ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
அரசாங்கம் தலையிட்டால்... ஒரு கிலோ அரிசியை, 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் – முன்னாள் விவசாயப் பணிப்பாளர். ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கமும் நெல் சந்தைப்படுத்தல் சபையும் உரிய முறையில் தலையிட்டால் ஒரு கிலோ அரிசியை 140 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1289587
-
- 0 replies
- 169 views
-
-
அரசுக்கு எதிரான... போராட்டங்களை, தொடருங்கள் – அனுர அழைப்பு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை விடுத்து தவறான தகவல்களை அரசாங்கம் பரப்பிவருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு முயற்சிப்பதாக தம்மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாக கூறினார். இலங்கையில் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் இயக்கங்கள…
-
- 0 replies
- 185 views
-
-
ஜூலை, 5,6 குண்டுவெடிக்கும்: வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்திய அனுரகுமார திஸாநாயக்க, ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாக விருக்கும் கரும்புலிகள் தினத்தை இலக்காக வைத்து, வடக்கில் அல்லது தெற்கில் குண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பை குறிப்பிட்டு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் 27 ஆம் திகதியன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு பொலிஸ் மா அதிபர் சி.ரி.விக்ரமரத்ன…
-
- 3 replies
- 374 views
-
-
மின்சாரம் மற்றும் எரிபொருள்.. அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் ! பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் அத்…
-
- 2 replies
- 381 views
-
-
சஜித்திற்கும், மைத்திரிக்கும் இடையில்... கொழும்பில் அவசர சந்திப்பு. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ‘தேசிய சீர்த்திருத்தங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்’ தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்…
-
- 10 replies
- 596 views
-
-
எரிபொருள் நெருக்கடி: நாடளாவிய ரீதியில், இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை! நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இந்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வ…
-
- 1 reply
- 173 views
-
-
இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் ஒரு விசைப்படகுடன் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்கள்-12-பேர்-கைது/71-299678
-
- 2 replies
- 524 views
-
-
மே 11 அன்று வழங்கிய... வாக்குறுதியை, ஜனாதிபதி கோட்டா மீறியுள்ளார் – எதிர்க்கட்சி அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ள விதிகளை மீள அமுல்படுத்துவதாக பொது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாட்டின் தலைவர்கள் மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார். 19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டு வந்து, கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாக குறிப்பிட்டார். மே 11ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 19 ஆவதை அமுல்பட…
-
- 1 reply
- 252 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன. சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளு…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
ஜனாதிபதியாகும் கனவில் இருக்கும் ரணிலை வீட்டுக்கு அனுப்புங்கள் – ஜனாதிபதியிடம் போட்டு கொடுத்த மொட்டு கட்சி எம்.பிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு தேவையான டொலர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக்கொடுக்க வேண்டும் . ஆனால் அது முடியாத பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மொட்டுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க டொலர்களை வழங்காவிட்டால் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என ஜனாதிபதியை அண்மையில் சந்தித்த பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமராக இருக்கு…
-
- 0 replies
- 285 views
-
-
பிரதமர் பதவியை... ரணில் உடனடியாக, இராஜினாமா செய்ய வேண்டும் – சஜித் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதன்போது தொட்ர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்களை அழிக்கும் ராஜபக்ஷ ஆட்சியை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பிரதமர் பதவியில்…
-
- 0 replies
- 164 views
-
-
யாழ். – கொழும்பு இடையே சரக்கு ரயில் சேவைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை! யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக ரயில் சேவையை பயன்படுத்த உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் யாழ். கொழும்புக்கிடையில் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப்பொருள் விநியோகத்துக்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ். வணிகர் கழக பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை…
-
- 3 replies
- 395 views
-
-
பாடசாலைகளிலிருந்து... மாணவர்கள், இடைவிலகும் அபாயம்... அதிகரித்துள்ளதாக கவலை. தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போதைய எரிபொ…
-
- 1 reply
- 245 views
-
-
”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை! சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை. இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
-
- 2 replies
- 372 views
- 1 follower
-
-
நாடு முழுமையாக முடங்கும் நிலை! எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் முதல் முழுநாடும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதி நடக்கும் வரையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ம…
-
- 0 replies
- 295 views
-
-
இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA IN COLOMBO, SRI LANKA இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (03/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
IMF உதவியைப் பெற... இலங்கை, இவற்றை... செய்ய வேண்டும் – அமெரிக்கா. சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது. அதன்படி... முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், மேலும் தோல்வியடைந்த முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் இலங்கை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என அக்குழு எச்சரித்துள்ளது. https://athavannews.com/2022/1289404
-
- 1 reply
- 328 views
-
-
தனுஷ்கோடியில்... மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட, வயோதிபர்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !! தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் தஞ்சமடைந்திருந்த இலங்கையர்கள் இருவரில் ஒரு வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம் திகதி கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்ற வயோதிப பெண், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையில் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannew…
-
- 0 replies
- 231 views
-
-
மதுரை, திருச்சி.... விமான நிலையங்களிலிருந்து கொழும்பிற்கான, சரக்கு விமான சேவை இடைநிறுத்தம். திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான சரக்கு விமான சேவை நேற்று(1) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையினை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய நாளாந்தம் சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு 2 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்…
-
- 0 replies
- 245 views
-
-
இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு... எரிபொருள் வழங்கும் செயற்பாடு, இடை நிறுத்தம். எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதால் விநியோகம் நேற்று முன்தினம் (01) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வருமாறு வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தே…
-
- 0 replies
- 343 views
-
-
இராணுவ முகாம்களில் இருந்து... வைத்தியர்களுக்கு, எரிபொருள் விநியோகம். அருகில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வைத்தியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ஏற்படும் அமைதியின்மையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1289375
-
- 0 replies
- 146 views
-
-
இலங்கையில்... ஆடைத் தொழிற்சாலைகள், மூடப்படும் அபாயம். இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன், ஆடைத் தொழிற்…
-
- 0 replies
- 222 views
-
-
ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகா…
-
- 7 replies
- 467 views
- 1 follower
-
-
உங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் தருகிறோம்! | யானைவெடி போட்டு விரட்டுவோம்- உளப்பனே சுமங்கல தேரர்! இக்காணொளியில் பேசிய தேரர்களுள் ஒருவரான உலப்பனை சுமங்கள தேரரை உலப்பனை சோபித தேரர் என்று தவறுதலாக உச்சரித்துள்ளேன்! தவறுக்கு மன்னிக்கவும்!
-
- 2 replies
- 507 views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது July 2, 2022 யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலைய…
-
- 11 replies
- 844 views
- 1 follower
-