்வாதிகளும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிளும் இருவரும் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1303714
-
- 4 replies
- 678 views
-
-
எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சாணக்கியன்! எங்களது தமிழ் உறவுகள் கைதுசெய்யப்பட்டு இதே சட்டத்தின் கீழ் 5000 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு சட்டம் ஊடாக இந்த நாட்டை சீரழித்த மகிந்த ராஜபக்ஷ குடும்பம் உட்பட இந்த அரசாங்கத்துடன் இணைந்த அனைவரும் புனர்வாழ்வளிக்கப்படவேண்டியவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதனைவிட மோசமான புனர்வாழ்வளித்தல் சட்டத்தினை கொண்டுவர அரசாங்கம் முற்படு…
-
- 1 reply
- 668 views
-
-
இராணுவத்தினரிடம் இருந்து எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள் – மக்கள் கோரிக்கை மன்னார் மெசிடோ நிறுவனத்தால் யாழ்.பருத்தித்துறை பொலிகண்டி நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. பொலிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வசிக்கும் வருமானத்தை இழந்த 75 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிராடோவினால் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கையில் காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துவதோடு எங்களது சொ…
-
- 0 replies
- 153 views
-
-
மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 180 அலகுக்கும் அதிக மின் பாவனையைக் கொண்ட வழிபாட்டுத் தலங்களில் அலகொன்றுக்கு 32 ரூபா அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1303671
-
- 0 replies
- 349 views
-
-
தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்! இரசாயன தட்டுப்பாடு காரணமாக தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். டொலர் பிரச்சினை காரணமாக இரசாயன பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தொல்பொருள் ஆய்வு பணிகளும் தடைபட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தொல்லியல் திணைக்களத்தில் காகித பிரச்சனையால் பல்வேறு அறிக்கைகள் தயாரிப்பதிலும் இடையூறு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. மேலத…
-
- 2 replies
- 647 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தகவல்களை வெளியிடுமாறு உத்தரவு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை வெளியிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு பொலிஸாருக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தகவல்கள் வழங்கப்படாவிட்டால், இலங்கை பொலிஸார் மற்றும் தகவல் அதிகாரிக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2019 முதல் நவம்பர் 2021 வரை பயங்கரவாதத் தடுப்…
-
- 0 replies
- 171 views
-
-
முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதல் கட்ட விசாரணை மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் வழங்கப்பட்ட அறிக்கையை அடுத்து குறித்த இரண்டு ஊழியர்களும் பணியிடை நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த இரண்டு ஊழியர்கள் தொடர்பிலும் ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உணவுப் பொருட்களை வெளியே கொண்டு சென்றதாக கூற…
-
- 0 replies
- 135 views
-
-
கணவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தலைவர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதால் ஆபத்தான வகையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், படுகாயங்களுக்கு உள்ளாகிய குடும்பத்தலைவரின் மனைவியை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளார். https://…
-
- 0 replies
- 934 views
-
-
ஆசியாவின் சிறந்த 3 சுற்றுலா ஓய்வு விடுதிகளில் “ கேப் வெலிகம” By T. SARANYA 08 OCT, 2022 | 01:11 PM 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது. “கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ் இதனை வௌியிட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் வௌியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “வாசகர்கள் தெரிவு விருதுகள்” இல் இலங்கைக்கு 99.05 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. இதில் 99.69 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை சிக்ஸ் சென்ஸ் ந…
-
- 88 replies
- 5.4k views
- 1 follower
-
-
சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது - எஸ்.எம். மரிக்கார் By NANTHINI 08 OCT, 2022 | 06:41 PM (எம்.மனோசித்ரா) ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களின்றி எம்மால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. எனினும், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய உதவிகளில் பாதகமான தாக்கத்தை செலுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அ…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
யாழில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது By NANTHINI 08 OCT, 2022 | 12:01 PM யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் வெள்ளிக்கிழமை (ஒக் 7) கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் உறவினரொருவர் கடந்த திங்கட்கிழமை (ஒக் 3) ஒரு தொகை ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் 6 பேர் ஹெரோயின் போதைப்பொருளோடு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 6 replies
- 764 views
- 1 follower
-
-
மோட்டார் சைக்கிளைத் திருடி பெண்ணிடம் தங்க நகை வழிப்பறி - யாழில் சம்பவம் By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 10:36 AM யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை வழிப்பறிக் கொள்ளையிட்ட சம்பவம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான என்எஸ் பல்சர் ரக மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே மோட்டார் சைக்கிளினை …
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி By T. SARANYA 08 OCT, 2022 | 09:19 AM (K.B.சதீஸ்) வவுனியா மாமடுப்பகுதியில் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (7) மாலை குறித்த பெண் வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்துபகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது மின்னல் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்துள்ளார். குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
உத்தரதேவி தடம்புரண்டது By DIGITAL DESK 5 08 OCT, 2022 | 01:36 PM காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்துக்கு இடையே தடம்புரண்டுள்ளது. இதனால் தண்டவாளத்தின் 150 மீற்றர் நீளத்திற்கு கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. ரயிலின் முன்பக்க இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்குப் புகையிரத பாதையில் புகையிரதத்தின் இயக்கம் தடைப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்புப் பொருட்கள் இன்மையால் புகையிரதங்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிக்குமென துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் சில …
-
- 8 replies
- 518 views
- 1 follower
-
-
யாழில் திருட்டில் ஈடுபட்டவர் கைது By NANTHINI 08 OCT, 2022 | 01:48 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை திருடிய நபரொருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் சனிக்கிழமை (ஒக் 😎 கைதுசெய்யப்பட்டார். குறித்த நபர் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். கோப்பாய் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ம…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
மஹிந்தவின் புதிய ஆரம்பம் "ஒன்றாக எழுவோம்" – பிரதமர் தினேஷும் பங்கேற்பு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தக் கூட்டம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, தற்போதுள்ள அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்றுக…
-
- 7 replies
- 813 views
-
-
தாமரைக் கோபுரத்தில் இருந்து Bungee jumping விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து! தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, தாமரை கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை கவர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்…
-
- 2 replies
- 263 views
- 1 follower
-
-
திலினி பிரியமாலியுடன் மஹிந்தவின் மனைவிக்கு தொடர்பா? – முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம் நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் மறுத்துள்ளது. இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ அலுவலகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் படங்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் திலினி பிரியாமாலி கலந்து கொண்ட நிகழ்வில் ஷிராந்தி…
-
- 1 reply
- 636 views
-
-
இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்தியா தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன், தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் காணாமல்போனவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் “ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தீர்மானத்தின் மீதானவாக்கெடுப்பில் இருந்து இந்தியா மறைந்து போனது.இது எங்கள் தாய்மார்களை வருத்தமடையச் செய்துள்ளதோடு ஒரு நண்பருக்கு உதவி தேவைப்படும்போது, ஒரு உண்மையான நண்பர் உதவுவார்”. ஆனால் …
-
- 0 replies
- 185 views
-
-
நாமலுக்கு மேலுமொரு புதிய பதவி! குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். உபகுழுவின் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் முன்மொழிந்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி அதனை உறுதிப்படுத்தியதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்வளம் மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில் முனைவோர் கொள்கைகள் ஆகியவற்றைச் …
-
- 0 replies
- 236 views
-
-
2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர் இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரும் பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளருமான ஜி. எஸ். யாப்பா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜப்பானிலும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 541 views
-
-
ஐ.நா. வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே இலங்கை ஏனைய நாடுகளின் ஆதரவை இழந்துள்ளது – ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளை நாடு கடைப்பிடிக்காத காரணத்தினாலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தனது ஆதரவை இழந்தது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் கணிசமான அந்நிய செலாவணியில் பங்களிக்கும் நேரத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் அனுப்பும் சூழலில் இலங்கைக்கு ஆதரவை காட்டவில்லை எ…
-
- 9 replies
- 422 views
-
-
இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்: இந்தியா புறக்கணித்தது சீன செல்வாக்கை குறைக்கவா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@INDIAUNGENEVA படக்குறிப்பு, இந்திரா மணி பாண்டே இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததாக, ஏஎன்ஐ செய்தி மு…
-
- 10 replies
- 724 views
- 1 follower
-
-
LTTE இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை – பிரதமர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான வழிகாட்டுதலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகளை விடுதலை செய்திருந்தார் என்றும் எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா.…
-
- 0 replies
- 261 views
-