Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. By T. SARANYA 11 AUG, 2022 | 03:46 PM யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் மற்றும் இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து இன்று (11) மருத்துவமுகாம் ஒன்றை நடார்த்தியிருந்தனர். கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் குறித்த மருத்துவ முகாம் காலை ஆரம்பமானது. இதில் இருதய நோய் தொடர்பில் வடமாகாணத்தில் பத்தாயிரம் மக்களை சந்தித்து| அவர்களின் உடல்நலன் தொடர்பாக ஆராய்ந்த பொழுது மருத்துவ சிகிச்சை பெறுவதில் எற்படும் பல சிக்கல் தொடர்பாக அறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அவ்வாறான இடங்களில் மருத்துவமுகாம்களை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மதுத்துவபீடமும், இங்கிலாந்து மருத்துவபீடமும் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடார்த்தியிருந்த…

  2. (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து உண்மையையும் நீதியையும் கோரி முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளமையை நினைவுகூரும் வகையில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதுடன் அவர்களுக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஆரம்பித்த கவனயீர்ப்புப்போராட்டம் நாளையுடன் 2000 நாட்களை எட்டவுள்ளது. அதனை முன்னிட்டு கிளிநொச்சி…

  3. தமிழ் சமூகம், பொருளாதாரத்தில் மாத்திரமல்ல... அதைவிட பல இன்னல்களை எதிர் கொண்டுள்ளது – சாணக்கியன் கடந்த 2004ஆம் ஆண்டு 25 ஆக இருந்த வடகிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் தற்போது வட கிழக்கு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் செயல்பாடுகளினால் குறைவடைந்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைப்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘நாட்டில் 74 வருடங்களாக ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் பல உரைகளை பாராளுமன்றில் ஆற்றியிருந்தாலும் இந்த …

  4. குழந்தைகளுக்கு.. அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் அபாயம், என எச்சரிக்கை. கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவ மனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார். இதே நிலை நீடித்தால், அவர்களின் வயதுக்கு ஏற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வயதுக்கு ஏற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அறிவு வளர்ச்சி குன்றிய குழந்தையாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும் என்று அவர் வலி…

  5. அனைத்து தரப்பினருக்கும்... நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய, அரசே வேண்டும் – ஜனாதிபதி ரணில். ஒவ்வொரு கட்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை தயாரிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் பதியுதீன், அனுர பிரியதர்சன யாப்பா, ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவித…

  6. பாராளுமன்ற தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை செலுத்தினார் ஜனாதிபதி By T. SARANYA 10 AUG, 2022 | 03:23 PM 9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செலுத்தியுள்ளார். 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேநீர் விருந்தளித்தார். இந்த தேநீர் விருந்துபசாரத்திற்கு செலவான 272,000 ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்தி செலுத்தியுள்ளார். ஜனாத…

  7. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார். இந்த கோரிக்க…

    • 7 replies
    • 544 views
  8. By T YUWARAJ 10 AUG, 2022 | 06:19 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் காய்நகர்த்தலை பார்த்து முஸ்லிம் அரசியல் கட்சிகள் பாடம் கற்க வேண்டும். அத்துடன் மறைமுகமாக ஜனாதிபதியை சந்தித்து அமைச்சு பதவியை கேட்பதை விடுத்து அமைச்சுப் பதவிகள் மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளையும் கேட்டுப்பெற அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …

    • 5 replies
    • 448 views
  9. By VISHNU 10 AUG, 2022 | 03:04 PM (எம்.வை.எம்.சியாம்) திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்து ஆலயத்திற்கு செல்லும் வழியின் இருமருங்கிலும் கடைத்தொகுதிகள் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் ஆலய திருப்பணி வேலைகள் முன்னெடுப்பதற்கு திணைக்களம் இடையூறு விளைவித்து வருவதாகவும் இது தொடர்பாக உரிய தீர்வினை பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுத்தர வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்ந…

    • 5 replies
    • 520 views
  10. சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கடலில் கடந்த இரண்டு நாட்களாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் கடற்தொழில் அமைச்சிற்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் வி.அருள்நாதன் அவர்களினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடலுக்கு செல்லமுடியாத நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச திணைக்களங்கள் மற்றும் அ…

    • 2 replies
    • 288 views
  11. By VISHNU 10 AUG, 2022 | 09:10 PM (நா.தனுஜா) கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய போராட்டக்காரர்கள், இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர். காலிமுகத்திடல், கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அகற்றுமாறு கோட்டை பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். பொலிஸாரின் அவ்வறிவிப்பிற்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில்…

  12. மின் கட்டணம் 75% இனால் அதிகரிப்பு! (வீடியோ) மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணம் 200 வீதத்தினால் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அது 600 ரூபாவை விட குறைந்த தொகையாகவே இருக்கும் என அவர்…

  13. யாழில்... பலசரக்கு கடைகளில், மரக்கறி விற்க.. தடை விதிக்க கோரி போராட்டம்! யாழ்ப்பாணம், கல்வியங்காடு, செங்குந்த சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் , யாழ்ப்பாணம் மாநகர சபை , நல்லூர் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பொலிஸார் ஆகியோருக்கு மகஜர் ஒன்றினையும் கையளித்து உள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தைக்கு வெளியே , சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்த…

  14. எண்ணெய், துறைமுகம், மின்சார சபை ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் ; வருடத்துக்கு மூன்று போனஸ் : எஸ்.பி.திஸாநாயக்க -சி.எல்.சிசில்- எண்ணெய் கூட்டுத்தாபனம் உட்பட நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் வருடத்துக்கு மூன்று போனஸ் வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், எரிவாயு கிடைக்காதது அரசாங்கத்தின் தவறே தவிர மக்களின் தவறல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டி…

    • 0 replies
    • 158 views
  15. நாட்டை மீட்பது பற்றிப் பேசாமல் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது குறித்து பேரம் பேசுகின்றனர் : உதய கம்மன்பில -சி.எல்.சிசில்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தற்போது அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதில் போட்டி நிலைமையாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான முன்மொழிவுகளை விவாதிப்பதற்குப் பதிலாக அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது தொடர்பில் இன்று பேரம் பேசப்படுவதாக அவர் கூறினார். பதவிகளைப் பகிர்வது பற்றிப் பேசாமல் நாட்டைக் காப்பாற்றுவது பற்றிப் பேசுவதே இன்று செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் இன்னு…

    • 0 replies
    • 191 views
  16. அவசரகாலச் சட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த மனுக்கள் நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சிரேஷ்ட…

    • 0 replies
    • 129 views
  17. மஹிந்த மற்றும் பசில் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (10) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=164348

    • 0 replies
    • 150 views
  18. புதிய கூட்டணியின் பெயர் 21 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து வௌியேறிய 10 சுயேட்சை கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சர்வகட்சி அரசாங்கம் அமைச்சுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அல்ல, மாறாக இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து அனைவரும் வெளியேறக்கூடிய ஒரு திட்டத்தை அமைப்பதன் மூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார…

    • 0 replies
    • 200 views
  19. 1,321 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது இதுவரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனையின் போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 155,502 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் 44,777 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,208 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொத்தம் 1,387 சோதனைகளில், 1,321 சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். http://tamil.adaderana.lk/news.php?ni…

    • 0 replies
    • 151 views
  20. சீனாவுடனான நட்புறவை... உறுதியாக, வைத்துக் கொள்ள விருப்பம் – அமைச்சர் அலி சப்ரி. சீனாவுடனான நட்புறவை உறுதியாக வைத்துக்கொள்ள விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீவுடனான இரு தரப்பு சந்திப்பின் போதே இதனை தெரிவித்திருந்தார். சீனாவின் இராணுவக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான ஒத்துழைப்பை அமைச்சர் சப்ரி வெளியிட்டுள்ளார். இதேவேளை இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவென்பதும் குறிப…

  21. தமிழரிடையே சுயநிர்ணய தேர்தல் நடப்பதை இந்தியா உறுதி செய்யவேண்டும் - சிவாஜி இந்தியா அப்படி ஆதரவு தர முன்வருமா என்ற கேள்விக்கு பதில் தரும்போது, இது இனிமேலும், ஈழத்தமிழர் விவகாரம் அல்ல. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரம். மிக தீர்க்கமாக சீனா சிங்கள தேசத்தினுள் உள்புகுந்து விட்டது என்கிறார் அவர். இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரமாகியபோதே, பாகிஸ்தான் இரண்டாகி, பங்களாதேசம் உருவாக்கியது என்றார், சிவாஜிலிங்கம். யுத்த காலத்தின் போது இந்தியாவில் இருந்த சிவாஜிலிங்கம், யுத்தம் முடிந்த பின்னர், இலங்கை திரும்பி, மீண்டும் இந்தியா செல்ல முனைந்த போது, இரண்டு தடவைகள் காங்கிரஸ், திமுக அரச காலத்தில், சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். டெலோவினை சே…

    • 0 replies
    • 179 views
  22. அரசாங்கத்தின் மொத்த செலவு... 47,943 கோடியால், அதிகரிப்பு ! நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டுக்காக, கடந்த நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, மொத்தச் செலவு, 2 இலட்சத்து ஒன்பதாயிரத்து 664 கோடியே 65 இலட்சத்து 58 ஆயிரமாகும். இருப்பினும் திருத்தச் சட்டமூலத்தின்படி மொத்தச் செலவு 3 இலட்சத்து 27 ஆயிரத்து 587 கோடியே அறுபத்தைந்து இலட்சத்து 58 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அத…

  23. வடக்கு, கிழக்கில்... இராணுவத்தினரது அடாவடித்தனம் – சிறிதரன். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்பள்ளி பாடசாலைகளின் பெயர்கள் இராணுவத்தினரது தலையீட்டுடன் மாற்றப்படுவதாக நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இதனால் அங்கு கல்வி நிலைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும் இது வெறுக்கத்தக்க விடயம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு முன்பள்ளிகளின் பெயர் இராணுவத்தின் தலையீட்டுடன் மாறப் பட்டுள்ளமையை சிறிதரன் சுட்டிக்காட்டினார். யுத்தம் முடிவடைந்…

  24. ஜனாதிபதி தெரிவின் போது... உறுப்பினர்கள் சிலர், அச்சுறுத்தபட்டுள்ளனர்- சமிந்த விஜேயஸ்ரீ நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தபட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேயஸ்ரீ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது, சில உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த அச்சுறுத்தலினால்தான் அவர்கள், ஜனாதிபதி தெரிவின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். வாக்களிக்காவிட்டால் விளைவுகளை எத…

    • 3 replies
    • 275 views
  25. ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163764

    • 62 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.