ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா By RAJEEBAN 14 SEP, 2022 | 04:15 PM இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். அவ்வாறானஒர…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிராக அணி திரளும் நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆரம்ப பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க பல நாடுகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசடோனியா மற்றும் மென்டிநிட்ரோ ஆகியவை இந்த நாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.adaderana.lk/news.php?nid=165621
-
- 0 replies
- 482 views
-
-
அலிசப்ரி அலட்டுகிறார் Posted on September 14, 2022 by தென்னவள் 12 0 ஜநாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பிதற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்களத்தில் ஒரு முது மொழி உண்டு “கொஹட யன்னே. மல்லே பொல்” என்பார்கள். அதாவது எங்கே போகின்றாய் என்று கேட்டால் பையிலே தேங்காய் என்று மறு மொழி சொல்வது போல் 46/1 பிரேரணையை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாகவும் பொருளாதார ரீதியாக அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்றும் கூறியுள்ளார். எனினும் நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அவரின் பேச்சில் தென்படுகிறது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின்…
-
- 0 replies
- 361 views
-
-
நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தில் 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு - இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் By T. SARANYA 14 SEP, 2022 | 09:53 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்திக்கு தேவையான 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ளதால், எதிர்வரும் காலத்தில் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 14 கப்பல்களுக்கான …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/207592
-
- 9 replies
- 956 views
-
-
திருக்கோணேஸ்வர ஆலய, விவகாரம் குறித்து... அமைச்சரவையில், ஆராய்வு! திருகோணமலை வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் மாசுபடும் வகையில் சிலர் செயற்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமய விவகார அ…
-
- 0 replies
- 202 views
-
-
ஆசிரியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு... ஐந்தாண்டு விடுமுறை பொருந்தாது: அதிகாரி. அரசு ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சம்பளமற்ற விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிரிவுகளுக்கு பொருந்தாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இந்த நீண்ட கால விடுமுறைக்கான சுற்றறிக்கையை அரசாங்கம் பல்வேறு நிறுவனங்களின் மேலதிகமான ஊழியர்களை விடுவிப்பதற்காகவே அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பிரிவு ஊழியர்களுக்கு இது பொருந்…
-
- 0 replies
- 135 views
-
-
மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு. ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கான கேட்டரிங் சேவைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1298944
-
- 0 replies
- 182 views
-
-
இலங்கையில் நிலவும்... இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபா…
-
- 0 replies
- 213 views
-
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டா இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து By T. SARANYA 12 SEP, 2022 | 04:31 PM அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக கடந்த ஜூலை மாதம் இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மீண்டும் சமூக ஊடகங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசியக்கிண்ண 2022 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற…
-
- 3 replies
- 329 views
- 1 follower
-
-
மூதூரில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம் Posted on September 12, 2022 by தென்னவள் 14 0 கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 43ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு நிரந்த…
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் - கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் By RAJEEBAN 13 SEP, 2022 | 03:30 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்க…
-
- 3 replies
- 259 views
- 1 follower
-
-
இலங்கைக்கு... பலமான, ஆதரவை வழங்குவோம் – ஐ. நா. வில்... சீனா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார். https://athavannews.com/2022/1298841
-
- 5 replies
- 628 views
-
-
யாழ்.கச்சேரி பகுதியில் 20 இலட்சம் ரூபா தங்க ஆபரணங்களுடன் போதைப்பொருள் வியாபரி கைது By VISHNU 13 SEP, 2022 | 03:21 PM யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் வைத்து 8 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் போதைப்பொருள் வியாபாரியான 24 வயது இளைஞனை நேற்று திங்கட்கிழமை (12) இரவு 10 மணியவில் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் ரி. மேனன் தலையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் கச்சேரி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்ய தீர்மானம் By T. SARANYA 13 SEP, 2022 | 04:59 PM (எம்.மனோசித்ரா) அரச சேவையில் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச துறைகளில் அநாவசிய நியமனங்களை வழங்காமலிருப்பதற்கும், பணியாளர் வெற்றிடம் காணப்படும் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் ஊழியர் சமநிலைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் இவ்வாரம் அமைச்சரவையில் பிர…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு ! By Shayithan.S September 13, 2022 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்…
-
- 4 replies
- 297 views
- 1 follower
-
-
அத்தியாவசிய மருந்து பொருட்களுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாடு எதிர்கொண்டுள்ள வெளிநாட்டு செலாவணி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்காக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத்திற்கு ஒத்துழைக்கின்ற கருத்திட்டம் மற்றும் இடர்களைக் குறைக்கின்ற படிமுறைகள் மூலம் மண்சரிவு இடர்களைக் குறைக்கின்ற கருத்திட்டம் போன்ற கருத்திட்டங்களின் விடயதானங்களைத் திருத்தம் செய்து 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் துரிதமாக வழங்குவதற்கு அவ்வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு நகர மறுமலர்ச்சி கருத்திட்டத…
-
- 0 replies
- 245 views
-
-
கடனை மறுசீரமைக்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பம் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசக நிறுவனமான லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு இந்த நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=165593
-
- 0 replies
- 145 views
-
-
' ஸ்போர்ட்ஸ் சைன் ' மென்பொருள் மூலம் 800 கோடி ரூபா பண மோசடி : ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை By VISHNU 13 SEP, 2022 | 01:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் சுமார் 800 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஐவரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மென் பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தின் பிரதானிகள் ஐவரின் வெளிநாட்டு பயணங்களையே இவ்வாறு தடை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திளகரத்ன உத்தரவிட்டார். மஹரகமவை சேர்ந்த அமித் விக்ரமசிங்க, குருணாகல் பகுதியைச் சேர்ந…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு By VISHNU 13 SEP, 2022 | 12:43 PM மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது இதுவரையில் எவ்விதமான வழக்குகளும் தொடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நி…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு By T. SARANYA 13 SEP, 2022 | 01:17 PM (எம்.வை.எம்.சியாம்) நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல்…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
ஐ.நாவில் சிறிலங்கா எதிர் (நா) தமிழீழ அரசாங்கம் !! இனியும் தாமதிக்காது ஐ.நா பாதுகாப்பு சபைக்கு மாற்றுங்கள் !! - ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இடித்துரைப்பு By Rajeeban 13 Sep, 2022 | 10:31 AM சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு சிறிலங்காவை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் V.P.லிங்கஜோதி அவர்கள் இடித்துரைத்துள்ளார். இன்று தொடங்…
-
- 0 replies
- 361 views
-
-
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை By T. SARANYA 13 SEP, 2022 | 08:51 AM இன்று (13) செவ்வாய்க்கிழமை 01 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. http://fe.virakesari.lk/article/135529 நேற்று 12/09/22 இல் இருந்து 1 மணி நேர மின்வெட்டு ஆரம்பம். வழமைக்கு திரும்பியது மின்தடை!
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
மஹிந்த ராஜபக்ச தலைமையில்... புதிய கூட்டணி – நாமல் ராஜபக்ச. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார். தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக …
-
- 5 replies
- 639 views
- 1 follower
-
-
சிகிச்சைக்கு வந்த 15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் : வைத்தியரை தேடி சிறப்பு விசாரணைகள் By T YUWARAJ 11 SEP, 2022 | 07:57 PM (எம்.எப்.எம்.பஸீர்) காலி - கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கராபிட்டிய வைத்தியசாலை ஊடாகவும், காலி பொலிஸ் நிலையம் ஊடாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகிக்கப்படும் வைத்தியர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடி விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. …
-
- 2 replies
- 340 views
- 1 follower
-