Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 22ஆம் திருத்த சட்டம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 22 ஆம் திருத்தத்திற்கு உப இணைப்புகள் சிலவற்றை உள்ளடக்கினார். அது மீண்டும…

  2. "கோட்டா கோ கம" போராட்டக்காரர்கள்... 21 பேருக்கு, வெளிநாடு செல்ல தடை! கோட்டா கோ கம போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உள்ளிட்ட 21 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசப் ஸ்டாலின், முதலிகே, சோசலிச இளைஞர் அணித் தலைவர், அருட்தந்தை ஒருவர் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தனிஷ் அலி எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோ…

  3. அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ நேற்று நடைபெற்றது. தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைப…

  4. நீதிமன்றில் ஆஜராகுமாறு... முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை ! எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேற்படி மனுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும்…

    • 5 replies
    • 492 views
  5. அமைச்சர்கள் அரசியல் சூதாட்டத்தில்! Posted on July 28, 2022 by நிலையவள் 9 0 250 இலட்சம் மக்கள் அனாதரவான நிலையில் இருக்கும் வேளையில் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் அரசியல் சூது ஆடுகின்றனர் எனவும் 45 இலட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். குறித்த தொழில் துறையினர் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும், அரசாங்கத்திலுள்ள எவரும் அது தொடர்பில் பொறுப்பல்லர் போன்றும் செயற்படுவதாகவும் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) கொழும்பிலுள்…

    • 0 replies
    • 456 views
  6. ஆடி அமாவாசையை... முன்னிட்டு, கீரிமலை கடற்கரையில்... விசேட வழிபாடு! தந்தையை இழந்தவர்களுக்கு பிரதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம், கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள். அதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவமும் இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில் நடைபெற்றது. அதன் போதும் ஏராளமானான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டு தீர்த்தமாடினர். ஆடி அமாவாசை விரதமானது இந்து சமயத்தைச் சேர்ந்த அனைவராலும் பக்தியுடன் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இந்நாளில் இந்துக்கள் சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் தீ…

    • 7 replies
    • 881 views
  7. சீன கப்பலொன்று அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறித்து அறிந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயமும் குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது அவற்றை பாதுகாப்பதற்கான அனைதத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன கப்பல் விஜயம் - இந்தியா தெரிவித்துள்ளது என்ன? | Virakesari.lk

  8. Nirosh / 2022 ஜூலை 28 , பி.ப. 07:09 - 0 - 120 FacebookTwitterWhatsApp அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பின் கதவு வழியாக வந்து தவறான வழியில் தான் ஜனாதிபதியாகிருந்தாலும், அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தாது நாட்டு மக்கள் கோர…

  9. ( எம்.எப்.எம்.பஸீர்) நாடளாவிய ரீதியில், இன்று (28) நிறைவடைந்த 36 மணி நேரத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவங்களில் மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரத்மலானை, கம்பஹா, அம்பலாங்கொடை பகுதிகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்பலாங்கொடையில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும் இன்று மாலை வரை இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. இரத்மலானை : நேற்று (27) இரவு இரத்மலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இருவர், அங்கிருந்த மு…

  10. (எம்.ஆர்.எம்.வசீம்) பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் …

  11. விடுதலைப் புலிகள் அமைப்பின்... முன்னாள் உறுப்பினர் ஒருவர், பிணையில் விடுதலை. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியங்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரகீத் எக்னெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று(28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்…

  12. குட்டிமணி, தங்கதுரையின்... 39 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு! 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்தின்போது, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மயூரன் மற்றும் கட்சியின் உறுப்பி…

  13. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை... அடக்குவதை விடுத்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை... நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்! போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற…

  14. அமைச்சு பதவிகளுக்காக... கொள்கைகளை, விட்டுக்கொடுக்க முடியாது – சஜித்! அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் இல்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித…

  15. அனைத்து... உப தபால் அலுவலகங்களும், இன்று மூடப்படுகின்றன! நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களும் இன்று(வியாழக்கிழமை) மூடப்படவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, மறு அறிவித்தல் வரை அனைத்து உப தபால் அலுவலகங்களும் திங்கள், செவ்வாய், புதன், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மாலை 03 மணி வரை திறக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்கள் திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் செவ்வாய்க்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறக்…

  16. இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)

    • 13 replies
    • 610 views
  17. யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலைக்கழத்தின் புதுமுக மாணவர்களை ஒன்று கூடல் எனும் பெயரில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதிக்கு அழைத்து பகிடி வதைக்கு உட்படுத்தப்படுவதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்க்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் அது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளரால் பல்கலைக்கழக நிர்வாகத்திற்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சட்ட நிறைவேற்று அதிகாரி, மாண…

  18. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றில், குறித்த நபர் படுக்கையில் படுத்திருந்தவாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை போர்வையாக பயன்படுத்துவதைக் காட்டுகிறது. அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்ட…

  19. சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் …

  20. இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பொதியை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனா ஒரு பெரிய கடன் வழங்குநராக உள்ளது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பில் இலங்கை சீனாவுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் கூறியுள்ளார். ரொயிட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை சீனாவிற்கு 6.5 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் IFF (Institute of Internati…

  21. இலங்கை சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. சீனா பெரிய கடன்வழங்கும் நாடு இலங்கை கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் சாதகமான விதத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 22 மில்லியன் மக்களை கொண்ட நாடு அதன் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத பொருளாதார அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பலமாத எரிபொருள் உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டினை தொடர்ந்து உருவான பாரிய மக்கள் எழுச்சி காரணமாக முன்னைய ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதிய…

  22. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு இந்தியா துரிதமாக உதவியது ஆனால் உதவிக்காக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களிற்கு சீனா பதிலளிக்கவில்லை என யுஎஸ்எயிட்டின் தலைமை நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர் அங்கு இதனை தெரிவித்துள்ளார். புதுடில்லி ஐஐடியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான உதவும் மிக முக்கியமான நடவடிக்கைகளுடன் இந்தியா துரிதமாக பதில்நடவடிக்கையில் ஈடுபட்டது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஆனால் சீனா கணிசமான நிவாரணத்தை என்ற வேண்டுகோள்களிற்கு இறுதிவரை பதில்அளிக்கப்படவில்லை எனவும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். …

  23. இலங்கை சில நிபந்தனைகளில் பின்னடிப்பதால், ஐஎம்எப் உதவி தாமதமாகிறது. 1, படையினர், அரச சேவையில் உள்ளோரின் தொகை குறைத்து வீட்டுக்கு அனுப்புதல். 2, இலவச கல்வி, இலவச மருத்துவம் காத்திரமான குறைப்பு. முன்னர் சிறிமாவோ காலத்தில், ஆஸ்பத்திரி போனால், ஒரு ரூபாய் முத்திரை கொடுத்தே, டிக்கெட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு, நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரை என்று வரக்கூடும் என்கிறார்கள். அதே போல் கல்விக்கும், நூறு முதல் ஐநூறு ரூபாய் வரை மாதம் அல்லது தவணைக்கு பாடசாலைக்கு கட்டுமாறு கோரலாம். இலங்கையில் பல்கலைக்கழக கல்வி கூட இலவசமானது. பிரிட்டனில் உள்ளது போல, மாணவர்களுக்கு அரசு கடன் கொடுத்து படிக்க வைக்கும் நிலை வரலாம். இவற்றுள் சகலதும் அல்லது …

    • 2 replies
    • 345 views
  24. எரிபொருளை... அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை, கைது செய்யும் பொலிஸாருக்கு... பணப் பரிசு! சட்டவிரோதமான முறையில் எரிபொருளினை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதற்கமைய 100 லீற்றர் வரையான பெற்றோல் அல்லது டீசலை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், 100 முதல் 500 லீற்றர் வரையிலான எரிபொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு 02 இலட்சம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அத்துடன், 500 முதல் 1000 லீற்றர் வரையான எரிபொருளைக் கைப்பற்றுவோருக்கு 03 இலட்சம் ர…

  25. அவசரகால சட்டம்... 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம். அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன்போது ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்காரணமாக குறித்த சட்டம் 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1292581

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.