ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
தற்போது... பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப் பொருட்கள், எதிர்காலத்தில் முற்றாக இல்லாதுபோகும் – அலி சப்ரி நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்ட…
-
- 0 replies
- 167 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை, விமர்சிப்பதற்கு... சுமந்திரனுக்கு, அரசியல் தொலைநோக்கு தெரியாது – செந்தில் தொண்டமான். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என்றும் எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுபினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில…
-
- 11 replies
- 813 views
-
-
பா.ஜ.க.வின்... தமிழகத் தலைவருக்காக, காத்திருந்த... தமிழ் தலைமைகள்! யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருக்க நேரிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1279598
-
- 6 replies
- 658 views
-
-
2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை - கோ.கருணாகரம் By Shana 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக…
-
- 0 replies
- 207 views
-
-
நாடாளுமன்ற வளாகத்தில்... இரும்பு குழாய்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு வேலி! நாடாளுமன்றத்தை சுற்றி இன்று (புதன்கிழமை) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடாளுமன்ற வளாகத்தில் குழாய்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் இம்மாதம் முதல் முறையாக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ராஜித சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2022/1279927
-
- 0 replies
- 280 views
-
-
களுவன்கேணி... கடற்கரையோரப் பகுதியில், காணப்படும் பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் எரியூட்டப்பட்டன! மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு காணப்படும் பழமையான பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் என்பன எரியூட்டப்பட்டு கட்டிடங்கள் அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் இணைந்து குறித்த காடழிப்பு நடவடிக்கை மற்றும் அனுமதி இல்லாமல் கட்டடங்களை அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் பிரதேச இளைஞர்கள்…
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கை நெருக்கடி: எந்த தேர்தலையும் நடத்தும் சூழல் தற்போது இல்லை - அரசாங்கம் அறிவிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் - கோப்புப்படம் (இன்றைய (மே 4) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) நாட்டில் எந்தவொரு தேர்தலையும் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லை என, இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாள…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
காலி முகத்திடல் வீதிக்கு... புதிய பெயரை சூட்டிய, போராட்டக் காரர்கள்! ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலுக்கு போராட்டக்காரர்கள் புதிய பெயரை சூட்டியுள்ளனர். அதன்படி, குறித்த வீதிக்கு இலஞ்ச வீதியென (Bribe road) போராட்டக்காரர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே, காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம“ எனும் பெயரிலான கிராமத்தை உருவாக்கியுள்ள போராட்டக்காரர்கள், அங்கு கூடாரமிட்டு 26ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279906
-
- 0 replies
- 331 views
-
-
பெரும்பான்மை உறுப்பினர்களின்... ஆதரவு உண்டு – நம்பிக்கையில், மஹிந்த ! பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதனால் தமக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெறுவேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றில் ஆளும்தரப்பு பெரும்பான்மை யை இழந்த நிலையில், இன்று விசேட உரையாற்றி பிரதமர் பதவி விலகவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் தனது இராஜினாமாவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்போவதில்லை என்றும் ஆனால் பல விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை வெளியேறுமாறு கோரினால், பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்…
-
- 0 replies
- 133 views
-
-
விசேட... கட்சித் தலைவர்கள், கூட்டம் இன்று – நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி குறித்து ஆராய்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 9.15க்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்தோடு, இந்த வார நாடாளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இம்தியாஸ் பாகீர் மாகரின் பெயர் பரிந்துரைக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 115 views
-
-
பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு... பதவியை, வழங்குவாரா மஹிந்த? – பிரதமர் இன்று விசேட உரை! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். பெரும்பான்மையை நிருபிப்பவர்களுக்கு பிரதமர் பதவியை வழங்கத் தயாராகவுள்ளதாக அவர் அறிவிப்பாரென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். புதிய பிரதமர் நியமனம் செய்யப்படும் வரை தானே பிரதமராக இருப்பாரென அவர் அறிவிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் நாடு மேலும் பாதாளத்துக்கு செல்வதனை தடுப்பதற்காக, புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் தான் பதவி விலகப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்ட…
-
- 0 replies
- 146 views
-
-
அவசர மானியமாக... சீனாவிடமிருந்து, மேலும் 300 மில்லியன் யுவான்! அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1279887
-
- 0 replies
- 150 views
-
-
26ஆவது நாளாக... தொடரும், போராட்டம் – இளைஞர்களுக்கு... இலவச, பேருந்து சேவை அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 26ஆவது நாளாக இன்றும் (புதன்ழமை) தொடர்கிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அலரி மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியான உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இலவச பேருந்துகளை வழங்க நடவட…
-
- 0 replies
- 147 views
-
-
வேலை நிறுத்தத்திற்கு... ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் – ஜனாதிபதியிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிப்பு! குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் 06ஆம் திகதி நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் வேலை நிறுத்தத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்…
-
- 0 replies
- 140 views
-
-
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல்... பொருளாதாரத்தை உறுதி செய்ய முடியாது, கோரிக்கையை... உடன் அமுல்படுத்துங்கள் – சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்தும் செய்யும் 15 அமைச்சர்களை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய தரப்பினருக்கு அறிவிக்கப்படும் என்றார். நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலோ அல்லது தோற்கடிக்கப்பட்டாலோ குறைந்தபட்ச வேலைத் திட்டத்துடன் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிவதாக கூறினார். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லா…
-
- 0 replies
- 105 views
-
-
மின்வெட்டு... அமுல் படுத்தப்படும் நேரம், குறித்த அறிவிப்பு! நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணி நேரமும் மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை 01 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மேலும் கொழும்பு வர்த்தக வலயத்திற்கு காலை 06.00 மணி முதல் காலை 09.20 மணி வரை மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1279893
-
- 0 replies
- 162 views
-
-
டக்ளஸ் தேவானந்தா அடங்கலாக... அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், அமைச்சரவை உபகுழு! அரசியலமைப்பு வரைபு தொடர்பாக விசேட நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கை குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான குறித்த குழுவில் தினேஷ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பத்திரன மற்றும் அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2022/1279746
-
- 4 replies
- 391 views
-
-
இந்தியாவின்... ஒரு பில்லியன் டொலர் கடனில், இரும்பு இறக்குமதி: ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்கின்றது நிதி அமைச்சு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளித்துள்ளது. வங்கி அமைப்பு மற்றும் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பல சிரமங்களை இறக்குமதியாளர்கள் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இந்தியாவின் கடனின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ($ 300 மில்லியன்), மருந்து ($ 200 மில்லியன்) மற்றும் தொழில்துறை மூலப்பொருட்கள் ($ 500 மில்லியன்) இறக்குமதிக்காக ஆரம்பத்தில…
-
- 4 replies
- 364 views
-
-
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும். சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியு…
-
- 4 replies
- 852 views
-
-
தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை” பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இ…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
’இனவாதத்தை தூண்டும் தமிழ் டயஸ்போரா’ மகேஸ்வரி விஜயனந்தன் இலங்கையில் இனவாதத்தை தூண்டுகின்ற விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், காலி முகத்திடல் போராட்டக் களத்தில் காட்சிப் படுத்தப்படும் சில இனவாத பதாகைகள் குறித்து வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னரும் சில நேரங்களில் இலங்கையி…
-
- 0 replies
- 273 views
-
-
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விரிவுரையாளர்களை வெளியேறவிடாது கதவை மூடி மாணவர்கள் போராட்டம் ShanaApril 30, 2022 மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் இரு மாணவர்கள் மீது விரிவுரையாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு தாக்குதல் நடாத்தியதை கண்டித்து நீதிகோரி நிறுவகத்தின் பணிப்பாளர் உட்பட அங்கு கற்பிக்கும் விரிவுரையாளர்களை வெளியே செல்லவிடாது பல்கலைக்கழக கதவை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லடியில் அமைந்துள்ள குறித்த நிறுவகத்தில் கல்விகற்றுவரும் இரண்டாம் வருட 2 மாணவர்களும் ஒரு முதலாம் ஆண்டு மாணவர் உட்பட 3 மாணவர்கள் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எந்தவிதம…
-
- 2 replies
- 340 views
-
-
சர்வகட்சி கட்சி அரசாங்கத்தில்... புதிய பிரதமர் – ஆளும்கட்சி இணக்கம் அமைச்சரவை மற்றும் பிரதமரை நீக்கிய பின்னரே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 11 சுயாதீன அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக புதிய பிரதமரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைகியுள்ளது என கூறினார். எனவே முன்மொழிவுகள் குறித்து பிறகட்சிகளுடன் பேச 5 பேர் கொண்ட குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி வலியறுத்திய நிலையில் பொதுஜன பெரமுனவுடன் குறித்த…
-
- 0 replies
- 154 views
-
-
‘Go Home Gota’ போராட்டக்குழுவினர்... கண்டி மல்வத்து மற்றும்... அஸ்கிரி பீடாதிபதிகளுடன் சந்திப்பு நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘வீட்டுக்கு கோதா’ போராட்டத்தின் பிரதிநிதிகள் குழு இன்று ( செவ்வாய்க்கிழமை ) கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர் . ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக சங்க மாநாட்டு ஆணை பிறப்பிக்குமாறு பிரதிநிதிகள் பிரதம பீடாதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டங்களைத் திரும்பப் பெறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளதோடு அவர்களுக்குத் தொடர்புள்ள எந்தவொரு மத நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் பிரதம தலைவர்களிடம் தெரிவ…
-
- 0 replies
- 238 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்... சபாநாயகரிடம் கையளிப்பு ! ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது இன்று குறித்த பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1279830
-
- 0 replies
- 265 views
-