Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையை இந்தியா 2500 ஆண்டுகளாக நாசமாக்கியுள்ளது - முன்னாள் கணக்காய்வாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (மே 26) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய நிலைமை ஏற்படலாமென முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "நாட்டில் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிற…

  2. இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயற்சித்தமை தொடர்பில் இலங்கையர்கள் உள்ளிட்ட 05 பேருக்கு சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை வௌி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரவழைத்து, இலங்கைக்கு கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு 13 சந்தேகநபர்களுக்கு எதிராக கியூ-பிரிவு பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தபோது, 7 பேர் தலைமறைவாகியதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து, எஞ்சிய 05 பேருக்கு எதிராக தனியான வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன்,…

  3. சிறுநீரகம், புற்றுநோயாளிகளுக்கு தேவையான... பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு சிறுநீரகம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த ஒன்றியத்தின் தலைவர் அஜித் திலகரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது இவ்வாறான நோயாளர்கள் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1284010

  4. உணவுத் தட்டுப்பாடு... மேலும், உக்கிரமடையும் என எச்சரிக்கை. இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சிறுபோகத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் சில மாவட்டங்களில் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் செய்கை நடவடிக்கைகள் நிறைவுபெறாவிடின், நாட்டில் உணவுத் தட்டுப்பாடு மேலும் உக்கிரமடையும் என அவர் கூறியுள்ளார். தற்போது நெற்செய்கையைச் செய்ய முடியாது போனால் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் பயிரிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://a…

  5. “கோட்டா கோ கம“ போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு... 50வது நாளில், மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்றிற்கு திட்டமிடப் பட்டுள்ளது. கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் நிறைவடையவுள்ள நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டமொன்றிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தின் ஐம்பதாவது நாளான எதிர்வரும் 28ஆம் திகதி காலை பத்து மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. அதற்கு இணையாக கோட்டா கோ கமவிலும் பண்டாரநாயக்க சிலை அருகே மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘நாட்டுக்காக மெழுகுவர்த்தி ஏந்துவோம்’ என்ற தலைப்பிலான இந்தப் போராட்டத்தில் கோட்டா கோ கமவுக்கு ஆதவரளிக்கும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்த…

  6. புதிய பொருளாதார மறுசீரமைப்பு குறித்து... தெளிவான புரிதலை பெற்றவுடன், இலங்கைக்கு உதவ தயார் – IMF இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவான புரிதலை பெற்றவுடன் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சர்வ…

    • 2 replies
    • 247 views
  7. "ஒரு டிரில்லியன் ரூபாய்" பணத்தை... அச்சிட வேண்டியுள்ளது: போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் -ரணில். நாட்டில் ரூபாய் வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும் என்றும் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன…

  8. போராட்டக்காரர்களுக்கு... பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு, வாய்ப்பு! கோட்டா கோ கமவில் உள்ள செயற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு அவர்களின் பிரச்சினைகளை கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோட்டா கோ கமவில் உள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, pmoffice.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது…

  9. ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம்... மீண்டும், வாக்குமூலம் பெற்ற CID! ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மே 9 தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக போராட்டக்காரர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். முன்னதாக,போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் போராட்டத்தளத்தில் உள்ள பல நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தமது சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் வழங்கியதாகவும் அன்றைய தினம் பிரசன்னமாகிய நபர்களை தெளிவாகக…

  10. பிரதமர் அலுவலகத்திற்கு... அருகில், பதற்றமான சூழல்! கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இன்று(வியாழக்கிழமை) நண்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் அதிகளவான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டி…

  11. கச்சதீவு தொடர்பில்... தமிழ் அரசியல் தலைவர்கள், ஏன்... மௌனம் சாதிக்கின்றனர்? அ.அன்னராசா கேள்வி. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கச்சதீவு மீள இந்தியா பெறுவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இதுவரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா கேள்வி எழுப்பினார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அவர் கூறிய கருத்து உண்மையா பொய்யா என்பது தொடர்பாகவோ அது எமக்கு சாதகமா பாதகமா என்பதைக்கூட அரசியல்…

    • 1 reply
    • 367 views
  12. தளர்த்தப்பட்டது ரிஷாத்தின் வெளிநாட்டு பயணத் தடை (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும், வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் கோட்டை நீதிமன்றங்களால், இன்றும், நேற்றும் இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஹிஷாலினி விவகாரம் : முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹிஷாலினி உடலில் தீ பரவி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று ( 24) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் வ…

    • 8 replies
    • 408 views
  13. எரிபொருள் இன்மை – 2 நாட்களின் பின்னரே எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையும். இலங்கைக்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கு தேவையான எரிபொருளை இலங்கையில் வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் …

  14. உத்தேச 21 ஆவது திருத்த வரைபின் பிரகாரம் இரட்டை குடியுரிமையுடையவர் பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் (இராஜதுரை ஹஷான்) இரட்டை குடியுரிமையுடையவர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூல வரைபின் 91 (1) (xiii) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபில் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் மீண்டும் சுயாதீனமாக செயற்படும் வகையிலான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினால் நீக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழு,கணக்காய்வு சேவை ஆணைக்குழு ஆகியவற்றை மீண்டும் செ…

  15. கோட்டா கோ கமவில்.... போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, வெளிநாடு செல்லத் தடை! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முடியும் வரை வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்கும் வகையில், காலி முகத்திடல் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. மே 9 வன்முறையைத் தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிகளாகவும் முறைப்பாட்டாளர்களாகவும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையாகியுள்ளனர். இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் கோரிக்கையை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இதற்கான அறிவித்தல் (நோட்டீ…

  16. சாணக்கியனுக்கு... மக்கள் வங்கியின் தலைவாரால், அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்! கடந்த ஐந்து வருடத்தில் மக்கள் வங்கியில் 54பில்லியன் ரூபா பணம் பெற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் தயாகமகே உட்பட பத்து பெரும் பணம்படைத்த வர்த்தகர்கள் அவற்றினை மீள செலுத்தவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றில் தான் பேசியதற்காக மக்கள் வங்கியின் தலைவரினால் தனக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் குறித்த கடன்களை மீளப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சாணக்கியன் கூறியுள்…

  17. யாழ்.மீனவர்கள் போராட்டத்தில் குதித்தால் அதனை அடக்க முடியாது! May 26, 2022 யாழ்ப்பாணம் கரையோரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (26.05.22) மண்ணெண்ணெயை பெற வசதி ஏற்படுத்த வேண்டும். அது வரத் தவறினால் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும். ஆரம்பித்தால் அதனை அடக்க முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன செயலாளர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (25.05.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், மண்ணெண்ணெய் பல நாட்களாக வடக்கிற்கு வரவில்லை. தென்னிலங்கையில் ச…

  18. வெளிநாடுகளிலுள்ள... இலங்கையர்கள் அனுப்பும் பணத்தின், அளவில் வீழ்ச்சி! வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் மாதாந்தம் இலங்கைக்கு அனுப்பும் தொகை 250 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பணம் அனுப்பும் தொகையை துரிதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கை தொழிலாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வங்கிகள் ஊடாக இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் இலங்கைப் பணியாளர்கள் பல நன்மைகளை அனுபவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட…

  19. மே 9 சம்பவம் – CIDஇல் மஹிந்த வாக்குமூலம்! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று (புதன்கிகழமை) மாலை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். https://athavannews.com/2022/1283916

  20. போராட்டத்தில் ஏற்படும் மோதலைத் தடுக்குமாறு... வழங்கப்பட்ட அறிவுறுத்தலை, தேசபந்து நடைமுறைப் படுத்தவில்லை – நீதிமன்றில் குற்றச்சாட்டு! காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி போராட்டங்களில் ஏற்படக்கூடிய மோதல்களைத் தடுப்பதற்காக, சம்பவம் நடப்பதற்கு முன்தினம் பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்ட எழுத்துமூலமான அறிவுறுத்தல்களை மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நடைமுறைப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு நேற்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றில் உரையாற்றிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், “…

  21. அத்தியாவசிய அரச சேவையாளர்கள் தவிர்ந்த... ஏனையவர்களுக்கு, இன்று முதல் விடுமுறை! அத்தியாவசிய அரச சேவையாளர்கள் மட்டும் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர். இதற்கான சுற்றுநிருபத்தினை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நேற்று வெளியிட்டது. எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பாக உருவாகியுள்ள பிரச்சினை காரணமாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் உரிய முறையில் செயற்படாதமையால் அரச உத்தியோத்தர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன் இந்த நெருக்கடி காலப்பகுதியில் எரிபொருள், மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக…

  22. பிரதமராக... பதவியேற்க, தற்போதும் தயார் – சஜித் பிரதமராக பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும், அதிகாரத்திற்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் பொறுப்பேற்க முடியாது என்று கூறவில்லை. இன்னும் பிரதமராக பதவியேற்க நான் தயாராக இருக்கிறேன். கசப்பான உண்மையைப் பேசுவோம். மத்திய வங்கிக் கொள்ளையர்களைக்கொண்ட அரசாங்கம் திருடர்களைப் பிடிக்க முடியுமா? இந்த தருணத்தில் நான் பிரதமராக பதவியேற்று தூய்மையான ஆட்சியை செயற்படுத்த விரும்புகிறேன்” என அவர் மேலும் தெ…

  23. ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விளக்கமறியல் ! ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக மற்றும் டான் பிரியசாத் மற்றும் மேலும் மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை மேலும் ஆறு சந்தேகநபர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1283819

  24. ராஜபக்சக்களைக் காப்பாற்ற... ரணில், பிரதமராகவில்லை – பாலித ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றது ராஜபக்சக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ராஜபக்சக்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதே நோக்கம் என கூறினார். இக்கட்டான காலங்களில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை கருத்திற்கொண்டு நாட்டுக்கான சிறந்த தலைவரை அடையாளம் கண்டுகொள்ளம என தெரிவித்தார். மேலும் தற்போது நாட்டின் தலைவர்கள் செல்லாத காசாகிவிட்டார்கள் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். https://athavannews.com/2022/1283814

  25. நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கடவுச்சீட்டை கையளிக்காத முன்னாள் பிரதமர் மஹிந்த ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், இதுவரை இதுவரை அதனை அவர் செய்யவில்லை என இன்று ( 25) கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அத்துடன் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.