Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடுகளில் உள்ள, இலங்கைத் தூதரகங்கள் – கடந்த 4 மாதங்களில்... 13.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு! வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்களில் பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 13.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமர்ந்திருந்தபோது, பிரதமர் அலுவலகம் மூத்த அதிகாரிகளிடம் நேற்று கவலைகளை எழுப்பியதாகவும் இந்தச் செலவுகள் ஏன் உடனடியாகக் குறைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற புள்ளிவிபரங்களின்படி, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில், பெருமளவிலான …

  2. நான்கு எரிபொருள் நிலையங்களின்... அனுமதிப் பத்திரங்கள் இரத்து! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறி கையிருப்பில் உள்ள எரிபொருளை கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு விநியோகம் செய்த நிலையிலேயே குறித்த நான்கு எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2022/1282909

  3. நாடளாவிய ரீதியில்... 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், இன்று விநியோகம்! நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையினை வந்தடைந்துள்ள நிலையில், தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக 80 எரிவாயு சிலிண்டர்கள் நாளை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://athavannews.com/2022/1282917

    • 1 reply
    • 135 views
  4. ரத்மலானை, கல்கிசை, தெஹிவளையில்... எரி பொருளுக்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்! நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் எனவும், எனவே மக்களை வரிசையில் நிற்கவேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இரத்மலானை, கல்கிசை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. அதேபோன்று பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளிலும் மக்கள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க முடிந்தது. இதன்…

  5. இலங்கைக்கான... கடன் நிவாரணம் வழங்க, ஜி7 நாடுகள் ஒத்துழைப்பு! இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன. உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி-7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது. அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக நிதியமைச்சர்கள் தெரிவித்ததாக சரவதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. G7 நாடுகளின் அறிக்கையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும் சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சு…

  6. கடன் திட்டம் – IMF உடனான பேச்சு வார்த்தைகள், முடிவடையும் திகதி குறித்த அறிவிப்பு இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் மே 24 ஆம் திகதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கேரி ரைஸ், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இலங்கைக்கு உதவ தாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்த அவர், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சரியான நேரத்தில் தீர்க்க பங்குதாரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றும் கூறினார். …

  7. டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் உட்பட... மேலும் 10 அமைச்சர்கள், இன்று பதவிப் பிரமாணம்? புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சைக் குழுவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜந்த மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இணைந்துகொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்களும் புதிய அமைச்சரவையில் பதவிகளைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படு…

  8. அத்தியாவசிய சேவை தவிர்ந்த... ஏனைய அரச பணியாளர்களுக்கு, இன்று விடுமுறை! அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்காக, நிறுவன பிரதானியினால் பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கு தடை இல்லை என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து சிக்கல் நிலை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை வெளிய…

  9. அமைதியின்மையின் போது... தாக்குதலுக்குள்ளான ஒருவர், உயிரிழப்பு கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி பெரஹெர மாவத்தை – பிஷொப் கல்லூரி கேட்போர் கூட வளாகத்தின் நடைபாதையில் காயமடைந்திருந்த நிலையில் குறித்த நபர் ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலை காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மேலத…

  10. மொறட்டுவை நகர சபை மேயர்... சமன்லால் பெர்னாண்டோ, டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல் மொறட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போதே அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்…

  11. மரக்கறிகளின் விலைகள்... சடுதியாக, உயர்வடைந்துள்ளன. நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறி விளைச்சல் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை கூட்டுப் பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1282853

  12. எங்களை, பட்டினியாக கிடக்க... இந்தியா விடாது – ஆனந்தசங்கரி பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது …

  13. ஆர்ப்பாட்ட பேரணியை... கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர். கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இன்று மாலை இவ்வாறு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு கோட்டை பிரதேசத்தின் பல்வேறு வீதிகளிலும் உள்நுழைய, மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய யோர்க் வீதி, மற்றும் ஜனாதிபதி மாவத்தை ஆகிய வீதிகளில் பிரவேசிப்பதற்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்…

  14. இலங்கையர்கள்... தமது கையில் பணமாக, ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி வெளியானது. இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக்கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை வங்கியில் வைப்புச் செய்யாமல் கைகளில் வைத்திருப்பவர்கள், அந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றத…

  15. அரசியல் வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை... சேதப் படுத்தியதில், நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு? நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 74 அரசியல்வாதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்களை நாசப்படுத்தியதில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ், அரச புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த தாக்குதலின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செய…

  16. நாம் இந்த நாட்டில் இருப்பதா செல்வதா என பெற்றோலுக்காக அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கொழும்பு - அளுத்மாவத்தை பெற்றோல் நிலையத்தில் இன்று காத்திருக்கும் மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காலை நான்கு மணிக்கு வந்தோம். இதுவரையில் எமக்கு பெற்றோல் கிடைக்கவில்லை. ரணில் வந்திருக்கிறார் ஆனால் எதுவும் செய்யவில்லை. இந்த நிலைமை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும். நாம் இந்த நாட்டில் இருப்பதா செல்வதா? கடவுச்சீட்டுக்களை செய்து கொண்டு அனைவரும் நாட்டிலிருந்து சென்றால் என்ன செய்வீர்கள்? தயவு செய்து இந்த பிரச்சினைக்கு முடிவினை கொண்டு வாருங்கள். வேலையிலிருந்து விடுமுறை எடுத்து வந்து நாங்கள…

  17. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரிமைகளையும் உறுதிசெய்வதற்கான மிகமுக்கிய படிமுறை - வெளிநாட்டு இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டு (நா.தனுஜா) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று போரில் உயிரிழந்தவர்களையும், உண்மையையும் நீதியையும்கோரிப் போராடும் குடும்பங்களையும் நினைவுகூர்ந்திருக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், கடந்தகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதென்பது நல்லிணக்கத்தையும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகளையும் உறுதிசெய்வதற்கான மிகமுக்கிய படிமுறையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்…

    • 2 replies
    • 364 views
  18. அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்தே இன்று (19) அதிகாலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இரண்டு இயந்திரப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவ…

  19. பேரறிவாளன் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்கின்றோம் - அருட்தந்தை மா.சத்திவேல் முள்ளிவாய்க்கால் 13 ஆம் ஆண்டில் சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதனை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (19) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு ஈகை சுடரேற்றும் நாளிலேயே ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்ப…

    • 1 reply
    • 403 views
  20. இலங்கை நெருக்கடி: "காலி முகத்திடலில் வன்முறையை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்டது உண்மையே" - முன்னாள் அமைச்சர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய (மே 19) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்றவர்களை தடுக்க வேண்டாம் என, பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளரும் கட்டளை பிறப்பித்ததாக குறிப்பிடப்படுவது முற்றிலும் உண்மை என்று முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண சபையில் சுட்டிக்காட்டியதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்ட…

  21. புதிய அமைச்சரவை, அமைச்சர்களுக்கு... சம்பளம் வழங்கப்படமாட்டாது – ரணில் புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1282730

  22. இரண்டு நாட்களுக்கு பின்னரே... பெற்றோல் வழங்கப்படும்: வரிசையில், காத்திருக்க வேண்டாம் – அரசாங்கம்! நாட்டில் இரண்டு நாட்களுக்கு பின்னரே பெற்றோல் வழங்கப்படும் என்றும் எனவே மக்கள் வரிசையில் நிற்கவேண்டாமென அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என தெரிவித்தார். அவ்வாறு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்றும் இனிமேலும் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டார். இதேநேரம், நேற்று இரவு பெற்றோல்களை ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வந்ததாகவும், அதிலிருந்து சரக்குகளை இறக்க வேண்டும் என்பதால் உடனடியாக பெற்றோலை விநி…

  23. தமிழ் தேசிய அரசியல் சக்திகள்... அனைத்தும் ஒன்றுபட, வேண்டும் – எம்.வினோராஜ் வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழர்களின் விடுதலைக்காக பயனிப்பதே முள்ளிவாய்க்கால்போன்ற இன அழிப்பில் ஆகுதியாகியவர்களுக்கு செய்யும் கைமாறு என மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் எம்.வினோராஜ் தெரிவித்தார். வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான நிகழ்வொன்றும் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் செயலாளர் சதீஷனின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் கே.வினோராஜ் மற்றும் வணக்கம் வாழ…

  24. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு... மானிய விலையில், எரிபொருள் வழங்கப்படுவதாக... குற்றச்சாட்டு – அரசாங்கம் மறுப்பு! மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் தற்போதைய விலையைவிட குறைவான விலைக்கே அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பொதுமக்களின் விரக்தியையும் கோபத்தையும் நான் புரிந்துகொண்டாலும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரப்பட்ட பதி…

  25. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில்... இதுவரை, 883 பேர் கைது! நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இவர்களில் 364 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 412 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 805 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.